Search This Blog

Showing posts with label sambar. Show all posts
Showing posts with label sambar. Show all posts

Sunday, November 1, 2020

Sambar_Kuzhambu_Varieties

 சாம்பார் வகைகள் மற்றும் குழம்பு வகைகள் :

வெங்காய சாம்பார்
வெங்காய சாம்பார்

பலவிதமான சாம்பார் மற்றும் குழம்பு வகைகளின் இணைப்புகளை இங்கே தொகுத்துள்ளேன்.


சாம்பார் தூள் வகைகள்
சாம்பார் மிளகாய் தூள்
சாம்பார் மிளகாய் தூள்
அரைத்துவிட்ட குழம்புத்தூள்
அரைத்துவிட்ட குழம்புத்தூள்


சாம்பார் வகைகள்
கத்தரிக்காய் இட்லி சாம்பார்
கத்தரிக்காய் இட்லி சாம்பார்
வெங்காய சாம்பார்
வெங்காய சாம்பார்
அதலைக்காய் சாம்பார்
அதலைக்காய் சாம்பார்
தக்காளி சாம்பார் [ சட்னி ]
தக்காளி சாம்பார் [ சட்னி ]
தக்காளி சாம்பார் 1
தக்காளி சாம்பார் 1
உருளைகிழங்கு இட்லி சாம்பார்
உருளைகிழங்கு இட்லி சாம்பார்
நூல்கோல் பப்பாளி சாம்பார்
"நூல்கோல் பப்பாளி சாம்பார்"
தக்காளிகாய் சாம்பார்
தக்காளிகாய் சாம்பார்
உருளைகிழங்கு சாம்பார்
உருளைகிழங்கு சாம்பார்
முருங்கைக்காய் பலாகொட்டை சாம்பார்
முருங்கைக்காய் பலாகொட்டை சாம்பார்
குடை மிளகாய் சாம்பார்
குடை மிளகாய் சாம்பார்
முருங்கைக்காய் டர்னிப் சாம்பார்
முருங்கைக்காய் டர்னிப் சாம்பார்
முருங்கைக்காய் முள்ளங்கி சாம்பார்
முருங்கைக்காய் முள்ளங்கி சாம்பார்
விளாம்பழம் சாம்பார்
விளாம்பழம் சாம்பார்
கத்தரிக்காய் சட்னி
கத்தரிக்காய் சட்னி
கருணைக்கிழங்குசட்னிி
கருணைக்கிழங்குசட்னி


குழம்பு வகைகள்
வாழைப்பூ குழம்பு
வாழைப்பூ குழம்பு
வெண்டைக்காய் புளிகுழம்பு
வெண்டைக்காய் புளிகுழம்பு
சேனைகிழங்குவத்தக்குழம்பு
சேனைகிழங்குவத்தக்குழம்பு
மணத்தக்காளிவத்தக்குழம்பு
மணத்தக்காளிவத்தக்குழம்பு
மிளகு குழம்பு
மிளகு குழம்பு
வெந்தய குழம்பு
வெந்தய குழம்பு
வத்தக்குழம்பு
வத்தக்குழம்பு
சுண்டைக்காய் வத்தக்குழம்பு
சுண்டைக்காய் வத்தக்குழம்பு
வெந்தய பச்சடி
வெந்தய பச்சடி
வாழைப்பூ மிளகு குழம்பு
வாழைப்பூ மிளகு குழம்பு


மோர்க்குழம்பு வகைகள்
மோர்க்குழம்பு
மோர்க்குழம்பு
பூசணிக்காய் மோர்க்குழம்பு
பூசணிக்காய் மோர்க்குழம்ப
வாழைப்பூ வடை மோர்க்குழம்பு
வாழைப்பூ வடை மோர்க்குழம்பு







Saturday, December 1, 2018

Athalaikai-Sambar

#அதலைக்காய்சாம்பார் : #அதலைக்காய், பாகற்காய் போல கசப்பு சுவை கொண்டது. ஆனால் உருவத்தில் மிக மிகச் சிறியது. #அதலைக்காய் கொண்டு அதலைக்காய் மசாலா கறி செய்து சுவைத்தோம். இப்போது அதலைக்காய் உபயோகித்து சாம்பார் செய்யும் முறையை காண்போம்.

Tiny BitterGourd Sambar


தேவையானவை :
1/3 கப்துவரம் பருப்பு வேகவைத்தது
நெல்லி அளவுபுளி, ஊறவைக்கவும்
1 சிட்டிகைமஞ்சத்தூள்
3 Tspசாம்பார் மிளகாய்த்தூள்
1 Tspகொத்தமல்லித்தூள் 
சிறிதளவுபரங்கிக்காய், துண்டுகளாக்கவும்.
1முருங்கைக்காய், வெட்டி வைக்கவும்.
20 - 25அதலைக்காய், 2 ( அ ) 4 ஆக வெட்டவும்.
7 - 8சின்ன வெங்காயம் உரித்து வைக்கவும் 
2பச்சை மிளகாய், நீளவாக்கில் அரியவும்.
10 - 15கருவேப்பிலை
சின்ன துண்டுபெருங்காயம்
1 Tspகடலை எண்ணெய்
1/2 Tspகடுகு
1 1/2 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
2 Tspகொத்தமல்லி தழை

குறிப்பு : உங்களுக்கு பிடித்தமான சாம்பாருக்கு உகந்த வேறு காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

செய்முறை :
குக்கரில் வேக வைத்த பருப்பை எடுத்துக்கொள்ளவும்.
அதனுடன் மஞ்சத்தூள், கொத்தமல்லி தூள், சாம்பார் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை போட்டு 3/4 கப் தண்ணீர் விட்டு நன்கு கலந்து விடவும்.
அதனுடன் வெட்டிவைத்துள்ள காய்கறிகள், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும்.
ஊறவைத்துள்ள புளியை 3/4 கப் தண்ணீர் விட்டு கரைத்து ஊற்றவும்.
அடுப்பின் மீது அதிக அளவு தீயில் வைத்து மூடி போட்டு வெயிட் வைத்து சூடாக்கவும்.
இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
குக்கரின் ஆவி அடங்கியவுடன் திறந்து பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.
சுவையான அதலைக்காய் சாம்பார் தயார்.
சூடான சாதத்தின் மீது ஒரு கரண்டி அதலைக்காய் சாம்பார் விட்டு நன்கு பிசைந்து பிடித்தமான பொரியல் அல்லது காரக்கறியுடன் சுவைக்கவும்.

