Search This Blog

Thursday, February 27, 2014

Thakkali Sadham

#தக்காளிசாதம் : தக்காளி சாதத்தை இரண்டு வெவ்வேறு முறைகளில் செய்யலாம்.
ஒன்று வெங்காயம் தக்காளியை மசாலா பொருட்களுடன் வதக்கிய பிறகு அரிசியை சேர்த்து அளவான தண்ணீர் விட்டு சமைப்பதாகும்.
மற்றொரு முறையில் சாதத்தை தனியே வடித்து முன்பே தயாரித்து வைத்துள்ள தக்காளி தொக்குடன் கலந்து செய்யப்படுவதாகும்.
தற்போது தக்காளி தொக்கு செய்யும் முறையை அறிந்துக் கொண்டோம்.
அதனால் இரண்டாவது முறைப்படி தக்காளி சாதம் எவ்வாறு செய்யலாம் என காண்போம்.

தக்காளி சாதம்

தேவையான பொருட்கள் :
1 கப்                                         அரிசி
4 Tsp                                          நல்லெண்ணெய்
1/2 Tsp                                       மிளகாய் தூள் [ அட்ஜஸ்ட்]
1 1/2 Tsp                                    உப்பு [ அட்ஜஸ்ட் ]
4 Tsp குவித்து                       தக்காளி தொக்கு


செய்முறை :
குக்கரில் அரிசியை எடுத்துக்கொள்ளவும்.
இரண்டு முறை கழுவிய பிறகு 2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
குக்கரை மூடி  வெயிட் பொருத்தி அதிக தீயில் 3 விசில் வரும் வரை வைக்கவும்.
3 விசிலுக்குப் பின் தீயை குறைத்து 3 நிமிடங்கள் வேக விடவும்.
ஆவி அடங்கியவுடன் திறந்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொட்டவும்.

நல்லெண்ணையை சாதத்தின் மேல் பரவலாக ஊற்றி காற்றாடியின் கீழே ஆற வைக்கவும்.
ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை சாரணியினால் சாதத்தை நசுக்காமல் கிளறி விடவும்.
சிறிது நேரத்தில் சூடு ஆறி உதிர் உதிராக சாதப் பருக்கைகள் பிரிந்துவிடும்.

  • இப்போது தக்காளி தொக்கு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.
  • தேவையானால் இன்னும் சிறிது தக்காளி தொக்கு சேர்த்து கிளறவும்.
  • நன்றாக சூடு ஆறிய பின் வேறொரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
தக்காளி தொக்கு
தக்காளி சாதம் தக்காளி சாதம்

தக்காளி சாதத்தை தங்களுக்கு விருப்பமான கார கறி அல்லது வத்தல் / அப்பளம் ஆகியவற்றுடன் சுவைக்கலாம்.

தக்காளி சாதம்

தொக்கு வெங்காயம் கொண்டு செய்திருப்பதால் நீண்ட நேரம் வைத்திருக்க இயலாது. ஆறு மணி நேரம் வரை நன்றாக இருக்கும்.

மதிய உணவிற்காக டப்பாவில் அடைப்பதாக இருந்தால் சூடு நன்றாக அடங்கிய பின்னரே  எடுத்து வைக்க வேண்டும்.

சாதம் சேர்க்கப் படும் உப்பை உறிஞ்சிகொள்ளும். ஆதலால் செய்யும் போது உப்பை சிறிது தூக்கலாக இட வேண்டும். அவ்வாறு செய்வதால் சாப்பிடும் சமயத்தில் சரியாக இருக்கும்.





Wednesday, February 26, 2014

Tomato Thokku

#தக்காளிதொக்கு : #தக்காளி தொக்கு என்  மகளுக்கு மிக மிக பிடித்தமான ஒன்றாகும். இதனை கொண்டு #கலந்தசாதம் செய்யலாம். மேலும் பூரி, தோசை மற்றும் சப்பாத்தி ஆகியவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் மிக மிக அருமையாக இருக்கும்.
எப்படி செய்யலாம் என காணலாம்.

