Search This Blog

Saturday, June 14, 2014

Cauliflower Manchurian

#காலிப்ளவர் மஞ்சூரியன் : காலிப்ளவர் மிக சிறந்த ஆக்சிஜெனேற்றத்தடுப்பான் [ antioxidant ] மற்றும் அழற்சி எதிர்ப்பு சக்தி [ anti-inflammatory ] உடையது. காளிப்ளவரில் ஒமேகா 3 உள்ளது. இது கெட்ட கொழுப்பை குறைத்து இரத்த குழாய்கள் தடிமனாகாமல் இருக்க உதவுகிறது.
இதன் மற்ற மருத்துவ பயன்களை பற்றி அறிய

http://www.organicfacts.net/health-benefits/vegetable/health-benefits-of-cauliflower.html

காலிப்ளவர் மிகவும் எளிதில் வேகக்கூடிய தன்மை உடையது. வெகு சீக்கிரம் வேகவைத்து சாப்பிடும் போது அதில் அடங்கியிருக்கும் அத்தனை சத்துக்களும் நமக்கு கிடைக்கின்றது.

இங்கு எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான மஞ்சூரியன் எவ்வாறு செய்வது என காணலாம்.

செய்முறை :
1 கப்                                காலிப்ளவர் துண்டுகள்

மாவு கரைக்க :
1/2 cup                             கடலை மாவு [ அல்லது மைதா மாவு ]
2 Tbsp                              அரிசி மாவு
1 Tbsp                              சோள மாவு
1/4 Tsp                             சிகப்பு மிளகாய் பொடி
1/4 Tsp                             சீரகப் பொடி
1/2 Tsp                             உப்பு

ஊறவைக்க :
3 Tsp                               சோயா சாஸ் [ Soya sauce ]
1 Tsp                               சீரகப்பொடி
1/4 Tsp                             சிகப்பு மிளகாய் பொடி[ adjust ]
1/4 Tsp                            உப்பு  [ adjust ]

வதக்க :
1                                     வெங்காயம், பொடியாக நறுக்கியது
2                                     பச்சை மிளகாய், நீள வாக்கில் கீறி வைக்கவும்
8                                    கறுவேப்பிலை
2 Tbsp                           தக்காளி சாஸ் [ Tomato sauce ]
1 Tsp                             சோயா சாஸ் [ Soya sauce ]
1/4 Tsp                          உப்பு  [ adjust ]
1 Tsp                             Oil

1 கப் எண்ணெய் பொரிப்பதற்கு

செய்முறை :
ஊறவைக்க தேவையான பொருட்களை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு கலக்கவும்.
அதில் காலிப்ளவர் துண்டுகளை போட்டு பிரட்டவும்.


சுமார் 45 நிமிடங்கள் ஊற விடவும்.

45 நிமிடங்கள் ஊற விட்ட பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
மாவிற்கு தேவையான பொருட்களை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு பஜ்ஜி பதத்திற்கு கரைக்கவும்.
எண்ணெய்  சூடானவுடன் ஒரு தேக்கரண்டியின் உதவியுடன் காலிப்ளவர் துண்டுகளை மாவில் நனைத்து எண்ணையில் போடவும்.


நன்கு பொன்னிறமானதும் எடுத்து எண்ணெய் உறிஞ்சும் காகிதத்தின் மேல் வைக்கவும்.


இதே போல எல்லா துண்டுகளையும் மாவில் நனைத்து பொரித்த பின்னர் மற்றொரு அடுப்பில் வேறொரு வாணலியை வைத்து சூடாக்கவும்.


எண்ணெய் விட்டு சூடானதும் கறுவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும்  வெங்காயத்தை சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். அதன் பின்னர் சோயா சாஸ், தக்காளி சாஸ் மற்றும் உப்பு சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வைத்திருக்கவும்.


இப்போது பொறித்து வைத்துள்ள காலிப்ளவரை சேர்த்து கிளறவும்.
துண்டுகள் மேல் சாஸ் கலவை பூசினாற்போல வந்தால் போதுமானது.


