Search This Blog

Sunday, November 30, 2014

Thayir Sadham

#தயிர்சாதம் : சாதத்தில் உப்பு போட்டு தயிர் விட்டு பிசைந்து சாப்பிட்டால் தயிர் சாதம். ஆனால் மதிய உணவிற்கோ அல்லது நெடுந்தூர பயணத்தின் போது எடுத்து செல்லும் போது கீழ்கண்ட முறையில் தயார் செய்து எடுத்து சென்றால் சுவை மிக மிக அலாதியாக இருக்கும்.
எப்படி என காண்போம்.

தயிர் சாதம்

தேவையான பொருட்கள் :

பச்சரிசி                                     : 1/2 cup
தண்ணீர்                                   : 1 3/4 cup
பால்                                           : 1 1/2 cup
உப்பு                                           :3/4 tsp ( adjust )
பெருங்காயம்                         : ஒரு சிட்டிகை  ( விரும்பினால்  )
இஞ்சி                                        : சிறு துண்டு, பொடியாக நறுக்கவும்
தயிர்                                           : 1/4 Tsp

தாளிக்க :
கடுகு                                          : 1/2 tsp
சிகப்பு மிளகாய்                     : 1 கிள்ளி வைக்கவும் ( விரும்பினால்  )
பச்சை மிளகாய்                    : 1 பொடியாக நறுக்கவும்
கறுவேப்பிலை                       : 10 to 12
எண்ணெய்                                       : 1 tsp

அலங்கரிக்க :
சிறிதளவு காரட், மாதுளை முத்துக்கள், திராட்சை [ விருப்பப்பட்டால் ]


செய்முறை :
குக்கரில் அரிசியை கழுவி எடுத்துக்கொள்ளவும்.
கொடுக்கப்பட்டுள்ள அளவு தண்ணீர் மற்று உப்பு சேர்த்து மூடி வெயிட் பொருத்தி அதிக தீயில் வேக விடவும்.
மூற்று விசில் வந்த பின்னர் தீயை குறைத்து மேலும் 5 நிமிடம் வேக விடவும்.

குக்கரில் சாதம் வெந்து கொண்டிருக்கும் போது,

மற்றொரு அடுப்பில் பாலை பொங்க விட்டு இறக்கி தனியே வைக்கவும்.

இப்போது அடுப்பில் வாணலியை வைத்து கடுகு வெடிக்க விட்ட பின்னர் சிகப்பு மிளகாய் மற்றும் பச்சை மிளகாயை தாளித்து எடுத்து வைக்கவும்.

குக்கர் ஆவி அடங்கியவுடன் திறந்து கரண்டியால் நன்கு மசித்தபடி கலக்கவும்.
பின்னர் பாலை விட்டு கிளறவும்.

கடைசியாக தாளித்த பொருட்கள், இஞ்சி, கருவேப்பிலை மற்றும் தயிர் விட்டு கலந்து விடவும்.

அவரவர் சுவைக்கேற்றவாறு உப்பு சரி பார்த்துக்கொள்ளவும்.

தயிர் சாதம் தயிர் சாதம்

மதிய உணவிற்கோ அல்லது பயணத்திற்கோ எடுத்து செல்வதாக இருந்தால் டிபன் டப்பாவில் எடுத்து வைக்கவும். சுமார் 4 அல்லது 5 மணிநேரம் கழித்து சாப்பிடும் போது அருமையாக இருக்கும்.

ஊறுகாயுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

குறிப்பு :
சிறிது நேரத்திற்குள்ளாகவே சாப்பிட தேவை என்றால் தயிரை சிறிது அதிகமாக விட்டு தயிர் சாதத்தை கலக்கி வைக்கவும்.

தயிர் சாதத்தின் சுவையை மேலும் கூட்ட வேண்டுமெனில் சிறிது வெண்ணெய் சேர்த்து கலந்து வைக்கவும்.

