Search This Blog

Tuesday, December 27, 2016

Chowchow-Adai

#சௌசௌஅடை : #அடை செய்வதற்காக மாவு தயார் செய்துவிட்டு சுரைக்காய் வாங்குவதற்காக காய்கறி கடைக்கு சென்றேன். ஆனால் கடையில் மிகவும் பெரிய அளவு சுரைக்காயே இருந்தது. அவ்வளவு பெரிய காய் அடை செய்ய தேவைப்படவில்லை. அதனால் வேறு என்னென்ன காய்கள் கடையில் இருக்கிறதென பார்த்தேன். #சௌசௌ கண்ணில் பட்டது. அதனை வாங்கி வந்து பொடிப்பொடியாக நறுக்கி மாவில் சேர்த்து அடை செய்தேன். மிகவும் பிரமாதமாக இருந்தது. யாராலுமே கண்டுபிடிக்க இயலவில்லை!! அந்த அற்புத சமையல் குறிப்பு இதோ உங்களுக்காக..

சுமார் 4 - 5 அடைகள் தயாரிக்கலாம்.

Chowchow Adai


தேவையானவை :
ஊற வைக்க :
1/4 கப்புழுங்கரிசி [ இட்லி அரிசி ]
1/4 கப்பச்சரிசி
1/4 கப்துவரம் பருப்பு
1/4 கப்கடலை பருப்பு
அரைக்க :
1/2 Tspபெருங்காயத்தூள்
1 Tspசோம்பு
1 Tspசீரகம்
1/2 அங்குலஇஞ்சி துண்டு
2 - 3சிகப்பு மிளகாய் [ அட்ஜஸ்ட் ]
1 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
மாவுடன் சேர்க்க :
1 சௌ சௌ, தோல் நீக்கி பொடியாக நறுக்கவும் 
1 நடுத்தரவெங்காயம், பொடியாக நறுக்கவும்
4 Tspகொத்தமல்லி தழை நறுக்கியது
10 - 12கருவேப்பிலை, கிள்ளி வைக்கவும்

அடை சுட தேவையான நல்லெண்ணெய்
அடை மேலே தடவ தேவையான நெய் அல்லது வெண்ணெய்.

செய்முறை :
அரிசி இரண்டையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து இரு முறை கழுவி விட்டு ஊற வைக்கவும்.
பருப்பு அனைத்தையும் ஒன்றாக வேறொரு பாத்திரத்தில் எடுத்து கழுவிய பின்னர்  ஊறவைக்கவும்.
சுமார் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

2 மணி நேரம் கழித்து கொடுக்கப்பட்டுள்ள அரைக்க தேவையான மற்ற பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும்.
பின்னர் அதனுடன் அரிசியை சேர்த்து அரைத்து எடுத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வைக்கவும்.
பின்னர் பருப்பு ஊறவைத்த தண்ணீர்  முழுவதும் வடித்து விட்டு மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்து முன்பு அரைத்து வைத்துள்ள அரிசியுடன் சேர்க்கவும்.
நன்கு கலக்கி விடவும்.
அவற்றுடன் மாவுடன் சேர்க்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கலக்கவும். உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.
அடுப்பை  பற்ற வைத்து  கல்லை சூடாக்கவும்.
சூடானதும் எண்ணெய் சுற்றி விட்டு மாவை கரண்டியால் எடுத்து தோசை கல்லின் நடுவே வைத்து சமமாக பரப்பவும்.
அடை என்பதால் சிறிது கனமாக இருக்க வேண்டும்.
மேலேயும் சுற்றியும்  எண்ணெய் விட்டு ஒரு மூடியால் மூடி 2 அ 3 நிமிடங்கள் வேக விடவும்.
பின்னர் திறந்து பார்க்கவும்.
ஓரங்கள் சிவந்தவுடன் திருப்பிப் போட்டு வேக விடவும்.
இரு  பக்கமும் நன்கு  சிவந்த வுடன் எடுத்து தட்டில் வைக்கவும்.

இதே போல ஒவ்வொன்றாக சுட்டு எடுக்கவும்.
சுவையான சௌசௌ அடை தயார்.
அடையை தட்டில் வைத்து மேலே வெண்ணெய் அல்லது நெய் தடவி சூடாக  அவியல் வைத்து பரிமாறவும்.

Chowchow Adai Chowchow Adai





முயற்சி செய்து பார்க்க மேலும் சில சமையல் குறிப்புகள் 

வாழைப்பூ பருப்பு உருண்டை
வாழைப்பூபசலைஅடை
பெசரட்டு
பெசரட்டு
அடை
அடை
முடக்கத்தான் கீரை தோசை
முடக்கத்தான் தோசை
கொடி பசலை கீரை தோசை
பசலை கீரை தோசை






No comments:

Post a Comment