Search This Blog

Showing posts with label வடை. Show all posts
Showing posts with label வடை. Show all posts

Saturday, September 27, 2014

Sigappu Keerai Vadai

#சிகப்புகீரைவடை : #கீரை என்றாலே சிறு பிள்ளைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சாப்பிடுவார்கள். உருட்டி மிரட்டிதான் சாப்பிட வைக்க வேண்டும். அதையே அவர்களுக்கு பிடித்தமான உணவில் தெரியாமல் கலந்து கொடுத்தால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சாப்பிடுவார்கள் அல்லவா?!! நமக்கும் சாப்பிட்டு விட்டார்களே என்ற திருப்தி கிடைக்கும்.

இங்கு சிகப்பு கீரையை உபயோகித்து வடை செய்யும் முறையை காண்போம்.
இதற்கு தேவையான உளுந்து மாவை இட்லிக்கு அரைக்கும் போது 1/2 கப் எடுத்துக் கொண்டுள்ளேன்.

சிகப்புகீரை வடை


தேவையான பொருட்கள் :
1/2 கப்                               உளுந்து மாவு
2 Tbsp                                 ரவா
1 Tbsp                                 அரிசி மாவு
1/4 கப்                               சிகப்பு கீரை, கழுவி பொடியாக நறுக்கியது
1/4 கப்                               காலி ப்ளவர் பொடியாக நறுக்கியது
1 Tbsp                                 வெங்காயம் பொடியாக நறுக்கியது
1 Tsp                                  கருவேப்பிலை பொடியாக நறுக்கியது
2 Tsp                                  கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
1/2 Tsp                               பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
1 Tsp                                  சீரகம்
1/2 Tsp                               உப்பு

எண்ணெய் பொரிப்பதற்கு
விருப்பமானால் இஞ்சி துண்டுகளை சேர்க்கலாம்.

செய்முறை :
மாவுடன் ரவா கலந்து அரைமணி நேரம் குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்.
அரை மணி நேரம் கழிந்த பின்னர்  உப்பு, சீரகம், ஓமம் மற்றும் அரிசி மாவை சேர்க்கவும்.
வடைக்கு தேவையான பொருட்கள்

கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.

அடுப்பில் எண்ணெய் சட்டியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடேற்றவும்.

மாவை கலந்து வைக்கவும். சிறிது நீர்க்க இருந்தால் சிறிது அரிசி மாவைகலக்கிக் கொள்ளலாம்.

சிகப்பு கீரை வடை மாவு

கையை ஈரப்படுத்திக் கொண்டு வட்டமாக தட்டி நடுவில் ஓட்டை இட்டு, எண்ணெய் நன்கு சூடானதும், போடவும்.

வடையை எண்ணெயில் பொரிக்கவும்

இரண்டு பக்கமும் திருப்பி விட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.


எண்ணெய்  வடிய டிஷ்யு காகிதத்தின் மேல் எடுத்து வைக்கவும்.

எண்ணெய்  வடிய டிஷ்யு காகிதத்தின் மேல் எடுத்து வைக்கவும்

மீதமுள்ள  மாவையும் இதே போல பொரித்தெடுக்கவும்.

வடை எண்ணெயில் பொரிகிறது

மாலை சிற்றுண்டிக்கு மிகவும் ஏற்றதாகும். 
தேங்காய் சட்னி அல்லது தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

சிகப்புகீரை வடை

சிகப்பு கீரை மட்டுமல்லாமல் முளை கீரை, சிறு கீரை ஆகியவற்றை உபயோகித்தும் கீரை வடை செய்யலாம். கீரை வடையை சூடாக சாப்பிட்டால் மிக அருமையாக இருக்கும்.

கீரை வடை





Sunday, April 6, 2014

Ulundhu Vadai

#உளுந்துவடை : இதனை #மெதுவடை என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. உளுத்தம் பருப்பை ஊறவைத்து அரைத்து பின்னர் #வடை சுட்டு எடுப்பதுதான் முறை. ஆனால் மிக குறைந்த எண்ணிக்கையில் வடை தேவை படும் போது எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்து அரைபட்டு பொங்கி வந்தவுடன் ஒரு கை உளுத்தம் மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்து குளிர் சாதன பெட்டியில் பத்திர படுத்தவும்.
காலையில் எடுத்து வைத்தால் மாலையில் உபயோகப்படுத்தி விட வேண்டும்.
இல்லையென்றால் மாவு புளித்து விடும். மேலும் எண்ணெயில் பொரிக்கும் போது அதிக எண்ணெயை குடிக்கும்.
இனி செய்முறையை காண்போம்.



