Search This Blog

Tuesday, September 30, 2014

Kambu-Murukku

#கம்புமுறுக்கு : #கம்பு உபயோகித்து டிபன் வகைகளை  மட்டும் இல்லாமல் மற்ற தின் பண்டங்களும் செய்து பார்க்கலாமே என முயற்சி செய்ததுதான் இந்த முறுக்கு. கொடுக்கப்பட்டுள்ள அளவு கொண்டு 6 அல்லது 7 நடுத்தர அளவு முறுக்குகள் செய்யலாம்.
இனி செய்முறையை காண்போம்.

கம்பு முறுக்கு


தேவையான பொருட்கள் :
1/2 Cupகம்பு மாவு[ Pearl Millet Flour ]
1 Tbspகடலை மாவு [ Gram Flour ]
1 1/4 Tbspபொட்டுகடலை மாவு [ Pottukadalai maavu ]
1/2 Tspஉப்பு  [ Adjust ]
1/2 Tspசிகப்பு மிளகாய் தூள்
2 pinchபெருங்காயம்
1/4 Tspஓமம்[ Optional ]
1/4 Tspசீரகம்
1/4 Tspஎள்ளு
1 Tspசூடான எண்ணெய்

பொரித்தெடுக்க தேவையான எண்ணெய்.
முறுக்கு பிழிய முறுக்கு அச்சு.

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.

கொடுக்கப்பட்டுள்ள மாவு மற்ற பொடிகள் அனைத்தையும் ஒரு பேசின் அல்லது வாயகன்ற பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.


கைகளால் நன்கு கலந்து விடவும்.

ஒரு தேக்கரண்டி சூடான எண்ணெயை மாவில் விட்டு கைகளால் பிசறி விடவும்.

பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு கெட்டியான மாவாக பிசைந்துக் கொள்ளவும்.

முறுக்கு பிழியும் அச்சில் முறுக்கு துவாரம் உள்ள தட்டை போட்டு மாவை நிரப்பவும்.

எண்ணெய் சூடாகி விட்டதா என பார்த்த பின்னர் சிறு தட்டிலோ அல்லது சாரணியின் பின்புறமோ முறுக்கை பிழிந்து எண்ணையில் கவனமாக மெதுவாக போடவும்.
எடுத்துக்கொண்ட எண்ணெயின் அளவிற்கு ஏற்றவாறு ஒரு தடவைக்கு 3 அல்லது 4 முறுக்குளை போட்டு பொரிக்கவும்.


ஓரிரு நிமிடங்கள் அப்படியே பொரிய விடவும்.


பின்னர் சாரணியால் திருப்பிவிட்டு பொரிக்கவும்.

கம்பு முறுக்கு

பொரிவது அடங்கியவுடன் எடுத்து டிஷ்யு தாளின் மேல் வைக்கவும்.


கம்பு முறுக்கு

மறுபடியும் எண்ணெய் சரியான சூட்டில் இருக்கிறதா என சோதித்த பின்னர் அடுத்த ஈடு முறுக்குகளை போட்டு பொரிக்கவும்.

பின்னர் காற்று புகா டப்பாவில் எடுத்து வைத்து பத்திரபடுத்தவும்.

கம்பு முறுக்கு

சுவையான கம்பு முறுக்கு தயார். டீ அல்லது காபியுடன் சுவைக்க அருமையாக இருக்கும்.

குறிப்பு :
அதிக அளவில் செய்யும் போது ஒரே முறை மாவை தண்ணீர் விட்டு பிசைய கூடாது. எல்லா பொருட்களையும் கலந்து சூடான எண்ணெய் விட்டு பிசறி வைக்கவும். 
அதிலிருந்து சிறிதளவு இரண்டு அல்லது மூன்று முறைக்கு தேவையானதை தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
மறுபடியும் தேவையான மாவு இரண்டாவது ஈடு அடுப்பில் இருக்கும் பொது தயார் செய்தால் எல்லாவற்றின் சுவையும் ஒரே சுவையுடன் இருக்கும்.
ஒரே தடவை பிசைந்து போடும் பொது கடைசியாக போகப்போக முறுக்கு கடுக்கென்று இருக்கும்.



