Search This Blog

Showing posts with label amarantham. Show all posts
Showing posts with label amarantham. Show all posts

Thursday, November 5, 2015

Amaranth-Buckwheat-Paruppu-Payasam

#அமராந்த்பாப்பரைபருப்புபாயசம் : 

அமராந்த் பாப்பரை பருப்பு பாயசம்

#அமர்நாத்விதைகள் ( அ )  
#அமராந்த் என்பது ஒரு கீரையின் விதையாகும். இதனை #அமராந்தம் என்றும் அழைக்கப் படுகிறது. இதனை இங்கு சட்டிஸ்கரில் ராஜ்கிர் காரா என அழைக்கிறார்கள். இந்த விதைகள் கச கசா விதைகளை போலவே இருக்கும். ஆனால் கச கசாவை விட அளவில் சற்றே  பெரியது. நிறமும் சற்றேறக்குறைய அதைப் போலவே இருக்கும்.

Amaranth Seeds or Amarnath seeds 

அமர்நாத் கீரை & விதை பயன்கள் 
அமராந்த் 

அமராந்த் [ Amaranth ] என்பது தண்டு கீரை அதாவது முளை கீரை வகையை சார்ந்தது. இது பச்சை, பச்சை இலையில் நடுவே சிகப்பு, மற்றும் முழுவதும் சிகப்பு வண்ணத்தில் இலைகளை கொண்டது போன்ற  பல வகைகள் உள்ளன. சாப்பிடுவதற்காக சிலவற்றை பயிர் செய்யப்படுகிறது. சில அலங்கார செடியாக தோட்டத்தில் வளர்க்கப் படுகிறது.இந்த செடியின் தண்டு, இலை மற்றும் விதைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. இதனை பற்றி மேலும் அறிய

Amaranth Plant 

அமராந்தம் போலவே #பாப்பரை யும் புரதம் அதிக அளவில் கொண்டுள்ள ஒரு விதையாகும். அதனால் அடிக்கடி இவ்விதைகளை உணவில் சேர்த்துக்கொள்வது நலமாகும்.
இவ்விரு விதைகளுடன் பயத்தம் பருப்பையும் சேர்த்து ஒரு சுவையான பாயசம் செய்வது எப்படி என காணலாம்.

அமராந்த் பாப்பரை பருப்பு பாயசம்

தேவையான பொருட்கள் :
1 Tbspஅமராந்தம்
1 Tspபாப்பரை [ Buckwheat ]
1/8 cupபயத்தம் பருப்பு
2 or 3முந்திரி பருப்பு வறுத்தது
1/2 Cupவெல்லம் [ adjust ]
1 pinchஉப்பு
அரைக்க :
1 Tbspதேங்காய் துருவல்
1/2 Tspகசகசா
2ஏலக்காய்
சிறுதுண்டுஜாதிக்காய்

செய்முறை :
அரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸி அரைக்கும் பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து எடுத்து தனியே வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சிறிய தீயில் சூடாக்கவும்.
அதில் பயத்தம் பருப்பை சிவக்க வறுத்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் அமராந்த், பாப்பரை மற்றும் வறுத்த பருப்பு அனைத்தையும் எடுத்துக்கொள்ளவும்.
ஓரிரு முறை தண்ணீரில் கழுவி வடித்து விடவும்.
பிறகு 3/4 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 3 விசில் வந்த பிறகு சிறிய தீயில் 3 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
ஆவி அடங்கிய பிறகு குக்கரை திறந்து வெந்த பருப்பு, அமராந்த், மற்றும் பாப்பரை ஆகியவற்றை ஒரு குழி கரண்டி கொண்டோ அல்லது உருளைகிழங்கு மசிக்கும் மத்தை கொண்டோ மசிக்கவும்.
மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெல்லம் போட்டு 1/4 கப் தண்ணீர் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
கரண்டியால் கலக்கி கரைய வைக்கவும்.
வெல்லம் கரைந்த வுடன் அடுப்பிலிருந்து எடுத்து வடி கட்டவும்.
வடிகட்டிய வெல்ல கரைசலை மீண்டும் அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
அதில் மசித்து வைத்துள்ளதை சேர்த்து கலக்கவும்.
ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து நன்கு கலக்கவும்.
சிறிய தீயில் 5 முதல் 8 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
ஒன்றாக சேர்ந்து வந்ததும் பொடித்து வைத்துள்ள ஏலக்காய் ஜாதிக்காய் பொடியை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.