தக்காளி தொக்கு


தேவையான பொருட்கள் :

தக்காளி தொக்கு செய்ய தேவையான பொருட்கள்

4                                                தக்காளி [ பெங்களூர் ரகம் ], சாறு எடுக்கவும்.
2                                               வெங்காயம், மிகவும் பொடியாக அரியவும்.
7 பற்கள்                                பூண்டு, மிகவும் பொடியாக அரியவும்
சிறிய துண்டு                     இஞ்சி [ விருப்பப்பட்டால் ], பொடியாக அரியவும்
3                                               பச்சை மிளகாய், மிகவும் பொடியாக அரியவும்
1/4 கப்                                     கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
15                                            கருவேப்பிலை
  சேர்க்க வேண்டிய பொடிகள் :
1/2 Tsp                                     பெருங்காய தூள்
3/4  Tsp                                    மிளகாய் தூள்
1/4 Tsp                                     மஞ்சத்தூள்
1/2 Tsp                                     சீரகத்தூள்

தாளிக்க :
1 Tsp                                       கடுகு
2 Tsp                                       உளுத்தம் பருப்பு
3 Tsp                                       கடலை பருப்பு
3 Tsp                                       நிலக்கடலை [ இருந்தால் ]                     
6 அ 7 Tsp                               நல்லெண்ணெய்

செய்முறை :
அடுப்பில் வாணலியை மிதமான தணலில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
 எண்ணெய் சூடானதும்  கடுகு போட்டு வெடித்ததும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் நிலக்கடலையை சேர்த்து வறுக்கவும்.
சிவந்த பின் பெருங்கயத தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்தவுடனேயே கருவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.


இதன் பிறகு பூண்டு, இஞ்சி, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து 2 சிட்டிகை உப்பையும் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது  பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.


இந்த சமயத்தில் மற்ற பொடிகளை சேர்த்து 1 நிமிடம் வதக்கியபின் தக்காளி சாரை சேர்த்து கலக்கவும்.


சிறிய தீயில் தண்ணீர் சுண்டும் வரை கொதிக்க விடவும்.


 தண்ணீர் ஏறக்குறைய சுண்டிய பின் உப்பு சேர்த்து கிளறவும்.


எண்ணெய் வெளியே வரும் வரையும் தொக்கு வாணலியில் ஒட்டாமல் சுருண்டு சிறிது பளபளப்பாகும் வரையிலும்  அடுப்பில் வைத்திருக்கவும்.

தக்காளி தொக்கு

இதனை செய்ய சற்றேறக்குறைய 45 நிமிடங்கள் ஆகும்.
சூடு நன்கு ஆறிய பின் ஒரு பீங்கான் கிண்ணத்திலோ அல்லது சுத்தமான பாட்டிலில் எடுத்து வைத்து பத்திர படுத்தலாம்.         

தக்காளி தொக்கு


சாதத்தில் கலந்து தக்காளி சாதம் செய்யலாம்.
வெளி ஊர்களுக்கு செல்லும் போது பயணத்தில் இட்லி, சப்பாத்தி போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட பயன் படுத்தலாம்.
வெங்காயம் இருப்பதால் வெகு நாட்களுக்கு வெளியில் வைத்து உபயோகப் படுத்த முடியாது.
குளிர் சாதன பெட்டியில் பத்திர படுத்தி நான்கைந்து நாட்களுக்கு உபயோகப்படுத்தலாம்.









Monday, February 24, 2014

Kuthiraivaali Upma Kozhukattai

#குதிரைவாலிஉப்புமாகொழுக்கட்டை : #குதிரைவாலி #சிறுதானியம்  வகைகளுள் ஒன்றாகும். அரிசி மற்றும் கோதுமையை விட இத்தானியத்தில் நார் சத்து மிக அதிகம்.

குதிரைவாலி அரிசி

இதனை ஆங்கிலத்தில்  Barnyard Millet அல்லது Japanese Barnyard Millet  என அழைக்கப் படுகிறது.
இதன் அறிவியல் பெயர் : Echinochloa Frumentacea

English                                : Barnyard Millet Or Japanese Barnyard Millet
Common Name                  : Sawan Or sanwa Or Samo Or Morio
Marathi & Chhattisgarh       : Bhagar Or Varai
Kannada                             : Oodalu
Oriya                                  : Kira
Punjabi                               : Swank
Telugu                                : Udalu Or Kodi Sama
Scientific Name                   : Echinochloa Frumentacea
Source : Echinochloa , Barnyard Millet 
To know on Millets

இங்கு குதிரைவாலியை உபயோகித்து கொழுக்கட்டை எப்படி செய்யலாம் என காண்போம்.

