Search This Blog

Wednesday, August 22, 2018

Sundaikkai-Vathakuzhambu

#சுண்டைக்காய்வத்தக்குழம்பு : #சுண்டைக்காய் கொண்டு மசாலா கறி செய்வதுண்டு. சுண்டைக்காய் கத்தரிக்காய் வகையை சேர்ந்தது. சிலவகை சுண்டைக்காய் சிறிது கசக்கும். ஆனால் #வத்தக்குழம்பு செய்யும் போது அதன் கசப்பு அதிகமாக தெரிவதில்லை.
இனி எவ்வாறு செய்வது என்பதை இங்கு காணலாம்.

Sundakkai vathakuzhambu


தேவையானவை :
1/4 கப்சுண்டைக்காய் [ pea eggplant ]
1/4 கப்பூண்டு உரித்தது
1/4 கப்சின்ன வெங்காயம்
1 சின்னதக்காளி, நறுக்கவும்
10 - 15கருவேப்பிலை
பெரியநெல்லி அளவுபுளி
பொடிகள் :
3 Tsp குவித்துசாம்பார் பொடி
1 Tspகொத்தமல்லி பொடி
1/2 Tspஅரைத்துவிட்ட குழம்புத்தூள் [ விரும்பினால் ]
2 சிட்டிகைமஞ்சத்தூள்
2 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
தாளிக்க :
3 Tspநல்லெண்ணெய்
1/2 Tspகடுகு
1/4 Tspவெந்தயம்
சிறு துண்டுபெருங்காயம்
2 Tspகடலைப்பருப்பு
3 Tspநிலக்கடலை
சிறு துண்டு வெல்லம் [ விரும்பினால் ]

செய்முறை :
புளியை சிறிது  சூடான தண்ணீரில் ஊற வைக்கவும்.
வெங்காயத்தையும் பூண்டையும் உறித்து சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
சுண்டைக்காய்களின் காம்பை நீக்கி கழுவிய பின்னர் இரு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து 2 Tsp எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விடவும் .
அதன் பின் கடலை பருப்பு, நிலக்கடலை போட்டு வறுக்கவும்.
பொன்னிறமானதும் வெந்தயம் மற்றும் பெருங்காயம் சேர்த்து வறுத்தபின்
கருவேப்பிலை, வெங்காயம், பூண்டு போட்டு மணம் வரும் வரை வதக்கவும்.
பிறகு தக்காளியை 1 நிமிடம் வதக்கவும்.
அடுத்து மஞ்சத்தூள் மற்றும் வெட்டிவைத்துள்ள சுண்டைக்காய் சேர்க்கவும்.
ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.

பின்னர் கொடுக்கப்பட்டுள்ள தூள்களை சேர்த்து சில வினாடிகள் பிரட்டி விட்டு முக்கால் கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து காய் வேகும் வரை கொதிக்க விடவும்.
கடைசியாக புளியை கரைத்து வடுகட்டி சேர்க்கவும்.
எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பிக்கும் வரை கொதிக்க விடவும்.
கடைசியாக உப்பு சரி பார்க்கவும்.
நான்கைந்து கருவேப்பிலையை கிள்ளி போட்டு அடுப்பை அணைக்கவும்.
பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

சாதத்தில் சுண்டைக்காய் வத்தக்குழம்பை விட்டு நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி ஊற்றி பிசைந்து விருப்பமான பொரியல் அல்லது கறியுடன் சுவைக்கவும்.
பருப்பு சாதத்திற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட மிக மிக அருமையாக இருக்கும்.
தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.

