Search This Blog

Saturday, October 18, 2014

Thattai

#தட்டை : சென்ற வாரம் பெங்களூரின் அவென்யு ரோடு கடைகளில் கிடைக்கும் தட்டையை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். தட்டையை அங்கு நிப்பட்டு என அழைப்பார்கள். சிறு சிறு கார பலகாரங்கள் விற்கும் கடைகளில் வாளிகளில் பல வகையான காரங்கள் நிரப்பப்பட்டிருக்கும். அதில் இந்த நிப்பாட்டும் ஒன்று. நல்ல கையகல அளவில் தடிமனாக இருக்கும்.
சுவையோ கர கரவென மிகவும் காரமாக இருக்கும்.
சாட் கடைகளில் இந்த நிப்பட்டின் மீது வெங்காயம், தக்காளி வைத்து சாட்மசாலா தூவி விற்கப்படும். சுவை அருமையாக இருக்கும். எனக்குதான்  சாப்பிட ஒரு குவளை நீர் அருகில் வைத்திருக்க வேண்டும்.
அதே போல வீட்டில் செய்து பார்க்கலாம் என முடிவெடுத்து செயலிலும் இறங்கி விட்டேன்.
எப்படி செய்தேன் என இனி காணலாம்.

தட்டை


தேவையான பொருட்கள் :
1 கப்மைதா 
2 Tbspகடலை மாவு
2 Tbspபொட்டுகடலை மாவு [ வறுகடலை மாவு ]
1/4 Tspபெருங்காயத்தூள்
1/4 Tspமிளகுத்தூள்
1 Tspஉப்பு [ adjust ]
4 Tspசூடான எண்ணெய்
அரைக்க :
6 or 7பச்சை மிளகாய் [ adjust ]
1 Tspசீரகம்
10 to 15கறுவேப்பிலை
ஊற வைக்க :
1 Tbspகடலை பருப்பு
2 Tbspஉளுத்தம் பருப்பு

பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்.

செய்முறை :
ஊறவைக்க வேண்டியவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீரில் 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
மைதாவை இட்லிபானையில் ஒரு பாத்திரத்தில் வைத்து துணி போட்டு மூடி ஆவியில் 8 முதல் 10 நிமிடங்கள் வேகவிடவும்.
வேகவைத்ததை ஆற விடவும்.

மிக்சியில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீருடன் மைய அரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பின் மீது வைத்து மிதமான தீயில் சூடாக்கவும்.

வேகவைத்து ஆற வாய்த்த மாவு, கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதை சேர்க்கவும்.


ஊறவைத்துள்ள பருப்பை தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு சேர்க்கவும்.
சூடான எண்ணெயை அடுப்பில் உள்ள வாணலியில் இருந்து எடுத்து சேர்க்கவும்.

சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.


ஒரு பிளாஸ்டிக் தாளின் மீதோ அல்லது கையிலோ தட்டி வைக்கவும்.


எண்ணெய் சூடாகி விட்டதா என ஒரு சிறு துண்டு மாவை போட்டு பார்க்கவும்.
நன்கு பொரிந்து மேலெழும்பி வந்தால் தட்டி வைத்த தட்டைகளை மெதுவாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
தட்டை

எண்ணெயின் அளவிற்கு ஏற்றவாறு ஒரு முறைக்கு நான்கு அல்லது ஐந்து போட்டு திருப்பி திருப்பி விட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.
பொரிக்கும் போது தீ மிதமான சூட்டிலேயே இருப்பது நலம்.
பொரிப்பது அடங்கியவுடன் எண்ணெயிலிருந்து எடுத்து டிஷ்யு தாள் பரப்பிய தட்டில் எடுத்து வைக்கவும்.
தட்டை

மறுபடியும் அடுத்த ஈடிற்கு தட்டி வைத்துள்ள தட்டையை போடவும்.
இதே போல எல்லாவற்றையும் பொரித்தெடுக்கவும்.

தட்டையின் தடிமன் அவரவர் விருப்பபடி தடிமனாகவோ அல்லது மெல்லியதாகவோ தட்டிக்கொள்ளவும்.

சுவையான காரமான தட்டை தயார்.
இது ஒரு அருமையான தீபாவளி பலகாரம்.
மாலை வேளையில் டீ அல்லது காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

No comments:

Post a Comment