Search This Blog

Showing posts with label onion. Show all posts
Showing posts with label onion. Show all posts

Monday, June 15, 2015

Onion-Curry

#வெங்காயகறி : மற்ற காய்கறிகளுடன் #வெங்காயம் சேர்த்து தொட்டுக்கொள்ள கறி செய்வது வழக்கம். வெங்காயம் மட்டுமே உபயோகித்து கறி செய்தால் எப்படி இருக்கும்?!!
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் எனது தாயார் பூரி செய்தால் மதிய உணவிற்கு டப்பாவில் எடுத்து செல்ல இந்த வெங்காய கறியை செய்து கொடுப்பார்கள். பூரி மசாலா எடுத்து சென்றால் பூரி மசாலாவில் ஊறி நசநசவென ஆகி விடும். அதனால் வெங்காய கறியை செய்து பூரியினுள் வைத்து சுருட்டி பூரி ரோல் வைத்து டப்பாவில் அடைத்து கொடுப்பார்கள். மிகவும் சுவையாக இருக்கும். சப்பாத்தியுடனும் வெங்காய கறி ரோல் செய்யலாம். ஆனால் வெங்காய கறி பூரி ரோல் மிகவும் சுவை மிகுந்த காம்பினேஷன் ஆகும்.
முதலில் வெங்காய கறியை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
அடுத்து பூரி மற்றும் சப்பாத்தி ரோல் செய்வது எப்படி என்றும் பார்ப்போம்.

வெங்காய கறி



தேவையான பொருட்கள் :
4 or 5வெங்காயம், மெல்லிய நீள துண்டுகளாக நறுக்கவும்
4 or 5கறுவேப்பிலை
1/4 Tspமஞ்சத்தூள்
1 Tspசாம்பார் பொடி
3/4 Tspஉப்பு
தாளிக்க :
3 Tspஎண்ணெய்
1/2 Tspகடுகு
1 Tspஉளுத்தம் பருப்பு
விருப்பட்டால் :
1/2 cupவெந்தய கீரை


செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் முதலில் கடுகு போட்டு வெடித்த பின்னர் உளுத்தம் பருப்பை சேர்க்கவும்.
பருப்பு பொன்னிறமானதும் வெங்காயம், சாம்பார் பொடி,  மஞ்சத்தூள் மற்றும் உப்பு  சேர்த்து வதக்கவும்.
அவ்வப்போது கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.
நன்கு வதங்கி பச்சை வாசனை போன பின் வெங்காயம் பளபளப்பாக வரும் வரை அடுப்பில் குறைந்த தீயில் வைத்திருக்கவும்.

வெங்காய கறி வெங்காய கறி
அடுப்பை அணைத்து விட்டு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். 

வெங்காய கறி

வெந்தய கீரை வெங்காய கறி :
வெந்தய கீரை எடுத்திருந்தால் கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
வெந்தய கீரையை கடைசியாக வெங்காய கறியை அடுப்பிலிருந்து இறக்கும் தருவாயில் சேர்க்கவும்.
ஒரு நிமிடம் கறியுடன் சேர்த்து வதக்கினால் போதுமானது.

அடுப்பை அணைத்து விட்டு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். 

Vengaya Venthayakeerai Curry [ Onion Fenugreek leaf Curry ] வெந்தய கீரை வெங்காய கறி
பூரி ரோல் மற்றும் சப்பாத்தி ரோல் செய்முறை :
பூரி தயாரித்த பின்னர் கையினால் அமுக்கி தட்டையாக்கி ஒரு தட்டில் வைக்கவும்.
அதன் மீது தயாரித்து வைத்துள்ள வெங்காய கறியை பரப்பவும்.
நன்கு இறுக்கமாக சுருட்டிய பின்னர் டிஷ்யு பேப்பரில் சுற்றி டப்பாவில் அடுக்கவும்.
இதே போல சப்பாத்தியின் மீது வைத்து இறுக்கமாக சுருட்டினால் சப்பாத்தி ரோல் தயார்.
poori rolls
வெங்காய கறி பூரி ரோல் சப்பாத்தி ரோல்




