Search This Blog

Wednesday, April 20, 2016

Katharikkai-Chutney

#கத்தரிக்காய்சட்னி : #கத்தரிக்காய் கொண்டு சாம்பார் செய்வது போன்றே இந்த சட்னியும் ஆகும். ஆனால் பருப்பு இல்லாமல் செய்யப்படுகிறது. குக்கரில் கத்தரிக்காயை வேக வைத்து நன்கு மசித்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கறுவேப்பிலை ஆகியவற்றை வதக்கவும். மசித்த கத்தரிக்காயுடன் சாம்பார் பொடி, மல்லி பொடி, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கிய பொருட்களை   சேர்க்க வேண்டும். அதில் புளி கரைசல் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட்டு மூடி வெயிட் பொருத்தி ஒரு விசில் வரும் வரை வேக விடவும். ஆவி அடங்கியவுடன் குக்கரை திறந்து எடுத்தால் கத்தரிக்காய் சட்னி தயார்.
இதே போல பீர்கங்காய் மற்றும் கருணை கிழங்கு உபயோகித்தும் செய்யலாம்.


katharikkai chutney


தேவையானவை :
2 பெரிய அளவு கத்தரிக்காய்
நெல்லிக்காய் அளவு புளி
1வெங்காயம், பொடியாக நறுக்கவும்
10 - 12சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கவும்
2 - 3பச்சை மிளகாய்
10 - 12கறுவேப்பிலை
1/2 Tspகடுகு
1/4 Tspபெருங்காய தூள்
1 Tspகடலை எண்ணெய்
1 1/2 Tspஉப்பு [ adjust ]
2 pinchesமஞ்சத்தூள்
2 Tspசாம்பார் பொடி
1 Tspஅரைத்துவிட்ட குழம்பு தூள்
1 Tspகொத்தமல்லித்தூள்

சிறிது கொத்தமல்லி தழை அலங்கரிக்க

செய்முறை :
கத்தரிக்காயை நன்கு கழுவிய பின்னர் துண்டுகளாக வெட்டி குக்கரில் போடவும்.
அரை கப் தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை மஞ்சத்தூள் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.
வெயிட்டை சிறிது சிறிதாக தூக்கியோ அல்லது தண்ணீர் குழாயின் அடியில் வைத்து தண்ணீரை ஊற்றியோ உடனே ஆவியை வெளியேற்றவும்.
மசிக்கும் கரண்டி கொண்டு நன்கு மசித்து விடவும்.
நன்கு மசித்த பின்னர் மஞ்சத்தூள், சாம்பார் பொடிஅரைத்துவிட்ட குழம்பு தூள், மற்றும் கொத்தமல்லித்தூள் சேர்க்கவும்.
அடுப்பை பற்ற வைத்து குக்கரை மிதமான தீயில் க்சூடாக்கவும்.

மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விட்ட பின்னர் பெருங்காயத்தூள், கருவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயம் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிது வாசனை வரும் வரை வதக்கினால் போதும்.
அடுப்பை அணைத்து விட்டு வதக்கியவற்றை கொதிக்கும் கத்தரிக்காய் கலவையில் கொட்டவும்.

புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி குக்கரில் சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
குக்கரை மூடி வெயிட் பொருத்தி தீயை அதிகப்படுத்தி இரண்டு விசில் வரும் வரை வைத்திருக்கவும்.
ஆவி அடங்கியபின் திறந்து பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சிறிது கறுவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.

சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
இட்லி மற்றும் தோசை உடன் தொட்டுக்க வும் நன்றாக இருக்கும்.

katharikkai chutney




மேலும் சில உணவு குறிப்புகள் முயற்சி செய்து பார்த்து ருசிக்க
வெங்காய சாம்பார்
வெங்காய சாம்பார்
தக்காளி சட்னி
தக்காளி சட்னி
வாழைப்பூ குழம்பு
வாழைப்பூ குழம்பு
வெண்டைக்காய் தக்காளி கறி
வெண்டைக்காய் தக்காளி கறி
அவியல்
அவியல்


இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ட்விட்டர், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.

Saturday, April 16, 2016

Venthayakeerai-Besan-Dosai

#வெந்தயக்கீரைகடலைமாவுதோசை : #கீரை வகைகளை சமைத்தாலே பெரும்பாலும் வேண்டா வெறுப்பாகவே பலர் உண்ணுவார்கள். அதிலும் #வெந்தயக்கீரை சிறிது கசப்பு சுவையுடையதா?! கேட்கவே வேண்டாம். எல்லோரும் சாப்பிடத் தயங்குவார்கள். 
நாமும் பொதுவாக கீரை என்றாலே கூட்டு தான் செய்வது வழக்கம். எல்லோரும் விரும்பும் வகையில் வெந்தயக்கீரையின் சுவையை சிறிது மட்டுப் படுத்தி பலகாரம் செய்தால் அனைவரும் முகம் சுளிக்காமல் சாப்பிடுவார்கள். 
இதனை மனதில் கொண்டு கடலை மாவு, கோதுமை மாவு மற்றும் அரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாக தண்ணீர் விட்டு தோசை மாவு தயாரித்து கீரையுடன் தோசை சுட்டெடுத்தேன். சுவையோ அபாரம்! கீரையின் கசப்பு சிறிதும் தெரியவில்லை!
இனி எப்படி என காணலாம்.