Monday, September 29, 2014

Kambu-Cauliflower-Adai

#கம்புகாலிப்ளவர்அடை : #கம்பு  #சிறுதானியம் வகைகளுள் மிக முக்கியமானதாகும். இந்தியாவின் பல மாநிலங்களில் பரவலாகப் பயிரிடப்படுகிறது. இதனை உபயோகித்து கூழ், தோசை போன்ற உணவுகள் எப்படி செய்வது என பார்த்திருக்கிறோம்.
இங்கு எளிய முறையில் மிக குறுகிய நேரத்தில் சத்தான அடை செய்வது எப்படி என காண்போம்.
சுமார் 5 முதல் 6 அடைகள் செய்யலாம்.

கம்பு காலிப்ளவர் அடை



தேவையான பொருட்கள் :
மாவு தயார் செய்ய வேண்டியவை 
3/4 Cupகம்பு மாவு  [ Bajra or Pearl millet flour ]
1/8 Cupபலதானிய மாவு [ Multigrain Flour ]
1/8 Cupஅமராந்த் மாவு  [ Optional ]
1 Tspபாப்பரை மாவு  [ Optional ]
1 Tspஉப்பு 
1/8 Cupதயிர் 
மாவில் சேர்க்க வேண்டியவை 
1 small sizeகாலிப்ளவர்
1 Tspசீரகம் 
1/8 Cupவெங்காயம் பொடியாக நறுக்கியது
1/8 Cupகறுவேப்பிலை பொடியாக நறுக்கியது
1/8 Cupகொத்தமல்லி பொடியாக நறுக்கியது
1 or 2பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
1/2 Tspமிளகு பொடித்தது

எண்ணெய்  அடையை சுடுவதற்கு தேவையான அளவு

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள எல்லா மாவையும் போட்டு உப்பு சேர்க்கவும்.
1/2 கப் அளவு தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.


தயிரை  தேக்கரண்டியால் அடித்து மாவில் சேக்கவும்.


நன்கு கலக்கி 15 நிமிடங்களுக்கு தனியே வைக்கவும்.

காலி ப்ளவரை  உப்பு சேர்த்த சுடு தண்ணீரில் 5 நிமிடங்கள் வைத்து சுத்தப்படுத்தவும்.
அதனை 5 நிமிடங்களுக்குப் பிறகு மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.


அரைத்ததை மாவில் சேர்க்கவும்.
மாவில் சேர்க்க கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்க்கவும்.

நன்கு கலக்கி வைக்கவும்.
அடுப்பில் தோசை கல்லை சூடாக்கி எண்ணெய் தடவவும்.
சூடான கல்லின் மேல் இரண்டு கரண்டி மாவை நடுவில் விட்டு வட்டமான அடையாக பரப்பவும்.
அடையின் மேலும் வரும்புகளை சுற்றியும் எண்ணெய் விட்டு வேக விடவும்.

கம்பு காலிப்ளவர் அடை

ஓரங்கள் சிவக்க ஆரம்பித்ததும் திருப்பிப் போடவும்.

கம்பு காலிப்ளவர் அடை

இரண்டு பக்கங்களும் சிவக்க வெந்தவுடன் தட்டில் எடுத்து வைக்கவும்.

கம்பு காலிப்ளவர் அடை

இதேபோல கம்பு காலிப்ளவர் அடையை ஒவ்வொன்றாக சுட்டெடுக்கவும்.

தேங்காய் சட்னியுடன் அல்லது தக்காளி சாஸுடன் சுவைக்கவும்.
சுவையான கம்பு அடை தயார்!!








மேலும் சில தோசை மற்றும் அடை வகைகள் முயற்சி செய்து பார்க்க

பரங்கிக்காய் அடை
பரங்கிக்காய் அடை
முடக்கத்தான் கீரை தோசை
முடக்கத்தான் தோசை
கொடி பசலை கீரை தோசை
பசலை கீரை தோசை
பெசரட்டு
பெசரட்டு
வாழைப்பூ பசலை அடை
வாழைபூபசலைஅடை





இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.