Tiny BitterGourd Sambar








மேலும் சில அருமையான சமையல் குறிப்புகள் 
முயற்சி செய்து பார்க்க
காலிப்ளவர் உருளை மசாலா கறி
காலிப்ளவர் உருளை மசாலா கறி
பூசணிக்காய் மோர்க்குழம்பு
பூசணிக்காய் மோர்க்குழம்பு
வெந்தய பச்சடி
வெந்தய பச்சடி
வாழைப்பூ குழம்பு
வாழைப்பூ குழம்பு
கொள்ளு சுண்டல்
கொள்ளு
சுண்டல்


Monday, February 2, 2015

Noolkhol-Papaya-Sambar

#நூல்கோல்பப்பாளிசாம்பார் : எனது அண்டை வீட்டில் வசிக்கும் தோழி ஒருவர் அவர் இல்லத்தில் விளைந்த நூல்கோலை கொடுத்தார். பப்பாளி காய் ஒன்றும் வீட்டில் இருந்தது. இரண்டையும் சேர்த்து சாம்பார் செய்ய முடிவு செய்தேன்.
பப்பாளிகாயின் பலன்களை பற்றி சென்ற பதிவான பப்பாளி காரட் சாலட்   சமையல் குறிப்பில் பார்த்தோம். பச்சையாக சாலட் சாப்பிட விரும்பாதவர்கள் சாம்பார் மற்றும் கூட்டு போன்ற உணவு வகைகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
இனி செய்முறையை காண்போம்.

நூல்கோல் பப்பாளி சாம்பார்

தேவையான பொருட்கள் :
வேகவைத்த துவரம் பருப்பு                  : 1/3 Tbsp
நூல்கோல்                                                      : 1
பப்பாளிக்காய்  துண்டுகள்                       : 1/2 கப்
புளி                                                             : 1 சின்ன நெல்லிக்காய் அளவு உருண்டை
சின்ன வெங்காயம்                                : 8
பச்சை மிளகாய்                                      : 2
கருவேப்பிலை                                        : 10
கொத்தமல்லி கீரை                                : சிறிதளவு
சாம்பார் பவுடர்                                       : 2 Tsp
மஞ்சத்தூள்                                               : 1 சிட்டிகை
மல்லித்தூள்                                             : 1 Tsp
உப்பு                                                             : 2 Tsp

தாளிக்க :

எண்ணெய்                                                 : 1/2 Tsp
கடுகு                                                           : 1/2 Tsp
பெருங்காயம்                                            : சிறு துண்டு

செய்முறை :
சின்ன வெங்காயத்தின் தோலை உரித்து ஒன்றிரண்டாக அறிந்துகொள்ளவும்.
பச்சை மிளகாயை நீள  வாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
கருவேப்பிலை , கொத்தமல்லி ஆகியவற்றை தனி தனியாக கழுவி ஆற வைக்கவும்.
நூல்கோலின்  தோலை நீக்கி ஒரே அளவு துண்டுகளாக அறிந்து கொள்ளவும்.

குக்கரில்  3/4  Cup நீர் சேர்க்கவும்.
அதில் நூல்கோலை 1 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும்.
இறக்கியவுடன் ஆவியை உடனே வெளியேற்றவும்.
பருப்பை கரண்டியால் நன்கு மசித்து சேர்க்கவும்.
மறுபடியும் அடுப்பில் ஏற்றி சாம்பார் பவுடர் , மல்லி பொடி, மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். குறைந்த தீயில் கொதிக்கவிடவும்.


மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு முதலில் கடுகை வெடிக்க விடவும்.
பின் பெருங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய், மற்றும் வெங்காயத்தை வரிசையாக போட்டு சிறிது வதக்கவும்.
வெங்காய வாசனை வந்தவுடன் கொதித்துகொண்டிருக்கும் சாம்பாரில்  கொட்டவும்.
வெட்டிவைத்துள்ள பப்பாளிகாயை சேர்க்கவும்.
குக்கரை மூடி வெயிட் வைத்து 1 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

நூல்கோல் பப்பாளி சாம்பார்

ஆவி நன்கு அடங்கியவுடன் குக்கரை திறந்து வேறொரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

கொத்தமல்லி தழையினால் அலங்கரிக்கவும்.
சுவையான சாம்பார் தயார்.

நூல்கோல் பப்பாளி சாம்பார்


சூடான சாதத்தில் ஒரு கரண்டி சாம்பார் விட்டு பிசைந்து இஷ்டமான துவட்டலுடன் சாப்பிட்டால் ஆ.. ஆஹா... அதுவல்லவோ பேரானந்தம்!!

சாம்பாருடன் ஒன்றிரண்டு துளிகள் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் இன்னும் சுவையோ சுவை...!!

பருப்பு சாதத்திற்கு தொட்டு கொண்டு சாப்பிடலாம்.
சாதத்துடன் பொடி சேர்த்து பிசைந்து சாப்பிடும் போதும் சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.