Search This Blog

Wednesday, March 22, 2017

Nellikkai-Rice

#நெல்லிக்காய்சாதம் : இரு வகையான  #நெல்லிக்காய் கள் உண்டு. அரநெல்லிக்காய் என்று சொல்லப்படும் மிகவும் புளிப்பு சுவையுடையது ஒன்று. மற்றொன்று துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்டது. இவ்விரு வகையான நெல்லிக்காய்களை உபயோகப்படுத்தி ஒரு சுவையான கலந்த சாதம் செய்வது எப்படி என பார்ப்போம்.

Nellikkai rice


தேவையானவை :
1 கப்வேகவைத்த சாதம்
10 - 15அர நெல்லிக்காய்
3 - 4நெல்லிக்காய் [ Amla ]
1 or 2பச்சை மிளகாய் [ adjust ]
8 - 10கருவேப்பிலை
2 Tbspநிலக்கடலை [ peanut ]
2 Tspகடலை பருப்பு
1/2 Tspகடுகு
1/4 Tspபெருங்காய தூள்
1/4 Tspமஞ்சத்தூள்
4 Tspநல்லெண்ணெய்
1 1/2 Tspஉப்பு [ adjust ]

செய்முறை :
முதலில் நெல்லிக்காய், பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை கழுவி சுத்தமான துணியினால் ஈரத்தை ஒத்தி எடுக்கவும்.
நெல்லிக்காய்களின் கொட்டைகளை நீக்கி மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும்.
பச்சை மிளகாயை சிறி சிறு துண்டுகளாக நறுக்கவும்.
கருவேப்பிலையை கைகளால் கிழித்து வைக்கவும்.
அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து நல்லெண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்கவிட்ட பின்னர் கடலை பருப்பு மற்றும் நிலக்கடலை சேர்த்து சிவக்கும் வரை வறுக்கவும்.
அடுத்து பெருங்காய தூள், நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து அரை நிமிடம் வறுக்கவும்.
அடுத்து மஞ்சத்தூள் மற்றும் நறுக்கி வைத்துள்ள நெல்லிக்காய் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
நெல்லிக்காய் நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
சாதம் மற்றும் நெல்லிக்காய் ஆகியவற்றிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறியவுடன் சாதத்தை உதிர்த்து சேர்க்கவும்.
நன்கு கலந்து விடவும்.
சுவை சரி பார்த்து தேவையெனில் உப்பு சேர்த்து கிளறி விடவும்.
அடுப்பை அணைத்து விட்டு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

சுவையும் சத்தும் நிறைந்த நெல்லிக்காய் சாதம் தயார்.
தொட்டுக்கொள்ள ஏதும் இல்லாமலும் சாப்பிடலாம்.
தயிர்பச்சடி அல்லது விருப்பமான கார கறி யுடன் சுவைக்கலாம்.
Nellikkai rice






மேலும் சில சாத வகைகள் செய்து சுவைக்க

கருவேப்பிலை சாதம் சாமை பிசிபேளே பாத் முருங்கைக்கீரை சாதம் மணத்தக்காளி கீரை சாதம் தேங்காய் பால் காய்கறி புலாவ்



No comments:

Post a Comment