Sunday, September 28, 2014

Thinai Payasam

#தினைபாயசம் : பழங்காலம் தொட்டு உபயோகத்தில் இருக்கும் ஒரு #சிறுதானியம் தினையாகும். #தினை கொண்டு முன்பே ஒரு
பால் பாயசம் செய்துள்ளோம். இந்த முறை வாங்கிய தினை நன்கு ஊறவைத்த பின்னர் எவ்வளவு அரைத்தாலும் உமி தங்குகிறது. மேலும் முழுங்கும் போது தொண்டையில் மாட்டிக்கொள்கிறது. அதனால் வேறொரு முறையில் முயற்சி செய்து பார்த்தேன். அதனை இங்கு பதிவேற்றுகிறேன்.

தினை பாயசம்


தேவையான பொருட்கள் :
1/4 கப்                             தினை
1 கப்                                 பால்
1 Tbsp                               சேமியா வறுத்தது
1/4 கப்                             சர்க்கரை [ அட்ஜஸ்ட் ]
1 சிட்டிகை                   உப்பு
1/4 Tsp                             ஜாதிக்காய் அல்லது ஏலக்காய் பொடி
4 அ 5                              குங்குமப்பூ
1 அ 2                              பாதாம் பருப்பு

செய்முறை :
தினையை கழுவி 2 அல்லது 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
குறிப்பிட்ட மணி நேரம் கழித்து மிக்சியில் தண்ணீர் விட்டு அரைத்து ஒரு டீ வடிக்கட்டியின் மூலம் வடிகட்டவும்.
தினை தானியம் [ foxtail millet ]

வடிகட்டியதை மற்றுமொரு முறை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து மறுபடியும் அதே பாத்திரத்தில் வடி கட்டிக்கொள்ளவும்.
மூன்றாவது முறையும் மிக்ஸியில் அரைத்து பால் எடுத்து அதே பாத்திரத்தில் வடி கட்டவும்.
வடிகட்டிய கரைசல் பால் போல இருக்கும்.
இதனை தினை பால் என்று இனி அழைக்கலாம்.

டீ வடிகட்டியில் தங்கும் தினை உமியை தூக்கி எறிந்து விடவும்.
தினை பால் தினை உமி

பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
அடுப்பில் மிதமான தீயில் சூடாக்கவும்.
பால் பொங்கியவுடன் தீயை குறைத்து தினைபால்  சேர்த்து கரண்டியால் விடாமல் கலக்கவும்.
இல்லாவிடில் பாத்திரத்தில் அடி பிடித்து விடும்.
கலக்கிகொண்டே இருக்கும் போது பால் பளபளப்பாக மாறி கஞ்சி பதத்திற்கு வரும்.

பாலில் தினை பால் சேர்த்து காய்ச்சவும்

இந்த தருணத்தில் சேமியாவை சேர்த்து கலக்கவும்.
சேமியா சிறிது நேரத்திலேயே வெந்து விடும்.
சேமியா  வெந்த பிறகு சர்க்கரையை சேர்த்து கலக்கி 4 அல்லது 5 நிமிடங்கள் சிறிய தீயில் கொதிக்கவிடவும்.
கடைசியாக பாயசத்தில் வாசனைக்காக ஜாதிக்காய் அல்லது ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

பாயசத்தில் வாசனைக்காக ஜாதிக்காய் அல்லது ஏலக்காய் பொடி சேர்க்கவும்

பரிமாறும் கிண்ணத்தில் ஊற்றி மேலே குங்குமப்பூவையும் பாதாமை சீவி போட்டும் அருந்தவும்.

தினை பாயசம்

சிறு பிள்ளைகளுக்கு கொடுக்கப் படும் Farex போன்ற சுவையுடன் இருக்கும்.
மிக மிக அருமையான மணமும் சுவையும் கொண்டது இந்த பாயசம்!!
தினையில் செய்யப்படும் மற்ற அனைத்து உணவுப் பொருட்களில் எனக்கு மிகவும் பிடித்தது தினை பாயசம்தான்!!!...