குதிரைவாலி உப்புமா கொழுக்கட்டை


தேவையான பொருட்கள் :
1/3                                            அரைத்த அரிசி மாவு [அ ] உடைத்த அரிசி
1/3                                            குதிரைவாலி
1 Tbsp                                    உடைத்த மக்காச்சோளம்
2 Tbsp                                     ஓட்ஸ்
3/4 Tsp                                      உப்பு

ஊற வைக்க :
1 Tsp                                         உளுத்தம் பருப்பு
2 Tsp                                         கடலை பருப்பு

தாளிக்க :
1 Tsp                                        கடுகு
1 Tsp                                         உளுத்தம் பருப்பு
2 Tsp                                         கடலை பருப்பு
2 சிட்டிகை                            பெருங்காய பொடி 
2 அ 3                                        சிவப்பு மிளகாய் 
10                                              சின்ன வெங்காயம், பொடியாக அரியவும் 
10                                              கருவேப்பிலை
1 Tsp                                          நல்லெண்ணெய் 

செய்முறை :
குதிரைவாலியை கழுவி கல் போக அரித்து தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பருப்பையும் ஊறவைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து ஊறவைத்தவை  மற்றும் கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களுடன் கலந்து கெட்டியாக பிசைந்து வைக்கவும்.

ஒரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

மற்றொரு அடுப்பில் இட்லி பானையை வைத்து தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் கடுகை வெடிக்க விட்டு, சிகப்பு மிளகாய், உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
பிறகு பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கிய பின் வெங்காயம் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கி மாவில் சேர்க்கவும்.


நன்கு கலந்து விட்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய் தடவிய இட்லி தட்டில் அடுக்கவும்.


இட்லி பானையில் வைத்து 8 முதல் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.


சூடான சுவையான உப்புமா கொழுக்கட்டை தயார்.
தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை.

குதிரைவாலி உப்புமா கொழுக்கட்டை

விருப்பபட்டால் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சாஸ் தொட்டுக் கொண்டு சுவைக்கலாம்.




குதிரைவாலியில் மற்ற உணவு வகைகள் :

குதிரைவாலி இட்லி
குதிரைவாலி பொங்கல்
குதிரைவாலி உப்புமா




Paneer Masala Curry

#பன்னீர்மசாலாகறி : எல்லா வகையான இரவு விருந்துகளிலும் இங்கு நான் வசிக்கும் ராய்ப்பூரில் கட்டாயமாக இந்த கறி இடம் பெற்றிருக்கும். ஆனால் எனக்கு இங்கு செய்யப்படும் #பன்னீர் மசாலா கறியின் சுவை சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்து விட்டது. அதனால் என்னுடைய முறைப்படி செய்தேன்.
மிக மிக அருமையாக இருந்தது. அதனை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பன்னீர் மசாலா கறி

தேவையான பொருட்கள் :
150 gm                                      பன்னீர், ஒரே மாதிரி சிறிய சதுரங்களாக வெட்டவும்
1 பெரிய அளவு                     வெங்காயம், பொடியாக அரியவும்
3 நடுத்தர அளவு                   தக்காளி, பொடியாக அரியவும்
10                                             கருவேப்பிலை
1/4 கப்                                      கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது.

அரைக்க :
3  Tsp                                       தேங்காய் துருவல்
1/2 TSp                                    கசகசா
3                                              முந்திரி பருப்பு
1 Tsp                                        சீரகம்
2 பற்கள்                                  பூண்டு [ பிடிக்குமானால் ]

 தாளிக்க :
1/2 Tsp                                     சீரகம்
3 Tsp                                        எண்ணெய்

சேர்க்க வேண்டிய பொடிகள் :
1 Tsp                                       மிளகாய் தூள்
1/2 Tsp                                    சீரகத்தூள்
2 சிட்டிகை                            மஞ்சத்தூள்

செய்முறை :
அரைக்க வேண்டிய பொருட்களை மிக்சியில் நன்கு மைய அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸி பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டிருப்பவற்றையும் கழுவி அரைத்து வைத்துள்ள மசாலாவுடன் சேர்க்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடான பின் சீரகத்தை வெடிக்கவிட்டு மிளகாய்த்தூள் சேர்த்தவுடனேயே கொத்தமல்லி தழை சிறிது மற்றும் கருவேப்பிலையை சேர்க்கவும்.
அரை நிமிடம் வதக்கியபின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்னேர் தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
இப்போது மஞ்சத்தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.


பச்சை வாசனை போனபின் பன்னீர் துண்டுகளை சேர்த்து உப்பு போட்டு 1 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.


2 நிமிடம் கொதித்த பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும்.
சிறிய தீயில் சேர்ந்து வரும் வரை கொதிக்க விடவும்.


கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

பன்னீர் மசாலா கறி

பூரியுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட ஏற்ற கறியாகும்.
சப்பாத்தியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.



