Search This Blog

Showing posts with label fenugreek kuzhambu. Show all posts
Showing posts with label fenugreek kuzhambu. Show all posts

Friday, October 28, 2016

Venthaya Pachadi

#வெந்தயபச்சடி : இந்த #பச்சடி நான்கு வகை சுவைகளான இனிப்பு, காரம், கசப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட ஒரு குழம்பு வகையாகும். ராஜஸ்தானில் பொதுவாக செய்யப்படும் ஒரு குழம்பு ஆகும். #வெந்தயம், உலர்ந்த திராட்சை மற்றும் பேரீச்சம் பழம் ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.
வெந்தயம் கசப்புத்தன்மை உடையதால் அதிகமாக நாம் உணவில் சேர்த்துக்கொள்ள தயங்குவோம். ஆனால் வெந்தயம் தன்னகத்தே பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. தண்ணீரில் கரையக்கூடிய நார் சத்து கொண்டுள்ளது. இது செரிமானத்திற்கும் மல சிக்கலை தவிர்ப்பதற்கும் பேருதவியாக இருக்கிறது. வெந்தயத்தை ஊறவைத்து முளை கட்டி பயன் படுத்தினால் அதன் கசப்பு தன்மை வெகுவாக குறையும். மேலும் புரத சத்தும் நமக்கு அதிகமாக கிடைக்கும்.
இந்த குழம்பின் செயல் முறையை ஒரு தொலை காட்சி நிகழ்ச்சியில் பார்த்தேன். என்னிடம் இருந்த பொருட்களை கொண்டும் எனது ருசிக்கு தக்கவாறும் சிறிது மாற்றங்களை செய்து தயாரித்துப் பார்த்தேன். சுவை மிக மிக அருமை.

Venthaya pachadi


Venthaya pachadi

தேவையானவை :
1/4 cupவெந்தயம் முளைகட்டியது
2 Tbspஉலர்ந்த திராட்சை [ kishmish ]
1/2 Tspமிளகாய்த்தூள் [ adjust ]
1/2 Tspசீரகத்தூள்
2 Tspகொத்தமல்லி தூள்
1 Tspஆம்சூர் பொடி ( மாங்காய் பொடி ) [ adjust ]
1 Tspவெல்லம்
2 Tspஉப்பு [ adjust ]
1/2 Tspகடுகு
1/2 cupசீரகம்
8 - 10கருவேப்பிலை
3 Tspநல்லெண்ணெய் [ sesame / till oil ]

செய்முறை :
முதல் நாள் காலையிலேயே வெந்தயத்தை கழுவிய பிறகு ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.
மாலையில் தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு மூடி போட்டு அடுப்பங்கரையில் இரவு முழுவதும் வைத்திருக்கவும்.
மறுநாள்காலையில் வெந்தயம் முளை கட்டியிருப்பதை காணலாம்.

வெந்தய பச்சடி செய்யத் துவங்குவதற்கு முன் முதலில் உலர்ந்த திராட்சையை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைக்கவும்.

முளை கட்டிய வெந்தயத்தை குக்கரில் போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு இரண்டு விசில் வரும் வரை வேக விடவும்.
ஆவி அடங்கும் வரை காத்திருந்து குக்கரை திறக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடுகு மற்றும் சீரகம் போட்டு வெடிக்க விடவும்.
அடுத்து வேக வைத்த வெந்தயத்தை தண்ணீருடன் வாணலியில் சேர்க்கவும்.
இப்போது மிளகாய் தூள், மஞ்சத்தூள், சீரகத்தூள், மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கலக்கி விடவும்.
பிறகு ஊறவைத்துள்ள உலர்ந்த திராட்சையை போட்டு கலக்கவும்.
ஓரிரு நிமிடங்கள் கழித்து ஆம்சூர் பொடி மற்றும் உப்பு சேர்த்து கலக்கி சிறிய தீயின் மீது வைத்திருக்கவும்.
எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பித்ததும் வெல்லம் சேர்த்து ஒரு கொதி  வந்தவுடன் கருவேப்பிலையை கிள்ளி போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
துவர்ப்பு தவிர எல்லா வகையான சுவையும் நிறைந்த வெந்தய பச்சடி தயார்.

பரிமாறும் கிண்ணத்தில் எடுத்துவைக்கவும்.
பருப்பு சாதம், பொடி கலந்த சாதம் மற்றும் தயிர் சாதம் ஆகியவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

குறிப்பு :
உலர்ந்த திராட்சையுடன் உலர்ந்த பேரீச்சம் பழமும் சேர்த்து செய்யலாம்.



மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
ஆப்ப மாவு
ஆப்ப மாவு
வாழைப்பூ குழம்பு
வாழைப்பூ குழம்பு
வெந்தய குழம்பு
வெந்தய குழம்பு
வாழைப்பூ தயிர் பச்சடி
வாழைப்பூ தயிர் பச்சடி
மாங்காய் பச்சடி
மாங்காய் பச்சடி



Thursday, December 19, 2013

Venthaya Kuzhambu

வெந்தய குழம்பு : இந்த குழம்பு வெந்தயத்தை ஊறவைத்து புளியுடன் தேங்காய் பால் ஊற்றி செய்யப்படுகிறது. வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியதாகையால் நான் அடிக்கடி இந்த குழம்பை செய்வது உண்டு. இந்த குழம்பிற்கு அரைத்துவிட்ட குழம்பு பொடி தேவை. மேலும் வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊறவைத்து விட வேண்டும்.

வெந்தய குழம்பு

தேவையான பொருட்கள் :
1 Tbsp                                                வெந்தயம்
2 Tsp                                                  அரைத்துவிட்ட குழம்பு பொடி
1 சிட்டிகை                                    மஞ்சத்தூள்
1/2 Tsp                                               மல்லித்தூள்
1 Tsp                                                  சாம்பார் பொடி
1 சின்ன நெல்லிக்காய்
   அளவு                                          புளி
1                                                        பெரிய வெங்காயம்
10 இலைகள்                                கருவேப்பிலை
3 Tsp                                                  நல்லெண்ணெய்
1 Tsp                                                  கடுகு
2 Tbsp                                                தேங்காய் துருவல்

செய்முறை :
முதல் நாளே வெந்தயத்தை கழுவிவிட்டு, ஒரு கிண்ணத்தில்  1/2 கப் தண்ணீர் விட்டு  ஊறவைக்கவும்.
மறுநாள் காலை  தண்ணீரை வேறு பாத்திரத்தில் வடித்து தனியாக வைக்கவும்.
வெந்தயம் இருக்கும் கிண்ணத்தை   மூடியினால் மூடி வைக்கவும்.
இப்படி செய்வதால் மதியம் நாம் சமைக்கும் போது முளை கட்டியிருக்கும்.

புளியை மிதமான சுடு தண்ணீரில் ஊற வைக்கவும்.
வெங்காயத்தை உரித்து தோல் நீக்கி  அறிந்து கொள்ளவும்.
கருவேப்பிலையை கழுவி வைக்கவும்.


தேங்காய் துருவலிலிருந்து இளம் சூடான நீர் சிறிது சேர்த்து கையினால் பிசைந்து பால் எடுக்கவும்.
முதல் பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்து தனியே வைக்கவும்.
இரண்டாம் முறை மூன்றாம் முறை எடுக்கும் பாலை தனியே வேறொரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
புளியை கரைத்து சாறு எடுத்து தனியே வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் மிதமான தீயின் மேல் வைத்து சூடேற்றவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
பிறகு கருவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது நிறம் மாறியதும் வெந்தயத்தை இலேசாக வதக்கவும்.


இப்போது குழம்பு பொடிசாம்பார் பொடி, மல்லித்தூள் மற்றும் மஞ்சத்தூள் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி தனியாக எடுத்து வைத்துள்ள வெந்தயம் ஊறவைத்த தண்ணீரை சேர்க்கவும்.
2 நிமிடம் கொதிக்க விடவும்.


புளிதண்ணீரை சேர்க்கவும்.
தேவையான உப்பு சேர்த்து கலக்கி விடவும்.
5 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் முறை எடுத்த பாலை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.


பால் சேர்த்த பிறகு தீயை நன்கு குறைத்து விடவும்.
கடைசியாக முதல் முறை எடுத்த தேங்காய் பால் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்.


அடுப்பை நிறுத்தி விட்டு பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

பருப்பு சாதம், கீரை மசியல் போட்டு பிசைந்த சாதம் மற்றும்  பொடிசேர்த்து பிசைந்த சாதத்திற்கு தொட்டு கொண்டு சாப்பிட  ஏற்ற குழம்பாகும்.
சூடான சாதத்தின் மேல் ஒரு கரண்டி குழம்பு ஊற்றி 1 Tsp நல்லெண்ணெய்
 சேர்த்து பிசைந்து விருப்பமான துவட்டலுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.