Search This Blog

Friday, November 29, 2013

More Kuzhambu

#மோர்க்குழம்பு : இந்த #குழம்பு தயிர் கொண்டு செய்யப்பட்டாலும் தயிர் குழம்பு என கூறப்படுவதில்லை. மோர்க்குழம்பு என்றே அழைக்கப்படுகிறது. #வெண்டைக்காய், கத்தரிக்காய், பூசணி, சுரைக்காய் , சேனை போன்ற சில காய்கறிகளே மோர் குழம்புக்கு ஏற்றவை ஆகும். புளித்த தயிரை விட புளிக்காத தயிரில் செய்யும் போதுதான் அருமையான  சுவையுடன் இருக்கும்.
இங்கு வெண்டைக்காயை கொண்டு எவ்வாறு மோர்க்குழம்பு செய்யலாம் என பார்ப்போம்.


தேவையான பொருட்கள் :
தயிர்                                           : 1 கப்
வெண்டைக்காய்                  : 7 ( அ ) 8
இஞ்சி துண்டு                         : 1/2 அங்குலம்
பெருங்காயம்                         : சிறு துண்டு
மஞ்சத்தூள்                             : 3 சிட்டிகை

 அரைக்க தேவையான பொருட்கள் :


தேங்காய் துருவல்                : 3 Tsp
சீரகம்                                           : 1 Tsp
மல்லி                                          : 1/2 Tsp
மிளகு                                           : 6 ( அ ) 7
பச்சை மிளகாய்                       : 1
சிகப்பு மிளகாய்                        : 1
கடலை பருப்பு                          : 1 Tsp
பச்சரிசி                                         : 1/2 Tsp
பூண்டு பற்கள்                            : 2
சின்ன வெங்காயம்                 : 5 ( அ ) 6
கடலை பருப்பு, பச்சரிசி, மல்லியை அரை மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

தாளிக்க :
கடுகு                                              : 1/2 Tsp
சீரகம்                                             : 1/2 Tsp
உளுத்தம் பருப்பு                       : 1 Tsp
பெருங்காயம்                             : சிறு துண்டு
கருவேப்பிலை                           : 10
எண்ணெய்                                    : 1 Tsp

செய்முறை :
ஒரு கிண்ணத்தில் தயிரை கரண்டியினால் அடித்துக் கலக்கி பெருங்காயம் மற்றும்  இஞ்சியை இடித்து சேர்க்கவும். தனியே வைக்கவும்.
மிக்சியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்றாக அரைத்துக் கொள்ளவும். தனியே எடுத்து வைக்கவும்.


வாணலியை அடுப்பில் வைத்து 1 Tsp எண்ணெய் விட்டு வெண்டைக்காயை துண்டுகளாக்கி சேர்க்கவும்.
ஒரு சிட்டிகை மஞ்சத்தூள், காய்க்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.


காய் வேகும் வரை வாணலியை ஒரு தட்டினால் மூடவும்.


வெந்தவுடன் அரைத்த மசாலாவை சேர்க்கவும்.
கரண்டியால் கலக்கி விடவும்.
மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
கலந்து வைத்துள்ள தயிரை சேர்த்து தீயை சிறியதாக்கி ஒரு கொத்தி வரும் வரை கொதிக்க விடவும்.
அடுப்பை அணைத்து விட்டு கருவேப்பிலை ஓரிரண்டு மற்றும் கொத்தமல்லி தழை ஆகியவற்றை கிள்ளி போடவும்.


வாணலியை சூடாக்கி எண்ணெய் விட்டு கடுகு வெடிக்க விடவும்.
பின் சீரகம், சிகப்பு மிளகாய் துண்டுகள்,உளுத்தம் பருப்பு, மற்றும் கருவேப்பிலை தாளித்து மோர் குழம்பின் மேல் ஊற்றவும்.
சுவையான மோர் குழம்பு தயார்.


சூடான சாதத்தில் மோர் குழம்பை ஊற்றி பிசைந்து பிடித்தமான கறியுடன் சாப்பிட்டால் ம்ம்ம்....... சுவையே தனிதான்!!...






மேலும் சில சுவையான குழம்பு வகைகள் :

பூசணிக்காய் மோர்க்குழம்பு
பூசணிக்காய் 
மோர்க்குழம்பு

morekuzhambu
வாழைப்பூ வடை மோர்க்குழம்பு
கடப்பா
கடப்பா - இட்லிக்கு தொட்டுக்க
வெந்தய குழம்பு
வெந்தய குழம்பு
வாழைப்பூ குழம்பு
வாழைப்பூ குழம்பு







No comments:

Post a Comment