Amaranth Buckwheat Paruppu Payasam


பரிமாறும் பாத்திரத்தில் ஊற்றி வறுத்த முந்திரியை தூவி பருகவும்.
சுவையும் சத்தும் மிகுந்த அமராந்த் பாப்பரை பாயசம் தயார்.

அமராந்த் பாப்பரை பருப்பு பாயசம்






மேலும் சில பாயசம் வகைகளின் சமையல் குறிப்புகள்

காரட் தினை பாயசம் சாமை பாப்பரை பாயசம் அமராந்த் பாப்பரை பால் பாயசம்
குதிரைவாலி பால் பாயசம் ஜவ்வரிசி சேமியா பாயசம்

Tuesday, April 29, 2014

Amaranth Adai

#அமராந்த்அடை :  அமர்நாத் விதைகள் ஒரு கீரையின் விதையாகும். இதனை அமராந்தம் என்றும் அழைக்கப் படுகிறது. இதனை இங்கு சட்டிஸ்கரில் ராஜ்கிர் காரா என அழைக்கிறார்கள். இந்த விதைகள் கச கசா விதைகளை போலவே இருக்கும். ஆனால் கச கசாவை விட அளவில் சற்றே  பெரியது. நிறமும் சற்றேறக்குறைய அதைப் போலவே இருக்கும்.

Amaranth Seeds or Amarnath seeds 

அமர்நாத் கீரை & விதை பயன்கள் 
அமராந்த் 

அமராந்த் [ Amaranth ] என்பது தண்டு கீரை அதாவது முளை கீரை வகையை சார்ந்தது. இது பச்சை, பச்சை இலையில் நடுவே சிகப்பு, மற்றும் முழுவதும் சிகப்பு வண்ணத்தில் இலைகளை கொண்டது போன்ற  பல வகைகள் உள்ளன. சாப்பிடுவதற்காக சிலவற்றை பயிர் செய்யப்படுகிறது. சில அலங்கார செடியாக தோட்டத்தில் வளர்க்கப் படுகிறது.இந்த செடியின் தண்டு, இலை மற்றும் விதைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. இதனை பற்றி மேலும் அறிய

Amaranth Plant 

இங்கு அமராந்த் மாவை உபயோகித்து ஒரு ருசியான அடை செய்வது எப்படி என பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :
1/2 கப்                                     அமராந்த் மாவு
1/2 கப்                                     கோதுமை மாவு
1/4 கப்                                     பயத்தம் மாவு
2 Tsp                                        அரிசி மாவு
1/2 Tsp                                     உப்பு
1/4 கப்                                    வெங்காயம் பொடியாக நறுக்கியது
1 கப்                                       பாலக் கீரை பொடியாக நறுக்கியது
2 Tsp                                       கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
5 அ 6                                     கருவேப்பிலை
எண்ணெய் அடை சுட தேவையான அளவு.

செய்முறை :
மாவு அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு சேர்க்கவும்.
ஒரு கப் தண்ணீர் விட்டு இட்லி மாவு போல கெட்டியாக கலக்கி வைக்கவும்.
மாவுடன் வெங்காயம் மற்றும் கீரைகளை சேர்த்து கலக்கவும்.

அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடாக்கவும்.
சூடானதும் எண்ணெய் விட்டு, பின்னர் இரண்டு கரண்டி மாவை தோசை கல்லின் நடுவே வைத்து பரப்பவும்.
ஒரே தடிமனாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.


ஊற்றிய அடையின் மேலும் சுற்றியும் எண்ணெய் விட்டு மூடி வேக விடவும்.
அடையின் ஓரம் சிவக்க ஆரம்பித்தவுடன் திருப்பி போடவும்.


இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் தட்டில் எடுத்து வைத்து பரிமாறவும்.


இஞ்சி சட்னியுடன் அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.












மேலும் சில தோசை மற்றும் அடை வகைகள்
முயற்சி செய்து பார்க்க

பரங்கிக்காய் அடை
பரங்கிக்காய் அடை
முடக்கத்தான் கீரை தோசை
முடக்கத்தான் தோசை
கொடி பசலை கீரை தோசை
பசலை கீரை தோசை
பெசரட்டு
பெசரட்டு
வாழைப்பூ பசலை அடை
வாழைபூபசலைஅடை



இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.


