Search This Blog

Monday, December 3, 2018

Karunai-kizhangu-Chutney

#கருணைக்கிழங்குசட்னி :  #கருணைக்கிழங்கு சட்னியை #கருணைக்கிழங்குகுழம்பு அல்லது #கருணைக்கிழங்குபுளிகுழம்பு என்றும் கூறலாம். இந்த குழம்பு செய்வதற்கு பருப்பு வேகவைத்து சேர்க்க வேண்டிய தேவையில்லை. இது கத்தரிக்காய் சட்னி  போன்ற சுவையுடைய ஒரு குழம்பு ஆகும்.
கிழங்கை நன்கு வேகவைத்த பின்னர் தோலை நீக்கி நன்கு மசித்து விட வேண்டும். மசித்த கிழங்குடன் சாம்பார் பொடி, மல்லித்தூள், அரைத்துவிட்ட குழம்பு தூள் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். நறுக்கிய வெங்காயத்தை கடுகு, கருவேப்பிலை, கீறிய பச்சைமிளகாய் மற்றும் பெருங்காயத்துடன் வதக்கி கிழங்கு கலவையுடன் சேர்க்க வேண்டும். புளியை கரைத்து விட்டு நன்கு கலக்கி இரண்டு விசில் வரும்வரை குக்கரில் வேகவைத்து எடுத்தால் சுவையான கருணைக்கிழங்கு சட்னி தயார்.
இனி தேவையான பொருட்களின் அளவுகள் மற்றும் செய்முறையை காண்போம்.



தேவையானவை :
2 ( அ ) 3கருணைக்கிழங்கு
சிறு நெல்லிக்காய் அளவு புளி
1வெங்காயம், பொடியாக நறுக்கவும்
10 - 12சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கவும்
2 - 3பச்சை மிளகாய்
10 - 12கறுவேப்பிலை
1/2 Tspகடுகு
1/4 Tspபெருங்காய தூள்
1 Tspகடலை எண்ணெய்
1 1/2 Tspஉப்பு [ adjust ]
2 pinchesமஞ்சத்தூள்
2 Tspசாம்பார் பொடி
1 Tspஅரைத்துவிட்ட குழம்பு தூள்
1 Tspகொத்தமல்லித்தூள்

சிறிது கொத்தமல்லி தழை அலங்கரிக்க

செய்முறை :
கருணைக்கிழங்கை மண் போக  நன்கு கழுவிய பின்னர் குக்கரில் போடவும்.
ஒரு கப் தண்ணீர் ஊற்றி 1/4 Tsp உப்பு சேர்த்து குக்கரை மூடி ஐந்து விசில் வரும் வரை வேக விடவும். அல்லது ஒரு விசில் வந்த பின்னர் தீயை குறைத்து 7 நிமிடம் வேகவைக்கவும்.
வெயிட்டை சிறிது சிறிதாக தூக்கியோ அல்லது தண்ணீர் குழாயின் அடியில் வைத்து தண்ணீரை ஊற்றியோ உடனே ஆவியை வெளியேற்றவும்.
வெந்த கிழங்கை குக்கரில் இருந்து வெளியே எடுத்து வைக்கவும்.
குக்கரிலுள்ள வேகவைத்த தண்ணீரை கீழே கொட்டி விடவும்.
கிழங்கின் தோல் நீக்கி குக்கரினுள் இட்டு மசிக்கும் கரண்டி கொண்டு நன்கு மசித்து விடவும்.
நன்கு மசித்த பின்னர் 1/2 கப் தண்ணீர், மஞ்சத்தூள், சாம்பார் பொடிஅரைத்துவிட்ட குழம்பு தூள்மற்றும் கொத்தமல்லித்தூள் சேர்க்கவும்.
அடுப்பை பற்ற வைத்து குக்கரை மிதமான தீயில் க்சூடாக்கவும்.

மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விட்ட பின்னர் பெருங்காயத்தூள், கருவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயம் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிது வாசனை வரும் வரை வதக்கினால் போதும்.
அடுப்பை அணைத்து விட்டு வதக்கியவற்றை கொதிக்கும் கருணைக்கிழங்கு கலவையில் கொட்டவும்.

புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி குக்கரில் சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
குக்கரை மூடி வெயிட் பொருத்தி தீயை அதிகப்படுத்தி இரண்டு விசில் வரும் வரை வைத்திருக்கவும்.
ஆவி அடங்கியபின் திறந்து பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சிறிது கறுவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.

சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
இட்லி மற்றும் தோசை உடன் தொட்டுக்க வும் நன்றாக இருக்கும்.












மேலும் சில உணவு குறிப்புகள் முயற்சி செய்து பார்த்து ருசிக்க

வெங்காய சாம்பார்
வெங்காய சாம்பார்
தக்காளி சட்னி
தக்காளி
சட்னி
வாழைப்பூ குழம்பு
வாழைப்பூ குழம்பு
வெண்டைக்காய் தக்காளி கறி
வெண்டைக்காய் தக்காளி கறி
அவியல்
அவியல்


இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ட்விட்டர்,  G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.

No comments:

Post a Comment