Search This Blog

Tuesday, June 10, 2014

Kollu Rasam

#கொள்ளு #ரசம் : ஆங்கிலத்தில் கொள்ளு  Horse gram என அழைக்கப்படுகிறது. உடலில் சேரும் கொழுப்பை குறைக்க கொள்ளு உதவுகிறது.
சோயாவில் உள்ள புரதத்திற்கு இணையான புரதம் கொள்ளுவில் நிறைந்துள்ளது. மேலும் இதன் மூலம் கிடைக்கும் புரதம் அசைவ உணவிலிருந்து கிடைக்கும் புரதத்திற்கு இணையானது.
இருமல் மற்றும் சளி காய்ச்சல் போன்றவற்றிற்கும் அருமருந்தாக கொள்ளு விளங்குகிறது.
வாரத்தில் ஓரிரு முறை எடுத்துக் கொள்வது நல்லது.



தேவையான பொருட்கள் :
3 Tbsp                                கொள்ளு
1 Tsp                                   மிளகு
1/2 Tsp                                சீரகம்
1/4 Tsp                                மல்லி விதை
4 பற்கள்                            பூண்டு
1/4 inch                                 இஞ்சி துண்டு
2 or 3                                   சிகப்பு மிளகாய்
12                                        கறுவேப்பிலை
1                                          தக்காளி, 8 துண்டுகளாக்கவும்
2 pinches                              மஞ்சத்தூள்
2 or 3 Tsp                            எலுமிச்சை சாறு
1 1/2 Tsp                             உப்பு
கொத்தமல்லி தழை கடைசியில் சேர்க்க


தாளிக்க :
1/2 Tsp                              கடுகு
6                                        கருவேப்பிலை

ஒரு கப் ரசம் செய்ய தேவையான அளவு கொடுக்கப்பட்டுள்ளது.

செய்முறை :
முதல் நாள் இரவே கொள்ளை கழுவிய பின்னர் ஒரு பாத்திரத்தில் ஊறவைக்கவும்.
மறுநாள் ஊறிய தண்ணீரை ரசம் வைக்கப்போகும் பாத்திரத்தில் வடித்து தனியே வைக்கவும்.
குக்கரில் கொள்ளை போட்டு 1/2  தண்ணீர் விட்டு 1/4 Tsp உப்பு சேர்த்து மூடி வெயிட் வைத்து அடுப்பில் அதிக தீயில் சூடாக்கவும்.
ஒரு விசில் வந்ததும் தீயை குறைத்து 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
ஆவி அடங்கிய பின் திறந்து வேகவைத்த தண்ணீரையும் ஊறவைத்த தண்ணீருடன் சேர்த்து விடவும்.
மிக்ஸியில் வேகவைத்த கொள்ளு, மிளகு, சீரகம், மல்லி, பூண்டு, இஞ்சி, மிளகாய் மற்றும் 5 கறுவேப்பிலை ஆகியவற்றை தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்து பாத்திரத்தில் சேர்க்கவும்.
மிக்ஸியையும் சிறிது தண்ணீர் விட்டு கழுவி அதையும் சேர்க்கவும்.
உப்பு, மஞ்சத்தூள் மற்றும் தக்காளி,சேர்த்து கொதிக்க விடவும்.


காரம் அதிகமாக இருக்கவேண்டும் என விரும்புவர்கள் ஒரு பச்சை மிளகாயையும் கீறி சேர்க்கலாம்.
கொதித்து நுரை பொங்கி மேலே வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.


அடுப்பை அணைத்த பின்னர் எலுமிச்சை சாறை சேர்க்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகை வெடிக்க விட்டபின்னர் கருவேப்பிலையை வறுத்து ரசத்தின் மேல் சேர்க்கவும்.
பரிமாறும் முன் கொத்தமல்லி தழை சேர்க்கவும்.


சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம்.
அப்படியே சூப் போன்றும் பருகலாம்.



இதையும் செய்து பார்க்கலாமே

கொள்ளு சுண்டல் 




No comments:

Post a Comment