Sundakkai vathakuzhambu







சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

சேனை கிழங்கு வத்தக்குழம்பு
சேனை கிழங்கு வத்தக்குழம்பு
வத்தக்குழம்பு
வத்தக்குழம்பு
புளிக்கூழ்
புளிக்கூழ்
மணத்தக்காளி வத்தக்குழம்பு
மணத்தக்காளி வத்தக்குழம்பு
பஜ்ஜி
பஜ்ஜி


Monday, August 20, 2018

Chaat-Vazhaithandu-Chaat

#வாழைத்தண்டுபொரிகலவை [ #வாழைத்தண்டுசாட் ] : #சாட் என்பது கேரட், வெங்காயம், தக்காளி, கொத்துமல்லி தழை மற்றும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சாட் மசாலா பொடி போன்றவற்றுடன் பொரி சேர்த்து கலக்கி செய்யப்படும் ஒரு உணவு வகை. அதனை பொரி கலவை என்று தமிழில் கூறலாம். இங்கு அதனுடன் வாழைத்தண்டை பொடியாக நறுக்கி சேர்த்துள்ளேன். வாழைத்தண்டு நார் சத்து நிறைந்த உணவு. வாழைத்தண்டு கொண்டு பொதுவாக வாழைத்தண்டு பொரியல் மற்றும் தயிர் பச்சடி மட்டுமே செய்வது வழக்கம். இங்கு வாழைத்தண்டை உபயோகித்து சாட் செய்யும் முறையை காணலாம். 


Vazhaithandu chaat [ banana stem chaat ]


தேவையானவை :
1/2 கப்அரிசிப் பொரி 
1/2 கப்சோளப் பொரி 
1/3 கப்கேரட் சீவியது
1/2 கப்வாழைத்தண்டு பொடியாக நறுக்கியது
1தக்காளி, பொடியாக நறுக்கவும்
1வெங்காயம், பொடியாக நறுக்கவும்
1/4 கப்கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
தூள் & சாஸ் :
1/2 Tspகொத்தமல்லிதூள் 
1/2 Tspசீரகத்தூள்
2 சிட்டிகைமஞ்சத்தூள்
1/4 Tspமிளகாய்த்தூள்
1/4 Tspசாட் தூள்
1/4 Tspஉப்பு
1/2 Tspகருப்பு உப்பு [ ராக் சால்ட் ]
1/2 Tspஇனிப்பு & புளிப்பு புளி சாஸ்
1/4 Tspதேன்
மேலே கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகள் மற்றும் தூள்களை அவரவர் சுவைக்கேற்ப கூட்டி குறைத்துக்கொள்ளவும்.

செய்முறை :
பொரி நீங்கலாக கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும்.
பின்பு பொரி இரண்டையும் சேர்த்து கலக்கவும்.
உப்பு மற்றும் காரம் சரி பார்க்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைத்து கொத்தமல்லி தழை தூவி சுவைக்கவும்.
கலந்தவுடன் சாப்பிட்டு விடவும். இல்லையெனில் தண்ணீர் விட்டு நசநசவென ஆகிவிடும்.

Vazhaithandu chaat [ banana stem chaat ]

குறிப்பு : மிளகாய்தூளுக்கு பதிலாக மிளகுத்தூளை சேர்த்துக்கொள்ளலாம்.





சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

மோதகம் காரம்
மோதகம் காரம்
வாழைப்பூ விரல்கள்
வாழைப்பூ விரல்கள்
புளிக்கூழ்
புளிக்கூழ்
பகோடா
பகோடா
பஜ்ஜி
பஜ்ஜி


Friday, August 17, 2018

Inji Thokku

#இஞ்சிதொக்கு : #இஞ்சி நமது உணவின் சுவையை கூட்டுவதற்காகவும் மருத்துவ குணங்களுக்காகவும் பயன் படுத்தப்படுகிறது. பொங்கல் , &  உப்புமா போன்ற சிற்றுண்டிகளில் சிறிதளவேனும் இஞ்சி சேர்க்கும் போது அவற்றின் சுவை மிகுதியாவது திண்ணம். தேங்காய் சட்னி,  &  வெங்காய சட்னி போன்ற சட்னி வகைகளை அரைக்கும் போது சிறிதளவு இஞ்சியை பச்சையாகவோ அல்லது வறுத்தோ சேர்க்கும் போது சட்னி கூடுதல் சுவையுடன் இருப்பதைக் காணலாம்.
இஞ்சியை உபயோகித்து ஒரு சுவையான #தொக்கு செய்வதெப்படி என இங்கு காணலாம்.


