வலை தலத்தில் முதலில் Fafar என்று Google செய்தேன்.
அப்போது Fafar என்பது Kuttu என அறிந்து கொண்டேன்.
பிறகு kuttu என டைப் செய்து தேடினேன்.
Kuttu என்பது ஆங்கிலத்தில் Buckwheat என அழைக்கபடுகிறது.
தமிழில் என்னவென்று அழைக்கப் படுகிறது என தேடி கண்டுபிடித்தேன்.
தமிழில் பாப்பரை என அழைக்கபடுகிறது. தமிழில் இதை பற்றி எனக்கு அறிந்துகொள்ள எந்த விளக்கமும் கிடைக்க வில்லை. கிடைக்கும் போது இங்கு எழுதுகிறேன்.
| தமிழ் : பாப்பரை ; ஆங்கிலம் : Buckwheat |
To know benefits of Buckwheat .
To know more about Buckwheat.
Buckwheat contains a glucoside called rutin, a phytochemical that strengthens capillary walls. One clinical study showed mixed results in the treatment of chronic venous insufficiency. Dried buckwheat leaves manufactured in Europe under the brand name "Fagorutin" for use as a tisane.
It also contains galloylated propelargonidins and procyanidins.
Buckwheat contains D-chiro-inosital, a component of the secondary messenger pathway for insulin signal transduction found to be deficient in Type II diabetes and polycystic ovary syndrome. It is being studied for use in treating Type II diabetes.
Research on D-chiro-insitol and PCOS has shown promising results.
High protein buckwheat flour is being studied for possible use as a functional ingredient in foods to reduce plasma cholestrol, body fat, and cholestrol gallstones.
Source : Buckwheat
இன்று அதிலிருந்து ஏதாவது செய்து பார்க்கலாம் என காலையில் எடுத்தேன். முதலில் வேக வைத்து பார்ப்போம் என செயலில் இறங்கினேன்.
ஆவி அடங்கியபின் எடுத்து பார்த்தேன் நன்றாக வெந்திருந்தது. ஆனால் கொழ கொழ என்றிருந்தது. அதனால் பொங்கல் செய்யலாம் என முடிவெடுத்தேன்.
வெந்த பாப்பரையுடன் வெந்த பயத்தம் பருப்பு மற்றும் மிளகு சேர்த்து கிளறினேன். நன்றாக இருந்தது.
உடனே மறுபடியும் முறைப்படி பொங்கல் செய்தேன். எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
1/3 கப் பயத்தம் பருப்பு
1/2 கப் பாப்பரை - Buckwheat ( kuttu ஹிந்தியில் )
1 1/2 Tsp சீரகம்
1 Tsp மிளகு
3 பூண்டு பற்கள்
சிறிய துண்டு இஞ்சி ( விருப்பமானால் )
1/2 Tsp உப்பு
8 கருவேப்பிலை
1/4 Tsp மஞ்சத்தூள்
தாளிக்க :
1 Tsp சீரகம்
1/2 Tsp மிளகு
5 முந்திரி பருப்பு
2 Tsp நெய்
செய்முறை :
பாப்பரையையும் பருப்பையும் கழுவி குக்கரில் எடுத்துக்கொள்ளவும்.
2 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து ஒரு கரண்டியினால் கலக்கவும்.
குக்கரை மூடி வெயிட்டை பொருத்தவும்.
அடுப்பில் அதிக தீயில் 3 விசில் வரை வேக விடவும்.
மேலும் 5 நிமிடங்கள் சிறிய தீயில் வேக வைத்து இறக்கவும்.
ஆவி அடங்கியவுடன் மூடியை திறந்து கரண்டியினால் கிண்டவும்.
எண்ணெய் சட்டியை அடுப்பில் மிதமான தீயில் வைத்து நெய் ஊற்றி முதலில் முந்திரி துண்டுகளை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு சீரகம், மிளகு மற்றும் கருவப்பிலை வறுத்து எடுக்கவும்.
வறுத்த பொருட்களை பொங்கலுடன் சேர்த்து கிண்டவும்.
சூடான சுவையான பொங்கல் தயார்.
பரிமாறும் தட்டில் இட்டு அதன் மேல் நெய் விட்டு துவையலுடன் பரிமாறவும்.