அடுப்பை அணைத்து விட்டு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.


குறிப்பு : மஞ்சூரியன் மைதா மாவு கொண்டே செய்யப்படும். மைதாவை விட கடலை மாவு உடலுக்கு நல்லது. ஆகையால் இங்கு கடலை மாவை உபயோகித்துள்ளேன்.









Cauliflower mushroom Milagu Curry

#காலிப்ளவர்காளான்மிளகுகறி : #காலிப்ளவர் குருமா போன்ற கறி செய்வதற்கு மிகவும் ஏற்ற காயாகும். காலிப்ளவர் மற்ற காய்கறிகளுடன் கலந்து கறி செய்யும் போது சுவை நன்றாக இருப்பது போல காளானுடன் சேர்த்து செய்து பார்த்தால் நன்றாகத்தானே இருக்கும் என முயற்சி செய்து பார்த்தேன். சுவை அபாரமாக அமைந்தது. அதனை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

காலிப்ளவர் காளான் மிளகு கறி

தேவையான பொருட்கள் :
1 கப்                                   காலிப்ளவர் நறுக்கியது
6 - 7                                     காளான், கழுவி தனியே வைக்கவும்.
1 சிறியது                         காரட், நறுக்கவும் [ இருந்தால் ]
1/4 Tsp                                 உப்பு
சிறிதளவு கொத்தமல்லி தழை

மசாலாவிற்கு தேவையான பொருட்கள் :
1/4 கப்                              தேங்காய் துருவல்
2                                        பச்சை மிளகாய்
1 Tsp                                 மிளகு
4 பற்கள்                        பூண்டு
1 Tsp                                 சீரகம்
1/2 Tsp                              சோம்பு
1/4 Tsp                              மல்லி விதை  [ optional ]
1/2 Tsp                              கசகசா  [ poppy seeds ]
3                                        முந்திரி பருப்பு
1/2 Tsp                              உப்பு
1 சிறியது                      வெங்காயம்

செய்முறை :
வெங்காயம் தவிர மற்றையனைத்தையும் மிக்ஸியில் எடுத்துக் கொள்ளவும்.
தண்ணீர் விடாமல் முதலில் அரைக்கவும்.


பின்னர் தண்ணீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.
கடைசியாக வெங்காயத்தை சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும்.
ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.


தண்ணீர் சிறிது சேர்த்து மிக்ஸியில் ஒட்டியுள்ள மசாலாவை கழுவி மசாலாவை எடுத்து வைத்துள்ள கிண்ணத்தில் ஊற்றவும்.


குக்கரில் காலி ப்ளவர் மற்றும் காரட் எடுத்திருந்தால் அதையும் போட்டு 3/4 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடி வெயிட் வைத்து அதிக தீயில் சூடாக்கவும்.
ஒரு விசில் வரும் வரை அடுப்பில் வைத்திருக்க வேண்டும்.
விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து நீராவியை உடனே வெளியேற்றி மூடியை திறக்கவும்.
அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.


மிதமான தீயில் கொதிக்க விடவும்.
காளானையும் வெட்டி சேர்க்கவும்.

காலிப்ளவர் காளான் மிளகு கறி

ஒன்று சேர்ந்தாற்போல வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

விரும்பினால் சீரகம் தாளித்து சேர்க்கலாம்.
கொத்தமல்லி தழையினால் அலங்கரிக்கவும்.

காலிப்ளவர் காளான் மிளகு கறி

சுவையான மிளகு கறி தயார்.
பூரி, சப்பாத்தி மற்றும் இட்லி தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

மற்ற கறி வகைகள் முயற்சி செய்து பார்க்க

காலிப்ளவர் தக்காளி குருமா குடைமிளகாய் குருமா பஜ்ஜி மிளகாய் கிரேவி

Friday, June 13, 2014

Wheat Dosai

#கோதுமைதோசை : கேழ்வரகு, ரவா ஆகியவற்றை கொண்டு தோசை செய்வதெப்படி என பார்த்தோம்.
இங்கு கோதுமை மாவு உபயோகித்து தோசை செய்யும் முறையை பார்ப்போம்.