Vegetable-Coriander-Kootttu - Pulilllacurry

#காய்கறிகொத்தமல்லிகூட்டு [ #VegetableCorianderLentil  ] : இந்த கூட்டை சிலர் #பொரித்தகுழம்பு என்றும், சிலர் #புளில்லாகறி என்றும் கூறுவார்கள். சில காய்கறிகள்தான் இந்த கூட்டு செய்வதற்கு உகந்ததாகும். அவையாதெனில், கத்தரிக்காய், பீர்கங்காய், முருங்கைக்காய், அவரைக்காய், மற்றும் பலாக்கொட்டை. இவற்றில் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்தும் அல்லது எவையெல்லாம் வீட்டில் இருக்கிறதோ அவற்றை கொண்டு கூட்டு செய்யலாம்.
இனி செய்முறையை காண்போம்.
ஒன்று முதல் 1 1/2 கப் கூட்டு செய்யலாம்.
இரண்டு முதல் மூன்று பேர் சாப்பிட சரியாக இருக்கும்.

புளில்லாகறி [ காய்கறி கொத்தமல்லி கூட்டு ]

தேவையான பொருட்கள் :
கத்தரிக்காய்                                          : 1 சிறியது, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
முருங்கைக்காய்                                  : 1/2, 1 அங்குல துண்டுகளாக்கவும்.
பீர்கங்காய்                                               : 1/2, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
அவரைக்காய்                                         : 6, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
கொத்தமல்லி தழை                            1/4 கப் பொடியாக நறுக்கியது
வெங்காயம்                                             : 1 சிறியது, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
பூண்டு                                                         : 2 பற்கள், பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
பயத்தம் பருப்பு                                       : 1/4 கப்
மஞ்சத்தூள்                                              : 1 சிட்டிகை
சாம்பார் தூள்                                           : 3/4 Tsp

கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது

அரைப்பதற்கு :
தேங்காய் துருவியது                            : 3 Tsp
சீரகம்                                                            : 1/4 Tsp
மிளகு                                                            : 3 அ 4 [ விரும்பினால் ]
அரிசிமாவு                                                   : 1/4 Tsp

தாளிக்க :
வெங்காய வடவம்                                  சிறிது
எண்ணெய்                                                  : 1/2 Tsp

செய்முறை :
பயத்தம் பருப்பை கழுவி 1/2 கப் தண்ணீர் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சத்தூள் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
அதாவது அதிக தீயில் 1 விசில் வந்தவுடன் தீயை குறைத்து 3 நிமிடங்கள் வேக விடவும்.
ஆவி அடங்கிய பிறகு ஒரு கிண்ணத்தில் எடுத்து தனியே வைக்கவும்.

அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் விட்டு, சாம்பார் தூள், மஞ்சத்தூள், உப்பு, வெங்காயம், பூண்டு மற்றும் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து வேக விடவும்.


வெந்தவுடன் வேகவைத்த பருப்பு, கொத்தமல்லி மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் 3 முதல் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

மிகுந்த நேரம் கொதிக்க தேவையில்லை. ஒன்று சேர்ந்தாற் போல வந்தால் போதும்.

கீழே இறக்கி வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி வெங்காய வடவம் தாளித்து கூட்டின் மேல் சேர்க்கவும்.
சுவையும் மணமும் நிறைந்த புளில்லாகறி தயார்.

புளில்லாகறி [ காய்கறி கொத்தமல்லி கூட்டு ]

சூடான சாதத்தின் மேல் ஊற்றி சிறிது நெய் சேர்த்து பிசைந்து பொரித்த வெங்காய வற்றல் உடன் சுவைத்தால் ஆஹா! ஆஹஅஹா!!... அபாரமாக இருக்கும். செய்து சுவைத்து பார்க்கவும்.



