Search This Blog

Thursday, December 26, 2013

Murungaikai Mullangi Sambar

முருங்கைக்காய் முள்ளங்கி சாம்பார் : சாம்பார் என்றவுடன் முதலில் ஞாபகத்திற்கு வருவது முருங்கைகாய்தான். ஆம்! சாம்பார் செய்ய மிகவும் உகந்த காய் முருங்கைக்காய் ஆகும். முருங்கைக்காய் மற்றும் முள்ளங்கி இரண்டையும் சேர்த்து சாம்பார் செய்யும் போது சாம்பார் கூடுதல் சுவையுடன் அருமையாக இருக்கும். பனி காலமானதால் முருங்கைக்காய் கிடைப்பது அரிது. ஆனால் நேற்று காய்கறி மார்கட் சென்ற போது அதிசயமாக முருங்கைக்காய் கிடைத்தது. பணியினால் நிறம் சற்று  கருப்பாக இருந்தது என்றாலும் கிடைக்கும் பொது தவற விடுவானேன் என்று வாங்கி விட்டேன். இப்போது எவ்வாறு சாம்பார் செய்வது என பார்ப்போம்.

முருங்கைக்காய் முள்ளங்கி சாம்பார்

தேவையான பொருட்கள் :
வேகவைத்த துவரம் பருப்பு                  : 1/3 cup
முள்ளங்கி                                                : 1
முருங்கைக்காய்                                     : 1 அ 2
புளி                                                             : 1 சின்ன நெல்லிக்காய் அளவு உருண்டை
சின்ன வெங்காயம்                                : 8
பச்சை மிளகாய்                                      : 2
கருவேப்பிலை                                        : 10
கொத்தமல்லி கீரை                                : சிறிதளவு
முருங்கை கீரை                                      : சிறிதளவு ( இருந்தால் )
சாம்பார் பவுடர்                                       : 2 Tsp
மஞ்சத்தூள்                                               : 1 சிட்டிகை
மல்லித்தூள்                                             : 1 Tsp
உப்பு                                                             : 2 Tsp

தாளிக்க :

எண்ணெய்                                                 : 1/2 Tsp
கடுகு                                                           : 1/2 Tsp
பெருங்காயம்                                            : சிறு துண்டு




செய்முறை :

சின்ன வெங்காயத்தின் தோலை உரித்து ஒன்றிரண்டாக அறிந்துகொள்ளவும்.
பச்சை மிளகாயை நீள  வாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
கீரை, கருவேப்பிலை , கொத்தமல்லி ஆகியவற்றை தனி தனியாக கழுவி ஆற வைக்கவும்.
முருங்கைக்காயை கழுவி ஒரே அளவு நீள துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
முள்ளங்கியின் தோலை நீக்கி ஒரே அளவு துண்டுகளாக அறிந்து கொள்ளவும்.
குக்கரில் பருப்பை போட்டு நன்கு மசித்து 3/4  Cup நீர் சேர்க்கவும்.
அதில் முள்ளங்கியை 1 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும்.
இறக்கியவுடன் ஆவியை உடனே வெளியேற்றவும்.
மறுபடியும் அடுப்பில் ஏற்றி சாம்பார் பொடி , மல்லி பொடி, மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். குறைந்த தீயில் கொதிக்கவிடவும்.

மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு முதலில் கடுகை வெடிக்க விடவும்.
பின் பெருங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய், மற்றும் வெங்காயத்தை வரிசையாக போட்டு சிறிது வதக்கவும்.
வெங்காய வாசனை வந்தவுடன் கொதித்துகொண்டிருக்கும் சாம்பாரில்  கொட்டவும்.


முருங்கைக்காயை சேர்க்கவும்.
1 கப் தண்ணீரில் புளியை கரைத்து வடி கட்டி கொதிக்கும் சாம்பாரில் சேர்க்கவும்.


குக்கரை மூடி வெயிட் வைத்து 1 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
ஆவி நன்கு அடங்கியவுடன் குக்கரை திறந்து வேறொரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

கொத்தமல்லி தழையினால் அலங்கரிக்கவும்.
சுவையான சாம்பார் தயார்.

சூடான சாதத்தில் ஒரு கரண்டி சாம்பார் விட்டு பிசைந்து இஷ்டமான துவட்டலுடன் சாப்பிட்டால் ஆ.. ஆஹா... அதுவல்லவோ பேரானந்தம்!!

சாம்பாருடன் ஒன்றிரண்டு துளிகள் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் இன்னும் சுவையோ சுவை...!!

பருப்பு சாதத்திற்கு தொட்டு கொண்டு சாப்பிடலாம்.
சாதத்துடன் பொடி சேர்த்து பிசைந்து சாப்பிடும் போதும் சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.


No comments:

Post a Comment