கோதுமை தோசை


தேவையான பொருட்கள் :
1/2 cup                            ஆப்பம் மாவு 
3/4 cup                            கோதுமை மாவு [ multi grain கோதுமை மாவும் உபயோகிக்கலாம் ]
1 Tbsp                             ரவா
1/2 Tsp                            உப்பு

மாவுடன் சேர்க்க வேண்டிய பொருட்கள் :
1/4 cup                            பாலக் கீரை  [ optional ]
1 small size                      வெங்காயம், பொடியாக நறுக்கவும்
10                                  கறுவேப்பிலை, பொடியாக நறுக்கவும்
1/2 Tsp                           சீரகம்
1/4 Tsp                           மிளகு துருவியது
1                                    பச்சை மிளகாய் ( விருப்பப்பட்டால் )

தோசை சுட தேவையான அளவு.

செய்முறை :
மாவு அனைத்தையும் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கலக்கவும்.
மாவு நீர்க்க இருக்க வேண்டும்.
கருவேப்பிலையை  பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
சீரகம், மிளகுத்தூள்  மற்றும் அறிந்து வைத்துள்ள வெங்காயத்தையும் கீரையையும்  சேர்த்து கலக்கவும்.


காரமாக வேண்டுமெனில் பச்சை மிளகாயை பொடியாக வெட்டி அதையும் சேர்க்கவும்.

இந்த மாவை ஒரு அரை மணி நேரம் ஊற விடவும்.

அடுப்பில் தோசை கல் வைத்து மிதமான தீயில் சூடு பண்ணவும்.
சூடு ஏறியதும் 1/4 தேக்கரண்டி எண்ணெய் பரப்பி விடவும்.
தோசை மாவை கரண்டியினால் முதலில் கல்லின் ஓரத்தில் ஒரு வட்டமாக  ஊற்ற ஆரம்பித்து மத்தியில் வந்து சேருமாறு முடிக்க வேணடும் .



அதாவது ஒரு பெரிய வட்டம் போட்டு அதை நிரப்ப வேண்டும்.
இதுவே இந்த  தோசை ஊற்றும் முறையாகும்.

தோசை மெல்லியதாக இருக்க வேண்டும்.
இங்கொன்றும் அங்கொன்றுமாக எண்ணெய் சொட்டு சொட்டாக தோசை மேல் விட்டு ஓரங்கள் சிவக்கும் வரை காத்திருக்கவும்.
பிறகு தோசை திருப்பியினால் திருப்பி வேக விடவும்.


பொன்னிறமாக வந்தவுடன் தட்டில் எடுக்கவும்.

கோதுமை தோசை

சட்னி யுடள் பரிமாறவும்.

கோதுமை தோசை

குறிப்பு :

  • ஆப்பம் மாவுக்கு பதில் இட்லி அல்லது தோசை மாவு உபயோகப்படுத்தலா.
  • அல்லது மாவுக்கு பதில் 1/4 கப் தயிரும் 1/4 கப் அரிசி மாவும் சேர்த்து மாவு தயாரிக்கலாம்.
  • ஆப்பம் மாவு வெந்தயம் கலந்து செய்யப்பட்டதால், உடலுக்கு நல்லது என்பதனால் இங்கு இந்த தோசை செய்ய உபயோகப்படுத்தி உள்ளேன். 
  • காரட் துருவி சேர்த்தும் தோசை தயாரிக்கலாம்.
  • அவ்வப்போது தண்ணீர் சேர்த்து மாவை நீர்க்க இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.






