Search This Blog

Showing posts with label adai. Show all posts
Showing posts with label adai. Show all posts

Sunday, July 9, 2017

Adai-Varieties

#அடை வகைகள் : தமிழ் மக்களுக்கு பிடித்தமான புரத சத்து நிறைந்த ஒரு பலகாரம்தான் அடை. புழுங்கரிசி [ இட்லி அரிசி ], பச்சரிசி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, பயத்தம் பருப்பு ஆகியவற்றை குறிப்பிட்ட விகிதத்தில் ஊறவைத்து அரைத்து எடுத்து வைக்க வேண்டும். அரைத்த மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அரைத்த மாவில் பொடியாக அரிந்த வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை தாராளமாக போட்டு கலக்கி சூடான தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டெடுத்தால் அடை தயார். அடை தோசையைப்போல் மெல்லியதாக இல்லாமல் சிறிது தடிமனாக சுட்டெடுக்க வேண்டும்.

அடை சிறிது தடிமனாக பரப்பி சுடப்படுவதால் தோசையை விட வேக சிறிது அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.

தோசையைப்போல் அல்லாமல் சிறிது அதிகமாக அடையின் மீதும் சுற்றியும் எண்ணெய் விட்டு சுட்டெக்க வேண்டும்.

இதைத் தவிர மெல்லியதாக வெட்டிய சுரைக்காய், பரங்கிக்காய், சௌசௌ முதலியவற்றையும், முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை போன்ற கீரை வகைகளையும் சேர்த்தும் அடை செய்யலாம்.
துரித கதியில் அடை செய்ய அரிசிமாவு, கடலை மாவு, பயத்தம் மாவு போன்ற இன்ன பிற உலர்ந்த மாவு வகைகளை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து தண்ணீர் விட்டு கலக்கி மேற்சொன்ன காய்கறிகள் அல்லது கீரை கொண்டும் அடை செய்யலாம்.
அடையை கல்லிலிருந்து சூடாக எடுத்து தட்டில் இட்டு தாராளமாக நெய்யை அடையின் மீது பரப்பி அவியல் அல்லது தேங்காய் சட்னியுடன் சுவைத்தால் அற்புதமாக இருக்கும்.
அடையை சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும்.
அடை வெல்லமும் சுவையான இணைகள்.
இது எதுவுமே இல்லாமல் அப்படியே சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.

இங்கு அடை வகைகளின் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. இணைப்பை அழுத்தி பதிவை படித்து பின் செய்து சுவைத்து மகிழவும்.


அடை
அடை
சைவ ஆம்லெட்
சைவ ஆம்லெட்
அமராந்த் அடை
அமராந்த் அடை
கம்பு காலிப்ளவர் அடை
கம்பு காலிப்ளவர் அடை
கேழ்வரகு அடை
கேழ்வரகு அடை
பரங்கிக்காய் அடை
பரங்கிக்காய் அடை
பெசரட்டு [ பயத்தம்பருப்பு அடை ]
பெசரட்டு [ பயத்தம்பருப்பு அடை ]
சிறுபயறு பெசரட்டு
சிறுபயறு பெசரட்டு
வாழைப்பூ பசலை அடை
வாழைப்பூ பசலை அடை
வாழைப்பழ இனிப்பு அடை
வாழைப்பழ இனிப்பு அடை
சௌசௌ அடை
சௌசௌ அடை






அடைக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட சட்னி வகைகள் மற்றும் சாம்பார் / குழம்பு வகைகள் ஆகியவற்றிற்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

தொட்டுக்க




Tuesday, December 27, 2016

Chowchow-Adai

#சௌசௌஅடை : #அடை செய்வதற்காக மாவு தயார் செய்துவிட்டு சுரைக்காய் வாங்குவதற்காக காய்கறி கடைக்கு சென்றேன். ஆனால் கடையில் மிகவும் பெரிய அளவு சுரைக்காயே இருந்தது. அவ்வளவு பெரிய காய் அடை செய்ய தேவைப்படவில்லை. அதனால் வேறு என்னென்ன காய்கள் கடையில் இருக்கிறதென பார்த்தேன். #சௌசௌ கண்ணில் பட்டது. அதனை வாங்கி வந்து பொடிப்பொடியாக நறுக்கி மாவில் சேர்த்து அடை செய்தேன். மிகவும் பிரமாதமாக இருந்தது. யாராலுமே கண்டுபிடிக்க இயலவில்லை!! அந்த அற்புத சமையல் குறிப்பு இதோ உங்களுக்காக..