Friday, November 28, 2014

Dulce de leche

Dulce de leche : #Dulcedeleche,  போர்ச்சுகீசிய வார்த்தை ஆகும். இந்த வார்த்தை பாலிலிருந்து தயாரிக்கப்படும்  இனிப்பை குறிப்பிடுவதாகும். பாலை சுண்டக் காய்ச்சிக்கொண்டே இருந்தால் அதன் நிறம் மாறி சாக்லேட் போல இறுகி வரும்.  மிக மிக சுவையானதொரு இனிப்பாகும். ஒரு முறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தோன்றும். இந்த இனிப்பு தென் அமெரிக்க நாடுகளில் மிக பிரபலம். மேலும் அறிய கீழே கொடுக்கப் பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.

Dulce de leche

வெளிநாட்டில் வசிக்கும் எனது மகள் மூலமாக முதலில் இந்த இனிப்பை பற்றி அறிந்து கொண்டேன். அவள் பாலை  சுமார் இரண்டு மணிநேரம் காய்ச்சி இந்த இனிப்பை செய்ததாக கூறினாள். பிறகு milkmaid tin கடைகளில் கிடைக்கிறதல்லவா அதனை கொண்டு மிக எளிதாக  விடலாம் என்று செய்முறையை கூறினாள். அதனை பின்பற்றி செய்து பார்த்தேன். செய்த பின் டின்னை திறந்து ஒரு முறை  நக்கிப் பார்த்தேன். மிக அருமையாக இருந்தது. மறு படியும் சுவைக்கத் தூண்டியது!! சற்றேறக்குறைய கால் பகுதியை  நானே காலி செய்து விட்டேன். இனி செய்முறையை பார்ப்போம்.

dulce de leche

தேவையானது ஒரு milkmaid tin .

செய்முறை :

டின்னை திறக்க வேண்டாம். மேலே பிளாஸ்டிக் மூடி ஏதேனும் இருந்தால் அதனை அகற்றி விடவும்.
குக்கரில் டின்னை படுக்கப் போடவும்.
டின் மூழ்கி அதற்கு மேலும் 1 cm உயரம் வரை நீரால் நிரப்பவும்.


குக்கரை மூடி வெயிட் பொருத்தி அதிக தீயில் சூடாக்கவும்.
ஒரு விசில் வந்த பிறகு தீயை  குறைத்து விடவும்.
இவ்வாறு  குறைந்த தீயில் 25 நிமிடங்கள்  வேக விடவும்.


பிறகு அடுப்பை  விட்டு இறக்கி ஆவி அடங்கும் வரை காத்திருக்கவும்.
பின்னரும் தண்ணீரின் சூடு சிறிது குறையும் வரை காத்திருக்கவும்.
டின்னை எடுத்து வெளியில் வைத்த பின்னரும் அதன் சூடு முழுவதுமாக ஆறிய பின்னர் திறக்கவும்.
ஆஹா!! அருமையான சாக்லேட் நிறத்துடன் கூடிய இனிப்பு தயார்.

dulce de leche

இன்னுமா காத்துகொண்டிருக்கிரீர்கள்!! சுவைத்து பாருங்கள். நீ  நான் என்று எல்லோரும் போட்டி போட ஆரம்பித்து விடுவார்கள்.
இதனை ஐஸ்க்ரீம், கேக், போன்றவற்றினுடன் சுவைக்கலாம்.
செய்து பார்த்த பின் கூறவும்!!









Tuesday, November 25, 2014

Colacasia Curry

#சேப்பங்கிழங்குகறி : இந்த கிழங்கை பற்றி மேலும் அறிய கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
http://en.wikipedia.org/wiki/Taro

இந்த கிழங்கை கொண்டு சாம்பார் மற்றும் கறி செய்யலாம். கேரளாவில் இருந்த போது இக்கிழங்கை கொண்டு செய்யப்பட்ட வறுவலை சுவைத்திருக்கிறேன்.
இங்கு சேப்பங்கிழங்கு கறி செய்வதெப்படி என காணலாம்.

