Search This Blog

Showing posts with label pearl millet. Show all posts
Showing posts with label pearl millet. Show all posts

Wednesday, May 27, 2015

Kambu-Pearl-Millet

#கம்பு
ஆங்கில பெயர் : Pearl Millet
ஹிந்தி பெயர் : பாஜ்ரா
அறிவியல் பெயர் : Pennisetum glaucum
கம்பு


#சிறுதானியங்கள் பற்றி மேலும் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.
Millet
http://en.wikipedia.org/wiki/Millet

இங்கு கம்பு உபயோகித்து செய்யப் பட்டுள்ள உணவு பொருட்களின் சமையல் குறிப்புகளின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • கீழே உள்ள படங்களின் மேல் அம்புக்குறியை [ cursor ஐ ] வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்து கொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் சமையல் குறிப்பு பதிவை காணலாம்.
சிற்றுண்டி வகைகள்
கம்பு சிங்காரா நீர் கொழுக்கட்டை
கம்பு சிங்காரா நீர் கொழுக்கட்டை 
கம்பு காலி ப்ளவர் அடை
கம்பு காலி ப்ளவர் அடை
கம்பு கூழ்
கம்பு  கூழ்
கம்பு தோசை
கம்பு தோசை
கம்பு இட்லி
கம்பு இட்லி


கார வகைகள் 
கம்பு பகோடா
கம்பு பகோடா
கம்பு முறுக்கு
கம்பு முறுக்கு




Monday, September 29, 2014

Kambu-Cauliflower-Adai

#கம்புகாலிப்ளவர்அடை : #கம்பு  #சிறுதானியம் வகைகளுள் மிக முக்கியமானதாகும். இந்தியாவின் பல மாநிலங்களில் பரவலாகப் பயிரிடப்படுகிறது. இதனை உபயோகித்து கூழ், தோசை போன்ற உணவுகள் எப்படி செய்வது என பார்த்திருக்கிறோம்.
இங்கு எளிய முறையில் மிக குறுகிய நேரத்தில் சத்தான அடை செய்வது எப்படி என காண்போம்.
சுமார் 5 முதல் 6 அடைகள் செய்யலாம்.

கம்பு காலிப்ளவர் அடை



தேவையான பொருட்கள் :
மாவு தயார் செய்ய வேண்டியவை 
3/4 Cupகம்பு மாவு  [ Bajra or Pearl millet flour ]
1/8 Cupபலதானிய மாவு [ Multigrain Flour ]
1/8 Cupஅமராந்த் மாவு  [ Optional ]
1 Tspபாப்பரை மாவு  [ Optional ]
1 Tspஉப்பு 
1/8 Cupதயிர் 
மாவில் சேர்க்க வேண்டியவை 
1 small sizeகாலிப்ளவர்
1 Tspசீரகம் 
1/8 Cupவெங்காயம் பொடியாக நறுக்கியது
1/8 Cupகறுவேப்பிலை பொடியாக நறுக்கியது
1/8 Cupகொத்தமல்லி பொடியாக நறுக்கியது
1 or 2பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
1/2 Tspமிளகு பொடித்தது

எண்ணெய்  அடையை சுடுவதற்கு தேவையான அளவு

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள எல்லா மாவையும் போட்டு உப்பு சேர்க்கவும்.
1/2 கப் அளவு தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.


தயிரை  தேக்கரண்டியால் அடித்து மாவில் சேக்கவும்.


நன்கு கலக்கி 15 நிமிடங்களுக்கு தனியே வைக்கவும்.

காலி ப்ளவரை  உப்பு சேர்த்த சுடு தண்ணீரில் 5 நிமிடங்கள் வைத்து சுத்தப்படுத்தவும்.
அதனை 5 நிமிடங்களுக்குப் பிறகு மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.


அரைத்ததை மாவில் சேர்க்கவும்.
மாவில் சேர்க்க கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்க்கவும்.

நன்கு கலக்கி வைக்கவும்.
அடுப்பில் தோசை கல்லை சூடாக்கி எண்ணெய் தடவவும்.
சூடான கல்லின் மேல் இரண்டு கரண்டி மாவை நடுவில் விட்டு வட்டமான அடையாக பரப்பவும்.
அடையின் மேலும் வரும்புகளை சுற்றியும் எண்ணெய் விட்டு வேக விடவும்.

கம்பு காலிப்ளவர் அடை

ஓரங்கள் சிவக்க ஆரம்பித்ததும் திருப்பிப் போடவும்.

கம்பு காலிப்ளவர் அடை

இரண்டு பக்கங்களும் சிவக்க வெந்தவுடன் தட்டில் எடுத்து வைக்கவும்.

