#மிளகுப்பொடிஆளிவிதையுடன் : நாம் நமது மூதாதையர் காலந்தொட்டு மிளகை சமையலில் உபயோகப்படுத்தி வருகிறோம். உணவிற்கு காரம் கொடுப்பதற்காக மட்டுமன்றி அதன் மருத்துவ குணங்களுக்காகவும் #மிளகு பயன்படுத்தப்படுகிறது. சளி, இருமல் மற்றும் செரிமானம் சம்பத்தப்பட்ட நோய்களுக்கு அருமருந்தாக மிளகு செயல் படுகிறது.
#ஆளிவிதை உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை தரக்கூடிய ஒரு அருமையான விதையாகும்.
இவ்விரண்டுடன் சீரகம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து சத்தான ஒரு பொடி செய்வதெப்படி என காண்போம்.
செய்முறை :
ஒரு வாணலியை அடுப்பின் மீது வைத்து குறைந்த தீயில் சூடாக்கவும்.
ஆளிவிதையை போட்டு கைவிடாமல் கிளறவும்.
நல்ல மணத்துடன் படபடவென பொரிந்து வரும் பொது அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தட்டில் கொட்டவும்.
அதே வாணலியில் மிளகு சேர்த்து சிறிது சூடு வரும் வரை வறுத்து தட்டில் எடுத்து வைக்கவும்.
அதே போல சீரகத்தையும் சூடு ஏறும் வரை வறுத்து எடுத்து வைக்கவும்.
அடுப்பை அணைத்து விடவும்.
நிழலில் காயவைத்து எடுத்து வைத்துள்ள கருவேப்பிலையை சூடான வாணலியில் போட்டு சூடாக்கவும்.
அதே தட்டில் எடுத்து வைக்கவும்.
நன்கு ஆற விடவும்.
ஆறியதும் மிக்சியில் உதவியுடன் நன்கு பொடியாக அரைத்து எடுக்கவும்.
ஒரு சுத்தமான பாட்டிலில் எடுத்து வைத்து பத்திரப்படுத்தவும்.
சூடான சாதத்தில் ஒரு தேக்கரண்டி தயாரித்து வைத்துள்ள பொடியை சேர்த்து ஒரு தேக்கரண்டி நெய் விட்டு பிசைந்து உண்ணலாம். ஆளிவிதையின் மணமும் மிளகின் காரமும் நல்ல சுவையை கொடுக்கும்.
சூப் மேல் தூவி உண்ணலாம்.
காய்கறி கொண்டு தயாரிக்கப்படும் சாலட் மற்றும் பழங்களின் சாலட் ஆகியவற்றின் மேலும் தூவி உண்ணலாம்.
ஆம்லெட் மீது தூவி சாப்பிடலாம்.
மேலும் சில அத்தியாவசியமான பொடி வகைகள்
#ஆளிவிதை உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை தரக்கூடிய ஒரு அருமையான விதையாகும்.
இவ்விரண்டுடன் சீரகம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து சத்தான ஒரு பொடி செய்வதெப்படி என காண்போம்.
| தேவையானவை : | |
|---|---|
| 1/4 கப் | மிளகு |
| 1/4 கப் | சீரகம் |
| 1/4 கப் | ஆளிவிதை |
| 1 Tsp | உப்பு |
| 1 கைப்பிடி | காய்ந்த கருவேப்பிலை இலைகள் |
செய்முறை :
ஒரு வாணலியை அடுப்பின் மீது வைத்து குறைந்த தீயில் சூடாக்கவும்.
ஆளிவிதையை போட்டு கைவிடாமல் கிளறவும்.
நல்ல மணத்துடன் படபடவென பொரிந்து வரும் பொது அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தட்டில் கொட்டவும்.
அதே வாணலியில் மிளகு சேர்த்து சிறிது சூடு வரும் வரை வறுத்து தட்டில் எடுத்து வைக்கவும்.
அதே போல சீரகத்தையும் சூடு ஏறும் வரை வறுத்து எடுத்து வைக்கவும்.
அடுப்பை அணைத்து விடவும்.
நிழலில் காயவைத்து எடுத்து வைத்துள்ள கருவேப்பிலையை சூடான வாணலியில் போட்டு சூடாக்கவும்.
அதே தட்டில் எடுத்து வைக்கவும்.
நன்கு ஆற விடவும்.
ஆறியதும் மிக்சியில் உதவியுடன் நன்கு பொடியாக அரைத்து எடுக்கவும்.
ஒரு சுத்தமான பாட்டிலில் எடுத்து வைத்து பத்திரப்படுத்தவும்.
சூடான சாதத்தில் ஒரு தேக்கரண்டி தயாரித்து வைத்துள்ள பொடியை சேர்த்து ஒரு தேக்கரண்டி நெய் விட்டு பிசைந்து உண்ணலாம். ஆளிவிதையின் மணமும் மிளகின் காரமும் நல்ல சுவையை கொடுக்கும்.
சூப் மேல் தூவி உண்ணலாம்.
காய்கறி கொண்டு தயாரிக்கப்படும் சாலட் மற்றும் பழங்களின் சாலட் ஆகியவற்றின் மேலும் தூவி உண்ணலாம்.
ஆம்லெட் மீது தூவி சாப்பிடலாம்.
மேலும் சில அத்தியாவசியமான பொடி வகைகள்
|
|
|
||||||
|
|




![Vazhakkai [ raw banana ] Poriyal Vazhakkai [ raw banana ] Poriyal](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidzZFKGhjbfbsQ98ZrUBf8CofC-AgHSJLh28d4plOoDx1E2208BDYLQZXBOS5_7fkWung_W_NTCVVe9qM94A1iriNXgIbwKjIThTYt4SjmdVqlmZ4d1aN8b1h9JR24zA7Ij6OSAi1bnP8/s640/1-IMG_20170403_110233.jpg)