Sunday, April 20, 2014

Amaranth Kozhukattai

அமராந்தம் கொழுக்கட்டை : அமர்நாத் விதைகள் ஒரு கீரையின் விதையாகும். இதனை அமராந்தம் என்றும் அழைக்கப் படுகிறது. இதனை இங்கு சட்டிஸ்கரில் ராஜ்கிர் காரா என அழைக்கிறார்கள். இந்த விதைகள் கச கசா விதைகளை போலவே இருக்கும். ஆனால் கச கசாவை விட அளவில் சற்றே  பெரியது. நிறமும் சற்றேறக்குறைய அதைப் போலவே இருக்கும்.
அமர்நாத் கீரை & விதை பயன்கள் 
அமராந்த் 
Amaranth - அமராந்தம் 

To know more about the plant
Amaranth Plant

Several studies have shown that like oats, amaranth seed or oil may be of benefit for those with hypertension and cardiovascular disease; regular consumption reduces blood pressure and cholesterol levels, while improving antioxidant status and some immune parameters

Source : http://en.wikipedia.org/wiki/Amaranth

அமராந்த் [ Amaranth ] என்பது தண்டு கீரை அதாவது முளை கீரை வகையை சார்ந்தது. இது பச்சை, பச்சை இலையில் நடுவே சிகப்பு, மற்றும் முழுவதும் சிகப்பு வண்ணத்தில் இலைகளை கொண்டது போன்ற  பல வகைகள் உள்ளன. சாப்பிடுவதற்காக சிலவற்றை பயிர் செய்யப்படுகிறது. சில அலங்கார செடியாக தோட்டத்தில் வளர்க்கப் படுகிறது.இந்த செடியின் தண்டு, இலை மற்றும் விதைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது.

இதனை கொண்டு பிடி கொழுக்கட்டை எவ்வாறு செய்யலாம் என பார்ப்போம்.



தேவையான பொருட்கள் :
1/4 cup                                             அமராந்தம்
1/4 cup                                             அரிசி மாவு
1/4 cup                                             ஓட்ஸ்
1/4 cup                                             தேங்காய் துருவல்
1/2 Tsp                                             உப்பு

தாளிக்க :
1 Tsp                                                கடுகு
1 Tsp                                                உளுத்தம் பருப்பு
2 Tsp                                                கடலை பருப்பு
3 Tsp                                                நில கடலை
1 or 2                                               சிகப்பு மிளகாய், உடைத்து வைக்கவும்
10 or 12                                            கறுவேப்பிலை
1/4 Tsp                                             பெருங்காய தூள்
2 Tsp                                                எண்ணெய்

செய்முறை :
கொடுக்கப்பட்டுள்ள எல்லா வற்றையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு மாவை பிசைந்து வைக்கவும்.
மிகவும் கெட்டியாகவும் இருக்கக் கூடாது.
தளரவும் இருக்கக் கூடாது.
அரை மணி நேரம் ஊற விடவும்.

அரை மணி நேரம் கழித்து அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

முதலில் கடுகு தாளித்து, உடைத் மிளகாய் துண்டுகள் மற்றும் பேருங்க தூள் சேர்த்த பின்னர் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கடலை ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.
பருப்பு சிவந்த பின்னர் கருவேப்பிலையை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
வறுத்தவற்றை மாவுடன் சேர்த்து கலந்து வைக்கவும்.


அடுப்பில் இட்லி பானையை வைத்து 3 கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
இட்லி தட்டின் குழிகளில் எண்ணெய் தடவிவைக்கவும்.

இப்போது மாவை கையில் பிடித்து கொழுகட்டையாக்கி இட்லி தட்டின் மேல் அடுக்கவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் இட்லி பானையில் வைத்து 5 முதல் 7 நிமிடங்கள் வரை ஆவியில் வேக விடவும்.


வெந்ததும் எடுத்து சுவைக்க வேண்டியதுதான்.

பரிமாறும் தட்டில் வைத்து சட்னியுடன் பரிமாறவும்.


கொழுகட்டையே காரமும் சுவையும் கூடியதாக இருப்பதால் தொட்டுக் கொள்ள ஏதும் இன்றி கூட சுவைக்கலாம்.