சேப்பங்கிழங்கு கறி


தேவையான பொருட்கள் :
1/4 kg                                         சேப்பங்கிழங்கு
1                                                 வெங்காயம், நீள துண்டுகளாக நறுக்கவும்
1                                                 தக்காளி, பொடியாக நறுக்கவும்
10                                               கறுவேப்பிலை

தேவையான பொடிகள் :
1 pinch                                        மஞ்சத்தூள்
1/2 Tsp                                        சிகப்பு மிளகாய் தூள் [ adjust ]
1/4 Tsp                                        சீரகத்தூள்

தாளிக்க :
4 Tsp                                           எண்ணெய்
1/2 Tsp                                       கடுகு
1 Tsp                                           உளுத்தம் பருப்பு
1 pinch                                      பெருங்காய தூள்

சிறிது கொத்தமல்லி தழை அலங்கரிக்க.

செய்முறை :
கிழங்கை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
அவை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு உப்பு சேர்க்கவும்.
குக்கரினுள் வைத்து மூன்று விசில் மற்றும் குறைந்த தீயில் ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
ஆவி அடங்கிய பின்னர் எடுத்து தோலை உறிக்க முடிந்தால் கிழங்கு வெந்து விட்டதாக அர்த்தம்.
இல்லாவிடின் மறுபடியும் சிறிது நேரம் வேக வைக்கவும்.

தோலை அகற்றி தனியே எடுத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகை வெடிக்க விட்ட பின்னர் உளுத்தம் பருப்பை சிவக்க வறுக்கவும்.
பெருங்காயத்தூள் சேர்த்த பின்னர் கறுவேப்பிலை, அதனை அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது வெளிர் நிறமாக மாறியவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியவுடன் மிளகாய் தூள், உப்பு மற்றும் சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.
கிழங்கை ஒரே அளவு துண்டுகளாக்கி சேர்த்து பிரட்டவும்.
நன்கு கிளறி விடவும்.
ஓரிரு நிமிடங்கள் ஒரு தட்டினால் மூடி வைக்கவும்.
தண்ணீர் சுண்டி கிழங்கின் மேல் தக்காளி கலவை நன்கு பூசினாற்போல வந்தவுடன் பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைத்து கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.


சேப்பங்கிழங்கு கறி தயார்.

சேப்பங்கிழங்கு கறி

கலந்த சாதம், சாம்பார் சாதம் மற்றும் ரசம் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.




மற்ற சமையல் குறிப்புகள்

சேப்பங்கிழங்கு மசாலா கறி






Thursday, November 20, 2014

Cauliflower Poriyal

#காலிப்ளவர்பொரியல் : #காலிப்ளவர் கொழுப்பு சத்து மிகவும் குறைவாக உள்ள காய்கறியாகும். மேலும் இது ஒரு சிறந்த antioxidant & anti-inflammatory குணங்கள் உடையது.  மற்றும் Omega 3 fatty acid நிறைந்துள்ளது. அத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள காயை கொண்டு ஒரு மிக எளிமையான பொரியல் எவ்வாறு செய்வது என காணலாம்.

காலிப்ளவர் பொரியல்


தேவையான பொருட்கள் :
1 1/2 கப்                              காலிப்ளவர் துண்டுகள்
1                                            வெங்காயம், பொடியாக நறுக்கவும்
2 அ 3                                   பச்சை மிளகாய்
3 Tsp                                     தேங்காய் துருவல்
1/2 Tsp                                  உப்பு [ அட்ஜஸ்ட் ]

தாளிக்க :
1/2 Tsp                                  கடுகு
1 Tsp                                     உளுத்தம் பருப்பு
1/2 Tsp                                   எண்ணெய்
அலங்கரிக்க சிறிது கொத்தமல்லி தழை.

