Search This Blog

Showing posts with label kozhukattai. Show all posts
Showing posts with label kozhukattai. Show all posts

Wednesday, September 24, 2014

Arisi Kara Pidi Kozhukattai

#அரிசிகாரபிடிகொழுக்கட்டை: விநாயகர் சதுர்த்தி அன்று  #மோதகம் செய்தது போக மேல் மாவு மீதம் இருந்தது. அதனை கடுகு, மிளகாய் மற்றும் பருப்பு தாளித்து நார்சத்தை மேம்படுத்த மேலும் சில பொருட்களை சேர்த்து ஆவியில் வேக வைத்து பிடி கொழுக்கட்டை செய்து ருசித்தோம். எப்படி என இனி காணலாம்.



தேவையான பொருட்கள் :
1/2 கப்                                            மோதகம் மேல் மாவு [அல்லது 1/2 கப் அரிசி மாவு]
1 tbsp                                              ஓட்ஸ்
1 tbsp                                              அமராந்த் விதைகள்
1/4 cup                                             தேங்காய் துருவல்
1/4 Tsp                                             சிகப்பு மிளகாய் தூள் [தேவையானால்]
1/2 Tsp                                             உப்பு

தாளிக்க :
1 Tsp                                                கடுகு
1 Tsp                                                உளுத்தம் பருப்பு
2 Tsp                                                கடலை பருப்பு
3 Tsp                                                நில கடலை
1 or 2                                               சிகப்பு மிளகாய், உடைத்து வைக்கவும்
10 or 12                                            கறுவேப்பிலை
1/4 Tsp                                             பெருங்காய தூள்
2 Tsp                                                எண்ணெய்

செய்முறை :
கொடுக்கப்பட்டுள்ள எல்லா வற்றையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
மேலும் சிறிது தண்ணீர் தெளித்து மாவை பிசைந்து வைக்கவும்.
மிகவும் கெட்டியாகவும் இருக்கக் கூடாது.
தளரவும் இருக்கக் கூடாது.
அரை மணி நேரம் ஊற விடவும்.
அமராந்த் விதைகள் ஊறினால்தான் வெந்தவுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

அரை மணி நேரம் கழித்து அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

முதலில் கடுகு தாளித்து, உடைத் மிளகாய் துண்டுகள் மற்றும் பெருங்காய தூள் சேர்த்த பின்னர் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கடலை ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.
பருப்பு சிவந்த பின்னர் கருவேப்பிலையை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
வறுத்தவற்றை மாவுடன் சேர்த்து கலந்து வைக்கவும்.

அடுப்பில் இட்லி பானையை வைத்து 3 கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
இட்லி தட்டின் மேல் எண்ணெய் தடவிவைக்கவும்.


இப்போது மாவை கையில் பிடித்து கொழுகட்டையாக்கி இட்லி தட்டின் மேல் அடுக்கவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் இட்லி பானையில் வைத்து 5 முதல் 7 நிமிடங்கள் வரை ஆவியில் வேக விடவும்.
வெந்ததும் எடுத்து சுவைக்க வேண்டியதுதான்.

பரிமாறும் தட்டில் வைத்து சட்னியுடன் பரிமாறவும்.


கொழுகட்டையே காரமும் சுவையும் கூடியதாக இருப்பதால் தொட்டுக் கொள்ள ஏதும் இன்றி கூட சுவைக்கலாம்.




Friday, August 29, 2014

Modhakam - Dumpling

#மோதகம் - #கொழுக்கட்டை : இன்று விநாயகர் சதுர்த்தி தினம். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்.  மோதகம் செய்து விநாயகரை வழிபட்டு கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.
நான் மோதகம் செய்து கடவுளுக்கு படைத்து நாங்களும் சுவைத்து மகிழ்ந்தோம்.
இனி மோதகம் எவ்வாறு செய்யப்பட்டது என இங்கு காணலாம்.



