Search This Blog

Sunday, March 30, 2014

Thakkali Kai Koottu

தக்காளி காய் கூட்டு : தக்காளி பழத்திற்கு ஒரு சுவையும் மணமும் இருப்பது போல தக்காளி காய்க்கும் தனி சுவை உண்டு. தக்காளி காய் கொண்டு கூட்டு மற்றும் சாம்பார் செய்யலாம். இங்கு கூட்டு எப்படி செய்வது என பார்ப்போம்.

தக்காளி காய் கூட்டு


தேவையான பொருட்கள் :
4                                                   : தக்காளி காய்
1                                                   : தக்காளி
1 சிறியது                                 : பெரிய வெங்காயம்
1 சிட்டிகை                               : மஞ்சத்தூள்
3/4 Tsp                                          : சாம்பார் பொடி
3/4 Tsp                                          : உப்பு
2 Tbsp                                           : வேக வைத்த பச்சை பருப்பு


அரைக்க :
3 Tsp                                            : தேங்காய் துருவல்
1 அ 2                                          : பச்சை மிளகாய்
1/2 Tsp                                         : சீரகம்
1/4 Tsp                                         : அரிசி மாவு
5 அ 6                                          : மிளகு

தாளிக்க :
1/2 Tsp                                        : கடுகு
1 1/2 Tsp                                     : உளுத்தம் பருப்பு
1/2 Tsp                                        : எண்ணெய்

அலங்கரிக்க :
கொத்தமல்லி தழை சிறிதளவு.

செய்முறை :
மிக்சியில் அரைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
தக்காளியை துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
குக்கரில் அரிந்தவை அனைத்தும், பருப்பு,  கொடுக்கப்பட்டுள்ள பொடிகள், மற்றும் உப்பு சேர்த்து மூடி வெயிட் வைத்து 1 விசில் வரும் வரை வேகவைக்கவும்.


குக்கரிலிருந்து உடனே ஆவியை வெளியேற்றி திறந்து விடவும்.


அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்க்கவும்.
 நன்றாக கிளறி 5 லிருந்து 7 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.

இறக்கி வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.
கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.

வாணலியில் எண்ணெய் சூடாக்கி கடுகு வெடிக்க விட்டு உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்து சேர்க்கவும்.

தக்காளி காய் கூட்டு


இந்த கூட்டு ரசம் மற்றும் சாம்பார் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும்



Saturday, March 29, 2014

Murungaikai Palakottai Kothamalli koottu

#முருங்கைக்காய்பலாகொட்டைகொத்தமல்லிகூட்டு : முருங்கைகாயும் பலகொட்டையும் சாம்பார்  மட்டுமல்ல கூட்டு செய்தாலும் மிக மிக ருசியாக இருக்கும். இந்த கூட்டை செய்து சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் .... ம்ம்ம்.... அதன் ருசியே தனிதான்!!..
இனி எப்படி செய்வது என பார்ப்போம்.

முருங்கைக்காய் பலாகொட்டைகொத்தமல்லிகூட்டு


தேவையான பொருட்கள் :


1                                                   : முருங்கைக்காய், துண்டுகளாக வெட்டவும்.
6                                                   :  பலாகொட்டை, நான்காக வெட்டவும்.
1 சிறியது                                 : பெரிய வெங்காயம்
3 பற்கள்                                    : பூண்டு, பொடியாக நறுக்கவும்.
1/4 கப்                                         : கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
1 சிட்டிகை                               : மஞ்சத்தூள்
3/4 Tsp                                          : சாம்பார் பொடி
3/4 Tsp                                          : உப்பு
2 Tbsp                                           : வேக வைத்த பச்சை பருப்பு

அரைக்க :
3 Tsp                                            : தேங்காய் துருவல்
1/4 Tsp                                         : சீரகம்
1/4 Tsp                                         : அரிசி மாவு

தாளிக்க :
1/2 Tsp                                        : வெங்காய வடவம்
1/2 Tsp                                        : எண்ணெய்

செய்முறை :
மிக்சியில் அரைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.


குக்கரில் அரிந்து வைத்துள்ளவற்றையும் மற்ற பொடிகளையும் போட்டு 1/2 கப் தண்ணீர் விடவும். மேலும் வேகவைத்த பருப்பு மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு வெயிட் வைத்து ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும்.


உடனே ஆவியை வெளியேற்றி விட்டு திறக்கவும்.


அரைத்து வைத்துள்ள தேங்காயையும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையும் சேர்க்கவும்.
மீண்டும் அடுப்பின் மேல் மிதமான தீயில் மூன்று நிமிடங்கள் அல்லது எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் வரை கொதிக்க விடவும்.


பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

முருங்கைக்காய் பலாகொட்டைகொத்தமல்லிகூட்டு

வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி வடவத்தை தாளித்து கூட்டின் மேல் சேர்க்கவும்.

முருங்கைக்காய் பலாகொட்டைகொத்தமல்லிகூட்டு


சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

முன்பே கூறியது போல சூடான சாதத்தில் போட்டு ஒரு துளி நெய் விட்டு பிசைந்து வெங்காய வத்தல் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் .... ம்ம்ம்.... அதன் ருசியே தனிதான்!!.. ஊறுகாயுடனும் நன்றாக இருக்கும்.




மற்ற கூட்டு வகைகள் முயற்சி செய்து பார்க்க

முட்டைகோஸ் கூட்டு முருங்கைக்காய் கத்தரிக்காய் கூட்டு

Murungaikai Palakottai Sambar

முருங்கைக்காய் பலாகொட்டை சாம்பார் : சாம்பார் என்றவுடன் முதலில் ஞாபகத்திற்கு வருவது முருங்கைகாய்தான். ஆம்! சாம்பார் செய்ய மிகவும் உகந்த காய் முருங்கைக்காய் ஆகும். முருங்கைக்காய் மற்றும் பலாகொட்டை இரண்டையும் சேர்த்து சாம்பார் செய்யும் போது சாம்பார் கூடுதல் சுவையுடன் அருமையாக இருக்கும். வெய்யில் காலத்தில்தான் இவ்விரண்டும் கிடைக்கும். பலாகொட்டையில் மாவு பொருள் இருப்பதால் சாம்பார் குழம்பலாக நன்கு கெட்டியாக அமையும்.
இனி செய்முறையை காண்போம்.


தேவையான பொருட்கள் :
வேகவைத்த துவரம் பருப்பு                  : 3 Tbsp
 பலாகொட்டை                                              : 8


முருங்கைக்காய்                                     : 1 அ 2
புளி                                                             : 1 சின்ன நெல்லிக்காய் அளவு உருண்டை
சின்ன வெங்காயம்                                : 8
பச்சை மிளகாய்                                      : 2
கருவேப்பிலை                                        : 10
கொத்தமல்லி கீரை                                : சிறிதளவு
முருங்கை கீரை                                      : சிறிதளவு ( இருந்தால் )
சாம்பார் பவுடர்                                       : 2 Tsp
மஞ்சத்தூள்                                               : 1 சிட்டிகை
மல்லித்தூள்                                             : 1 Tsp
உப்பு                                                             : 2 Tsp

தாளிக்க :

எண்ணெய்                                                 : 1/2 Tsp
கடுகு                                                           : 1/2 Tsp
பெருங்காயம்                                            : சிறு துண்டு

செய்முறை :
பலாகொட்டையை நீள வாக்கில் இரண்டாக வெட்டவும். தோலை நீக்கவும்.


சின்ன வெங்காயத்தின் தோலை உரித்து ஒன்றிரண்டாக அறிந்துகொள்ளவும்.
பச்சை மிளகாயை நீள  வாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
கீரை, கருவேப்பிலை , கொத்தமல்லி ஆகியவற்றை தனி தனியாக கழுவி ஆற வைக்கவும்.
முருங்கைக்காயை கழுவி ஒரே அளவு நீள துண்டுகளாக வெட்டி வைக்கவும்.



குக்கரில் பருப்பை போட்டு நன்கு மசித்து 3/4  Cup நீர் சேர்க்கவும்.
 அடுப்பில் ஏற்றி சாம்பார் பொடி , மல்லி பொடி, மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். குறைந்த தீயில் கொதிக்கவிடவும்.

மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு முதலில் கடுகை வெடிக்க விடவும்.
பின் பெருங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய், மற்றும் வெங்காயத்தை வரிசையாக போட்டு சிறிது வதக்கவும்.



வெங்காய வாசனை வந்தவுடன் கொதித்துகொண்டிருக்கும் சாம்பாரில்  கொட்டவும்.

முருங்கைக்காயையும் பலாகொட்டையையும் சேர்க்கவும்.
1 கப் தண்ணீரில் புளியை கரைத்து வடி கட்டி கொதிக்கும் சாம்பாரில் சேர்க்கவும்.


குக்கரை மூடி வெயிட் வைத்து 1 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
ஆவி நன்கு அடங்கியவுடன் வேறொரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

கொத்தமல்லி தழையினால் அலங்கரிக்கவும்.
சுவையான சாம்பார் தயார்.