மேலும் சில உணவு குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
திணை பால் பாயாசம் தினை பொட்டுக்கடலை உருண்டை தினை மாவு உருண்டை காரட் தினை பாயசம்






Saturday, September 27, 2014

Payatham Paruppu Urundai

#பயத்தம்பருப்புஉருண்டை : #ரவாஉருண்டை போலவே இதுவும் பாரம்பரியமாக தீபாவளியின் போது செய்யப்படும் இனிப்பு வகைகளில் ஒன்றாகும். இவைகள் இரண்டையும் புதிய நெய் காய்ச்சும் போது செய்தால் சுவையும் மணமும் மிக மிக அருமையாக இருக்கும். உருண்டை பிடிப்பதுதான் சிறிது சிரமமான வேலை. ஆனால் ருசியை நினைத்தால் உருண்டை பிடிப்பது சிரமமாக தோன்றாது.
மேலும் இந்த உருண்டை ரவா உருண்டையை காட்டிலும் சத்துக்கள் நிறைந்தது. பருப்பில் செய்திருப்பதால் ப்ரோடீன் சத்து அதிகமாக உள்ள தின் பண்டமாகும். குழைந்தைகளுக்கு அவசியம் செய்து கொடுக்க வண்டிய இனிப்பாகும்.
இனி எப்படி என காண்போம்.

பயத்தம்பருப்பு உருண்டை


தேவையான பொருட்கள் :
1/2 கப்                               பயத்தம் பருப்பு
1/2 கப்                               சர்க்கரை
2 அ 3                                 ஏலக்காய்
1/4 கப்                               நெய்
5 - 6                                    முந்திரி பருப்பு

செய்முறை :
ஒரு வாணலியை அடுப்பின் மேல் வைத்து மிதமான தீயில் சூடாக்கவும்.
அதில் பருப்பை சேர்த்து விடாமல் கிளறி பொன்னிறமாக வறுக்கவும்.
பொன்னிறமாக வறுத்த பின்னர் ஒரு தட்டில் தனியே எடுத்து வைத்து ஆற விடவும்.
பொன்னிறமாக வறுத்த பயத்தம் பருப்பு மற்றும் சர்க்கரை


ஆறிய பின்னர் மிக்ஸியில் நன்றாக மைய அரைத்து மாவாக்கவும்
சல்லடையில் சலித்து எடுத்து வைக்கவும்.

மிக்ஸியில் வறுத்த பயத்தம் பருப்பை  நன்றாக மைய அரைத்து மாவாக்கவும்


மிக்சியில் சர்க்கரை மற்றும் ஏலக்காயை நன்றாக மைய அரைத்து தூளாக்கவும்.
அரைத்த மாவையும் சர்க்கரையையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாக கலக்கவும்.

அரைத்த மாவையும் சர்க்கரையையும் ஒன்றாக கலக்கவும்


முந்திரியை சிறு துண்டுகளாக்கவும்.
வாணலியில் நெய் விட்டு வறுத்தெடுத்து மாவு சர்க்கரை கலவையுடன் சேர்க்கவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய்யை சூடாக்கவும்.

நெய்


சூடானவுடன் மாவு சர்க்கரை கலவையை சிறிது சூடேறும் வரை கலக்கவும்.

Mix with hot ghee


அடுப்பை அணைத்து விட்டு கை பொறுக்கும் சூடு வந்த பிறகு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

சூடான நெய்யுடன் கலக்கப் பட்ட பயத்தமாவு சர்க்கரை கலவை

உருண்டை பிடிக்க முடியாமல் உடைந்து போகுமானால் மேலும் சிறிது நெய்யை சூடாக்கி ஊற்றி கலந்து உருண்டை பிடிக்கவும்.
சுவையான சத்துக்கள் நிரம்பிய பயத்தம் பருப்பு உருண்டை தயார். சுவைத்து மகிழவும்.
பயத்தம் பருப்பு உருண்டை

மூடியுடன் கூடிய டப்பாவில் எடுத்து வைத்து பாதுகாக்கவும்.

குறிப்பு :

  • 1 அல்லது 2 கிலோ பயத்தம் பருப்பை சிவக்க வறுத்து மாவு அரைக்கும்  இயந்திரத்தில் அரைத்து வைத்துக்கொள்ளலாம். தேவை ஏற்படும்போது சிறிது எடுத்து இவ்வாறு உருண்டைகள் செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • சர்க்கரையின் அளவை தேவைக்கேற்ப கூட்டி குறைத்துக் கொள்ளவும்.