தேவையான பொருட்கள் :
1/2 கப்                               அரிசி மாவு [ dry rice flour ]
3/4 கப்                               தண்ணீர்
1/4 Tsp                                உப்பு
1 Tsp                                  நெய்
1 Tsp                                  நல்லெண்ணெய்

மாவினுள் வைத்து மோதகம் - கொழுக்கட்டை செய்ய தேவையான பூரணம்.

செய்முறை :
மாவில் உப்பு, நெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கையினால் பிசறி விடவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கவும்.
பாத்திரத்தின் அடியில் சின்ன சின்ன குமிழ்கள் தோன்ற ஆரம்பித்து கொதி நிலைக்கு சற்று முன்னதாக அடுப்பை நிறுத்தி விடவும்.

இந்த சூடான தண்ணீரை மாவில் ஊற்றி கரண்டியால் கலக்கவும்.
தேவையான தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியான மாவாக பிசைந்து கொள்ளவும்.


கை பொறுக்கும் சூடு ஆறியபின் கையால் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

இரண்டு கைகளிலும் எண்ணெய் தடவிக்கொண்டு ஒரு உருண்டை மாவை இடது உள்ளங்கையில் வைத்து வலது கையினால் தட்டையாக தட்டவும்.
அதன் நடுவே ஒரு உருண்டை பூரணத்தை வைத்து சுற்றி மாவினால் மூடவும்.


மேலே கைகளால் அழுத்தி மேல் மாவில் ஓட்டைகளோ விரிசலோ இல்லாதவாறு மூடவும்.

தேவையான கொழுகட்டைகளை செய்து இட்லி தட்டின் மேல் எண்ணெய் தடவி அடுக்கவும்.


இட்லி பானையில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் கொழுகட்டைகளை இட்லி பானையினுள் வைத்து ஆவியில் 3 முதல் 5 நிமிடங்கள் வேக விடவும்.


வெந்த பிறகு வெளியில் எடுத்து பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து அடுக்கவும்.

மேல் மாவு ஏற்கனவே சுடு தண்ணீர் விட்டு பிசைந்துள்ளதால் மிகக் குறைந்த நேரமே வேக வைத்தால் போதுமானது.


தேவையான நேரத்திற்கு மேல் வேக வைத்தால் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் வெல்ல பூரணம் தண்ணீர் விட ஆரம்பித்து விடும்.

இதே போல மாவினுள் கார பூரணத்தையும் வைத்து வேக விட்டு எடுக்கவும்.

பகவானுக்கு படைத்து இறை அருள் பெற்றபின் புசிக்கவும்!!

குறிப்பு :
கையில் தட்ட விருப்பப்படாதவர்கள் எண்ணெய் தடவிய இரு பிளாஸ்டிக் தாள்களின் நடுவே மாவை வைத்து தட்டையான கிண்ணத்தினால் அழுத்தி வட்ட வடிவமாக செய்த பின் மேலே கூறியுள்ள படி நடுவே பூரணம் வைத்து கொழுகட்டைகளாக்கவும்.








மேலும் சில சமையல் குறிப்புகள் 
முயற்சி செய்து பார்க்க

மோதகம்
மோதகம்
தேங்காய் பூரணம்
தேங்காய் பூரணம்
சோயா பூரணம்
சோயா பூரணம்
சோயா பூரண போளி
சோயா பூரண போளி
ஜவ்வரிசி சேமியா பாயசம்
ஜவ்வரிசி சேமியா பாயசம்
அமராந்தம் கொழுக்கட்டை
அமராந்தம் கொழுக்கட்டை




Tuesday, February 18, 2014

Amaranth Neer Kozhukattai

அமராந்தம் நீர் கொழுக்கட்டை : அமர்நாத் விதைகள் ஒரு கீரையின் விதையாகும். இதனை அமராந்தம் என்றும் அழைக்கப் படுகிறது. இதனை இங்கு சட்டிஸ்கரில் ராஜ்கிர் காரா என அழைக்கிறார்கள். இந்த விதைகள் கச கசா விதைகளை போலவே இருக்கும். ஆனால் கச கசாவை விட அளவில் சற்றே  பெரியது. நிறமும் சற்றேறக்குறைய அதைப் போலவே இருக்கும்.

