Search This Blog

Showing posts with label வெங்காயம். Show all posts
Showing posts with label வெங்காயம். Show all posts

Monday, June 15, 2015

Onion-Curry

#வெங்காயகறி : மற்ற காய்கறிகளுடன் #வெங்காயம் சேர்த்து தொட்டுக்கொள்ள கறி செய்வது வழக்கம். வெங்காயம் மட்டுமே உபயோகித்து கறி செய்தால் எப்படி இருக்கும்?!!
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் எனது தாயார் பூரி செய்தால் மதிய உணவிற்கு டப்பாவில் எடுத்து செல்ல இந்த வெங்காய கறியை செய்து கொடுப்பார்கள். பூரி மசாலா எடுத்து சென்றால் பூரி மசாலாவில் ஊறி நசநசவென ஆகி விடும். அதனால் வெங்காய கறியை செய்து பூரியினுள் வைத்து சுருட்டி பூரி ரோல் வைத்து டப்பாவில் அடைத்து கொடுப்பார்கள். மிகவும் சுவையாக இருக்கும். சப்பாத்தியுடனும் வெங்காய கறி ரோல் செய்யலாம். ஆனால் வெங்காய கறி பூரி ரோல் மிகவும் சுவை மிகுந்த காம்பினேஷன் ஆகும்.
முதலில் வெங்காய கறியை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
அடுத்து பூரி மற்றும் சப்பாத்தி ரோல் செய்வது எப்படி என்றும் பார்ப்போம்.

வெங்காய கறி



தேவையான பொருட்கள் :
4 or 5வெங்காயம், மெல்லிய நீள துண்டுகளாக நறுக்கவும்
4 or 5கறுவேப்பிலை
1/4 Tspமஞ்சத்தூள்
1 Tspசாம்பார் பொடி
3/4 Tspஉப்பு
தாளிக்க :
3 Tspஎண்ணெய்
1/2 Tspகடுகு
1 Tspஉளுத்தம் பருப்பு
விருப்பட்டால் :
1/2 cupவெந்தய கீரை


செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் முதலில் கடுகு போட்டு வெடித்த பின்னர் உளுத்தம் பருப்பை சேர்க்கவும்.
பருப்பு பொன்னிறமானதும் வெங்காயம், சாம்பார் பொடி,  மஞ்சத்தூள் மற்றும் உப்பு  சேர்த்து வதக்கவும்.
அவ்வப்போது கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.
நன்கு வதங்கி பச்சை வாசனை போன பின் வெங்காயம் பளபளப்பாக வரும் வரை அடுப்பில் குறைந்த தீயில் வைத்திருக்கவும்.

வெங்காய கறி வெங்காய கறி
அடுப்பை அணைத்து விட்டு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். 

வெங்காய கறி

வெந்தய கீரை வெங்காய கறி :
வெந்தய கீரை எடுத்திருந்தால் கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
வெந்தய கீரையை கடைசியாக வெங்காய கறியை அடுப்பிலிருந்து இறக்கும் தருவாயில் சேர்க்கவும்.
ஒரு நிமிடம் கறியுடன் சேர்த்து வதக்கினால் போதுமானது.

அடுப்பை அணைத்து விட்டு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். 

Vengaya Venthayakeerai Curry [ Onion Fenugreek leaf Curry ] வெந்தய கீரை வெங்காய கறி
பூரி ரோல் மற்றும் சப்பாத்தி ரோல் செய்முறை :
பூரி தயாரித்த பின்னர் கையினால் அமுக்கி தட்டையாக்கி ஒரு தட்டில் வைக்கவும்.
அதன் மீது தயாரித்து வைத்துள்ள வெங்காய கறியை பரப்பவும்.
நன்கு இறுக்கமாக சுருட்டிய பின்னர் டிஷ்யு பேப்பரில் சுற்றி டப்பாவில் அடுக்கவும்.
இதே போல சப்பாத்தியின் மீது வைத்து இறுக்கமாக சுருட்டினால் சப்பாத்தி ரோல் தயார்.
poori rolls
வெங்காய கறி பூரி ரோல் சப்பாத்தி ரோல்




மற்ற சில சமையல் செய்முறைகள் : 
பூரி
பூரி
பூரி மசாலா
பூரி மசாலா
கொடி பசலை பூரி
கொடி பசலை பூரி
பாலக் சப்பாத்தி
சிகப்பு கீரை சப்பாத்தி
சிகப்பு கீரை சப்பாத்தி





Thursday, January 29, 2015

Vengayam-Thakkali-Chutney

#வெங்காயம்தக்காளிசட்னி : #வெங்காயம் மற்றும் #தக்காளி யை வதக்கி வறுத்த உளுத்தம் பருப்பு மற்றும் சிகப்பு மிளகாயுடன் சேர்த்து அரைத்து எடுத்தால் அருமையான சட்னி தயார். வெங்காயத்தின் இனிப்பு சுவையும் மணமும் இந்த சட்னியின் ருசியை மேலும் சுவையுடையதாக ஆக்குகிறது.
சென்ற பதிவில் கார சாரமான பூண்டு தக்காளி சட்னியின் செய்முறையை பார்த்தோம்.
இனி வெங்காயம் தக்காளி சட்னியை எவ்வாறு செய்வது என காணலாம்.