சுமார் 4 - 5 அடைகள் தயாரிக்கலாம்.

Chowchow Adai


தேவையானவை :
ஊற வைக்க :
1/4 கப்புழுங்கரிசி [ இட்லி அரிசி ]
1/4 கப்பச்சரிசி
1/4 கப்துவரம் பருப்பு
1/4 கப்கடலை பருப்பு
அரைக்க :
1/2 Tspபெருங்காயத்தூள்
1 Tspசோம்பு
1 Tspசீரகம்
1/2 அங்குலஇஞ்சி துண்டு
2 - 3சிகப்பு மிளகாய் [ அட்ஜஸ்ட் ]
1 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
மாவுடன் சேர்க்க :
1 சௌ சௌ, தோல் நீக்கி பொடியாக நறுக்கவும் 
1 நடுத்தரவெங்காயம், பொடியாக நறுக்கவும்
4 Tspகொத்தமல்லி தழை நறுக்கியது
10 - 12கருவேப்பிலை, கிள்ளி வைக்கவும்

அடை சுட தேவையான நல்லெண்ணெய்
அடை மேலே தடவ தேவையான நெய் அல்லது வெண்ணெய்.

செய்முறை :
அரிசி இரண்டையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து இரு முறை கழுவி விட்டு ஊற வைக்கவும்.
பருப்பு அனைத்தையும் ஒன்றாக வேறொரு பாத்திரத்தில் எடுத்து கழுவிய பின்னர்  ஊறவைக்கவும்.
சுமார் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

2 மணி நேரம் கழித்து கொடுக்கப்பட்டுள்ள அரைக்க தேவையான மற்ற பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும்.
பின்னர் அதனுடன் அரிசியை சேர்த்து அரைத்து எடுத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வைக்கவும்.
பின்னர் பருப்பு ஊறவைத்த தண்ணீர்  முழுவதும் வடித்து விட்டு மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்து முன்பு அரைத்து வைத்துள்ள அரிசியுடன் சேர்க்கவும்.
நன்கு கலக்கி விடவும்.
அவற்றுடன் மாவுடன் சேர்க்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கலக்கவும். உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.
அடுப்பை  பற்ற வைத்து  கல்லை சூடாக்கவும்.
சூடானதும் எண்ணெய் சுற்றி விட்டு மாவை கரண்டியால் எடுத்து தோசை கல்லின் நடுவே வைத்து சமமாக பரப்பவும்.
அடை என்பதால் சிறிது கனமாக இருக்க வேண்டும்.
மேலேயும் சுற்றியும்  எண்ணெய் விட்டு ஒரு மூடியால் மூடி 2 அ 3 நிமிடங்கள் வேக விடவும்.
பின்னர் திறந்து பார்க்கவும்.
ஓரங்கள் சிவந்தவுடன் திருப்பிப் போட்டு வேக விடவும்.
இரு  பக்கமும் நன்கு  சிவந்த வுடன் எடுத்து தட்டில் வைக்கவும்.

இதே போல ஒவ்வொன்றாக சுட்டு எடுக்கவும்.
சுவையான சௌசௌ அடை தயார்.
அடையை தட்டில் வைத்து மேலே வெண்ணெய் அல்லது நெய் தடவி சூடாக  அவியல் வைத்து பரிமாறவும்.

