#பப்பாளிகாரட்சாலட் : ஓரிரு வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல், டெங்கு, போன்றவை அதிகமாக பரவிக்கொண்டிருந்த போது பப்பாளி மரத்தின் இலையை உபயோகித்து பானம் செய்து அருந்துவதால் நோய் வராமலும் நோய் வந்தவர்கள் அதன் தாக்கத்தை குறைக்கலாம் என தொலை காட்சியில் தினமும் செய்தி ஒளி பரப்பிக் கொண்டிருந்தார்கள். எனது தம்பியின் மகனும் இந்த காய்ச்சல் வந்த போது பப்பாளி இலை சாறை தினமும் அருந்தி குணமடைந்தது நன்கு நினைவில் நிற்கிறது.
பப்பாளியில் நிறைந்திருக்கும் பப்பெயின் என்ற என்ஸைம் நோய் எதிர்க்கும் தன்மையும் உணவு செரிமானத்திற்கும் உதவி புரிகிறது. இந்த என்ஸைம் பழமாக மாறும் போது அதன் அளவு குறைந்து விடுகிறது. அதனால் பப்பாளி காயை சாப்பிடுவதால் முழுமையான மருத்துவ பலன்கள் கிடைக்கிறது. மலச்சிக்கலை தவிர்க்க பப்பாளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
சில தினங்களுக்கு முன்பு பப்பாளி காய் சூப் செய்யும் முறையை பார்த்தோம்.
இங்கு #பப்பாளிக்காய் மற்றும் காரட் ஆகியவற்றை உபயோகித்து ஒரு எளிமையான சாலட் செய்யும் முறையை காணலாம்.
செய்முறை :
பப்பாளியில் நிறைந்திருக்கும் பப்பெயின் என்ற என்ஸைம் நோய் எதிர்க்கும் தன்மையும் உணவு செரிமானத்திற்கும் உதவி புரிகிறது. இந்த என்ஸைம் பழமாக மாறும் போது அதன் அளவு குறைந்து விடுகிறது. அதனால் பப்பாளி காயை சாப்பிடுவதால் முழுமையான மருத்துவ பலன்கள் கிடைக்கிறது. மலச்சிக்கலை தவிர்க்க பப்பாளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
சில தினங்களுக்கு முன்பு பப்பாளி காய் சூப் செய்யும் முறையை பார்த்தோம்.
இங்கு #பப்பாளிக்காய் மற்றும் காரட் ஆகியவற்றை உபயோகித்து ஒரு எளிமையான சாலட் செய்யும் முறையை காணலாம்.
| தேவையான பொருட்கள் : | |
|---|---|
| 1 cup | பப்பாளிக்காய் துருவியது |
| 1/4 cup | காரட் துருவியது |
| 1 or 2 | பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிக்கொள்ளவும் [ adjust ] |
| 1 Tsp | கொத்தமல்லி தழை பொடியாக அரிந்தது |
| 1 Tsp | எலுமிச்சை சாறு [ adjust ] |
| 3/4 Tsp | உப்பு [ Adjust ] |
| To Temper : | |
| 1/2 Tsp | கடுகு |
| 1 Tsp | நல்லெண்ணெய் [ til/sesame oil ] |
செய்முறை :
கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் போட்டு நன்கு கலக்கவும்.
எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சரி பார்க்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
கடுகு அனைத்தும் வெடித்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
தாளித்த கடுகை கலந்து வைத்துள்ள சாலட் மேலே கொட்டவும்.
நன்கு கலந்து விட்ட பின்னர் சுவைக்கவும்.
காலை அல்லது மாலை வேளை உணவாக சுவைக்கலாம்.