Search This Blog

Showing posts with label குடைமிளகாய். Show all posts
Showing posts with label குடைமிளகாய். Show all posts

Monday, April 14, 2014

Capsicum Kuruma

#குடைமிளகாய்குருமா : பொதுவாக #குடைமிளகாய் ரவா உப்புமா, பொரியல், பிரியாணி போன்ற உணவு வகைகளை செய்யும் போது மற்ற காய்கறிகளுடன் சேர்த்து உபயோகப் படுத்துவேன். இந்த முறை குடை மிளகாயையும் காளானையும் சேர்த்து குருமா போல செய்து பார்த்தேன். மிக அருமையாக இருந்தது. அதனை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

குடைமிளகாய் குருமா


தேவையான பொருட்கள் :
 1                                               குடை மிளகாய், துண்டுகளாகவும்
1                                               வெங்காயம், துண்டுகளாக்கவும்.
1 Tbsp                                        காரட் துண்டுகள்
4 அ 5                                        காளான், கழுவி துண்டுகளாக்கவும்.
1/2 Tsp                                       சீரகம்
3/4 Tsp                                       உப்பு
1 Tsp                                          எண்ணெய்
சிறிது                                       கொத்தமல்லி தழை அலங்கரிக்க

மசாலா அரைப்பதற்கு :
2 Tbsp                                      தேங்காய் துருவல்
2                                              பச்சை மிளகாய் [ தேவைக்கேற்ப ]
1 Tsp                                        சீரகம்
1 1/2 Tsp                                  கசகசா
3                                              முந்திரி பருப்பு
3 பற்கள்                                 பூண்டு
1                                               வெங்காயம், துண்டுகளாக்கவும்
1 Tsp                                        மிளகு [ விருப்பப்பட்டால் ]

செய்முறை :
மசாலாவை மிக்சியில் மைய அரைத்து எடுத்து வைக்கவும்.


அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
சீரகம் வெடிக்க விட்டு வெங்காயத்தை வதக்கவும்.
பிறகு காரட் துண்டுகளை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

காளான் துண்டுகளை சேர்த்து சில மணி துளிகள் வதக்கிய பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும்.
1/2 கப் தண்ணீர் விட்டு மிக்ஸியை கழுவி அந்த தண்ணீரையும் கொதித்து கொண்டிருக்கும் குருமாவில் சேர்க்கவும்.
தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

குடைமிளகாய் குருமா

எல்லாம் ஒன்று சேர்ந்தார் போல வந்ததும் இறக்கி பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.

குடைமிளகாய் குருமா

பூரி, சப்பாத்தி, தோசை, இட்லி ஆகியவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

மேலும் சில குருமா வகைகள் முயற்சி செய்து பார்க்க

அவியல் கடப்பா காலிப்ளவர் தக்காளி குருமா




Monday, January 27, 2014

Capsicum Sambar

குடைமிளகாய் சாம்பார் : குளிர் காலத்தில் அதிகமாக கிடைக்கக் கூடிய காய்களுள் குடை மிளகாயும் ஒன்று. குடை மிளகாய்க்கு என்று தனி மணமும் சுவையும் உண்டு. இதனை கொண்டு சாம்பார் செய்யும் போது சாம்பார் தனி மணத்துடன் கூடுதல் சுவையுடன் இருக்கும். இப்போது எப்படி செய்வது என பார்க்கலாம்.



தேவையான பொருட்கள் :
1 அ 2                                                 குடை மிளகாய், சிறு துண்டுகளாகவும்
1 நெல்லி அளவு                          புளி
3 Tbsp                                                 துவரம் பருப்பு வேகவைத்தது  
6                                                         சின்ன வெங்காயம், உறித்துக் கொள்ளவும்


1 சிறிய அளவு                             தக்காளி, சிறு துண்டுகளாக்கவும்
2                                                          பச்சை மிளகாய்
8                                                          கருவேப்பிலை
3 Tsp                                                   சாம்பார் மிளகாய் தூள்
1 சிட்டிகை                                     மஞ்சத்தூள்
1 Tsp                                                   மல்லித்தூள்
2 Tsp                                                   உப்பு

தாளிக்க :
1/2 Tsp                                               கடுகு
1 சிறிய துண்டு                           பெருங்காயம்
1 Tsp                                                  எண்ணெய்

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
பிறகு பெருங்காயம், கருவேப்பிலை மற்றும் நீள  வாக்கில் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.
இப்போது சின்ன வெங்காயம் மற்றும் குடை மிளகாய் சேர்த்து 1/2 நிமிடம் வதக்கவும்.


தக்காளி துண்டுகளை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி மஞ்சத்தூள், மல்லித்தூள்,சாம்பார் பொடி ஆகியவற்றை சேர்த்து லேசாக வதக்கவும்.
உடனே வேகவைத்த பருப்பை சேர்க்கவும்.
ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
வெங்காயம் வெந்தவுடன் 1/2 கப் தண்ணீரில் புளியை கரைத்து வடிகட்டி சேர்க்கவும்.
இந்த நிலையில் உப்பை சேர்க்கவும்.
ஒன்றாக சேர்ந்து வரும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
சாம்பார் அவரவர் விருப்பபடி சிறிது நீர்க்கவோ அல்லது கெட்டியாகவோ செய்ய தண்ணீரின் அளவை கூட்டி குறைக்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைத்து கருவேப்பிலை கொத்தமல்லி கொண்டு அலங்கரிக்கவும்.