Search This Blog

Saturday, January 24, 2015

Potato-Idly-Sambar

#உருளைகிழங்குஇட்லிசாம்பார் :


உருளைகிழங்கு இட்லி சாம்பார்


தேவையான பொருட்கள் :
1/2 கப்பயத்தம் பருப்பு
சிறு நெல்லி அளவுபுளி, வெந்நீரில் ஊற வைக்கவும்
1 பெரியதுஉருளை கிழங்கு
1/2குடைமிளகாய், பெரிய துண்டுகளாக வெட்டவும் 
2பச்சை மிளகாய், நீளவாக்கில் கீறி வைக்கவும்
1 வெங்காயம், வெட்டி வைக்கவும்
சிறிதளவுகொத்தமல்லி தழை 
10 - 15கருவேப்பிலை 
1 சிறியதுதக்காளி, நறுக்கி வைக்கவும்
2 Tspமணத்தக்காளி விதை [ optional ]
தேவையான பொடிகள் :
2 Tspசாம்பார் மிளகாய் தூள்
1 Tspகொத்தமல்லி தூள்
1 pinchமஞ்சத்தூள்
1 Tspஅரைத்து விட்ட குழம்பு தூள் [ optional ]
1/2 Tspசிகப்பு மிளகாய் தூள் [ optional ]
2 Tspஉப்பு [ adjust ]
தாளிக்க :
1 Tspகடுகு
1/4 Tspபெருங்கயத்தூள்
2 Tspஎண்ணெய்

செய்முறை :
உருளை கிழங்கை நன்கு கழுவி துண்டுகளாக்கவும்.
குக்கரில் 1 கப் தண்ணீர் மற்றும் 1/2 Tsp உப்பு சேர்க்கவும்.
உருளை கிழங்கை குக்கரில் போட்டு மூடி வெயிட் பொருத்தி 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
ஆவி அடங்கியவுடன் திறந்து கிழங்கை வெளியே எடுத்து தோலுரித்து வைக்கவும்.

மறுபடியும் குக்கரில் பருப்பை கழுவி சேர்க்கவும்.
1 கப் தண்ணீர் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சத்தூள் சேர்த்து மூடி வேக வைக்கவும்.
ஒரு விசில் வந்தவுடன் தீயை குறைத்து 5 நிமிடங்கள் வேக விடவும்.
ஆவி அடங்கியதும் எடுத்து தனியே வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகை வெடிக்க விட்டபின்னர் கறுவேப்பிலை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வெளிர் நிறமாக மாறியதும் தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
பிறகு குடை மிளகாய் துண்டுகளையும் மணத்தக்காளி விதைகளையும் [ இருந்தால் ] சேர்த்து வதக்கவும்.
குடை மிளகாய் நன்கு வதங்கிய பின்னர் சாம்பார் மிளகாய் தூள், மஞ்சத்தூள், கொத்தமல்லித்தூள் சேர்த்து ஒரு வதக்கு வதக்கிய பின் வேக வைத்துள்ள பருப்பை சேர்க்கவும். 3/4 கப் தண்ணீரையும் சேர்க்கவும்.
உருளை கிழங்கை கைகளால் பிட்டு போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
1/2 கப் தண்ணீரில் புளியை கரைத்து  வடி கட்டி கொதித்துக்கொண்டிருக்கும் சாம்பாரில் சேர்க்கவும்.
புளியின் பச்சை வாசனை போகும் வரை கொதித்தால் போதும்.
கடைசியாக அரைத்து விட்ட குழம்பு தூள் சேர்த்து மூன்று நிமிடங்கள் கொதிக்க வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சுவையான உருளை கிழங்கு சாம்பார் தயார்.

உருளைகிழங்கு இட்லி சாம்பார்
உருளைகிழங்கு இட்லி சாம்பார் உருளைகிழங்கு இட்லி சாம்பார்

ஒரு தட்டில் இட்லியை எடுத்து அதன் மேல் சாம்பாரை ஊற்றவும்.
ஒரு தேக்கரண்டி எண்ணெய் விடவும். சுவைக்கவும்.
ம்ம்... ஆஹா!! என்ன சுவை!! .....


Idly served with potato sambar












No comments:

Post a Comment