Search This Blog

Showing posts with label knolkhol poriyal. Show all posts
Showing posts with label knolkhol poriyal. Show all posts

Sunday, April 13, 2014

Knolkhol Poriyal

நூல்கோல் பொரியல் : காரட், பீட்ரூட் போலவே நூல்கோலை கொண்டும் பொரியல் செய்தால் மிக சுவையாக இருக்கும். செய்வதும் மிக எளிது. எப்படி என பார்க்கலாம்.

நூல்கோல் பொரியல்


தேவையான பொருட்கள் :

நூல்கோல் 
நூல்கோல் துருவியது                             : 1 கப்
காரட் துருவியது                                      : 1 Tsp [ இருந்தால் ]
வெங்காயம் அரிந்தது                             : 3 Tsp
கொத்தமல்லி பொடியாக நறுக்கியது   : 1/4 கப்
தேங்காய் துருவியது                               : 3 Tsp



தாளிக்க :
கடுகு                                                          : 1/2 Tsp
உளுத்தம் பருப்பு                                   : 1 Tsp
சிகப்பு மிளகாய் [ வற்றல் ]                  : 1 அ 2 துண்டுகளாக்கிக் கொள்ளவும்
எண்ணெய்                                               : 1/2 Tsp

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.
எண்ணெய சூடானதும் கடுகு வெடிக்க விடவும்.
பின்னர் சிகப்பு மிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பை சிவக்க வறுக்கவும்.
இப்போது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது நிறம் மாறியதுமே நூல்கோல் துருவல், காரட் துருவல் இரண்டையும் சேர்க்கவும்.
உப்பையும் சேர்த்து வேகும் வரை மூடி வைக்கவும்.
வெந்தவுடன் மூடியை எடுத்து விட்டு தேங்காய் துருவலை சேர்த்து சில மணி துளிகள் கிளறவும்.
ஒரு கிண்ணத்தில் எடுத்து கொத்தமல்லி தழையினால் அலங்கரிக்கவும்.

நூல்கோல் பொரியல்

இந்த பொரியலும் மற்றவற்றை போல சாம்பார் சாதம் மற்றும் ரசம் சாதத்துடன் சுவைக்க அருமையாக இருக்கும்.