செய்முறை :


அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகை வெடிக்க விட்ட பின்னர் உளுத்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.
பின்னர் வெட்டிவைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
இப்போது காலிப்ளவர் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.


உப்பு சேர்த்து கலந்து மூடி போட்டு வேக விடவும்.
காலிப்ளவர் மென்மையாக வெந்தவுடன் தேங்காய் துருவலை சேர்த்து பிரட்டி விடவும்.
அடுப்பை அணைத்து விட்டு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

காலிப்ளவர் பொரியல்


ரசம் மற்றும் சாம்பார் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

Monday, November 17, 2014

Kothavarangai-Paruppu-Usili

#கொத்தவரங்காய்பருப்புசிலி : #கொத்தவரங்காய் அல்லது #கொத்தவரைக்காய் #பருப்புசிலி செய்ய மிகவும் ஏற்றதாகும்.
இதன் செய்முறையை இரு பாகங்களாக பிரிக்கலாம். பருப்பை ஊற வைத்து மசாலாவுடன் சேர்த்து அரைத்து ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும்.
பிறகு வேக வைத்த கொத்தவரங்காயுடன் அடுப்பில் பிரட்டி எடுக்க வேண்டும்.
இனி விரிவாக காண்போம்.

கொத்தவரங்காய் பருப்புசிலி [ Cluster Beans Lentil Masala Curry ]

தேவையான பொருட்கள் :
1/4 kgகொத்தவரங்காய் [ Cluster Beans ]
1 சிட்டிகைமஞ்சத்தூள்
1/2 Tspசாம்பார் பொடி
1/2 Tspஉப்பு [ adjust ]
ஊறவைக்க வேண்டியவை :
2 Tbspதுவரம் பருப்பு
2 Tbspகடலை பருப்பு
மசாலாவிற்கு :
3 Tspதேங்காய் துறுவல்
2 or 3சிகப்பு மிளகாய்
1 Tspசீரகம்
1/2 Tspசோம்பு
1/2 Tspமல்லித்தூள்
2 பற்கள்பூண்டு 
4 or 5சின்ன வெங்காயம்
1வெங்காயம்
10கறுவேப்பிலை
20 to 25புதினா இலைகள்
1 Tbspகொத்தமல்லி தழை
1/2 Tspஉப்பு
தாளிக்க :
1 Tspகடுகு
1 Tspஉளுத்தம் பருப்பு
2 Tspஎண்ணெய்


அலங்கரிக்க தேவையான கொத்தமல்லி

செய்முறை :
ஊற வைத்த பருப்பு வெங்காயம் நீங்கலாக மற்றவற்றை மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
சிறிது தண்ணீர் [ மிகவும் குறைவாக ] பின்னர் சேர்த்து நன்கு அரைக்கவும்.


இப்போது தண்ணீரை வடித்து விட்டு பருப்பு மற்றும் வெங்காயத்தை சேர்க்கவும்.
ஒன்றிரண்டாக உடைபடுமாறு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.  

இட்லி பானையில் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
இட்லி தட்டில் எண்ணெய் தடவி அரைத்து வைத்துள்ள பருப்பு மசாலாவை பரப்பி வைக்கவும்.
இட்லி பானையில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதனுள்ளே வைத்து 5 முதல் 7 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.


வெந்ததும் ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.



ஆவியில் மசாலா வெந்து கொண்டிருக்கும் போது மற்றொரு அடுப்பில் குக்கரில் அரிந்து வைத்துள்ள கொத்தவரங்காயை சாம்பார் பொடி, உப்பு, மஞ்சத்தூள் ஆகியவற்றுடன் 1/4 கப் தண்ணீர் விட்டு மூடி போட்டு  வேகவிடவும்.
ஒரு விசில் வந்ததும் உடனே நிறுத்தி ஆவியை வெளியேற்றி விட்டு வெந்த காயை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