மேலும் சில சமையல் குறிப்புகள் 
முயற்சி செய்து பார்க்க :

ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை
நீர்தோசை
நீர்தோசை
முடக்கத்தான் தோசை
முடக்கத்தான் தோசை
குதிரைவாலி நீர் தோசை
குதிரைவாலிநீர்தோசை
ரவா தோசை
ரவா தோசை




Palak Chappathy

#பாலக் #சப்பாத்தி : பாலக் கீரையில் உள்ள இரும்பு சத்து எளிதில் உடலில் சேரக்கூடியதாக இருப்பதால் ரத்த சோகை மற்றும் இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் இதனை தினமும் உண்ணுவது நல்லது.

மேலும் போலிக் ஆசிட் இருப்பதால் கர்ப்பிணிகள் இதனை எடுத்துக்கொள வேண்டும்.

பால் கொடுக்கும் தாய் மார்கள் பால் அதிகம் சுரக்க இந்த கீரையை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்வது நல்லது.

தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய புரத சத்து இருகிறது. அதனால் தினமும் எடுத்துகொண்டால்  இருதய கோளாறு மற்றும் ரத்த குழாய்கள் அடைப்பு போன்றவை வராமல் தடுக்கலாம்.

பாலக் மசியல், பாலக் கூட்டு மற்றும் பாலக் பருப்பு போன்ற உணவு வகைகள் செய்யலாம்.

மிக எளிதில் வேகக் கூடியது. அதனால் இந்த கீரையை உபயோகித்து  சப்பாத்தி செய்தேன். மிக நன்றாக வந்தது. அதனை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.



தேவையான பொருட்கள் :


2 கப்                                     கோதுமை மாவு [ multi grain whole wheat flour ]
1/2 Tsp                                  ஓமம்
1/2 Tsp                                  சீரகம்
1/4 Tsp                                  கருஞ்சீரகம்
3/4 Tsp                                  உப்பு [ அட்ஜஸ்ட் ]
2 Tsp                                     நல்லெண்ணெய்
1/2 கப்                                  பாலக் கீரை பொடியாக நறுக்கியது

சப்பாத்தி சுட்டெடுக்க தேவையான எண்ணெய்

செய்முறை :
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மாவை எடுத்துக்கொள்ளவும்.
மற்ற பொருட்களையும் சேர்க்கவும். முதலில் கையினால் பிசறி விடவும்.



பிறகு தண்ணீர் விட்டு பிசையவும்.
சிறிது கெட்டியான மாவாக பிசையவும்.


இப்போது 2 Tsp எண்ணெய் விட்டு நன்கு மிருதுவாகும் வரை பிசையவும்.
சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

கீரையில் நீர் சத்து அதிகம் உள்ளதால் நேரம் ஆக ஆக மாவு நீர்த்து போய் விடும். அதனால் பிசைந்தவுடன் சுட்டெடுப்பது நல்லது.

மாவு தொட்டு தொட்டு வட்ட வட்ட ரொட்டிகளாக திரட்டி வைக்கவும்.
அடுப்பில் தோசை கல்லை சூடாக்கவும்.


திரட்டிய மாவை சூடான கல்லில்  இட்டு ஒன்றிரண்டு துளிகள் எண்ணெய் விட்டு தடவி இரண்டு பக்கமும் சுட்டு எடுக்கவும்.


சூடாக கல்லில் இருந்து எடுத்தவுடனேயே காலிப்ளவர் காளான் குருமா அல்லது உருளைகிழங்கு மசாலாவுடன்  சுவைக்கவும்.


மற்ற சப்பாத்தி வகைகள் :

Buckwheat Roti 
சிகப்பு கீரை சப்பாத்தி 







Vegetable Pulav with Coconut Milk

#தேங்காய்பால்காய்கறிபுலாவு : தேங்காய் பாலில் தாதுக்களும் விட்டமின்களும் நிறைந்துள்ளன.
இதில் வைட்டமின் C, E மற்றும் K காணப்படுகிறது.
தாதுக்களாகிய இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம் மற்றும் செலினியம் போன்ற அரிய வகைகள் நிறைந்துள்ளன.
ஒரு கப் தேங்காய் பாலை அருந்தினால் 552 கலோரிகள் உடலுக்கு கிடைக்கிறது. அதிக கலோரி சத்து கொண்டதனால் வாரத்தில் ஓரிரு முறை இதில் அடங்கியுள்ள அத்தியாவசிய தாதுக்களுக்காக சேர்த்துக்கொள்வது மிக மிக நல்லது.
மேலும் இதனை பற்றி அறிந்துகொள்ள கீழ் கண்ட இணைப்பை சொடுக்கவும்.
தேங்காய் பாலின் மருத்துவ பயன்கள் 
தேங்காய் பாலின் ஊட்ட சத்துக்கள் 