கம்பு காலிப்ளவர் அடை

இதேபோல கம்பு காலிப்ளவர் அடையை ஒவ்வொன்றாக சுட்டெடுக்கவும்.

தேங்காய் சட்னியுடன் அல்லது தக்காளி சாஸுடன் சுவைக்கவும்.
சுவையான கம்பு அடை தயார்!!








மேலும் சில தோசை மற்றும் அடை வகைகள் முயற்சி செய்து பார்க்க

பரங்கிக்காய் அடை
பரங்கிக்காய் அடை
முடக்கத்தான் கீரை தோசை
முடக்கத்தான் தோசை
கொடி பசலை கீரை தோசை
பசலை கீரை தோசை
பெசரட்டு
பெசரட்டு
வாழைப்பூ பசலை அடை
வாழைபூபசலைஅடை





இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.



Sunday, March 16, 2014

Bajra Singhara Neer Kozhukattai

கம்பு சிங்காரா நீர் கொழுக்கட்டை : சிங்கரா என்பது தண்ணீரில் விளையக்கூடிய ஒரு தாவரத்தின் பழமாகும். இங்கு ராய்ப்பூரில் சாலை ஓரத்தில் குவியல் குவியலாக குவித்து குளிர் கால இறுதியில் விற்கப்படும். இது பார்ப்பதற்கு கூரையிலிருந்து தலை கீழாக தொங்கும் வவ்வாலை போன்ற தோற்றமும் நிறமும் கொண்டவையாக இருக்கும். இதன் தோல் மிகவும் அழுத்தமாக இருக்கும். வேக வைத்தால் இளகி உரிக்க இலகுவாக வரும். உள்ளே சாப்பிடும் பகுதி வெள்ளையாக இருக்கும். பிரத்யேக மணம் ஏதும் கிடையாது.
It is called water caltrop, water chestnut, buffalo nut, bat nut, devil pod, ling nut, singhara or panipal.
It belongs to any of three extant species of the genus Trapa : Trapa natans, T. bicornis and the endangered Trapa rossica. The species are floating annual aquatic plants, growing in slow-moving water upto 5 meters deep, native to warm temperate parts of Eurasia and Africa.

In India it is known as singhara or paniphal [ Eastern India ] and is widely cultivated in fresh water lakes. The fruits are eaten raw or boiled. When the fruit has been dried, it is ground to a flour called singhara ka atta. Singara ka atta is used in many religious rituals and can be consumed as a phalahar diet on the Hindu fasting days, the navaratras

Source : Singhara/water chestnut

Health Benefits of Singhara [ water chestnut ]

இதனை காயவைத்து மாவாக்கி விரத நாட்களில் சாப்பிடுகிறார்கள். இதனை உபயோகித்து கொழுக்கட்டை செய்து பார்த்தேன். மிக அருமையாக இருந்தது.
இனி எப்படி என பார்ப்போம்.

கம்பு சிங்காரா நீர் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் :
1/2 கப்                                     சிங்கார மாவு
1/4 கப்                                      கம்பு ரவா
1 Tbsp                                       ஓட்ஸ்
1/4 கப்                                     தேங்காய் துருவல்
1/2 Tsp                                      உப்பு

தாளிக்க :
1/2 Tsp                                    கடுகு
1 Tbsp                                     நில கடலை
1 அ 2                                     சிகப்பு மிளகாய்
1 Tsp                                       எண்ணெய்

மற்ற பொருட்கள் :
1/2 கப்                                  வெந்தய கீரை
1 Tbsp                                    காரட் துருவியது
1 Tbsp                                    கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
8                                              கருவேப்பிலை

செய்முறை :
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சிங்கார மாவு, கம்பு ரவா,  தேங்காய் துருவல், ஓட்ஸ் மற்றும் உப்பு எடுத்துக்கொள்ளவும்.


சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவாக பிசைந்து கொள்ளவும்.


 அடுப்பில் வேறொரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
பிசைந்த மாவை சிறி சிறு உருண்டைகளாக உருட்டவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் உருண்டைகளை மெதுவாக சேர்க்கவும்.
சேர்த்தவுடன் கரண்டியால் கிளற வேண்டாம்.

தீயை சிறியதாக்கி 3 நிமிடங்கள் உருண்டைகளை வேக விடவும்.


பிறகு ஒரு கரண்டியால் உருண்டைகளை உடைக்காமல் கிண்டி விடவும்.
உருண்டையின் உள்  வரை வேக வைத்து தனியே எடுத்து வைக்கவும்.