வெங்காயம் தக்காளி சட்னி

தேவையான பொருட்கள் :
2தக்காளி
2வெங்காயம், பெரிய அளவு
4சிகப்பு மிளகாய் [ அட்ஜஸ்ட் ]
2 Tspஉளுத்தம் பருப்பு
துண்டு சிறியது பெருங்காயம்
2 அ 3பூண்டு பற்கள்
கோலிகுண்டுஅளவுபுளி
1 1/2 Tspஉப்பு [ adjust ]
தாளிக்க :
1/2 Tspகடுகு
1/4 Tspபெருங்காயத்தூள்
10கறுவேப்பிலை
2 Tspஎண்ணெய்

செய்முறை :
அடுப்பில் வாணலியை மிதமான தீயில் சூடாக்கவும்.
எண்ணெய் விட்டு சூடானதும் சிகப்பு மிளகாயையும் பெருங்காயத்தையும்  சிவக்க வறுத்து எடுக்கவும்.
அடுத்து உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும்.


அதே வாணலியில் மேலும் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி எடுக்கவும். நன்கு வாசனை வரும் வரை வதக்கி எடுக்கவும்.
அடுத்து அதே வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு தக்காளியை வதக்கவும்.
மிருதுவாகவும் வேகும் வரையிலும் வதக்கி எடுக்கவும்.
அனைத்தையும் ஆற வைக்கவும்.


இவையனைத்தையும் கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
வாணலியை எண்ணெயுடன் சூடாக்கி கடுகு சேர்த்து வெடித்த பின்னர் கறுவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
தாளித்ததை கிண்ணத்தில் உள்ள சட்னியின் மேலே கொட்டவும்.
கலந்து பரிமாறவும்.

வெங்காயம் தக்காளி சட்னி

இட்லிதோசை, மற்றும் ஆப்பம் போன்ற உணவு வகைகளுடன் ருசிக்க அருமையாக இருக்கும்.





சில சட்னி வகைகளின் சமையல் குறிப்புகள் :

  • கீழே உள்ள படங்களின் மேல் அம்புக்குறியை காட்டினால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்து கொள்ளலாம்
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் சமையல் குறிப்பின் பக்கத்திற்கு செல்லலாம்

பூண்டு மிளகாய் சட்னி கறுவேப்பிலை பூண்டுமிளகாய்சட்னி பூண்டு தக்காளி சட்னி
கொத்தமல்லி தேங்காய் சட்னி நெல்லிக்காய் புதினா துவையல்







இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.

Saturday, July 26, 2014

Onion Red Chutney

#வெங்காயம்சிகப்புசட்னி : மிக எளிதில் செய்யக்கூடிய கார சாரமான சட்னியாகும். தேவையான பொருட்களனைத்தும் பச்சையாகவே அரைப்பதனால் உடலுக்கு மிக மிக நல்லது. இனி செய்வதெப்படி என பார்க்கலாம்.

வெங்காயம் சிகப்பு சட்னி

தேவையான பொருட்கள் :
8 - 10                                         சிகப்பு மிளகாய்
15 - 20                                       சின்ன வெங்காயம் உரித்தது
அல்லது
2                                                பெரிய வெங்காயம், துண்டுகளாக்கவும்
30                                              கறுவேப்பிலை
1/2 Tsp                                       உப்பு


செய்முறை :
மிக்ஸி பாத்திரத்தில் மிளகாய், உப்பு இரண்டையும் பொடி பண்ணிக்கொள்ளவும்.
பின்னர் வெங்காயம் மற்றும் கறுவேப்பிலை சேர்த்து நன்கு மைய அரைத்துக்கொள்ளவும்.
வெங்காயத்தின் தண்ணீரே சட்னியை அரைக்க போதுமானது.
தேவையானால் சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.

இந்த சட்னி இட்லி மற்றும் தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
தட்டில் இட்லிக்கு பக்கத்தில் ஒரு தேக்கரண்டி இந்த சட்னியை வைத்து ஒரு தேக்கரண்டி நல்லெண்ணையை சட்னியின் மேல் விட்டு சுவைத்தால் மிக மிக அருமையாக இருக்கும்.