மற்ற குருமா வகைகள் செய்து பார்க்க
காலிப்ளவர் தக்காளி குருமா காலிப்ளவர் காளான் மிளகு கிரேவி பஜ்ஜி மிளகாய் கிரேவி

Broken Wheat Kali

கோதுமை ரவா களி : களி அரிசி நொய், பருப்பு மற்றும் வெல்லம் கொண்டு செய்யப்படும் ஒரு இனிப்பாகும். வெல்லம் கொண்டு செய்யும் போது பதம் தப்பினால் கமர்கட் ஆகிவிடும் அபாயமும் உண்டு. ஆனால் குக்கரில் செய்யும் போது அந்த  பயம் இல்லை. இந்த முறை கோதுமை ரவா  கொண்டு முயற்சி செய்தேன். மிக அருமையான சுவையுடன் இருந்தது.


இங்கு குக்கரில் மிகவும் இலகுவாக களி  செய்வது எவ்வாறு என பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :
3/4கப்                                    வரகு அரிசி
1/4Tbsp                                     பயத்தம் பருப்பு
1/2 கப்                                    தேங்காய் துருவல்
1/2 கப்                                    வெல்லம் [ அட்ஜஸ்ட் ]
3                                              ஏலக்காய்
1 சிட்டிகை                            உப்பு
2 Tsp                                        நெய்

செய்முறை :
வாணலியில் எண்ணெய் விடாமல் கோதுமை ரவாவை வாசனை வரும் வரை வறுக்கவும்.


ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
இப்போது பயத்தம் பருப்பை ( பச்சை பருப்பு ) சிவக்க வறுக்கவும்.

வறுத்த பருப்பை கொர கொர என மிக்ஸியில் உடைத்துக் கொள்ளவும்.
வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தை இடித்து போட்டு 1/2 கப் தண்ணீர் ஊற்றி சூடு பண்ணவும்.
ஒரு கரண்டி கொண்டு கலக்கி வெல்லத்தை கரைக்கவும்.
வெல்லம் கரைந்தவுடன் அடுப்பை நிறுத்தி விடவும்.
வெல்லத் தண்ணீரை டீ வடிகட்டியால் மண்ணை அகற்ற வடிகட்டிக் கொள்ளவும்.
ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.
குக்கரில் வறுத்த கோதுமை ரவா, ஒன்றிரண்டாக உடைத்த பயத்தம் பருப்பு, தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி மற்றும் உப்பை எடுத்துக்கொள்ளவும்.
களி  செய்ய 2 கப் திரவம் தேவை.
வெல்லத் தண்ணீருடன் மேலும் தண்ணீர் விட்டு 2 கப் அளவாக்கி குக்கரில் விடவும்.


குக்கரை மூடி வெயிட் வைத்து அதிக தீயில் மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும்.
பின் தீயை குறைத்து 3 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

ஆவி முற்றிலும் அடங்கியபின் மூடியை திறக்கவும்.
நெய் விட்டு  நன்கு கலக்கி விடவும்.
சுவையான இனிப்பான கோதுமை களி தயார்.






Saturday, February 22, 2014

Thinai Kuzhi Paniyaram :

#தினைகுழிபணியாரம் : #தினை, #சிறுதானியம்  வகைகளுள் ஒன்று.
ஆங்கிலத்தில் Foxtail Millet என்றும் அறிவியல் பெயர் Setaria Italica  என்பதும் ஆகும்.

தினை

இதனை பற்றி மேலும் அறிய கீழே உள்ள இணைப்புகளை காணவும்.
புன்செய் தானியங்கள் 
தினை

தினையை கொண்டு குழி பணியாரம் செய்வது எப்படி என காணலாம்.

தினை குழிபணியாரம்

தேவையான பொருட்கள் :
1/2 கப்                                   தோசை மாவு
1/2 கப்                                    தினை
1 Tsp                                      உளுந்து மாவு
1 Tbsp                                    ரவா
1 சிட்டிகை                           சமையல் சோடா

காய்கறிகள் மாவில் சேர்க்க:


1 சிறிய அளவு                     வெங்காயம், பொடியாக நறுக்கவும்
1 Tbsp                                     காரட்,  பொடியாக நறுக்கவும்
3 Tbsp                                     குடை மிளகாய், பொடியாக நறுக்கவும்
1 அ 2                                      பச்சை மிளகாய், பொடியாக நறுக்கவும்
சிறிதளவு                             கொத்தமல்லி தழை, பொடியாக நறுக்கவும்
10                                           கருவேப்பிலை, பொடியாக நறுக்கவும்
1 Tsp                                      சீரகம்

தாளிக்க:
1 Tsp                                       கடுகு
2 Tsp                                      உளுத்தம் பருப்பு
2 Tsp                                      கடலை பருப்பு
1 சிட்டிகை                           பெருங்கயபொடி
3 Tsp                                      எண்ணெய்

செய்முறை:
தினையை மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.
அதனை ஒரு வாயகல பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் சமையல் சோடா நீங்கலாக மற்ற அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.