இப்போது அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்கவிட்டு உளுத்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.
உளுத்தம் பருப்பு சிவந்தவுடன் காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அதற்குப் பிறகு ஆவியில் வேக வைத்துள்ள பருப்பு மசாலாவை சேர்க்கவும்.
கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும்.
தண்ணீர் வற்றி சிறிது சிவந்து வரும் வரை அடுப்பில் சிறிய தீயில் வைத்திருக்கவும்.
கொத்தவரங்காய் பருப்புசிலி

அடுப்பை அணைத்துவிட்டு ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
மிக ருசியான பருப்புசிலி தயார். சாம்பார் மற்றும் ரசம் சாதத்திற்கு ஏற்ற கறியாகும்.
கொத்தவரங்காய் பருப்புசிலி

Sunday, November 16, 2014

Kuthiraivaali Kothamalli Rice

#குதிரைவாலிகொத்தமல்லிசாதம் : #குதிரைவாலி #சிறுதானியம் வகைகளுள் ஒன்றாகும். இதற்கு ஆங்கிலத்தில் Barnyard Millet  என பெயர்.
இதனுடைய அறிவியல் பெயர் : Echinochloa frumantacea .
மற்ற சிறு தானியங்களை போல தாது உப்புக்கள் நிறைந்துள்ளது.
இதன் நார்சத்து மற்ற சிறு தானியங்கள் மற்றும் தானியங்களைக் காட்டிலும் அதிக அளவில் நிறைந்துள்ளது.

இதனை கொண்டு சில உணவு வகைகள் செய்யும் முறையை முன்பே பார்த்திருக்கிறோம். அவையாதெனில், குதிரைவாலி பொங்கல், குதிரைவாலி இட்லி, குதிரைவாலி வாழைப்பூ புலாவு , குதிரைவாலி உப்புமா .
இங்கு குதிரைவாலியுடன் கொத்தமல்லி சேர்த்து ஒரு #கலந்தசாதம் செய்வதெப்படி என காண்போம்.

குதிரைவாலி கொத்தமல்லி சாதம்

1/2 cup                                   குதிரைவாலி [ Barnyard millet ]
10                                           சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கவும்.
or
1                                            வெங்காயம், பொடியாக நறுக்கவும்.
6 cloves                                  பூண்டு, பொடியாக நறுக்கவும்.
1/2 cup                                  கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது.
1/2 Tsp                                  மிளகு சீரகபொடி 
1/2 Tsp                                  உப்பு 

To Temper :
1/2 Tsp                                  சீரகம்
2 Tsp                                     நெய்
2 Tsp                                     நல்லெண்ணெய் [ till / sesame oil ]

செய்முறை :
குக்கரில் அரிசியை கழுவி சேர்த்து 1 கப் தண்ணீர் விடவும்.
மூடி போட்டு வெயிட் வைத்து 3 விசில் வரும் வரை அதிக தீயில் வேக விடவும்.
பின்னர் தீயை குறைத்து 3 நிமிடங்கள் வேக விடவும்.
ஆவி அடங்கிய பின்னர் திறந்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி 1 Tsp நல்லெண்ணெய் ஊற்றி காற்றாடியின் கீழே வைத்து ஆற விடவும்.

குதிரைவாலி சாதம்

அடுப்பில் வாணலியை வைத்து 1 Tsp எண்ணெய் விட்டு சீரகத்தை வெடிக்க விடவும்.
பின்னர் வெங்காயத்தையும் பூண்டையும் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
பிறகு கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும்.
மிளகு சீரகப்பொடி மற்றும் உப்பு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி விட்டு அடுப்பை அணைத்து விடவும்

.

இதனை ஆறவிட்ட குதிரைவாலி சாதத்தின் மேல் கொட்டவும்.
நெய் விட்டு தேக்கரண்டியல் மென்மையாக கலந்து விடவும்.
உப்பு மற்றும் மிளகு காரம் சரி பார்க்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

குதிரைவாலி கொத்தமல்லி சாதம்

விருப்பமான பொரியல் அல்லது தயிர் பச்சடியுடன் சுவைக்கவும்.


