Search This Blog

Sunday, March 16, 2014

Bajra Singhara Neer Kozhukattai

கம்பு சிங்காரா நீர் கொழுக்கட்டை : சிங்கரா என்பது தண்ணீரில் விளையக்கூடிய ஒரு தாவரத்தின் பழமாகும். இங்கு ராய்ப்பூரில் சாலை ஓரத்தில் குவியல் குவியலாக குவித்து குளிர் கால இறுதியில் விற்கப்படும். இது பார்ப்பதற்கு கூரையிலிருந்து தலை கீழாக தொங்கும் வவ்வாலை போன்ற தோற்றமும் நிறமும் கொண்டவையாக இருக்கும். இதன் தோல் மிகவும் அழுத்தமாக இருக்கும். வேக வைத்தால் இளகி உரிக்க இலகுவாக வரும். உள்ளே சாப்பிடும் பகுதி வெள்ளையாக இருக்கும். பிரத்யேக மணம் ஏதும் கிடையாது.
It is called water caltrop, water chestnut, buffalo nut, bat nut, devil pod, ling nut, singhara or panipal.
It belongs to any of three extant species of the genus Trapa : Trapa natans, T. bicornis and the endangered Trapa rossica. The species are floating annual aquatic plants, growing in slow-moving water upto 5 meters deep, native to warm temperate parts of Eurasia and Africa.

In India it is known as singhara or paniphal [ Eastern India ] and is widely cultivated in fresh water lakes. The fruits are eaten raw or boiled. When the fruit has been dried, it is ground to a flour called singhara ka atta. Singara ka atta is used in many religious rituals and can be consumed as a phalahar diet on the Hindu fasting days, the navaratras

Source : Singhara/water chestnut

Health Benefits of Singhara [ water chestnut ]

இதனை காயவைத்து மாவாக்கி விரத நாட்களில் சாப்பிடுகிறார்கள். இதனை உபயோகித்து கொழுக்கட்டை செய்து பார்த்தேன். மிக அருமையாக இருந்தது.
இனி எப்படி என பார்ப்போம்.

கம்பு சிங்காரா நீர் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் :
1/2 கப்                                     சிங்கார மாவு
1/4 கப்                                      கம்பு ரவா
1 Tbsp                                       ஓட்ஸ்
1/4 கப்                                     தேங்காய் துருவல்
1/2 Tsp                                      உப்பு

தாளிக்க :
1/2 Tsp                                    கடுகு
1 Tbsp                                     நில கடலை
1 அ 2                                     சிகப்பு மிளகாய்
1 Tsp                                       எண்ணெய்

மற்ற பொருட்கள் :
1/2 கப்                                  வெந்தய கீரை
1 Tbsp                                    காரட் துருவியது
1 Tbsp                                    கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
8                                              கருவேப்பிலை

செய்முறை :
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சிங்கார மாவு, கம்பு ரவா,  தேங்காய் துருவல், ஓட்ஸ் மற்றும் உப்பு எடுத்துக்கொள்ளவும்.


சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவாக பிசைந்து கொள்ளவும்.


 அடுப்பில் வேறொரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
பிசைந்த மாவை சிறி சிறு உருண்டைகளாக உருட்டவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் உருண்டைகளை மெதுவாக சேர்க்கவும்.
சேர்த்தவுடன் கரண்டியால் கிளற வேண்டாம்.

தீயை சிறியதாக்கி 3 நிமிடங்கள் உருண்டைகளை வேக விடவும்.


பிறகு ஒரு கரண்டியால் உருண்டைகளை உடைக்காமல் கிண்டி விடவும்.
உருண்டையின் உள்  வரை வேக வைத்து தனியே எடுத்து வைக்கவும்.


கொதித்த தண்ணீரும் தற்போது கஞ்சி பதத்தில் இருக்கும்.
இந்த கஞ்சியை கீழே கொட்டிவிட வேண்டாம்.
உப்பு அல்லது வெல்லம் சேர்த்து பருகலாம்.

இப்போது அடுப்பில் வாணலியை ஏற்றி என்னை விட்டு கடுகை  வெடிக்க விடவும்.
பிறகு மிளகாயை கிள்ளி  போட்டு, கடலையை  சிவக்க வறுத்த பின் கருவேப்பிலையையும் கொத்தமல்லியையும் சேர்க்கவும்.
பிறகு வெந்தய கீரை மற்றும் காரட் சேர்த்து சேர்த்து சில மணித்துளிகள் வதக்கவும். 1 அல்லது 2 நிமிடம் மூடி வேக விடவும்.
பிறகு வேக வைத்த உருண்டைகளை சேர்த்து உப்பும் சேர்த்து கிளறி பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.


கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
சுவையான நீர் கொழுக்கட்டை தயார். 




மற்றும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
கம்பு தோசை
கம்பு 
தோசை 
கம்பு காலி ப்ளவர் அடை
கம்பு காலி 
ப்ளவர் அடை
கம்பு கூழ்
கம்பு
கூழ்








No comments:

Post a Comment