Search This Blog

Friday, April 11, 2014

Vazhaipoo Vadai Morekuzhambu

#வாழைப்பூவடைமோர்க்குழம்பு : காய்கறிகளை கொண்டு மோர் குழம்பு செய்வது போல வடையை கொண்டு மோர் குழம்பு செய்தாலும் மிக்க ருசியுடன் இருக்கும். இனி எப்படி செய்வது என பார்ப்போம்.

வாழைப்பூ வடை மோர்குழம்பு


தேவையான பொருட்கள் :
தயிர்                                           : 1 கப்
இஞ்சி துண்டு                         : 1/2 அங்குலம்
பெருங்காயம்                         : சிறு துண்டு
மஞ்சத்தூள்                             : 3 சிட்டிகை

 அரைக்க தேவையான பொருட்கள் :



தேங்காய் துருவல்                : 3 Tsp
சீரகம்                                           : 1 Tsp
மல்லி                                          : 1/2 Tsp
மிளகு                                           : 6 ( அ ) 7
பச்சை மிளகாய்                       : 1
சிகப்பு மிளகாய்                        : 1 அ 2
கடலை பருப்பு                          : 1 Tsp
பச்சரிசி                                         : 1/2 Tsp
பூண்டு பற்கள்                            : 2
சின்ன வெங்காயம்                 : 5 ( அ ) 6
கடலை பருப்பு, பச்சரிசி, மல்லியை அரை மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

தாளிக்க :
கடுகு                                              : 1/2 Tsp
சீரகம்                                             : 1/2 Tsp
உளுத்தம் பருப்பு                       : 1 Tsp
பெருங்காயம்                             : சிறு துண்டு
கருவேப்பிலை                           : 10
எண்ணெய்                                    : 1 Tsp

செய்முறை :
வாழைப்பூ வடையை சிறு சிறு உருண்டைகளாக பகோடா போல போட்டு எடுத்து தனியே வைக்கவும்.

ஒரு கிண்ணத்தில் தயிரை கரண்டியினால் அடித்து கலக்கி பெருங்காயம் மற்றும்  இஞ்சியை இடித்து சேர்க்கவும். தனியே வைக்கவும்.
மிக்ஸ்யில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்றாக அரைத்துக் கொள்ளவும். தனியே எடுத்து வைக்கவும்.
அரைத்த மசாலாவுடன் மஞ்சத்தூள் உப்பு சேர்த்து 2 நிமிடம் சிறிய தீயில் கொதிக்க விடவும்.
பச்சை வாசனை போன பின் கலந்து வைத்துள்ள தயிரை சேர்த்து தீயை சிறியதாக்கி சுமார் ஒரு கொதி வரும் வரை கொதிக்க விடவும்.
அடுத்து பொரித்து வைத்துள்ள வடையை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

வாணலியை சூடாக்கி எண்ணெய் விட்டு கடுகு வெடிக்க விடவும்.
பின் சீரகம், சிகப்பு மிளகாய் துண்டுகள்,உளுத்தம் பருப்பு, மற்றும் கருவேப்பிலை தாளித்து மோர் குழம்பின் மேல் ஊற்றவும்.
சுவையான வடை மோர் குழம்பு தயார். கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.

வாழைப்பூ வடை மோர்குழம்பு

சூடான சாதத்தில் மோர் குழம்பை ஊற்றி பிசைந்து பிடித்தமான கறியுடன் சாப்பிட்டால் ம்ம்ம்....... சுவையே தனிதான்!!...
ஒரு சிறு கிண்ணத்தில் ஊறிய வடையை எடுத்து அப்படியே சுவைத்தாலும் அருமையாக இருக்கும்.

வாழைப்பூ வடை மோர்குழம்பு


குறிப்பு :
வாழைப்பூ சேர்க்காமல் செய்த மசால் வடையையும் உபயோகப் படுத்தி இதே போல மோர் குழம்பு செய்யலாம்.





சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்ப்பதற்காக

குதிரைவாலி வாழைப்பூ புலாவ் வாழைப்பூ குழம்பு வாழைப்பூ மிளகு குழம்பு
வாழைப்பூ பருப்பு உருண்டை வாழைப்பூ விரல்கள்





No comments:

Post a Comment