Search This Blog

Showing posts with label idly side dish. Show all posts
Showing posts with label idly side dish. Show all posts

Monday, June 9, 2014

Katharikkai Sambar

#கத்தரிக்காய்சாம்பார் : #இட்லிசாம்பார் வகைகளில் #கத்தரிக்காய் #சாம்பார் மிக பிரசித்திபெற்றது. மதிய உணவிற்காக வைக்கப்படும் சாம்பார் பொதுவாக துவரம் பருப்பு உபயோகித்து செய்யப்படும். ஆனால் இட்லிசாம்பாருக்கு பயத்தம் பருப்பு உபயோகப் படுத்தப் படுகிறது. கத்தரிக்காய் இந்த சாம்பாருக்கு தனி மணத்தை கொடுக்கிறது. இனி எவ்வாறு செய்வது என காண்போம்.

கத்தரிக்காய் சாம்பார்


தேவையான பொருட்கள் :


3 Tbsp                                                 பயத்தம் பருப்பு வேகவைத்தது
கோலிகுண்டு அளவு                 புளி, வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்கவும்.
2                                                          கத்தரிக்காய்
1                                                          வெங்காயம், அரிந்து வைக்கவும்
10                                                        சின்ன வெங்காயம், அரிந்து வைக்கவும்.
3                                                          பச்சை மிளகாய், நீள வாக்கில் கீறி வைக்கவும்
12                                                        கறுவேப்பிலை
1                                                          தக்காளி, பொடியாக நறுக்கிகொள்ளவும்.

சேர்க்க வேண்டிய பொடிகள் :
2 Tsp                                                  சாம்பார் பொடி
1 Tsp                                                  மல்லி தூள்
1 Tsp                                                  அரைத்து விட்ட சாம்பார் தூள் 
2 சிட்டிகை                                    மஞ்சத்தூள்
1/4 Tsp                                               சீரகத்தூள்
1 1/2 Tsp                                            உப்பு

தாளிக்க :
1 Tsp                                                  கடுகு
2 Tsp                                                  எண்ணெய்
1/4 Tsp                                               பெருங்காய தூள்

கொத்தமல்லி தழை அலங்கரிக்க

செய்முறை :
அடுப்பில் குக்கரை வைத்து வேகவைத்துள்ள பருப்பை போடவும்.
கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொடிகளையும் சேர்த்து 1 கப் தண்ணீர் விட்டு கலக்கி மிதமான தீயில் கொதிக்க விடவும்.

மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

முதலில் கடுகை வெடிக்க விடவும். வெடித்ததும் பெருங்காய தூளை சேர்த்து கீறி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து சிறிது வதக்கிய பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
சற்றே நிறம் மாறினால் போதும்.

1 சிட்டிகை மஞ்சத்தூள் சேர்த்த பின்னர் வெட்டிவைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.


கடைசியாக தக்காளி சேர்த்து சில மணித்துளிகள் வதக்கிய பின்னர் கொதித்து கொண்டிருக்கும் சாம்பாரில் கொட்டவும்.
புளியை 1 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொதிக்கும் சாம்பாரில் விடவும்.


குக்கரை மூடி வெயிட் பொருத்தவும்.
ஒரு விசில் வரும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.
விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

ஆவி அடங்கியவுடன் திறந்து பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.

கத்தரிக்காய் சாம்பார்

ஒரு குழிவான தட்டில் அல்லது கிண்ணத்தில் இட்லியை வைத்து மேலே 2 கரண்டி சாம்பாரை ஊற்றி 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு சுவைத்தால்.... ம்ம்...ம்.... சுவையே அலாதிதான்!!






Thursday, March 6, 2014

Sigappu Keerai Masiyal

#சிகப்புகீரைமசியல் : நான் தற்போது வசிக்கும் ராய்ப்பூரில் #சிகப்புமுளைகீரை  மிகவும் பிரசித்தம். மிகுந்து சுவையானதும் கூட!! இந்த கீரையை கொண்டு செய்யப்படும் மசியல் மிக்க ருசியுடையது. பொதுவாக கீரையை வேகவைத்து பூண்டு உப்பு சேர்த்து மசிப்பதுதான் வழக்கம். இது சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். இம்முறை கீரை அதிகமாக இருந்ததால் காலை இட்லியுடன் தொட்டு கொண்டு சாப்பிட கீழ்கண்ட முறையை பின்ப்பற்றி செய்தேன். மிக அருமையாக இருந்தது.

சிகப்பு கீரை மசியல்

தேவையான பொருட்கள் :

1 கப்                                      சிகப்பு முளை கீரை, கழுவி பொடியாக அரிந்தது
12                                            சின்ன வெங்காயம், ஒன்றிரண்டாக அரியவும்
2 மத்திய அளவு                தக்காளி நாட்டு வகை, இரண்டாக வெட்டியது.
1 அ 2                                     சிகப்பு மிளகாய்
1/2 கப்                                   துவரம் பருப்பு வேக வைத்தது
1 Tsp                                      உப்பு [ அட்ஜஸ்ட் ]
3 Tsp                                      மணத்தக்காளி [ இருந்தால் ]