மேலும் சில சட்னி வகைகள்

பூண்டு தக்காளி சட்னி தக்காளி கொத்தமல்லி சட்னி வெங்காயம் தக்காளி சட்னி



Monday, June 2, 2014

Vengaya Sambar

#வெங்காயசாம்பார் : வெங்காய சாம்பார், சாம்பாரிலேயே  மிக மிக சுவையானது. #சிறியவெங்காயம் கொண்டுதான் இந்த #சாம்பார் செய்யப்பட வேண்டும். சின்ன வெங்காயம்தான் சாம்பாருக்கு ருசியையும் மணத்தையும் அளிக்கிறது. சென்னை மற்றும் பெங்களுரு போன்ற நகரங்களில் சின்ன வெங்காயத்தை #சாம்பார்வெங்காயம் என்றே அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு சின்ன வெங்காயமும் சாம்பாரும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.
இனி செய்முறையை பார்ப்போம்.

வெங்காய சாம்பார்


தேவையான பொருட்கள் :

வேகவைத்த துவரம் பருப்பு                  : 3 Tbsp
புளி                                                             : 1 சின்ன கோலிகுண்டு  அளவு
சின்ன வெங்காயம்                                : 20 - 25
தக்காளி                                                    : 2, நான்காக அரியவும்
பச்சை மிளகாய்                                      : 2
கருவேப்பிலை                                        : 10
கொத்தமல்லி கீரை                                : சிறிதளவு

சாம்பார் பவுடர்                                       : 2 Tsp
மஞ்சத்தூள்                                               : 1 சிட்டிகை
மல்லித்தூள்                                             : 1 Tsp
உப்பு                                                             : 2 Tsp [ அட்ஜஸ்ட் ]


தாளிக்க :

எண்ணெய்                                                 : 1/2 Tsp
கடுகு                                                           : 1/2 Tsp
பெருங்காயம்                                            : சிறு துண்டு

செய்முறை :
புளியை இளஞ்சூடான தண்ணீரில் ஊற வைக்கவும்.

சின்ன வெங்காயத்தின் தோலை உரித்து ஒன்றிரண்டாக அறிந்துகொள்ளவும்.
பச்சை மிளகாயை நீள  வாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
கருவேப்பிலை , கொத்தமல்லி ஆகியவற்றை தனி தனியாக கழுவி ஆற வைக்கவும்.

குக்கரில் பருப்பை போட்டு நன்கு மசித்து 3/4  Cup நீர் சேர்க்கவும்.

அதில் சாம்பார் பொடி , மல்லி பொடி, மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு முதலில் கடுகை வெடிக்க விடவும்.
பின் பெருங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய், மற்றும் வெங்காயத்தை வரிசையாக போட்டு சிறிது வதக்கவும்.



வெங்காய வாசனை வந்தவுடன் கொதித்துகொண்டிருக்கும் சாம்பாரில்  கொட்டவும்.

1 கப் தண்ணீரில் புளியை கரைத்து வடி கட்டி கொதிக்கும் சாம்பாரில் சேர்க்கவும்.
குக்கரை மூடி வெயிட் வைத்து 1 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
ஆவி நன்கு அடங்கியவுடன் வேறொரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

கொத்தமல்லி தழையினால் அலங்கரிக்கவும்.
சுவையான சாம்பார் தயார்.

வெங்காய சாம்பார்

சூடான சாதத்தில் ஒரு கரண்டி சாம்பார் விட்டு பிசைந்து இஷ்டமான துவட்டலுடன் சாப்பிட்டால் ஆ.. ஆஹா... என்ன சுவை!!..என்ன சுவை!!

சாம்பாருடன் ஒன்றிரண்டு துளிகள் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் இன்னும் சுவையோ சுவை...!!

பருப்பு சாதத்திற்கு தொட்டு கொண்டு சாப்பிடலாம்.
சாதத்துடன் பொடி சேர்த்து பிசைந்து சாப்பிடும் போதும் சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். 

மற்ற சாம்பார் வகைகள்

டர்னிப் சாம்பார் உருளைகிழங்கு சாம்பார்

Saturday, April 26, 2014

Vengaya Vathal - Onion Vathal

#வெங்காயவத்தல் - #வெங்காய வற்றல் : கோடைகாலம் வந்ததும் #வத்தல் போடுவதுதான் தலையாய வேலை. வத்தல் போட்டு காயவைத்து டின்னில் அடைத்து வைத்துவிட்டால் ஒரு  வருடத்திற்கு கவலையில்லாமல் பொரித்து சாப்பிடலாம்.
பல்வேறு வகையான வற்றல்கள் போடப் படுவதுண்டு. அவற்றில் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமானது வெங்காய வத்தல்தான். சாம்பார், ரசம், புளில்லாகறி ஆகியவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.