Tuesday, February 18, 2014

Amaranth Neer Kozhukattai

அமராந்தம் நீர் கொழுக்கட்டை : அமர்நாத் விதைகள் ஒரு கீரையின் விதையாகும். இதனை அமராந்தம் என்றும் அழைக்கப் படுகிறது. இதனை இங்கு சட்டிஸ்கரில் ராஜ்கிர் காரா என அழைக்கிறார்கள். இந்த விதைகள் கச கசா விதைகளை போலவே இருக்கும். ஆனால் கச கசாவை விட அளவில் சற்றே  பெரியது. நிறமும் சற்றேறக்குறைய அதைப் போலவே இருக்கும்.

Amaranth Seeds or Amarnath seeds 

அமர்நாத் கீரை & விதை பயன்கள் 
அமராந்த் 

அமராந்த் [ Amaranth ] என்பது தண்டு கீரை அதாவது முளை கீரை வகையை சார்ந்தது. இது பச்சை, பச்சை இலையில் நடுவே சிகப்பு, மற்றும் முழுவதும் சிகப்பு வண்ணத்தில் இலைகளை கொண்டது போன்ற  பல வகைகள் உள்ளன. சாப்பிடுவதற்காக சிலவற்றை பயிர் செய்யப்படுகிறது. சில அலங்கார செடியாக தோட்டத்தில் வளர்க்கப் படுகிறது.இந்த செடியின் தண்டு, இலை மற்றும் விதைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. இதனை பற்றி மேலும் அறிய

Amaranth Plant 

இதுவரை அமராந்த் விதைகளை கொண்டு வெவ்வேறு பாயசம் செய்து பார்த்தோம். இந்த முறை அமராந்தம் மாவை கொண்டு கொழுக்கட்டை செய்து பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :
1/4                                              அமராந்தம் மாவு
1/8                                              உடைத்த சோளம்
1/8                                              அரிசி மாவு
1 Tbsp                                        ஓட்ஸ்
2 Tbsp                                       தேங்காய் துருவல்
1/2 Tsp                                      உப்பு


1 Tsp                                         வெங்காயம்
1 Tsp                                         காரட் துருவியது [ இருந்தால் ]
2 Tsp                                         பச்சை பட்டாணி  [ இருந்தால் ]
1அ 2                                        காளான், பொடியாக அரியவும்  [ இருந்தால் ]
கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு.

தாளிக்க :
1/2 Tsp                                      கடுகு
1/2 Tsp                                     உளுத்தம் பருப்பு
1/2 Tsp                                     சீரகம்
1 அ 2                                      சிவப்பு மிளகாய்
1 சிட்டிகை                          பெருங்காய தூள்

செய்முறை :
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அமராந்தம் மாவு, உடைத்த சோளம், அரிசி மாவு, தேங்காய் துருவல், ஓட்ஸ் மற்றும் உப்பு எடுத்துக்கொள்ளவும்.
சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவாக பிசைந்து கொள்ளவும்.


அடுப்பில் வேறொரு பாத்திரத்தில் 3/4 கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
பிசைந்த மாவை சிறி சிறு உருண்டைகளாக உருட்டவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் உருண்டைகளை மெதுவாக சேர்க்கவும்.


சேர்த்தவுடன் கரண்டியால் கிளற வேண்டாம்.
தீயை சிறியதாக்கி 3 நிமிடங்கள் உருண்டைகளை வேக விடவும்.
பிறகு ஒரு கரண்டியால் உருண்டைகளை உடைக்காமல் கிண்டி விடவும்.


உருண்டையின் உள்  வரை வேக வைத்து தனியே எடுத்து வைக்கவும்.


கொதித்த தண்ணீரும் தற்போது கஞ்சி பதத்தில் இருக்கும்.
இந்த கஞ்சியை கீழே கொட்டிவிட வேண்டாம்.
உப்பு அல்லது வெல்லம் சேர்த்து பருகலாம்.

இப்போது அடுப்பில் வாணலியை ஏற்றி என்னை விட்டு கடுகு மற்றும் சீரகம் வெடிக்க விடவும்.
பிறகு மிளகாயை கிள்ளி  போட்டு, உளுத்தம் பருப்பை சிவக்க விட்டு கருவேப்பிலையை சேர்க்கவும்.
பிறகு வெங்காயம் சேர்த்து சில மணித்துளிகள் வதக்கவும்.


