Search This Blog

Sunday, August 24, 2014

Kovaikkai Curry

#கோவைக்காய் #கறி : சென்னையில்தான் முதன் முதலில் கோவைக்காயை சமைத்து சாப்பிடலாம் என அறிந்து கொண்டேன். தோட்டத்தின் வேலியில் இக்கொடிகளை காயுடன் பார்த்திருக்கிறேன். ஆனால் அவைகள் வாயில் வைக்க முடியாத அளவிற்கு மிகவும் கசப்பாக இருக்கும்.
இங்கு ராய்ப்பூரிலும் கோவைக்காய் கிடைக்கிறது. வெளி தோற்றத்தில் பர்வல் போன்றே இருந்தாலும் உள்ளே விதைகள் வித்தியாசமான முறையில் உள்ளது.
நான் இங்கு கோவைக்காயை கொண்டு கறி செய்வதெப்படி என விவரிக்க இருக்கிறேன்.

தேவையான பொருட்கள் :

கோவைக்காய்

200 கிராம்                     கோவைக்காய், வட்ட வடிவமாக நறுக்கவும்.
1 Tsp                                 சாம்பார் பொடி
2 சிட்டிகை                   மஞ்சள் தூள்
2 Tsp                                 எண்ணெய்
1/2 Tsp                              கடுகு
1 Tsp                                 உளுத்தம் பருப்பு

கோவைக்காய்

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
கடுகு வெடித்த பின்னர் உளுத்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.
உளுத்தம் பருப்பு சிவந்தவுடன் மஞ்சத்தூள், வெட்டிவைத்த காய்கறிகள் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டிய பின்னர் சாம்பார் பொடி  மற்று உப்பு சேர்த்து கலந்து விடவும்.


மூடியினால் மூடி வேக விடவும்.
அவ்வப்போது திறந்து கிளறி விடவும்.
வெந்த பிறகு உப்பு சரி பார்த்து தண்ணீர் சுண்டும் வரை அடுப்பில் சிறிய தீயில்  வைத்து  பிரட்டி விடவும்.


தயாரான பின் ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சுவையான ஒரு கார கறி தயார்.

கோவைக்காய் கறி

சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் சாப்பிட அருமையான கறி. கார கறியானதால் தயிர் சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.




மற்ற கறி வகைகள் முயற்சிக்க

பர்வல் கறி 





No comments:

Post a Comment