Search This Blog

Showing posts with label சேனை கிழங்கு. Show all posts
Showing posts with label சேனை கிழங்கு. Show all posts

Saturday, March 22, 2014

Senai Kizhangu Vathakuzhambu

#சேனைகிழங்குவத்தக்குழம்பு : வெகு நாட்களுக்குப் பிறகு #சேனைகிழங்கு வாங்கி வந்தேன். கார கறி செய்தது போக சொற்ப அளவு #கிழங்கு மீதம் இருந்தது. அதனை உபயோகித்து #வத்தக்குழம்பு செய்தேன். எப்படி என இனி பார்ப்போம்.

சேனைகிழங்கு வத்தக்குழம்பு

தேவையான பொருட்கள் :
சின்ன நெல்லிக்காய் அளவு                         புளி
1/2 கப்                                                                 சேனை கிழங்கு துண்டுகள்
7                                                                           சின்ன வெங்காயம்
20 பற்கள்                                                            பூண்டு
4 அ 5                                                                   வெண்டைக்காய் [ இருந்தால் ]
1/2                                                                        முருங்கைக்காய் [ இருந்தால் ]
1 Tsp                                                                     மணத்தக்காளி வற்றல் [ இருந்தால் ]
1 சிறிய அளவு                                                   தக்காளி
1 Tsp                                                                     கடுகு
2 Tsp                                                                      நிலக்கடலை
1 Tsp                                                                      கடலை பருப்பு
1/4 Tsp                                                                   வெந்தயம்
10 இலைகள்                                                       கருவேப்பிலை


1/4 Tsp                                                                     பெருங்காய தூள்
1 Tsp                                                                        மல்லி தூள்
1/2 Tsp                                                                     சீரகத்தூள்
3 Tsp குவித்து                                                     சாம்பார் தூள்
1/4 Tsp                                                                     மஞ்சத்தூள்
2 Tsp                                                                        உப்பு
3 Tsp                                                                        நல்லெண்ணெய்
1 Tsp ( விருப்பப்பட்டால் )                              வெல்லம்

செய்முறை :
புளியை சிறிது  சூடான தண்ணீரில் ஊற வைக்கவும்.
வெங்காயத்தையும் பூண்டையும் உறித்து சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து 2 Tsp எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விடவும் .
அதன் பின் வற்றல் போட்டு வறுக்கவும்.
வற்றல் நன்றாக பொறிந்ததும்  கடலை பருப்பு, நிலக்கடலை போட்டு வறுக்கவும்.


பொன்னிறமானதும் வெந்தயம் மற்றும் பெருங்காயம் சேர்த்து சிறிது வறுத்தபின் குக்கரில் எடுத்து போடவும்.
மீண்டும் அதே  எண்ணெய் சட்டியில் 1 Tsp எண்ணெய் சேர்த்து வெங்காயம், பூண்டு போட்டு மணம் வரும் வரை வதக்கவும்.
பிறகு தக்காளியை 1 நிமிடம் வதக்கவும்.


கொடுக்கப்பட்டுள்ள தூள்களை சேர்த்து சில வினாடிகள் பிரட்டி விட்டு குக்கரில் எடுத்து போடவும்.

புளியை 1 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி குக்கரில் விடவும்.
மேலும் 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
உப்பை சேர்த்து கொதிக்கவிடவும். விரும்பினால் ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்க்கலாம்.

குக்கரை மூடி வெயிட் வைத்து 1 விசில் வரும் வரை அதிக தீயில்  வேகவிடவும்.
ஆவி அடங்கியவுடன் திறந்து வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.

சேனைகிழங்கு வத்தக்குழம்பு

சுவையான வத்தக் குழம்பு தயார்.

சூடான சாதத்தில் பருப்பும் நெய்யும் சேர்த்து பிசைந்து வத்தக் குழம்பு தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் சுவையே அலாதிதான்.
அதே போல கீரை மசியலும் நல்லெண்ணையும் சேர்த்து பிசைந்த சாதத்திற்கும் வத்தக் குழம்பு தொட்டுகொள்ள நன்றாக இருக்கும்.


சாதத்தில் தேவையான அளவு வத்தக் குழம்பு ஊற்றி நல்லெண்ணெயுடன் பிசைந்து பிரியமான துவட்டலுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.







சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

சாம்பார் பொடி
சாம்பார் பொடி
வத்தக்குழம்பு
வத்தக்குழம்பு
புளிக்கூழ்
புளிக்கூழ்
மணத்தக்காளி வத்தக்குழம்பு
மணத்தக்காளி வத்தக்குழம்பு
பஜ்ஜி
பஜ்ஜி




Saturday, February 8, 2014

Senai Kizhangu Kara Curry

சேனை கிழங்கு கார கறி : வெகு நாட்களுக்கு பிறகு இந்த கிழங்கை சமைக்கிறேன். இங்கு கிடைக்கும் கிழங்கு அரிப்புத் தன்மை அதிகமாக இருப்பதனால் வாங்குவதே இல்லை. திருமண விருந்தில் அநேகமாக இந்த கார கறி இடம் பெற்றிருக்கும். இந்த கறி செய்ய கிழங்கை வெட்டி வேகவைத்து பிறகு எண்ணெயில் பொரித்து எடுத்த பின் வெங்காயம் தக்காளி மற்றும் மசாலாக்களுடன் சேர்த்து கறி செய்யப்படுகிறது. ஆனால் இங்கு எண்ணெயில் பொரிக்காமல் செய்வது எப்படி என பார்க்கலாம்.
அடுப்பையும் மைக்ரோவேவ் அவனையும் உபயோகப் படுத்தியிருக்கிறேன்.
சேனையை தோல் நீக்கி ஒரே அளவு சதுர துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
இனி செய்முறையை பார்க்கலாம்.

சேனை கிழங்கு கார கறி

தேவையான பொருட்கள் :


1 கப்                                          சேனை துண்டுகள்
1 சிட்டிகை                             மஞ்சத்தூள்
1/4 Tsp                                       மிளகாய்த்தூள்
1/2 Tsp                                       உப்பு

கறி செய்ய :


1 சிறிய அளவு                      வெங்காயம்
1                                                  தக்காளி
10                                                கருவேப்பிலை
சிறிது                                       கொத்தமல்லி
1 சிட்டிகை                             மஞ்சத்தூள்
1/2 Tsp                                        மிளகாய்த்தூள்

தாளிக்க :
1/2 Tsp                                        கடுகு
1 Tsp                                           உளுத்தம் பருப்பு
2 Tsp                                           எண்ணெய்
அலங்கரிக்க தேவையான கொத்தமல்லி.

செய்முறை :
குக்கரில் 1/2 கப் தண்ணீர், சேனை துண்டுகள், மஞ்சத்தூள், மிளகாய்த்தூள் மற்றும்  உப்பு சேர்த்து மூடி போட்டு வெயிட் பொருத்தி 1 விசில் வரும் வரை வேகவைக்கவும்.

நீராவியை உடனே நீக்கி தண்ணீரை வடித்து விட்டு ஒரு மைக்ரோவேவ் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
1/2 Tsp எண்ணெயை  வெந்த கிழங்கின் மேல் விட்டு கலக்கவும்.


மைக்ரோவேவ் அவனில் 1 நிமிடம் சூடு பண்ணவும்.
வெளியே எடுத்து கலக்கி விட்டு ஒரு 1/2 நிமிடம் வைத்து எடுக்கவும்.


தண்ணீர் பசை போய் லேசாக வறுபட்ட நிலையில் இருந்தால் போதும்.
சிவக்க வரும் வரை மைக்ரோவேவில் வைத்தால் ரப்பர் போல ஆகிவிடும்.
மைக்ரோவேவ் செய்த கிழங்கை தனியே வைக்கவும்.

இப்போது அடுப்பில் வாணலியை சூடாக்கவும்.
எண்ணெய் விட்டு கடுகு வெடிக்க விட்டு உளுத்தம் பருப்பை சேர்க்கவும்.
பருப்பு சிவந்தவுடன் கருவேப்பிலை சேர்த்து சிறிது வதக்கிய பின் மஞ்சத்தூள், மிளகாய் தூள் சேர்த்தவுடன் வெங்காயம் சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வதக்கவும்.
தக்காளியை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் தக்காளிக்கு தேவையான உப்பு சேர்த்து கிளறி விடவும்.


இந்த சமயத்தில் கிழங்கை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.


பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைத்து கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.                             
குறிப்பு :

  • இந்த கறி சிறப்பாக அமைய கிழங்கை சரியாக வேக வைப்பது மிக மிக அவசியம்.
  • கிழங்கு அதிகமாக வெந்து விட்டால் தனித்தனியாக இல்லாமல் மாவு போல் மசிந்து விடும்.
  • மைக்ரோவேவ் செய்ய வேண்டிய நேரம் எடுத்துக் கொள்ளும் கிழங்கின் அளவை பொருத்தது.
  • மைக்ரோவேவ் இல்லையென்றால் வேக வைத்த பின் கிழங்கை எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு மிளகாத்தூள் அளவை கூடி குறைத்துக் கொள்ளவும்.