சூடான சாதத்தில் ஒரு கரண்டி சாம்பார் விட்டு பிசைந்து இஷ்டமான துவட்டலுடன் சாப்பிட்டால் ஆ.. ஆஹா... அதுவல்லவோ பேரானந்தம்!!

சாம்பாருடன் ஒன்றிரண்டு துளிகள் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் இன்னும் சுவையோ சுவை...!!

பருப்பு சாதத்திற்கு தொட்டு கொண்டு சாப்பிடலாம்.
சாதத்துடன் பொடி சேர்த்து பிசைந்து சாப்பிடும் போதும் சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.








Friday, March 28, 2014

Vengaya Vadavam

#வெங்காயவடவம் : வெய்யில் காலத்தில் #சின்னவெங்காயம் மலிவாக கிடைக்கும் போது சின்ன வெங்காயத்தை அரிந்து தாளிக்கும் பொருட்களுடன் சேர்த்து காய வைத்து சேமித்து வைப்பது வழக்கம். இந்த வெங்காய வடவம் கூட்டு மற்றும் குழம்பு ஆகியவற்றில் தாளித்து கொட்ட பயன் படுத்துவார்கள். மேலும் வெங்காய வடவத்தை வறுத்து தேங்காய் சேர்த்து துவையல் அரைக்கலாம்.

சின்ன வெங்காயம் [சாம்பார் வெங்காயம் ]
சின்ன வெங்காயம் [சாம்பார் வெங்காயம் ]

இனி எவ்வாறு வெங்காய வடவம் செய்வது என காண்போம்.
இங்கு ஒரு கிலோ வெங்காயத்திற்கு தேவையான பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எடுத்துக் கொள்ளும் வெங்காயத்தின் அளவிற்கு ஏற்றவாறு மற்ற பொருட்களை கூட்டி குறைத்துக் கொள்ளவும்.

தேவையான பொருட்கள் : 
1 கிலோ                                     சின்ன வெங்காயம்
20 பற்கள்                                   பூண்டு
1/4 கப்                                          கடுகு
1 Tsp                                             மஞ்சத்தூள்
1 Tsp                                             கருவேப்பிலை பொடி
அல்லது
20 - 25                                           கறுவேப்பிலை
2 Tbsp                                            உப்பு
2 Tsp                                             விளக்கெண்ணைய்

ஊற வைக்க :
3 Tbsp                                          உளுத்தம் பருப்பு
1 Tbsp                                          வெந்தயம்
1 Tbsp                                          சீரகம்

செய்முறை :
முதல் நாள் காலை/மதியம்  :
வெங்காயத்தை தோலுரித்து வைக்கவும்.
பூண்டின் தோலையும் நீக்கி விடவும்.

தோலுரித்த வெங்காயம்

முதல் நாள் மாலை/இரவு :
வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, மஞ்சத்தூள், உப்பு, கடுகு ஆகியவற்றை சேர்த்து கலக்கி இரவு முழுவதும் மூடி வைக்கவும்.

மற்றொரு சிறிய கிண்ணத்தில் ஊற வைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கழுவி ஊற வைக்கவும்.

இரண்டாம் நாள் காலை : 
ஊற வைத்த தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி ஒன்றிரண்டாக உடையுமாறு அரைத்துக்கொள்ளவும்.


அரைத்ததை வெங்காய கலவையுடன் சேர்த்து கலக்கவும்.

ஒன்று அல்லது இரண்டு பெரிய தட்டில் இந்த வெங்காய கலவையை பரப்பி வெய்யிலில் காய வைக்கவும்.


இரண்டாம் நாள் மாலை/இரவு :
விளக்கெண்ணையை விட்டு கைகளால் அழுத்தி பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

வெங்காய வடவம்

மூன்றாம் நாள் :
நன்றாக வெய்யிலில் காய வைக்கவும்.

வெங்காய வடவம்

 நான்காம் நாள் காலை :
ஒவ்வொரு உருண்டையையும் மறுபடியும் கைகளால் அழுத்தி உருட்டவும்.
காய்ந்து போன பருப்புகள் சில கீழே உதிரும்.
அவற்றை தனியே ஒரு சிறு தட்டில் எடுத்து வைக்கவும்.
வெய்யிலில் நாள் முழுவதும் காய வைக்கவும்.

வெங்காய வடவம்

வெய்யிலில் மேலும் இரண்டு மூன்று நாட்களுக்கு நன்றாக காய வைக்க வேண்டும்.
பிறகு காற்றுப் புகா பாட்டிலில் எடுத்து வைத்து பத்திர படுத்தவும்.