மற்ற காய்களையும் உப்புடன் சேர்த்து வதக்கியபின் தண்ணீரில் வேகவைத்த உருண்டைகளை சேர்த்து நன்கு கிளறவும்.
விருப்பப்பட்டால் சிறிது மிளகுதூள் தூவி இறக்கவும்.


பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து கொத்தமல்லி தூவி சுவைக்கவும்.
அருமையான கொழுக்கட்டை தயார்.









Wednesday, February 12, 2014

Amaranth Khasa Khasaa Payasam

அமராந்த் கசகசா பாயசம்: 

அமராந்த் கசகசா பாயசம்

அமர்நாத் விதைகள் ஒரு கீரையின் விதையாகும். இதனை அமராந்தம் என்றும் அழைக்கப் படுகிறது. இதனை இங்கு சட்டிஸ்கரில் ராஜ்கிர் காரா என அழைக்கிறார்கள். இந்த விதைகள் கச கசா விதைகளை போலவே இருக்கும். ஆனால் கச கசாவை விட அளவில் சற்றே  பெரியது. நிறமும் சற்றேறக்குறைய அதைப் போலவே இருக்கும்.

Amaranth Seeds or Amarnath seeds 

அமர்நாத் கீரை & விதை பயன்கள் 
அமராந்த் 

அமராந்த் [ Amaranth ] என்பது தண்டு கீரை அதாவது முளை கீரை வகையை சார்ந்தது. இது பச்சை, பச்சை இலையில் நடுவே சிகப்பு, மற்றும் முழுவதும் சிகப்பு வண்ணத்தில் இலைகளை கொண்டது போன்ற  பல வகைகள் உள்ளன. சாப்பிடுவதற்காக சிலவற்றை பயிர் செய்யப்படுகிறது. சில அலங்கார செடியாக தோட்டத்தில் வளர்க்கப் படுகிறது.இந்த செடியின் தண்டு, இலை மற்றும் விதைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. இதனை பற்றி மேலும் அறிய

Amaranth Plant 

இந்த பாயசம்  தேங்காய் அரைத்து வெல்லத்துடன் செய்த பாயசம். பாலுடன் செய்த பாயசத்தை பிறிதொரு சமயம் பார்த்தோம். அதை விட வெல்லத்துடன் சேர்த்து செய்யும் போது சுவை இன்னும் அருமையாக இருக்கும். கொடுக்கப்பட்டுள்ள அளவில் சுமார் 1 1/2 முதல் 2 கப் தயாரிக்கலாம்.


தேவையான பொருட்கள் :
1 Tbsp                                       அம்ராந்த் விதைகள்
1 சிட்டிகை                             உப்பு
1/4 கப்                                       வெல்லம் ( அட்ஜஸ்ட் )

அரைக்க :


1/4 கப்                                      தேங்காய் துருவல்
1/2 Tsp                                       கச கசா
1/4 Tsp                                       அரிசி [ அ ] அரிசி மாவு
2                                                 ஏலக்காய்
சிறிய துண்டு                       ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்திரி
3                                                 முந்திரி பருப்பு [ இருந்தால் ]

சுவை கூட்ட :
நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் கிஸ்மிஸ்

செய்முறை :
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் நன்கு அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
வெல்லத்தை 1/4 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் லேசாக சூடாக்கி கரைக்கவும்.
பிறகு வடிகட்டி வைக்கவும்.


வேக வைத்த அமராந்த் விதைகளை  கரண்டியால் மசித்து 1/2 கப் தண்ணீருடன் அடுப்பில் குறைந்த தீயில் சூடாக்கவும்.
வெல்ல கரைசலை விட்டு கலக்கவும்.
2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.


பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து கொதிக்க விடவும்.


ஒன்று சேர்ந்து பதமாக வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
நெய்யில் முந்திரி மற்றும் கிஸ்மிஸ் இரண்டையும் வறுத்து பாயசத்தின் மேல் கொட்டவும்.
மிக மிக சுவையான வரகரிசி தேங்காய் பாயசம் தயார்.

ஒரு கிண்ணத்தில் எடுத்து பரிமாறவும்.



  • தேங்காயையும் சிறு சிறு துண்டுகளாக்கி நெய்யில் வறுத்து பாயசத்தில் சேர்க்கலாம்.
  • பொதுவாக பாயசத்தின் நிறம் வெல்லத்தின் நிறத்தை பொருத்தே அமையும்.
  • வெல்லத்தின் அளவை சுவைக்கேற்றவாறு கூட்டி குறைத்துக் கொள்ளலாம்.