Chowchow Adai Chowchow Adai





முயற்சி செய்து பார்க்க மேலும் சில சமையல் குறிப்புகள் 

வாழைப்பூ பருப்பு உருண்டை
வாழைப்பூபசலைஅடை
பெசரட்டு
பெசரட்டு
அடை
அடை
முடக்கத்தான் கீரை தோசை
முடக்கத்தான் தோசை
கொடி பசலை கீரை தோசை
பசலை கீரை தோசை






Friday, July 22, 2016

Pumpkin Pancake

#பரங்கிக்காய்அடை : #அடை என்றதும் அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஊறவைத்து அரைத்து செய்வதுதான் நமக்குத் தெரியும். அதற்கு நாம் முன் கூட்டியே திட்டமிட வேண்டும். அடை செய்வதற்கு பொதுவாக உபயோகிக்கும் காய்கறிகள் அல்லது கீரை கொண்டு அதே போல உடனடியாக செய்யக்கூடிய ஒரு அடை வகையை இங்கு காண்போம். பாரம்பரியமாக செய்யப்படும் அடை போல இல்லாவிடினும் மிகவும் சுவை மிகுந்தது இந்த பரங்கிக்காய் அடை.
இனி செய்வதெப்படி என காணலாம்.





தேவையான பொருட்கள் :

1/2 கப்                                       கடலை மாவு
1/2 கப்                                      கோதுமை மாவு
2 Tbsp                                        அரிசி மாவு
2 Tbsp                                       அமராந்தம் மாவு [ இருந்தால் ]
3/4 Tsp                                      உப்பு [ அட்ஜஸ்ட் ]
1 Tsp                                         சீரகம்

பொடியாக அரிந்து மாவுடன் சேர்க்க வேண்டியவை
12 - 15                                      கறுவேப்பிலை
1/4 கப்                                     கொத்தமல்லி
3/4 கப்                                     பரங்கிக்காய் பிஞ்சு
1/4 கப்                                     வெங்காயம்

அடை சுட்டெடுக்க தேவையான எண்ணெய்.

செய்முறை :
ஒரு அகன்ற பாத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மாவையும் எடுத்துக்கொள்ளவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்.
சீரகம் மற்றும் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து கலக்கி அரை மணி நேரம் வைக்கவும்.
அதற்குள் வெங்காயம், பிஞ்சு பரங்கிக்காய் மற்றும் கொத்தமல்லி தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
அரை மணி நேரம் கழித்து இவை அனைத்தையும் மாவுடன் சேர்த்து கலக்கவும்.
அடுப்பில் நடுத்தர தீயில் தோசை கல்லை சூடாக்கவும்.
மேல் கால் தேக்கரண்டி எண்ணெய் தடவி விடவும்.
கரண்டியில் மாவை எடுத்து கல்லின் நடுவே வைத்து தோசையை விட தடிமனாகவும்  வட்டமாகவும் இருக்கும் படி பரப்பிவிடவும்.
சில துளிகள் எண்ணையை அடையின் மீதும் ஓரங்களிலும் விடவும்.
ஒரு மூடி போட்டு வேக விடவும்.
சில நிமிடங்கள் கழித்து மூடியை எடுத்து விட்டு ஓரங்கள் சிவத்தபின்னர் திருப்பி போடவும்.
இரண்டு பக்கமும் நன்கு சிவக்க வெந்த பின் பரிமாறும் தட்டில் எடுத்து வைக்கவும்.
இதே போல ஒவ்வொரு அடையாக சுட்டெடுக்கவும்.

சூடாக இருக்கும் போதே அடையின் மீது நெய் தடவி தேங்காய் சட்னி [ அ ] தக்காளி சாஸ் தொட்டுக் கொண்டு சுவைக்கலாம்.

தொட்டுக்க ஏதும் இல்லாமலும் சுவைக்கலாம்.
வெல்லம் தொட்டுக்கொண்டு சுவைத்தால் அபாரமாக இருக்கும்.








மேலும் சில தோசை மற்றும் அடை வகைகள் 
முயற்சி செய்து பார்க்க

அடை
அடை
முடக்கத்தான் கீரை தோசை
முடக்கத்தான் தோசை
கொடி பசலை கீரை தோசை
பசலை கீரை தோசை
பெசரட்டு
பெசரட்டு
வாழைப்பூ பசலை அடை
வாழைபூபசலைஅடை



இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.