inji thokku [ Ginger pickle ]

தேவையானவை :
150 gmsஇஞ்சி
8 - 10சிகப்பு மிளகாய் [ கூட்டி குறைக்கவும் ]
1/2 Tspவெந்தயம்
நெல்லி அளவுபுளி
1/2 Tspமஞ்சத்தூள்
15 - 20கருவேப்பிலை [ விருப்பப்பட்டால் ]
1 Tspவெல்லம் [ கூட்டி குறைக்கவும் ]
1 Tspகடுகு
2 Tspஉப்பு [ கூட்டி குறைக்கவும் ]
1/3 cupநல்லெண்ணெய்

செய்முறை :
நெல்லிக்காய் அளவு புளியை சூடான தண்ணீரில் ஊறவைக்கவும்.
இஞ்சியை மண் போக கழுவிய பின்னர் தோல் நீக்கி சிறு சிறு நீள வடிவ துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வாணலியை மிதமான தீயில் வைத்து அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
அதில் வெந்தயத்தை சிவக்க வறுத்து எடுத்து இடிக்கும் உரலில் இட்டு வைக்கவும்.
அதே வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு சிகப்பு மிளகாயை போட்டு நன்கு வறுக்கவும். வறுபட்ட மிளகாயை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
அடுத்து அதே வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கிய இஞ்சி துண்டுகளை போட்டு நன்கு சிவக்கும் வரை வதக்கவும்.
வறுத்த இஞ்சி துண்டுகளை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
நன்கு ஆறிய பின்னர் மிக்சியில் இட்டு அதனுடன் வறுத்த மிளகாய், உப்பு, வெல்லம் மற்றும் ஊறவைத்த புளி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
வாணலியை மீண்டும் அடுப்பில் ஏற்றி மீதமுள்ள எண்ணெய்யை ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடுகு வெடிக்க விடவும்.
அடுத்து கருவேப்பிலையை கிள்ளி சேர்த்து அரைத்த விழுதை சேர்க்கவும்.
உப்பு சரி பார்க்கவும். தேவையெனில் சிறிது சேர்த்து கிளறவும்.
நன்கு கிளறவும். சிறிது நேரத்தில் நன்கு உருண்டு வரும்.
ஊற்றிய எண்ணெயும் வெளியில் கக்க ஆரம்பிக்கும்.
அந்த நேரத்தில் வறுத்த வெந்தயத்தை உரலில் இடித்து சேர்க்கவும்.
நன்கு ஒருமுறை கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
சூடு ஆறியதும் ஒரு பீங்கான் கிண்ணத்தில் அல்லது ஒரு கண்ணாடி குடுவையில் எடுத்து வைக்கவும்.
உபயோகப்படுத்தும் போது சுத்தமான ஈரமில்லாத தேக்கரண்டி கொண்டு வேறொரு சிறிய கிண்ணத்தில் எடுத்து வைத்து உபயோகிக்க வேண்டும்.
இவ்வாறு சாதாரணமாக வெளியில் வைத்து பயன் படுத்தும் போது பத்து நாட்கள் முதல் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.
சாதத்தில் கலந்து சாப்பிடலாம்.
இட்லி,  &  தோசை,  &  உப்புமா,   &  பொங்கல் போன்ற டிபன் வகைகளுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
தயிர் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டாலும் மிக அருமையாக இருக்கும்.


inji thokku [ Ginger pickle ]


குறிப்பு : மிளகாய், உப்பு மற்றும் வெல்லத்தின் அளவை அவரவர் சுவைக்கேற்ப கூட்டிக் குறைத்துக்கொள்ளவும்.






சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய் மிட்டாய்
தேன் நெல்லிக்காய்
நெல்லிக்காய் தேனில் ஊறியது
ஆவக்காய் ஊறுகாய்
ஆவக்காய் 
ஊறுகாய்
உப்பு எலுமிச்சங்காய்
உப்பு 
எலுமிச்சங்காய்
நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய் ஊறுகாய்