என்னுடைய சமையலில் ஏதாவது ஒரு வகையில் தேங்காய் பாலை உபயோகித்து செய்வது வழக்கம். அப்படிப்பட்ட சில உணவு வகைகள் : இனிப்பு தேங்காய் பால் ஆப்பத்துடன் தொட்டுக் கொண்டு சாப்பிட, பருப்பு பாயசம், மணத்தக்காளி பால் சாறு போன்றவை.
இந்த முறை தேங்காய் பால் உபயோகித்து புலாவு செய்தேன். அதன் செய்முறையை இங்கு காணலாம்.



தேங்காய் பால் காய்கறி புலவு

தேவையான பொருட்கள் :
1/2 cup                               பாஸ்மதி அரிசி
1/2 cup                               முட்டைகோஸ் நறுக்கியது
1 Tbsp                                காரட் நறுக்கியது
1/2 cup                               காலிபிளவர் நறுக்கியது
1                                        வெங்காயம் நறுக்கியது
1 Tsp                                 பூண்டு நசுக்கியது
2                                        பச்சை மிளகாய் நீள வாக்கில் அரிந்தது
1/4 cup                             கொத்தமல்லி தழை
2 Tbsp                              கொண்டைகடலை [ இருந்ததால் ]
1/2 cup                              தேங்காய் பால்
1 Tsp                                 உப்பு [ அட்ஜஸ்ட் ]

Spices added :
4                                       கிராம்பு
2                                       அன்னாசி மொக்கு
1 Tsp                                சீரகம்
1/2 Tsp                             சோம்பு
1 inch long                        இலவங்கப்பட்டை
4 Tsp                               எண்ணெய்

To garnish :
6 leaves                            கொடி பசலை
20 leaves                          புதினா

செய்முறை :
முதலில் அரிசியை ஒருமுறை கழுவி விட்டு சிறிது தண்ணீரில் ஊறவைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் சீரகம் மற்றும் சோம்பை வெடிக்கவிட்டு மற்ற வாசனை பொருட்களை சேர்க்கவும்.
சில மணித்துளிகள் வறுத்தபின் பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து 30 வினாடிகள் வதக்கவும்.
இப்போது வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டியதில்லை.
அதற்கு சற்று முன்பே நசுக்கிய பூண்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின்னர் முட்டைகோஸ், காரட் மற்றும் காலிப்ளவரை சேர்த்து வதக்கவும்.

அரிசியில் இருந்து முழுவதுமாக தண்ணீரை வடித்து விட்டு சேர்க்கவும்.
அடுப்பை அதிக தீயில் வைத்து ஒரு நிமிடம் கிளறவும்.
பின்னர் தீயை குறைத்து அரிசி நன்கு வெள்ளையாக வறுபடும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.


இப்போது 1/2 கப் தேங்காய் பால், 1/2 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.


மூடி வெயிட் பொருத்தி அடுப்பில் அதிக தீயில் வேக விடவும்.
ஒரு விசில் வந்த பின்னர் தீயை குறைத்து 5 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும்.
ஆவி அடங்கியவுடன் திறந்து புதினா மற்றும் நறுக்கிய கொடி பசலையை சேர்த்து கிளறவும். கிளரும் போது சாதப் பருக்கைகளை நசுக்காமல் மென்மையாக கிளற வேண்டும்.


சுவை மிகுந்த தேங்காய் பால் காய்கறி புலாவு தயார்.