Amaranth Seeds or Amarnath seeds 

அமர்நாத் கீரை & விதை பயன்கள் 
அமராந்த் 

அமராந்த் [ Amaranth ] என்பது தண்டு கீரை அதாவது முளை கீரை வகையை சார்ந்தது. இது பச்சை, பச்சை இலையில் நடுவே சிகப்பு, மற்றும் முழுவதும் சிகப்பு வண்ணத்தில் இலைகளை கொண்டது போன்ற  பல வகைகள் உள்ளன. சாப்பிடுவதற்காக சிலவற்றை பயிர் செய்யப்படுகிறது. சில அலங்கார செடியாக தோட்டத்தில் வளர்க்கப் படுகிறது.இந்த செடியின் தண்டு, இலை மற்றும் விதைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. இதனை பற்றி மேலும் அறிய

Amaranth Plant 

இதுவரை அமராந்த் விதைகளை கொண்டு வெவ்வேறு பாயசம் செய்து பார்த்தோம். இந்த முறை அமராந்தம் மாவை கொண்டு கொழுக்கட்டை செய்து பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :
1/4                                              அமராந்தம் மாவு
1/8                                              உடைத்த சோளம்
1/8                                              அரிசி மாவு
1 Tbsp                                        ஓட்ஸ்
2 Tbsp                                       தேங்காய் துருவல்
1/2 Tsp                                      உப்பு


1 Tsp                                         வெங்காயம்
1 Tsp                                         காரட் துருவியது [ இருந்தால் ]
2 Tsp                                         பச்சை பட்டாணி  [ இருந்தால் ]
1அ 2                                        காளான், பொடியாக அரியவும்  [ இருந்தால் ]
கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு.

தாளிக்க :
1/2 Tsp                                      கடுகு
1/2 Tsp                                     உளுத்தம் பருப்பு
1/2 Tsp                                     சீரகம்
1 அ 2                                      சிவப்பு மிளகாய்
1 சிட்டிகை                          பெருங்காய தூள்

செய்முறை :
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அமராந்தம் மாவு, உடைத்த சோளம், அரிசி மாவு, தேங்காய் துருவல், ஓட்ஸ் மற்றும் உப்பு எடுத்துக்கொள்ளவும்.
சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவாக பிசைந்து கொள்ளவும்.


அடுப்பில் வேறொரு பாத்திரத்தில் 3/4 கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
பிசைந்த மாவை சிறி சிறு உருண்டைகளாக உருட்டவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் உருண்டைகளை மெதுவாக சேர்க்கவும்.


சேர்த்தவுடன் கரண்டியால் கிளற வேண்டாம்.
தீயை சிறியதாக்கி 3 நிமிடங்கள் உருண்டைகளை வேக விடவும்.
பிறகு ஒரு கரண்டியால் உருண்டைகளை உடைக்காமல் கிண்டி விடவும்.


உருண்டையின் உள்  வரை வேக வைத்து தனியே எடுத்து வைக்கவும்.


கொதித்த தண்ணீரும் தற்போது கஞ்சி பதத்தில் இருக்கும்.
இந்த கஞ்சியை கீழே கொட்டிவிட வேண்டாம்.
உப்பு அல்லது வெல்லம் சேர்த்து பருகலாம்.

இப்போது அடுப்பில் வாணலியை ஏற்றி என்னை விட்டு கடுகு மற்றும் சீரகம் வெடிக்க விடவும்.
பிறகு மிளகாயை கிள்ளி  போட்டு, உளுத்தம் பருப்பை சிவக்க விட்டு கருவேப்பிலையை சேர்க்கவும்.
பிறகு வெங்காயம் சேர்த்து சில மணித்துளிகள் வதக்கவும்.


