Search This Blog

Showing posts with label masaal vadai. Show all posts
Showing posts with label masaal vadai. Show all posts

Wednesday, April 9, 2014

Vazhaipoo Masaal Vadai

#வாழைப்பூமசால்வடை : இதனை #வாழைப்பூபருப்புவடை என்றும் கூறலாம்.
#வாழைப்பூ துவர்ப்பு சுவையுடன் இருப்பதால் அதனை மறைப்பதற்காக சில உத்திகளை உணவு தயாரிக்கும் போது கடை பிடிக்க வேண்டி உள்ளது. இங்கு பருப்புடன் சேர்த்து  வடை செய்யும் போது வாழைப்பூவின் சுவை சிறிது மட்டுப்படும். அதனால் அனைவரும் ஒதுக்காமல் விரும்பி சாப்பிடுவார்கள்!!
இனி எவ்வாறு செய்யலாம் என பார்ப்போம்.



தேவையான பொருட்கள் :
அரைக்க வேண்டியவை :
1/2 கப்                                     கடலை பருப்பு
1 Tbsp                                      உளுத்தம் பருப்பு
1/2 Tsp                                     உப்பு
1 அ 2                                       சி.மிளகாய் [அ ] ப.மிளகாய்
1/2 Tsp                                     சீரகம்
1/2 Tsp                                     பெருஞ்சீரகம்
சிறு துண்டு                          இஞ்சி



மாவில் சேர்கவேண்டியவை :
1 சிறிய அளவு                     வெங்காயம், பொடியாக நறுக்கவும்.
20 - 25                                     வழைப்பூ ஆர்குகக்கள், பொடியாக நறுக்கவும்
1/4 கப்                                      கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
10                                            கருவேப்பிலை

செய்முறை :
பருப்பு இரண்டையும் கழுவி ஒரு மணி  நேரம் ஊற வைக்கவும்.
 எண்ணெய் சட்டியை வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு சிறிய தீயில் சூடேற்றவும்.
ஊறிய பின்னர் தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு மற்ற பொருட்களுடன் சேர்த்து மிக்ஸியில் கொரகொரவென அரைத்தெடுக்கவும்.
மாவில் சேர்க்கவேண்டிய பொருட்களை சேர்த்து பிசையவும். உப்பு சரி பார்க்கவும்.
எண்ணெய் நன்கு காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பின்னர் கைகளால் தட்டி வடை வடிவமாக்கவும்.
எண்ணெயில் மெதுவாக போடவும்.
ஒரு முறைக்கு 4 அ 5 வடை தட்டி பொரிக்கவும்.
இரண்டு பக்கமும் திருப்பி வேக விட வேண்டும்.
பொன்னிறமாக பொரியும் வரை சிறிய தீயில் வேக விடவும்.
எண்ணெய் உறிஞ்சும் காகிதத்தின் மேல் வைத்து அதிகப் படியான எண்ணெயை நீக்கவும்.
சிறு சிறு உருண்டைகளாக பகோடா போலவும் பொரித்தெடுக்கலாம்.

பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சூடான டீ அல்லது ஆவி பறக்கும் காபியுடன் மொறு மொறு வடையை சுவைத்தால் ஆஹா!.... ருசியே அலாதிதான்!!...


குறிப்பு :
எண்ணெயில் பொறிப்பதை தவிர்க்க விரும்பினால் உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைத்து வாழைப்பூ பருப்பு உருண்டை செய்து சுவைக்கலாம்.




சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்ப்பதற்காக

குதிரைவாலி வாழைப்பூ புலாவ் வாழைப்பூ குழம்பு வாழைப்பூ மிளகு குழம்பு வாழைப்பூ வடை மோர் குழம்பு வாழைப்பூ விரல்கள்






Friday, February 21, 2014

Masaal Vadai

மசால் வடை : காலை சிற்றுண்டிக்கு பெரும்பாலும் உளுந்து வடை ஹோட்டெல்களில் பரிமாறப்படும். அது போல மாலை வேளையில்  ரோடோரத்து டீக் கடைகளில் டீயுடன் சாப்பிட மசால் வடை  தருவது பிரசித்தம்.
இப்போது இந்த மசால் வடை தயாரிக்கும் முறையை பார்ப்போம்.


தேவையான பொருட்கள் :
ஊற வைக்கவும் :
3/4 கப்                                    கடலை பருப்பு
2 Tsp                                       உளுத்தம் பருப்பு
அரைக்க :
1 Tsp                                       சீரகம்
1 Tsp                                       சோம்பு
சிறு துண்டு                          இஞ்சி
2 அ 3                                      சிவப்பு மிளகாய்
1/2 Tsp                                     உப்பு
மாவில் சேர்க்க :
1/4 கப்                                   கொத்தமல்லி அரிந்தது
1                                            வெங்காயம், பொடியாக நறுக்கவும்
12                                          கருவேப்பிலை, பொடியாக நறுக்கவும்
3/4 கப்                                   எண்ணெய் பொரிக்க

செய்முறை:
பருப்பு இரண்டையும் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய பிறகு தண்ணீரை சுத்தமாக வாடி கட்டி விடவும்.
முதலில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் கொர கொரவென பொடிக்கவும்.
அதனுடன் ஊறவைத்த பருப்பை கொர கொரவென  அரைத்தெடுக்கவும்.
அரைப்பதற்கு தண்ணீர் சேர்க்கக் கூடாது.

ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.


இப்போது அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
மாவில் சேர்க்க வேண்டிய பொருட்களை சேர்த்து பிசையவும்.


சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
எண்ணெய் நன்கு சூடானதும் உருட்டி வைத்துள்ள உருண்டையை உள்ளங்கைகளின் இடையே வைத்து சிறிது தட்டையாக்கி எண்ணெயில் போடவும்.


கரண்டியால் இரு பக்கமும் திருப்பி திருப்பி போட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
அதிகப் படியான எண்ணெய் உறிஞ்ச டிஷ்யு காகிதத்தின் மேல் எடுத்து வைக்கவும்.
சோம்பு மணத்துடன் மொறு  மொறு வடை தயார்!!


சூடான காபி அல்லது டீயுடன் சுவைக்கவும்.