சூடாக தட்டில் வைத்து தயிர்பச்சடி அல்லது குருமாவுடன் சுவைக்கலாம்.


தேங்காய் பால் காய்கறி புலவு








மேலும் சில சாத வகைகள் செய்து சுவைக்க

கருவேப்பிலை சாதம் சாமை பிசிபேளே பாத் முருங்கைக்கீரை சாதம் மணத்தக்காளி கீரை சாதம் நெல்லிக்காய் சாதம்



Thursday, June 12, 2014

Cauliflower Vadai

#காலிப்ளவர் # வடை : எல்லோருக்கும் காலிப்ளவர் மஞ்சூரியன் மிகவும் பிடித்தமான உணவு வகை. அதே போல  உளுந்துடன் செய்யப்படும் மெது வடையில் காலிப்ளவர் சேர்த்து பொரித்தெடுத்தால் காலிப்ளவர் வடையாகி விடும். இது சுவைக்க மிக மிக அருமையாக இருக்கும்.

இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்து அரைபட்டு பொங்கி வந்தவுடன் ஒரு கை உளுத்தம் மாவை [ 1/2 கப் ] ஒரு கிண்ணத்தில் எடுத்து குளிர் சாதன பெட்டியில் பத்திர படுத்தவும்.
காலையில் எடுத்து வைத்தால் மாலையில் உபயோகப்படுத்தி விட வேண்டும்.
இல்லையென்றால் மாவு புளித்து விடும். மேலும் எண்ணெயில் பொரிக்கும் போது அதிக எண்ணெயை குடிக்கும்.

இனி செய்முறையை காண்போம். சுமார் 6 முதல் 8 வடைகள் செய்யலாம்.

காலிப்ளவர் வடை மக்காசோள ரவா கஞ்சி உடன் 


தேவையான பொருட்கள் :
1/2 கப்                                          அரைத்த உளுத்த மாவு
2 Tbsp                                            ரவா
1 Tbsp                                            அரிசி மாவு
1/2 Tsp                                           உப்பு
1/2 Tsp                                           சீரகம்
1/4 Tsp                                          ஓமம்


1/4 கப்                                          காலிப்ளவர் பொடியாக நறுக்கியது
1/4 கப்                                          பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
10                                                   கறுவேப்பிலை பொடியாக நறுக்கவும்
2 Tbsp                                            வெங்காயம் பொடியாக நறுக்கியது
1                                                     பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்

எண்ணெய் பொரிப்பதற்கு
விருப்பமானால் இஞ்சி துண்டுகளை சேர்க்கலாம்.

செய்முறை :
மாவுடன் ரவா கலந்து அரைமணி நேரம் குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்.
அரை மணி நேரம் கழிந்த பின்னர்  உப்பு, சீரகம், ஓமம் மற்றும் அரிசி மாவை சேர்க்கவும்.

கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.

அடுப்பில் எண்ணெய் சட்டியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடேற்றவும்.

மாவை கலந்து வைக்கவும். சிறிது நீர்க்க இருந்தால் சிறிது அரிசி மாவைகலக்கிக் கொள்ளலாம்.


கையை ஈரப்படுத்திக் கொண்டு வட்டமாக தட்டி நடுவில் ஓட்டை இட்டு, எண்ணெய் நன்கு சூடானதும், போடவும்.


இரண்டு பக்கமும் திருப்பி விட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.


எண்ணெய்  வடிய டிஷ்யு காகிதத்தின் மேல் எடுத்து வைக்கவும்.


மீதமுள்ள  மாவையும் இதே போல பொரித்தெடுக்கவும்.

காலிப்ளவர் வடையை சட்னி அல்லது சாம்பாருடன் சுவைக்கலாம்.


நேற்று இரவு உணவு : மக்காசோள ரவா கஞ்சியுடன் காலிப்ளவர் வடை.
மிக அருமையாக இருந்தது.

இதையும் செய்து பார்க்கலாமே!!

மெது வடை