Search This Blog

Showing posts with label shrikhand. Show all posts
Showing posts with label shrikhand. Show all posts

Tuesday, December 3, 2013

Shrikhand

#ஸ்ரீகண்ட் என்பது தயிரில் உள்ள தண்ணீர் அனைத்தையும் நன்கு வடி கட்டி எடுத்து விட்டு சர்க்கரை சேர்த்து செய்வதாகும். சென்ற முறை மும்பை சென்ற போது சாப்பிட்டேன். அதனால் செய்து பார்த்து விடலாம் என இறங்கினேன். மிக மிக நன்றாக வந்தது. இதோ எப்படி என பார்ப்போம்.

ஸ்ரீ கண்ட்

 தேவையான பொருட்கள் :
புளிக்காத தயிர்                      : 1/2 கப்
ரோசே எசென்ஸ்                   : 1 துளி
சர்க்கரை பொடி                      : 1 Tbsp
குங்குமப்பூ                                : 4 ( அ ) 5 இழைகள்

அலங்கரிக்க :
அன்னாசி துண்டுகள் மற்றும் மாதுளை முத்துக்கள்.

செய்முறை :
தயிரை ஒரு டீ வடிகட்டி வழியாகவோ அல்லது மெல்லிய துணி வழியாகவோ வடிகட்டி அப்படியே பிரிட்ஜில் வைக்கவும்.


எஞ்சியுள்ள தண்ணீர் இறங்கவும் மேலும் புளிக்காமல் இருக்கவும் பிரிட்ஜில் வைக்கவும்.
பிறகு வெளியே எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு மற்ற பொருட்களுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
வேறு கிண்ணத்தில் வைத்து பழங்களால் அலங்கரிக்கவும்.

ஸ்ரீ கண்ட்

நல்ல மதிய உணவிற்கு பிறகு சுவைக்கவும்.







மற்றும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
தினை மாவு உருண்டை
தினை மாவு உருண்டை
குலாப் ஜாமூன்
குலாப் 
ஜாமூன்
ஆளிவிதை உருண்டை
ஆளிவிதை உருண்டை
இன்ஸ்டன்ட் தூத் பேடா
இன்ஸ்டன்ட் தூத் பேடா
பயத்தம் பருப்பு உருண்டை
பயத்தம் பருப்பு உருண்டை