தாளிக்க :
1/2 Tsp                                   கடுகு
1 Tsp                                      உளுத்தம் பருப்பு
1 அ 2                                    சிகப்பு மிளகாய், உடைத்துக் கொள்ளவும்
2 சிட்டிகை                        பெருங்காய தூள்
1 tsp                                       எண்ணெய்

செய்முறை :
கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் குக்கரில் எடுத்துக்கொள்ளவும்.
1/2 கப் தண்ணீர் சேர்த்து அதிக தீயில் வைத்து மூடி போட்டு வெயிட்டை பொருத்தவும்.
ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
உடனடியாக ஆவியை வெளியேற்றி விடவும்.
சிறிது சூடு ஆரிய பின் மத்து அல்லது உருளை கிழங்கு மசிக்கும் கரண்டி கொண்டு நன்கு மசித்து விடவும்.
பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகை வெடிக்க விட்டு சிகப்பு மிளகாயை கிள்ளி  போட்டு உளுத்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.
சிவந்ததும் பெருங்காய பொடி சேர்த்து மசியலின் மேல் ஊற்றவும்.

இதுதான் முதல் முறையாக கீரை மசியலை இட்லிக்கு தொட்டுக்கொள்ள செய்தேன். மிக மிக அருமையாக இருந்தது. நீங்களும் செய்து சுவைக்கவும்.


சிகப்பு கீரை கிடைக்கவில்லையெனில் பாலக் கீரை அல்லது முளை கீரையை பயன்படுத்தியும் செய்யலாம்.






சில சமையல் வகைகள் சமைத்து ருசிக்க


பாலக் மசியல்
பாலக் கீரை மசியல்
அரைக்கீரை மசியல்
அரைக்கீரை மசியல்
பால் சாறு ( அ ) கழனி சாறு
பால் சாறு
முள்ளங்கி கீரை பொரியல்
முள்ளங்கிகீரை ..
முடக்கத்தான் கீரை தோசை
முடக்கத்தான் தோசை

Monday, January 27, 2014

Kadappa

#கடப்பா : கடப்பா என்பது இந்தியாவின் தஞ்சாவூர் பகுதிகளில் இட்லிக்கு தொட்டுக்கொள்ளும் குருமா போன்ற உணவாகும். ஆனால் குருமாவை விட நீர்க்க இருக்கும். இது  உருளை கிழங்கு, பச்சை பருப்பு ஆகியவற்றுடன் பிரத்தியேகமாக அரைத்த மசாலாவுடன் சேர்த்து செய்யப்படுகிறது. எப்போதும் இட்லியை சாம்பார் அல்லது சட்னியுடன் சாப்பிடுவதற்கு பதில் மாறுதலுக்காக கடப்பாவை செய்து ருசிக்கலாம். ஒருமுறை சாப்பிட்டு சுவைத்தவுடன் மறுமுறையும் செய்ய தூண்டும். அத்தகைய ருசி உடையது இந்த கடப்பா!!

கடப்பா

தேவையான பொருட்கள் :


2                                    உருளை கிழங்கு வேக வைத்தது
4 Tbsp                           பச்சை பருப்பு வேக வைத்தது
1 Tbsp                           காலி ப்ளோவேர் துண்டுகள்
2 Tbsp                          காரட் துண்டுகள்
1 சிறியது                 தக்காளி, துண்டுகளாக்கவும்
1 நடுத்தர                 வெங்காயம், நீள வாக்கில் அறியவும்
1/2 Tsp                         உப்பு

மசாலா அரைக்க :

4 Tsp                         தேங்காய் துருவல்
1 Tsp                          கச காசா
4                                 முந்திரி பருப்பு
1 1/2 Tsp                    சீரகம்
2                                 ஏலக்காய்
4                                 சின்ன வெங்காயம்
3 ( அட்ஜஸ்ட் )      பச்சை மிளகாய்

தாளிக்க :
1/2 Tsp                        சீரகம்
4                                  கிராம்பு
1 சிறு துண்டு         பட்டை
1 Tsp                           எண்ணெய்

செய்முறை :
மசாலாவிற்காக கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்சியில் அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
முதலில் சீரகம் தாளித்து அடுத்து கிராம்பு மற்றும் பட்டை சேர்க்கவும்.
அடுத்து கருவேப்பிலை மற்றும் நீள வாக்கில் மெல்லியதாக அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். 
வெங்காயம் சிறிது நிறம் மாறியதும் தக்காளி மற்றும் காய்களை  சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
இப்போது பருப்பை சேர்த்து 1/2 கப் தண்ணீர் விட்டு சிறிய தீயில் கொதிக்க விடவும்.
காய்கள் வெந்த பிறகு உருளை கிழங்கை கையினால் துண்டுகளாக்கி லேசாக நசுக்கி சேர்க்கவும்.
மசாலாவையும் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கடப்பா

உப்பு சரி பார்க்கவும்.
எல்லாம் ஒன்றுபோல் சேர்ந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.


கடப்பா

இட்லியை ஒரு தட்டில் எடுத்து அதன் மேல் கடப்பாவை ஊற்றி மிதக்க விட்டு சுவைக்கவும். ஆஹா!... என்ன சுவை!!.. ஆஹாஹா..



மற்ற மசாலா குழம்பு வகைகளின் சமையல் குறிப்புகள்

அவியல் காலிப்ளவர் தக்காளி குருமா குடைமிளகாய் குருமா