குதிரைவாலி கொத்தமல்லி சாதம்

இதனை மற்ற கலந்த சாதங்களை போல மதிய உணவிற்காக டிபன் டப்பாவில் அடைத்து எடுத்துச் செல்லலாம். நன்கு ஆற விட்ட பிறகு அடைத்து மூடி போட்டு மூடி எடுத்துச் செல்வது நலம்.

வேறு சில சமையல் குறிப்புகள் :
குதிரைவாலி வாழைப்பூ புலாவ் குதிரைவாலி புளியோதரை வரகரிசி புளியோதரை

Friday, November 14, 2014

Spinach Dosai

#பசலைகீரைதோசை : #கீரைகள் உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்களை கொடுக்க கூடியது. அதிலும் #கொடிபசலை கீரையில் வைட்டமின் A மிக அதிக அளவில் நிறைந்துள்ளது. இதை தவிர வைட்டமின் B, C மற்றும் K குறிப்பிடும் படியாக உள்ளது.
கீரைகளை நீண்ட நேரம் அதிக தீயில் வேக வைக்காமல் குறுகிய நேரத்தில் பச்சை நிறம் மாறாமல் வேக வைத்து சாப்பிடும் போதுதான் அதிலுள்ள சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கிறது.
அமராந்தம் [ அமராந்த் ] எனப்படும் கீரை விதையின் மாவையும் சிறிதளவு மாவில் சேர்த்திருக்கிறேன். அமராந்த் புரோட்டீன் நிறைந்துள்ள உணவு  பொருள் ஆகும். கிடைத்தால் உபயோகப்படுத்தவும். இல்லாவிடின் பரவாயில்லை.
இனி செய்முறையை காண்போம்.

பசலைகீரை தோசை

தேவையான பொருட்கள் :
2 cups                              Iஇட்லி மாவு  / தோசை மாவு
1/8 cup                             அமராந்த் மாவு  [ optional ]
10                                     கொடி பசலை கீரை, கழுவி பொடியாக நறுக்கவும்
1 small size                       வெங்காயம், பொடியாக நறுக்கவும்
1 Tsp                                மிளகு, பொடித்து வைக்கவும்
1 Tsp                                சீரகம்
1/2 Tsp                             உப்பு

தோசை சுட்டெடுக்க தேவையான எண்ணெய்.

செய்முறை :
இட்லி மாவு அல்லது  தோசை மாவு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ளவும்.
அதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.
நன்கு கலந்து வைக்கவும்.


அடுப்பில் மிதமான தீயில் தோசைக்கல்லை சூடாக்கவும்.
கல் சூடானதும் சில துளிகள் எண்ணெய் விட்டு தடவவும்.
பின்னர் மாவை கரண்டியில் எடுத்து தோசைகல்லின் நடுவே வைத்து, கரண்டியின் பின் பாகத்தால் சமமாக பரப்பி விடவும்.
சிறிது தடிமனான தோசையாக ஊற்ற வேண்டும்.
தோசையின் மேலும் அதனை சுற்றியும் சில துளிகள் எண்ணெய் விடவும்.
ஓரங்கள் சிவந்து வரும் போது திருப்பிப் போட்டு வெந்தவுடன் தட்டில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி சட்னி  அல்லது இட்லி மிளகாய் பொடியுடன் சுவைக்கவும்.


பசலைகீரை தோசை பசலைகீரை தோசை
பசலைகீரை தோசை பசலைகீரை தோசை





மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க :

ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை
நீர்தோசை
நீர்தோசை
முடக்கத்தான் தோசை
முடக்கத்தான் தோசை
குதிரைவாலி நீர் தோசை
குதிரைவாலிநீர்தோசை
ரவா தோசை
ரவா தோசை