இப்போது வெங்காய #வற்றல் எவ்வாறு செய்வது என பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :
2 கப்                                           புழுங்கரிசி [ இட்லி அரிசி ]
6                                                  பச்சை மிளகாய்
2 Tsp                                           சீரகம்
1/4 கப்                                       ஜவ்வரிசி
3 Tsp                                           உப்பு [ அட்ஜஸ்ட் ]
10 - 15                                        சின்ன வெங்காயம்

செய்முறை :
வத்தல் போடப்போகும் நாளிற்கு முந்தைய தினம் மதியம் அரிசியை நன்கு கழுவி விட்டு ஊறவைக்கவும்.
மாலை கிரைண்டரில் மைய அரைத்து உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்.

காலையில் வெய்யில் வருவதற்கு முன் அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து 4 கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.

மற்றொரு அடுப்பில் குக்கரில் ஜவ்வரிசியை 3 விசில் வரும் வரை அதிக தீயில் வேக விடவும்.
பின்னர் தீயை குறைத்து 5 நிமிடங்கள் வேக விடவும்.


அரைத்து வைத்துள்ள மாவில் 1/2 கப்  தண்ணீர் விட்டு கரைத்து சூடேறிக்கொண்டிருக்கும் தண்ணீருடன் சேர்த்து கலக்கவும்.
மிக்சியில் சீரகத்தையும் பச்சை மிளகாயையும் தண்ணீர் விட்டு அரைத்து சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பையும் சேர்த்து கை விடாமல் கிண்டவும்.


தீயை மிதமாக வைத்துக் கொள்ளவும்.
அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.


சிறிது நேரத்தில் கஞ்சி போன்ற பதத்தை அடையும்.
பிறகு கெட்டியாகிக் கொண்டே வரும்.


நன்கு கெட்டியாகி காற்று குமிழ்கள் மாவின் வழியாக சிரம பட்டு வெளியே வரும்.


கெட்டியான கூழ் பதத்திற்கு வரும் போது பாத்திரத்தின் பக்கங்களில் ஒட்டாமல் வரும்.
ஏறக்குறைய அரைமணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் வரை ஆகும்.
அடுப்பை அணைத்து விடவும்.


வெங்காயத்தை தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி சேர்க்கவும்.
வேக வைத்த ஜவ்வரிசியையும் சேர்த்து நன்கு கலந்து விடவும்.


வெளியே ஒரு பிளாஸ்டிக் தாள் அல்லது துணியை பரப்பி சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்து வெய்யிலில் காய வைக்கவும்.


நான்கு மணி நேரம் கழித்து மேல் பக்கம் சிறிது காய்ந்து இருக்கும்.


அப்போது பிளாஸ்டிக் தாளிலிருந்து அல்லது துணியில் பரப்பியிருந்தால் அதிலிருந்து எடுத்து தட்டிற்கு மாற்றவும்.


வெய்யிலில் மாலை வரை காய விடவும்.

மறுநாளும் நன்றாக காய விடவும்.


மேலும் இரண்டு மூன்று தினங்களுக்கு சுக்காக காய வைக்கவும்.


நன்கு காயிந்த பின்னர் காற்றுப் புகா டின்னில் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வைக்கவும்.


பொரிக்கும் முறை :
அடுப்பில் வாணலியை வைத்து தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் நன்கு புகை வரும் அளவிற்கு சூடாக இருக்க வேண்டும்.
இப்போது 5 அல்லது 6 வத்தல்களை போட்டு பொரிக்கவும்.
நன்கு விரிந்து வரும்.
அதனால் ஆறு வத்தல்களுக்கு மேல் ஒரு தடவைக்கு எண்ணெயில் போடக்ககூடாது.
ஒவ்வொரு முறை பொரிக்கும் போதும் எண்ணெய் நன்கு சூடாக இருப்பது மிக மிக அவசியம்.
பொரித்ததை எண்ணெய் உறிஞ்சும் காகிதத்தின் மேல் எடுத்து வைக்கவும்.
பிறகு காற்று புகா பாத்திரத்தில் எடுத்து பத்திர படுத்தவும்.


மிக மிக ருசியான வெங்காய வத்தல் தயார்.

குறிப்பு :
காரம் அதிகம் விரும்புவர்கள் வெங்காயத்தை பொடியாக அரிந்து சேர்க்கும் போது பச்சை மிளகாயையும் பொடியாக அரிந்து சேர்க்கலாம்.





வெங்காயத்தை பத படுத்தும் மற்றொரு முறை :

வெங்காய வடவம்