தேவையான பொருட்கள் :
1/2 கப்                                          அரைத்த உளுத்த மாவு
2 Tbsp                                            ரவா
1 Tbsp                                            அரிசி மாவு
1/2 Tsp                                           உப்பு
1/2 Tsp                                           சீரகம்
1/4 கப்                                          பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
10                                                   கறுவேப்பிலை பொடியாக நறுக்கவும்
2 Tbsp                                            வெங்காயம் பொடியாக நறுக்கியது
1                                                     பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்

எண்ணெய் பொரிப்பதற்கு
விருப்பமானால் இஞ்சி துண்டுகளை சேர்க்கலாம்.
செய்முறை :
மாவுடன் ரவா கலந்து அரைமணி நேரம் குளிர் சாதன பெட்டியில் வைக்கவும், அரை மணி நேரம் கழித்து உப்பு மற்றும் அரிசி மாவை சேர்க்கவும்.


கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.


அடுப்பில் எண்ணெய் சட்டியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடேற்றவும்.

மாவை கலந்து வைக்கவும். சிறிது நீர்க்க இருந்தால் சிறிது அரிசி மாவை கலக்கிக் கொள்ளலாம்.


கையை ஈரப்படுத்திக் கொண்டு வட்டமாக தட்டி நடுவில் ஓட்டை இட்டு, எண்ணெய் நன்கு சூடானதும், போடவும்.
இரண்டு பக்கமும் திருப்பி விட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.


எண்ணெய்  வடிய டிஷ்யு காகிதத்தின் மேல் எடுத்து வைக்கவும்.


சாம்பார் அல்லது சட்னியுடன் சுவைக்கலாம்.
தாளித்த தயிரில் ஊற வைத்தும் சாப்பிடலாம்.

இதையும் செய்து பார்க்கலாமே!!

காலிப்ளவர் வடை 

Friday, February 21, 2014

Masaal Vadai

மசால் வடை : காலை சிற்றுண்டிக்கு பெரும்பாலும் உளுந்து வடை ஹோட்டெல்களில் பரிமாறப்படும். அது போல மாலை வேளையில்  ரோடோரத்து டீக் கடைகளில் டீயுடன் சாப்பிட மசால் வடை  தருவது பிரசித்தம்.
இப்போது இந்த மசால் வடை தயாரிக்கும் முறையை பார்ப்போம்.


தேவையான பொருட்கள் :
ஊற வைக்கவும் :
3/4 கப்                                    கடலை பருப்பு
2 Tsp                                       உளுத்தம் பருப்பு
அரைக்க :
1 Tsp                                       சீரகம்
1 Tsp                                       சோம்பு
சிறு துண்டு                          இஞ்சி
2 அ 3                                      சிவப்பு மிளகாய்
1/2 Tsp                                     உப்பு
மாவில் சேர்க்க :
1/4 கப்                                   கொத்தமல்லி அரிந்தது
1                                            வெங்காயம், பொடியாக நறுக்கவும்
12                                          கருவேப்பிலை, பொடியாக நறுக்கவும்
3/4 கப்                                   எண்ணெய் பொரிக்க

செய்முறை:
பருப்பு இரண்டையும் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய பிறகு தண்ணீரை சுத்தமாக வாடி கட்டி விடவும்.
முதலில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் கொர கொரவென பொடிக்கவும்.
அதனுடன் ஊறவைத்த பருப்பை கொர கொரவென  அரைத்தெடுக்கவும்.
அரைப்பதற்கு தண்ணீர் சேர்க்கக் கூடாது.

ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.


இப்போது அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
மாவில் சேர்க்க வேண்டிய பொருட்களை சேர்த்து பிசையவும்.


சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
எண்ணெய் நன்கு சூடானதும் உருட்டி வைத்துள்ள உருண்டையை உள்ளங்கைகளின் இடையே வைத்து சிறிது தட்டையாக்கி எண்ணெயில் போடவும்.


கரண்டியால் இரு பக்கமும் திருப்பி திருப்பி போட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
அதிகப் படியான எண்ணெய் உறிஞ்ச டிஷ்யு காகிதத்தின் மேல் எடுத்து வைக்கவும்.
சோம்பு மணத்துடன் மொறு  மொறு வடை தயார்!!


சூடான காபி அல்லது டீயுடன் சுவைக்கவும்.