கொதித்த தண்ணீரும் தற்போது கஞ்சி பதத்தில் இருக்கும்.
இந்த கஞ்சியை கீழே கொட்டிவிட வேண்டாம்.
உப்பு அல்லது வெல்லம் சேர்த்து பருகலாம்.

இப்போது அடுப்பில் வாணலியை ஏற்றி என்னை விட்டு கடுகை  வெடிக்க விடவும்.
பிறகு மிளகாயை கிள்ளி  போட்டு, கடலையை  சிவக்க வறுத்த பின் கருவேப்பிலையையும் கொத்தமல்லியையும் சேர்க்கவும்.
பிறகு வெந்தய கீரை மற்றும் காரட் சேர்த்து சேர்த்து சில மணித்துளிகள் வதக்கவும். 1 அல்லது 2 நிமிடம் மூடி வேக விடவும்.
பிறகு வேக வைத்த உருண்டைகளை சேர்த்து உப்பும் சேர்த்து கிளறி பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.


கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
சுவையான நீர் கொழுக்கட்டை தயார். 




மற்றும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
கம்பு தோசை
கம்பு 
தோசை 
கம்பு காலி ப்ளவர் அடை
கம்பு காலி 
ப்ளவர் அடை
கம்பு கூழ்
கம்பு
கூழ்








Sunday, February 9, 2014

Kambu Koozh

#கம்புகூழ் : ஆங்கிலத்தில் #கம்பு #PearlMillet என அழைக்கப்படுகிறது.
ஹிந்தியில் பாஜ்ரா [ #Bajra ] எனவும், தெலுங்கில் #Sajja அல்லது #Gantilu  எனவும், கன்னடத்தில் #Sajje எனவும் அழைக்கப்படுகிறது.
இதன் அறிவியல் பெயர் : Pennisetum glaucum

கம்பு [ Pearl millet ]

உலகளவில் சிறு தானிய வகைகளில் மிக அதிகமாகப்  பயிரிடப்படும் தானியம் கம்பு ஆகும்.
மேலும் அறிய
சிறு தானியங்கள்
முழு கம்பு தானியம், கம்பு குருணை [ ரவா ], மற்றும் கம்பு மாவு சமையலில் உபயோகப்படுத்தப்படுகிறது.
இங்கு கம்பு உபயோகப் படுத்தி கூழ் [ கஞ்சி ] செய்வது எப்படி என பார்ப்போம்.

கம்பு கூழ்

தேவையான பொருட்கள் :
1 Tbsp                                         கம்பு
1/2 கப்                                        தயிர்
3                                                  சின்ன வெங்காயம் ( விருப்பப்பட்டால் )
6                                                  கருவேப்பிலை ( விருப்பப்பட்டால் )
1 சிட்டிகை                             பெருங்காயதூள்

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் கம்பை போட்டு தண்ணீர் விட்டு கழுவிய பின் வடித்து விட்டு அப்படியே பத்து நிமிடங்கள் வைக்கவும்.
பிறகு மிக்சியில் கொர கொரவென அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் விட்டு அரைத்த கம்பு குருணையையும் சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவும்.
கரண்டியால் விடாமல் கலக்கிக் கொண்டே இருக்கவும்.
சில நிமிடங்களில் கஞ்சி பதத்தை அடைந்து விடும்.
மேலும் சில நிமிடங்கள் கம்பு நன்கு வேகும் வரை கொதிக்க விட்டு பெருங்காய தூள் மற்றும் உப்பு சேர்த்து இறக்கவும்.

நன்கு ஆறிய பின் தயிரை கடைந்து விட்டு கலக்கி உப்பு சரி பார்க்கவும்.
ஒரு பரிமாறும் கிண்ணத்தில் ஊற்றி வெங்காய துண்டுகள் மற்றும் கருவேப்பிலை தூவி சுவைக்கவும்.
கம்பு கூழ் கம்பு கூழ்

குறிப்பு :

  • முதல் நாளே கஞ்சியை தயாரித்து மறுநாள் மோரோ அல்லது கடைந்த தயிரோ சேர்த்தும் அருந்தலாம். இவ்வாறு செய்வதால் சிறிது புளிப்பு சுவையுடன் இருக்கும். சுவையும் மிக மிக அருமையாக இருக்கும்.
  • கடுகு, கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் தாளித்து சேர்த்த கஞ்சி இன்னும் சுவையுடனும் மணத்துடனும் இருக்கும்.
மற்ற கஞ்சி வகைகள் :
குதிரைவாலி வெந்தய கஞ்சி கோதுமைரவா கஞ்சி மக்காசோளரவா கஞ்சி சோள கஞ்சி