6 முதல் 8 தோசை வரை தயாரிக்கலாம் 



தேவையான பொருட்கள் :
மாவு தயாரிக்க :
1/2 கப்கடலை மாவு [ Besan ]
1/4 கப்கோதுமை மாவு
1/8 கப்அரிசி மாவு
1/4 கப்தயிர்
3/4 Tspஉப்பு [ adjust ]
1/2 Tspசீரகம்
1/4 Tspமிளகு நுணுக்கியது
மாவில் சேர்க்க :
1 சிறியது வெங்காயம், நறுக்கவும்
6 - 8கறுவேப்பிலை, கிள்ளி வைக்கவும்
1/2 cupவெந்தயக்கீரை பொடியாக நறுக்கியது
1பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும் [ optional ]

தோசை சுட்டெடுக்க தேவையான எண்ணெய்

செய்முறை :
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தயிர் ஊற்றி ஒரு கரண்டியால் நன்கு அடித்து கலக்கவும்.
பிறகு மாவு தயாரிக்க கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து 1/2 கப் தண்ணீர் விட்டு நன்கு கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.
அரை மணி நேரம் மூடி வைத்திருக்கவும்.

அரை மணி நேரம் கழித்து மாவில் சேர்க்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கலக்கவும்.
தேவையெனில் சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் தோசை கல்லை மிதமான தீயின் மேல் வைத்து சூடாக்கவும்.
போதுமான சூடேறியதும் எண்ணெய் விட்டு தோசையை முதலில் சுற்றி வட்டமாக ஊற்றி நடுவே நிரப்பவும்.
தோசையின் மேல் சில துளிகள் எண்ணெய் தெளிக்கவும்.
ஓரங்கள் சிவந்தவுடன் திருப்பிப் போடவும்.
இரண்டு பக்கமும் வெந்தவுடன் ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
மீண்டும் தோசை கல்லில் எண்ணெய் விட்டு அடுத்த தோசையை ஊற்றவும்.
இதேபோல ஒவ்வொருதோசை யாக சுட்டெடுக்கவும்.

சுவையும் வெந்தயக்கீரையின் மனமும் நிறைந்த தோசை தயார்.
தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி 

அல்லது சாம்பார் ஏதேனும் 

ஒன்றை தொட்டுக்க வைக்கலாம்.






மேலும் சில சமையல் குறிப்புகள்
  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
வெந்தய குழம்பு மணத்தக்காளி கீரை பால் சாறு முடக்கத்தான் கீரை தோசை
காளான் பாலக் சூப் காரிசலாங்கண்ணி துவையல்




இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.

Monday, April 11, 2016

Kothamalli-Pudhina-Sauce

#கொத்தமல்லிபுதினாசாஸ் : நான் ராய்ப்பூரில் வசித்து வந்த போது எனது தோட்டத்தில் புதினா வளர்த்து வந்தேன். அதனால் எல்லாவிதமான உணவு வகைகளிலும் புதினா சேர்ப்பது அல்லது அலங்கரிப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். ஆனால் இப்போது மார்கெட்டிலிருந்துதான் வாங்கி வருகிறேன். புதினா இலைகளை சுத்தம் செய்து குளிர் சாதனப்பெட்டியில் வைத்தாலும் அதன் தனித்தன்மையான சுவையும் மணமும் நாட்கள் செல்ல செல்ல குறைந்து விடுகிறது. அதனை ஓரளவு தடுக்க கொத்தமல்லியுடன் சேர்த்து பச்சையாக இருக்கும் போதே அரைத்து ஒரு சுத்தமான பாட்டிலில் அடைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து ரசம் முதல் அனைத்து உணவுடனும் சேர்க்க ஆரம்பித்து விட்டேன். இந்த சாஸ் மிகவும் உபயோகமாக இருக்கிறது. 
கொத்தமல்லி தழை மட்டுமின்றி அதன் தண்டையும் சேர்த்து அரைக்கலாம்.
இனி எவ்வாறு அரைத்து எடுத்து வைப்பது என காணலாம்.



தேவையான பொருட்கள்  :
1 கப்புதினா [ Mint ] இலைகள்
1 கப்கொத்தமல்லி தழை
10 - 12பச்சை மிளகாய் [ adjust ]
சிறு துண்டுஇஞ்சி [ optional ]
3/4 Tspஉப்பு [ adjust ]
1 - 1 1/2 Tspஎலுமிச்சை சாறு [ adjust ]
1/4 கப்வினிகர்

செய்முறை :
கொத்தமல்லி மற்றும் புதினா இரண்டையும் தனித்தனியாக நன்கு கழுவி தண்ணீரை வடிய விடவும்.
மிக்ஸியில் கொத்தமல்லி, உப்பு , பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை  போட்டு தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
பின்னர் புதினா, எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
நன்கு அரைத்த கொத்தமல்லி புதினா சாஸை ஒரு சுத்தமான பாட்டிலில் எடுத்து வைத்து குளிர் சாதனபெட்டியில் பத்திரப்படுத்தவும்.

காரமும் மனதை மயக்கும் மணமும் நிறைந்த இந்த சாஸ் இட்லி,  & தோசை, அரிசி சுண்டல், & உப்புமா, & பொங்கல் போன்ற அனைத்து காலை உணவு வகைகளுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

எலுமிச்சை ரசம் செய்யும் போது இறக்கிய பிறகு சிறிது இந்த சாஸை சேர்த்தால் ருசியும் மணமும் தூக்கலாக இருக்கும்.

பிரியாணி செய்யும் போது புதினாவுடன் இந்த சாஸையும் சேர்த்து செய்தால் இன்னும் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

பிரட் சான்விச் செய்யும் போது பிரட்டின் மீது தடவ பயன் படுத்தலாம்.

தயாரித்து சுவைத்துப் பாருங்கள்!! மிக மிக அருமையான சாஸ் இது!!!






மேலும் சில உணவு வகைகள் முயற்சி செய்து பார்த்து சுவைக்க
  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
வல்லாரை சட்னி பொடுதலை துவையல் கரிசலாங்கண்ணி துவையல்
இஞ்சி துவையல் பொங்கல் துவையல்




இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.