மற்ற சில சமையல் செய்முறைகள் : 
பூரி
பூரி
பூரி மசாலா
பூரி மசாலா
கொடி பசலை பூரி
கொடி பசலை பூரி
பாலக் சப்பாத்தி
சிகப்பு கீரை சப்பாத்தி
சிகப்பு கீரை சப்பாத்தி





Monday, June 2, 2014

Vengaya Sambar

#வெங்காயசாம்பார் : வெங்காய சாம்பார், சாம்பாரிலேயே  மிக மிக சுவையானது. #சிறியவெங்காயம் கொண்டுதான் இந்த #சாம்பார் செய்யப்பட வேண்டும். சின்ன வெங்காயம்தான் சாம்பாருக்கு ருசியையும் மணத்தையும் அளிக்கிறது. சென்னை மற்றும் பெங்களுரு போன்ற நகரங்களில் சின்ன வெங்காயத்தை #சாம்பார்வெங்காயம் என்றே அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு சின்ன வெங்காயமும் சாம்பாரும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.
இனி செய்முறையை பார்ப்போம்.

வெங்காய சாம்பார்


தேவையான பொருட்கள் :

வேகவைத்த துவரம் பருப்பு                  : 3 Tbsp
புளி                                                             : 1 சின்ன கோலிகுண்டு  அளவு
சின்ன வெங்காயம்                                : 20 - 25
தக்காளி                                                    : 2, நான்காக அரியவும்
பச்சை மிளகாய்                                      : 2
கருவேப்பிலை                                        : 10
கொத்தமல்லி கீரை                                : சிறிதளவு

சாம்பார் பவுடர்                                       : 2 Tsp
மஞ்சத்தூள்                                               : 1 சிட்டிகை
மல்லித்தூள்                                             : 1 Tsp
உப்பு                                                             : 2 Tsp [ அட்ஜஸ்ட் ]


தாளிக்க :

எண்ணெய்                                                 : 1/2 Tsp
கடுகு                                                           : 1/2 Tsp
பெருங்காயம்                                            : சிறு துண்டு

செய்முறை :
புளியை இளஞ்சூடான தண்ணீரில் ஊற வைக்கவும்.

சின்ன வெங்காயத்தின் தோலை உரித்து ஒன்றிரண்டாக அறிந்துகொள்ளவும்.
பச்சை மிளகாயை நீள  வாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
கருவேப்பிலை , கொத்தமல்லி ஆகியவற்றை தனி தனியாக கழுவி ஆற வைக்கவும்.

குக்கரில் பருப்பை போட்டு நன்கு மசித்து 3/4  Cup நீர் சேர்க்கவும்.

அதில் சாம்பார் பொடி , மல்லி பொடி, மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு முதலில் கடுகை வெடிக்க விடவும்.
பின் பெருங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய், மற்றும் வெங்காயத்தை வரிசையாக போட்டு சிறிது வதக்கவும்.



வெங்காய வாசனை வந்தவுடன் கொதித்துகொண்டிருக்கும் சாம்பாரில்  கொட்டவும்.

1 கப் தண்ணீரில் புளியை கரைத்து வடி கட்டி கொதிக்கும் சாம்பாரில் சேர்க்கவும்.
குக்கரை மூடி வெயிட் வைத்து 1 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
ஆவி நன்கு அடங்கியவுடன் வேறொரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

கொத்தமல்லி தழையினால் அலங்கரிக்கவும்.
சுவையான சாம்பார் தயார்.

வெங்காய சாம்பார்

சூடான சாதத்தில் ஒரு கரண்டி சாம்பார் விட்டு பிசைந்து இஷ்டமான துவட்டலுடன் சாப்பிட்டால் ஆ.. ஆஹா... என்ன சுவை!!..என்ன சுவை!!

சாம்பாருடன் ஒன்றிரண்டு துளிகள் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் இன்னும் சுவையோ சுவை...!!

பருப்பு சாதத்திற்கு தொட்டு கொண்டு சாப்பிடலாம்.
சாதத்துடன் பொடி சேர்த்து பிசைந்து சாப்பிடும் போதும் சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். 

மற்ற சாம்பார் வகைகள்

டர்னிப் சாம்பார் உருளைகிழங்கு சாம்பார்