Search This Blog

Showing posts with label maangai drink. Show all posts
Showing posts with label maangai drink. Show all posts

Tuesday, May 20, 2014

Aam Panna - Maangai Drink

#மாங்காய்பானம் [ #ஆம்பண்ணா ] : இப்போது நான் சத்திஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரில் வசித்து வருகிறேன். இங்கு கோடைகாலத்தில் இரவு உணவிற்கு சென்றாலோ அல்லது மதிய உணவின் போதும் பன்னா என்னும் மாங்காயில் செய்த பானத்தை அளிக்கிறார்கள்.
நான் விசாரித்த போது மாங்காய் உடலை குளிர்விக்கும். மாம்பழம்தான் உடலுக்கு சூடு என கூறுகிறார்கள்.
அருகில் உள்ளவர்களிடம் இதன் சமையல் குறிப்பை கேட்ட போது மாங்காயை நெருப்பில் சுட்டு பிறகு வெந்த பழக்கூழை கொண்டு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.
இல்லையெனில் மாங்காயை கழுவி தோலுடன் குக்கரில் வேக வைத்து பின்னர் பழக்கூழை உபயோகித்து தயாரிக்கலாம் என கூறினார்கள்.
அவர்கள் கூறியதை கேட்ட பின்னர் என் வழியில் நான் இதை தயாரித்தேன்.
மாங்காய் பானம் [ #ஆம்பண்ணா ]
Aam Panna - Raw Mango Drink

ஓரிரு தினங்களுக்கு முன்னர் மாங்காய் பச்சடி செய்தேன். அப்போதே இந்த பானத்தை தயாரிக்க நினைத்தேன். ஆனால் இன்றுதான் செய்ய முடிந்தது. அதற்குள் பழம் பாதி பழுத்து விட்டது. ஆனாலும் புளிப்பாக இருப்பதால் இந்த பானம் தயாரிக்க இந்த செங்காயை உபயோகித்துள்ளேன்.
இனி செய்முறை

இனிப்பு பழக்கூழ் செய்ய தேவையான பொருட்கள் :


2 கப்                                 மாங்காய் தோல் நீக்கி  சீவியது
1/4 கப்                              சர்க்கரை

ஒரு கப் பானம் தயாரிக்க :
1/4 கப்                              இனிப்பு பழக்கூழ்
1/4 Tsp                               சீரகபொடி
1/4 Tsp                               இந்துப்பு [ rock salt ]
2 அ 3                                புதினா இலைகள்

செய்முறை :
மாங்காயை குக்கரில் எடுத்துக்கொள்ளவும்.
சர்க்கரையை சேர்க்கவும்.


1/4 கப் தண்ணீர் சேர்க்கவும்.
கரண்டியால் நன்கு கலக்கி விடவும்.


அடுப்பில் 2 விசில் வரும்  வேக விடவும்.
அடுப்பை  அணைத்து விட்டு குக்கரை உடனே ஆவி நீக்கி திறக்கவும்.
கரண்டி கொண்டோ அல்லது மிக்ஸியிலோ ஆறியவுடன் அரைத்து மசிக்கவும்.


1 கப் பானம் தயாரிக்க
1/4 கப் மசித்த இனிப்பு பழகூழை ஒரு கண்ணாடி தம்ளரில் எடுத்துக் கொள்ளவும்.
சீரகபொடி, இந்துப்பு மற்று 3/4 கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
மேலே ஒரு சிட்டிகை சீரகப் பொடி தூவியோ அல்லது புதினா இலைகளை பியித்து போட்டோ பருகவும்.
வெய்யிலுக்கு இதமான புளிப்பும் இனிப்பும் நிறைந்த பானம் தயார்.
அருந்தி மகிழவும்.
மாங்காய் பானம் [ ஆம்பண்ணா ]


மீதமுள்ள இனிப்பு பழக்கூழை கண்ணாடி பாட்டில் அல்லது பீங்கான் கிண்ணத்தில் எடுத்து வைத்து ஆறியவுடன் குளிர் சாதன பெட்டியில் இரு தினங்களுக்கு பத்திர படுத்தலாம்.






மற்ற சில பானங்கள்

புதினா கஷாயம்
புதினா கஷாயம்
எலுமிச்சை இஞ்சி பானம்
எலுமிச்சை இஞ்சி ..
பானகம்
பானகம்
நீர் மோர்
நீர் மோர்
தேநீர்
தேநீர்