வெங்காய வடவம்

தேவைக்கு இரண்டு உருண்டைகளை ஒரு சிறிய பாட்டிலில் அல்லது டப்பாவில் வைத்து உபயோகிக்கவும்.




வெங்காயத்தில் மற்றொரு வற்றல் :

வெங்காய வத்தல் 

Thaengai Sadham - Coconut Rice

தேங்காய் சாதம் : கலந்த சாத வகைகளில் இதுவும் ஒன்றாகும். எலுமிச்சை சாதம் மற்றும் புளி சாதம் போல கார சாரமாக இருக்காது. ஆனால் தேங்காயின் மணத்துடனும் சுவையுடனும் அருமையாக இருக்கும். தேங்காய் சேர்த்து செய்வதால் நீண்ட நேரம் வைத்திருக்க முடியாது. நீண்ட பயணங்களுக்கு அல்லது மதிய சாப்பாட்டிற்கு எடுத்து செல்லும் போது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அதற்குள் சாப்பிட்டு விடுவது அவசியம்.
இப்போது எப்படி செய்வது என பார்ப்போம். இந்த அளவு ஒருவர் மதிய சாப்பாட்டிற்கு எடுத்து செல்ல சரியாக இருக்கும்.


தேவையான பொருட்கள் :
1/2 கப்                                        பச்சரிசி
1/2 கப்                                        தேங்காய் துருவல் [ அட்ஜஸ்ட் ]
3/4 Tsp                                         உப்பு
1/2 Tsp                                          வெள்ளை மிளகு தூள் [ தேவைபட்டால் ]


தாளிக்க :
1/2 Tsp                                         கடுகு
2 Tsp                                            கடலை பருப்பு
3 Tsp                                             நிலகடலை
4                                                   முந்திரி [ இருந்தால் ]
20                                                  கருவேப்பிலை
2 அ 3                                            சிகப்பு மிளகாய்
2 Tsp                                             தேங்காய் எண்ணெய்
2 Tsp                                             எண்ணெய்

செய்முறை :
அரிசியை கழுவி குக்கரில் எடுத்து 1 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும்வரை அதிக தீயில் வேகவைக்கவும்.
பின்னர் 3 நிமிடம் குறைந்த தீயில் வைத்து இறக்கவும்.


ஆவி நன்கு அடங்கிய பின்னர் ஒரு அகண்ட பாத்திரத்தில் போட்டு காற்றாடியின் கீழே ஆற விடவும்.
இன்னொரு அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து 2 Tsp எண்ணெய் விட்டு சூடானதும் கடுகை முதலில் வெடிக்க விடவும்.
பின்னர் மிளகாய் மற்றும் எல்லா பருப்பையும் சிவக்க வறுக்கவும்.


கடைசியாக கருவேப்பிலையை வறுத்தெடுத்து ஆரிய சாதத்தின் மேல் கொட்டவும்.


அதே எண்ணெய் சட்டியில் எண்ணெய் ஏதும் சேர்க்காமல் தேங்காய் துருவலை பொன்னிறமாக வறுக்கவும்.


வறுத்த தேங்காயையும் சாதத்துடன் சேர்க்கவும்.

இப்போது 2 Tsp தேங்காய் எண்ணெயை சாதத்தின் மேல் ஊற்றி உப்பு சேர்த்து சாதத்தை கரண்டியால் நன்கு கிளறவும்.
தேவையானால் மிளகு பொடி சேர்த்து உப்பு சரிபார்க்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.


சுவையான தேங்காய் சாதம் தயார்.
அப்பளம், கூட்டு , ஒரு நல்ல கார கறியுடன் சுவைக்கவும்.

குறிப்பு :
கிள்ளி  போடும் மிளகாய் மட்டுமே காரம் ஆகும். போதவில்லை என்றால் மிளகு தூளை சேர்க்கவும். சிகப்பு மிளகாய் தூளை சேர்த்தால் சாதத்தின் நிறம் மாறி விடும்.
தேங்காய் எண்ணெய் இல்லை என்றால் எப்போதும் உபயோகப்படுத்தும் எண்ணெயை உபயோகிக்கலாம்.











