Search This Blog

Wednesday, October 15, 2014

Kothamally-Murungaikeerai-Podi

#கொத்தமல்லிமுருங்கைக்கீரைபொடி : #முருங்கைகீரை யில் நிறைந்திருக்கும் வைட்டமின் A சத்து காரட்டில் உள்ளதை விட நான்கு மடங்கு அதிக அளவில் நிரம்பி இருக்கிறது. பாலில் உள்ள கால்ஷியத்தை போல நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. ஆரஞ்சைக் காட்டிலும் மிக மிக அதிகமான வைட்டமின் C அடங்கியிருக்கிறது. இத்தகைய அருமையான கீரையை எவ்வாறேனும் உணவில் சேர்த்துக்கொள்வது மிக மிக அவசியம்.
ஆனால் குழைந்தகளோ கீரை என்றாலே முகத்தை தூக்கி வைத்துக்கொள்வார்கள். ஏன் சில பெரியவர்களும்தான்.
முருங்கைக்கீரையை வேறு எந்த வகையில் உணவில் சேர்க்கலாம் என யோசிக்கிறீர்களா? இதோ சொல்கிறேன் கேளுங்கள்!!

முருங்கைகீரையை பறித்து நன்கு கழுவி ஒரு துணியின் மீது பரப்பி நிழலில் காய வைக்கவும். அல்லது வீட்டின் உட்புறம் ஒரு ஓரத்தில் காய விடவும்.
கழுவிய நீரை துணி உறிஞ்சி விடும்.
பிறகு ஒரு தட்டில் எடுத்து வைத்து மூன்று நான்கு நாட்களுக்கு நிழலிலோ அல்லது வீட்டின் உட்புறம் காய விடவும்.
கலகலவென காய்ந்தவுடன் ஒரு காற்றுப் புகா பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
தேவையான போது பயன் படுத்திக்கொள்ளலாம்.
இப்போது இந்த காய்ந்த முருங்கை கீரை கொண்டு கொத்தமல்லியுடன் பொடி எப்படி செய்யலாம் என காணலாம்.

கொத்தமல்லி முருங்கைக்கீரை பொடி


தேவையான பொருட்கள் :
1/2 கப்கொத்தமல்லி விதை
1/2 கப்முருங்கை கீரை காய்ந்தது
3 or 4 சிகப்பு மிளகாய் [adjust]
1 Tsp உப்பு [adjust]
3 or 4 பற்கள் பூண்டு 
1/2 Tspஎண்ணெய் 

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கவும்.
எண்ணெய் விட்டு கொத்தமல்லி விதையை கை விடாமல் வறுக்கவும்.


பாதி வறுபட்டதும் மிளகாயையும் சேர்த்து வறுக்கவும்.
நன்கு வாசனை வரும் வரை கொத்தமல்லியை வறுத்தெடுக்கவும்.


உப்பையும் அதன் நீர் சத்தை போக்க சிறிது வறுத்தெடுக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு முருங்கை கீரையை வாணலியில் சேர்க்கவும்.
அதன் சூட்டில் சில மணி துளிகள் வைத்திருக்கவும்.


சூடு ஆறிய பிறகு மிக்ஸியில் பூண்டு மற்றும் முருங்கை கீரை  நீங்கலாக மற்ற அனைத்தையும் சேர்த்து அரைக்கவும்.


கொரகொரவென அரைத்த பிறகு கீரையை சேர்த்து நன்றாக பொடிக்கவும்.


கடைசியாக பூண்டை உரிக்காமல்  சேர்த்து இரண்டு மூன்று சுற்று சுற்றி மிக்சியிலிருந்து வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.

கொத்தமல்லி முருங்கைக்கீரை பொடி கொத்தமல்லி முருங்கைக்கீரை பொடி

பாட்டிலில் அடைத்து வைத்து உபயோகப்படுத்தவும்.


சூடான சாதத்தில் இரண்டு தேக்கரண்டி பொடியை போட்டு ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு முருங்கைக்காய் சாம்பாருடன் சாப்பிட்டால்.... ஆஹ்.. ஆஹா அருமையாக இருக்கும்.
செய்து சாப்பிட்டுத்தான் பாருங்களேன்!!











மேலும் சில அத்தியாவசியமான பொடி வகைகள் 
சாம்பார் பொடி
சாம்பார் 
பொடி
மிளகுப் பொடி
மிளகுப்
பொடி
மதராஸ் ரசப் பொடி
மதராஸ்
ரசப் 
பொடி
இட்லி மிளகாய்ப் பொடி
 இட்லி மிளகாய்ப் 
பொடி
ஆளி விதை சேர்த்த இட்லி மிளகாய்ப் பொடி
ஆளி விதை சேர்த்த இட்லி மிளகாய்ப் பொடி






No comments:

Post a Comment