மற்ற காய்களையும் உப்புடன் சேர்த்து வதக்கியபின் தண்ணீரில் வேகவைத்த உருண்டைகளை சேர்த்து நன்கு கிளறவும்.
விருப்பப்பட்டால் சிறிது மிளகுதூள் தூவி இறக்கவும்.


பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து கொத்தமல்லி தூவி சுவைக்கவும்.
அருமையான கொழுக்கட்டை தயார்.









Saturday, December 28, 2013

Broken Maize Pidi Kozhukattai

உடைத்த மக்காசோளம்  பிடி கொழுக்கட்டை : உடைத்த மக்காசோளம் கொண்டு நான் பொதுவாக கஞ்சி செய்வதுதான் வழக்கம். ஒரே மாதிரி கஞ்சி செய்வதற்கு பதிலாக வேறு ஏதாவது முயற்சி செய்யலாமே என்று யோசித்த போதுதான் இந்த கொழுக்கட்டை செய்யும் திடீர் யோசனை தோன்றியது. உடனே செயலில் இறங்கி விட்டேன். எப்படி என பார்க்கலாம்.

உடைத்த மக்காசோளம்  பிடி கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் :


1/4 கப்                                  உடைத்த மக்காசோளம்
1/4 கப்                                  அரைத்த அரிசி மாவு ( இட்லி மாவு அரைக்கும் போது எடுத்தது வைத்தது )
1/4 கப்                                   அரிசி மாவு
1/4 கப்                                   தேங்காய் துருவல்
1                                            சிவப்பு மிளகாய்
2 Tsp                                      உளுத்தம் பருப்பு
3 Tsp                                      கடலை பருப்பு
4 Tsp                                      நில கடலை
5                                             முந்திரி பருப்பு
10                                           கருவேப்பிலை 
1/4 Tsp                                   பெருங்காய பொடி
1/2 Tsp                                   உப்பு
1/2 Tsp                                  கடுகு
1/2 Tsp                                  சீரகம்
2 Tsp                                     எண்ணெய்

செய்முறை :
ஒரு வாய் அகலமான பாத்திரத்தில் மாவு, தேங்காய் துருவல், உப்பு மற்றும் உடைத்த மக்காசோளம் எடுத்துக்கொள்ளவும்.


அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
முதலில் கடுகை வெடிக்க விட்டு பின் சீரகம் சேர்க்கவும்.
மிளகாயை சிறு சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும்.
இதற்கு பிறகு உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, அடுத்து முந்திரி மற்றும் நில கடலை ஆகியவற்றை  ஒன்றிரெண்டாக உடைத்து சேர்க்கவும்.
எல்லா பருப்பும் சிவந்தவுடன் கருவேப்பிலை சேர்த்து பொரிந்தவுடன் மாவில் சேர்க்கவும்.

இலேசாக தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.


அடுப்பில் இட்லி பானையை வைத்து 3 கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
கையில் சிறிது மாவு எடுத்து அழுத்தி மூடவும்.
ஒரு பிடி கொழுக்கட்டை செய்தாகி விட்டது.


அதே போல கொழுக்கட்டை பிடித்து எண்ணெய் தடவிய இட்லி தட்டில் அடுக்கி வைக்கவும்.
இட்லி பானையில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் கொழுக்கட்டை அடுக்கியுள்ள இட்லி தட்டை வைத்து மூடியினால் மூடவும்.


பத்து நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.
பாத்து நிமிடங்களுக்கு பிறகு ஒரு கொழுகட்டையை எடுத்து வெந்து விட்டதா என பார்க்கவும்.
வேக வில்லை என்றால் மறுபடியும் 3 நிமிடங்கள் வேக வைக்கவும்.

எடுத்து தக்காளி  சாஸுடன் பரிமாறவும்.

உடைத்த மக்காசோளம்  பிடி கொழுக்கட்டை