Thursday, March 27, 2014

Idiyappam

#இடியாப்பம் : முற்காலத்தில், மிகவும் பழைய காலம் என நினைத்து விடாதீர்கள்! நான் பள்ளியில் படித்த காலத்தைத்தான் குறிப்பிடுகிறேன். எனது தாயார் மாவை இடித்து பின்னர் அதை ஆவியில் வேக வைத்து, பின்னர் ஆறவைத்து, சலித்து எடுத்து வைப்பார்கள். இவ்வாறு பதப் படுத்திய மாவை கொண்டுதான் இடியாப்பம் செய்ய உபயோகப் படுத்துவார்கள்.
முன்பு மாவை இடிக்க ஆள் கிடைக்கும். இப்போது கிடைப்பது சிறிது சிரமம்தான்.
பிறகு மாவு அரைக்கும் மிஷின் கடையில் ஈர அரிசி அரைத்து  வந்து அவித்து சலித்து பத படுத்தினார்கள்.
அதன் பின்னர் அரிசி மாவை கொண்டே இடியாப்பம் செய்யும் முறையை கண்டு பிடித்து விட்டார்கள். இது மிக சுலபமான முறையாகும். ருசியிலும் மிகப் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரிய வில்லை.
நான் அம்மாவிடமிருந்து இந்த எளிமையான முறையை கற்றுக் கொண்டேன்.
எப்படி என பார்ப்போம்.

இடியாப்பம்

தேவையான பொருட்கள் :
2 கப்                                            அரிசி மாவு
1/2 Tsp                                          உப்பு

செய்முறை :
 அடுப்பில் ஒரு அடி கனமான வாணலியை வைத்து அரிசிமாவை குறைந்த தீயில் வறுக்கவும்.
இலேசாக சூடு ஏறினால் போதும்.


அடுப்பை அணைத்து விடவும்.
ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை சூடாக்கவும்.
பாத்திரத்தின் அடியில் சின்ன சின்ன குமிழ்கள் தோன்ற ஆரம்பித்தவுடன் அடுப்பை நிறுத்தி விடவும்.


இந்த சூடான தண்ணீரை மாவில் ஊற்றி கரண்டியால் கலக்கவும்.
தேவையான தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியான மாவாக பிசைந்து கொள்ளவும்.


கை பொறுக்கும் சூடு ஆறியபின் கையால் பிசைந்து பெரிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.
இட்லி தட்டில் துணியை விரித்து வைக்கவும்.
முறுக்கு அச்சில் இடியாப்ப அச்சை பொருத்தி உருட்டி வைத்த மாவை நிரப்பவும்.



இட்லி தட்டின் மேல் பிழிந்து விடவும்.


இட்லி பானையில் வேக  விடவும்.
5 நிமிடங்களில் வெந்து விடும்.
எடுத்து ஒரு தட்டில் இட்லி தட்டில் உள்ள வெந்த இடியாப்பத்தை தலை கீழாக திருப்பி தட்டவும்.

இடியாப்பம்

இட்லி தட்டிலிருந்து தட்டிற்கு இவ்வாறு மாற்றிய பிறகு அடுத்த ஈடு பிழிந்து வேக வைக்கவும்.
எல்லாம் பிழிந்து வேகவைத்து எடுத்த பின் எலுமிச்சை, புளிகாச்சல், சர்க்கரை, வெல்லம் ஆகிவற்றை கலந்தோ அல்லது தேங்காய் பாலுடனோ சுவைத்தால் மிக மிக அருமையாக இருக்கும்.

புளிகாச்சல் இடியாப்பம் :
கடுகு, கடலை பருப்பு, நிலக்கடலை மற்றும் கருவேப்பிலையை தாளித்து கொட்டவும்.


தேவையான அளவு புளிகாச்சல் மற்றும் உப்பு சேர்த்து நல்லெண்ணெய் விடவும்.
சிறிது ஆறியதும் அழுத்தம் கொடுக்காமல் கையால் பிசையவும். புளிகாச்சல் இடியாப்பம் தயார்.

புளிகாச்சல் இடியாப்பம்

இனிப்பு இடியாப்பம் :
இடியாப்பத்துடன் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்தால் இனிப்பு இடியாப்பம் தயார்.

இனிப்பு இடியாப்பம்


இதற்கு தொட்டு கொள்ள எதுவும் தேவையே இல்லை. அருமையான மெத்தென்ற இடியாப்பத்தை சுவைத்து மகிழுங்கள்!!









மற்ற டிபன் வகைகள் முயற்சி செய்ய

சோள இட்லி
சோள இட்லி
தோசை
தோசை
எலுமிச்சை இடியாப்பம்
எலுமிச்சைஇடியாப்பம்
காஞ்சீபுரம் இட்லி
காஞ்சீபுரம் இட்லி
கம்பு இட்லி
கம்பு இட்லி

தொட்டுக்கொண்டு சாப்பிட

தொட்டுக்க



இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.