  • மற்ற அமராந்தம் சமையல் வகைகள்
    அமராந்தம் பாயசம் 1
    அமராந்தம் பாயசம் 2






    Tuesday, February 4, 2014

    Amarnath Seeds Payasam 2

    அமர்நாத் விதைகள் :  இது ஒரு கீரையின் விதையாகும். இதனை அமராந்தம் என்றும் அழைக்கப் படுகிறது. இதனை இங்கு சட்டிஸ்கரில் ராஜ்கிர் காரா என அழைக்கிறார்கள். இந்த விதைகள் கச கசா விதைகளை போலவே இருக்கும். ஆனால் கச கசாவை விட அளவில் சற்றே  பெரியது. நிறமும் சற்றேறக்குறைய அதைப் போலவே இருக்கும்.

    Amaranth Seeds or Amarnath seeds 

    அமர்நாத் கீரை & விதை பயன்கள் 
    அமராந்த் 

    அமராந்த் [ Amaranth ] என்பது தண்டு கீரை வகையை சார்ந்தது. இது பச்சை, பச்சை இலையில் நடுவே சிகப்பு, மற்றும் முழுவதும் சிகப்பு வண்ணத்தில் இலைகளை கொண்டது போன்ற  பல வகைகள் உள்ளன. சாப்பிடுவதற்காக சிலவற்றை பயிர் செய்யப்படுகிறது. சில அலங்கார செடியாக தோட்டத்தில் வளர்க்கப் படுகிறது.இந்த செடியின் தண்டு, இலை மற்றும் விதைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. இதனை பற்றி மேலும் அறிய

    Amaranth Plant 

    அமராந்தம் கொண்டு முன்பு ஒரு பாயசம் எவ்வாறு செய்வது பார்த்தோம். இங்கு  அமராந்தம் உபயோகித்து வேறு ஒரு முறையில் பாயசம் எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :
    1 Tbsp                                         அமர்நாத் விதைகள் [ அமராந்தம் ]
    1/2 கப்                                        பால்
    1/4 கப் [ அட்ஜஸ்ட் ]            வெல்லம் பொடித்தது
    ஜாதிக்காய் சிறு துண்டு அல்லது ஜாதி பத்திரி சிறு துண்டு.
    3 அ 4                                         பாதாம் பருப்பு
    1 சிட்டிகை                             உப்பு

    செய்முறை :
    ஒரு பாத்திரத்தில் அமராந்தம் எடுத்துக் கொள்ளவும்.
    1/2 கப் தண்ணீர் சேர்த்து  குக்கரில் சாதம் வேக வைப்பது போல் [ 3 விசில் மற்றும் 5 நிமிடம் SIM -ல்] வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

    வேகவைத்த அமராந்தம் விதைகள் 

    ஜாதிக்காயை பொடித்து தனியே எடுத்து வைக்கவும்.

    வெல்லத்தை 1/4 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைக்கவும்.
    கரைந்ததும் வடிகட்டி மீண்டும் ஒரு 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு தனியே எடுத்து வைக்கவும்.


    ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்துக்கொள்ளவும்.
    அதில் வேக வைத்த அமராந்தம் விதைகளை சேர்த்து 1 சிட்டிகை உப்புடன் அடுப்பில் சிறு தீயில் சூடாக்கவும்.
    கரண்டியால் கலக்கிக் கொண்டே இருக்கவும்.
    இல்லையெனில் அடி பிடித்துக் கொள்ளும்.


    நன்கு கஞ்சி போல் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு  ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள வெல்லப்பாகை சேர்த்து கலக்கி விடவும்.
    ஜாதிக்காய் தூளை சேர்க்கவும்.
    சுவையான ஒரு வித்தியாசமான பாயசம் தயார்.
    ஒரு சின்ன கிண்ணத்தில் எடுத்து பாதாம் துருவலை தூவி பரிமாறவும்.

    Amaranth seeds Payasam 

    இவ்வகையில் செய்த பாயசத்தில் அமராந்த விதைகள் பல்லில் நறுக் நறுக் என்று கடி படுவது பாயசத்தின் சுவையை மேலும் கூட்டுகிறது.

     குறிப்பு :
    பால் சேர்த்து செய்யும் போது வெல்லம் சேர்த்த பின் பாயசத்தை கொதிக்க விட்டால் திரிந்து விடும்.