Thursday, June 4, 2015

Pesarattu

#பெசரட்டு [ #பயத்தம்பருப்புஅடை ] : பெசரட்டு பயத்தம் பருப்பிலிருந்து செய்யப்படும் ஒரு அடையாகும். ஆந்திராவில் மிகவும் பிரபலமான உணவாகும். உணவு விடுதிகளில் பெசரட்டு சுட்டெடுத்து மேலே ரவா உப்புமாவை வைத்து பரிமாறுவார்கள். சூடாக சாப்பிடும் போது மிகவும் ருசியாக இருக்கும்.
மற்ற பருப்பு வகைகளை ஒப்பிடும் போது பயத்தம் பருப்பிலிருந்து கிடைக்கும் புரத சத்து மிக எளிமையாக உடலில் சேருகிறது. மர கறி சாப்பிடுபவர்களுக்கு ஒரு அருமையான புரத சத்து மிக்க உணவாகும். சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற பருப்பு வகையாகும்.

தோலுடன் கூடிய பயத்தம் பருப்பை உபயோகப் படுத்தி பெசரட்டு செய்யப்படுகிறது. பொதுவாக தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளின் தோலுக்கு அடியில் வைட்டமின் B மிகுந்து காணப்படும். தோலை நீக்கும் போது வைட்டமின் B சத்து அழிக்கப்பட்டு விடுகிறது. இங்கு தோலுடன் பயன் படுத்தப் படுவதால் வைட்டமின் B நமக்கு கிடைக்கிறது.
பருப்பை ஊறவைக்க மட்டுமே நேரம் தேவை. ஊறவைத்து அரைத்த பின்னர் உடனேயே தயாரித்து விடலாம். மற்ற பலகாரங்கள் போல புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
இனி செய்முறையை பார்ப்போம்.

சுமார் 4 அல்லது 5 பெசரட்டு செய்யலாம்.

பெசரட்டு [  பயத்தம் பருப்பு அடை ]


தேவையான பொருட்கள் :
1 கப்பயத்தம் பருப்பு தோலுடன்
1 Tbspபச்சரிசி
சிறு துண்டுஇஞ்சி
3/4 Tspஉப்பு
மேலே தூவ :
வெங்காயம், பொடியாக நறுக்கவும்
2 Tbspகொத்தமல்லி தழை
எண்ணெய் பெசரட்டு சுட்டெடுக்க
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் பருப்பு மற்றும் அரிசியை எடுத்து நன்கு கழுவிய பின்னர் தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் மிக்ஸியில் ஊறவைத்த பருப்பு, அரிசி மற்றும் இஞ்சி ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
உப்பு சேர்த்து கலக்கவும்.
அடுப்பில் தோசை கல்லை சூடாக்கி எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை கல்லின் நடுவே வைத்து மெல்லிய வட்ட வடிவமாக பரப்பவும்.
அதன் மீது நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை தூவி எண்ணெய் சொட்டு சொட்டாக பெசரட்டின் மேலும் சுற்றியும் விடவும்.
ஒரு மூடியினால் மூடி வேக விடவும்.
ஓரங்கள் சிவந்த பின்னர் திருப்பி போட்டு வேக விடவும்.
இரண்டு பக்கமும் நன்கு வெந்தவுடன் தட்டில் எடுத்து வைக்கவும்.
இதே போல அடுத்தடுத்து பெசரட்டு சுட்டெடுக்கவும்.

பெசரட்டின் மேல் ரவா உப்புமா தயார் செய்து வைத்து சட்னியுடன் பரிமாறவும்.
ரவா உப்புமா இல்லாமலும் விருப்பமான சட்னியுடன் பெசரட்டை சுவைக்கலாம்.
பெசரட்டு [  பயத்தம் பருப்பு அடை ]
பெசரட்டு [  பயத்தம் பருப்பு அடை ] பெசரட்டு [  பயத்தம் பருப்பு அடை ]







மேலும் சில டிபன் வகைகள் முயற்சி செய்து பார்க்க
தினை தோசை
தினை தோசை
ரவா தோசை
ரவா தோசை
கேழ்வரகு தோசை
கேழ்வரகு தோசை
கம்பு தோசை
கம்பு தோசை
ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை
சிறுபயறு பெசரட்டு
சிறுபயறு பெசரட்டு