மற்றும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
தினை மாவு உருண்டை
தினை மாவு உருண்டை
குலாப் ஜாமூன்
குலாப் 
ஜாமூன்
ஆளிவிதை உருண்டை
ஆளிவிதை உருண்டை
ஸ்ரீ கண்ட்
ஸ்ரீ கண்ட்
ரவா உருண்டை
ரவா உருண்டை



Sigappu Keerai Vadai

#சிகப்புகீரைவடை : #கீரை என்றாலே சிறு பிள்ளைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சாப்பிடுவார்கள். உருட்டி மிரட்டிதான் சாப்பிட வைக்க வேண்டும். அதையே அவர்களுக்கு பிடித்தமான உணவில் தெரியாமல் கலந்து கொடுத்தால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சாப்பிடுவார்கள் அல்லவா?!! நமக்கும் சாப்பிட்டு விட்டார்களே என்ற திருப்தி கிடைக்கும்.

இங்கு சிகப்பு கீரையை உபயோகித்து வடை செய்யும் முறையை காண்போம்.
இதற்கு தேவையான உளுந்து மாவை இட்லிக்கு அரைக்கும் போது 1/2 கப் எடுத்துக் கொண்டுள்ளேன்.

சிகப்புகீரை வடை


தேவையான பொருட்கள் :
1/2 கப்                               உளுந்து மாவு
2 Tbsp                                 ரவா
1 Tbsp                                 அரிசி மாவு
1/4 கப்                               சிகப்பு கீரை, கழுவி பொடியாக நறுக்கியது
1/4 கப்                               காலி ப்ளவர் பொடியாக நறுக்கியது
1 Tbsp                                 வெங்காயம் பொடியாக நறுக்கியது
1 Tsp                                  கருவேப்பிலை பொடியாக நறுக்கியது
2 Tsp                                  கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
1/2 Tsp                               பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
1 Tsp                                  சீரகம்
1/2 Tsp                               உப்பு

எண்ணெய் பொரிப்பதற்கு
விருப்பமானால் இஞ்சி துண்டுகளை சேர்க்கலாம்.

செய்முறை :
மாவுடன் ரவா கலந்து அரைமணி நேரம் குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்.
அரை மணி நேரம் கழிந்த பின்னர்  உப்பு, சீரகம், ஓமம் மற்றும் அரிசி மாவை சேர்க்கவும்.
வடைக்கு தேவையான பொருட்கள்

கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.

அடுப்பில் எண்ணெய் சட்டியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடேற்றவும்.

மாவை கலந்து வைக்கவும். சிறிது நீர்க்க இருந்தால் சிறிது அரிசி மாவைகலக்கிக் கொள்ளலாம்.

சிகப்பு கீரை வடை மாவு

கையை ஈரப்படுத்திக் கொண்டு வட்டமாக தட்டி நடுவில் ஓட்டை இட்டு, எண்ணெய் நன்கு சூடானதும், போடவும்.

வடையை எண்ணெயில் பொரிக்கவும்

இரண்டு பக்கமும் திருப்பி விட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.


எண்ணெய்  வடிய டிஷ்யு காகிதத்தின் மேல் எடுத்து வைக்கவும்.

எண்ணெய்  வடிய டிஷ்யு காகிதத்தின் மேல் எடுத்து வைக்கவும்

மீதமுள்ள  மாவையும் இதே போல பொரித்தெடுக்கவும்.

வடை எண்ணெயில் பொரிகிறது

மாலை சிற்றுண்டிக்கு மிகவும் ஏற்றதாகும். 
தேங்காய் சட்னி அல்லது தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

சிகப்புகீரை வடை

சிகப்பு கீரை மட்டுமல்லாமல் முளை கீரை, சிறு கீரை ஆகியவற்றை உபயோகித்தும் கீரை வடை செய்யலாம். கீரை வடையை சூடாக சாப்பிட்டால் மிக அருமையாக இருக்கும்.

கீரை வடை