அதில் சீரகம், கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்க்கவும்.
ஒரு அடுப்பில் வாணலியையும் மற்றொன்றில் குழிபணியார கல்லையும் சூடாக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு , பெருங்காயம் தாளித்த பிறகு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதன் பின் வெங்காயம் சேர்த்து மணம் வரும் வரை வதக்கவும்.
பின்னர் காரட்  சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். கடைசியாக குடை மிளகாய் சேர்த்து சில மணி துளிகள் வதக்கி மாவில் சேர்த்து கலக்கவும்.

பணியார கல் சூடானதும் ஒவ்வொரு குழியிலும் இரண்டிரண்டு சொட்டு எண்ணெய் விடவும்.
இந்த தருணத்தில் சோடாவை 1 Tsp தண்ணீரில் கரைத்து மாவில் சேர்த்து கலக்கவும்.
ஒரு கரண்டியால் மாவை எடுத்து குழிகளை நிரப்பவும். மேலேயும் பணியாரத்தை சுற்றியும் ஒன்றிரண்டு சொட்டு எண்ணெய் விட்டு வேக விடவும்.
ஓரத்தில் சிவந்தவுடன் ஒரு தேக்கரண்டியால் திருப்பி விட்டு வேக விடவும்.
இரண்டு புறமும் பொன்னிறமானதும் பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
தினை குழிபணியாரம்

சூடான தினை குழி பணியாரத்தை தேங்காய் சட்னியுடனோ அல்லது தக்காளி சட்னியுடனோ சுவைத்தால் அருமையாக இருக்கும்.

தினை குழிபணியாரம்




முயற்சி செய்து பார்க்க மேலும் சில சமையல் குறிப்புகள்
தினை தோசை
தினை தோசை
தினை இனிப்பு குழிபணியாரம்
தினை இனிப்பு குழிபணியாரம் 
தினை மாவு உருண்டை
தினை மாவு உருண்டை

சிற்றுண்டி சமையல் வகைகள்


Friday, February 21, 2014

Masaal Vadai

மசால் வடை : காலை சிற்றுண்டிக்கு பெரும்பாலும் உளுந்து வடை ஹோட்டெல்களில் பரிமாறப்படும். அது போல மாலை வேளையில்  ரோடோரத்து டீக் கடைகளில் டீயுடன் சாப்பிட மசால் வடை  தருவது பிரசித்தம்.
இப்போது இந்த மசால் வடை தயாரிக்கும் முறையை பார்ப்போம்.


தேவையான பொருட்கள் :
ஊற வைக்கவும் :
3/4 கப்                                    கடலை பருப்பு
2 Tsp                                       உளுத்தம் பருப்பு
அரைக்க :
1 Tsp                                       சீரகம்
1 Tsp                                       சோம்பு
சிறு துண்டு                          இஞ்சி
2 அ 3                                      சிவப்பு மிளகாய்
1/2 Tsp                                     உப்பு
மாவில் சேர்க்க :
1/4 கப்                                   கொத்தமல்லி அரிந்தது
1                                            வெங்காயம், பொடியாக நறுக்கவும்
12                                          கருவேப்பிலை, பொடியாக நறுக்கவும்
3/4 கப்                                   எண்ணெய் பொரிக்க

செய்முறை:
பருப்பு இரண்டையும் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய பிறகு தண்ணீரை சுத்தமாக வாடி கட்டி விடவும்.
முதலில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் கொர கொரவென பொடிக்கவும்.
அதனுடன் ஊறவைத்த பருப்பை கொர கொரவென  அரைத்தெடுக்கவும்.
அரைப்பதற்கு தண்ணீர் சேர்க்கக் கூடாது.

ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.


இப்போது அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
மாவில் சேர்க்க வேண்டிய பொருட்களை சேர்த்து பிசையவும்.


சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
எண்ணெய் நன்கு சூடானதும் உருட்டி வைத்துள்ள உருண்டையை உள்ளங்கைகளின் இடையே வைத்து சிறிது தட்டையாக்கி எண்ணெயில் போடவும்.


கரண்டியால் இரு பக்கமும் திருப்பி திருப்பி போட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
அதிகப் படியான எண்ணெய் உறிஞ்ச டிஷ்யு காகிதத்தின் மேல் எடுத்து வைக்கவும்.
சோம்பு மணத்துடன் மொறு  மொறு வடை தயார்!!


சூடான காபி அல்லது டீயுடன் சுவைக்கவும்.