Search This Blog

Showing posts with label கேழ்வரகு. Show all posts
Showing posts with label கேழ்வரகு. Show all posts

Monday, June 1, 2015

Kaezhvaragu-Dosai

#கேழ்வரகுதோசை  [ #கேவுருதோசை ] : #கேழ்வரகு #சிறுதானியம் வகையை சேர்ந்தது ஆகும். இதனை #கேவுரு என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் #FingerMillet என்று கூறப்படுகிறது.
மற்ற சிறு தானிய வகைகள், அரிசி மற்றும் கோதுமையை விட அதிக அளவில் கால்சியம் சத்து கேழ்வரகில் நிறைந்துள்ளது.
சென்ற முறை இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்து எப்போதையும் விட சிறிது அதிகமாக உப்பி வந்தது. அதனால் அதிலிருந்து இரண்டு கை அளவு தனியாக எடுத்து வைத்தேன். அதனுடன் கேழ்வரகு மாவை சேர்த்து உடனே தோசை சுட்டெடுத்தேன். மிக மிக சுவையாக இருந்தது.
முன்பு ஒரு பதிவில் உடனே செய்யக்கூடிய கேழ்வரகு தோசை செயல் முறை விளக்கத்தை கொடுத்திருக்கிறேன்.
இந்த கேழ்வரகு தோசை மற்றொரு உடன் செய்யும் தோசை ஆகும்.
இனி செய்முறையை காண்போம்.

கேழ்வரகு தோசை


தேவையான பொருட்கள் :
1 கப்கேழ்வரகு மாவு [ ragi flour ]
3/4 கப்அரைத்த உளுந்து மாவு 
1/2 கப்புளித்த தயிர்
1 Tspசீரகம்
1/4 கப்வெங்காயம் நறுக்கியது
1 Tspபச்சை மிளகாய்
8 - 10கறுவேப்பிலை
1 Tspஉப்பு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள எல்லா மாவையும் எடுத்துக்கொள்ளவும்.
உப்பு மற்றும் தயிர் சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.
மாவில் சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், மற்றும் கிள்ளிய கறுவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
அடுப்பில் தோசை கல்லை சூடாக்கவும்.
எண்ணெய் தடவி வட்டமாக தோசை சுடவும்.
தோசையின் மேலேயும் சுற்றியும் சில துளிகள் எண்ணெய் விடவும்.
ஓரம் சிவக்க ஆரம்பித்ததும் திருப்பி போட்டு வேக விடவும்.
இரண்டு பக்கமும் நன்றாக சுட்ட பின் தட்டில் எடுத்து வைக்கவும்.
மறுபடியும் எண்ணெய் தடவி அடுத்த தோசை சுடவும்.
மெத்து மெத்தென்ற சுவையான தோசை தயார்.
தேங்காய் சட்னி அல்லது வேறு விருப்பமான சட்னி யுடன் சுவைக்கவும்.

கேவுரு தோசை கேழ்வரகு தோசை [ கேவுரு தோசை ]
குறிப்பு :
விருப்பமானால் வெந்தய கீரையை அரிந்து சேர்த்தும் தோசை சுடலாம்.





மேலும் சில தோசை வகைகள் முயற்சி செய்து பார்க்க

தினை தோசை
தினை தோசை
ரவா தோசை
ரவா தோசை
கேழ்வரகு தோசை
கேழ்வரகு தோசை
கம்பு தோசை
கம்பு தோசை
ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை




Tuesday, April 7, 2015

Kaezhvaragu-Inippu-Kuzhi-Paniyaram

#கேழ்வரகுஇனிப்புகுழிபணியாரம் : #கேழ்வரகு #சிறுதானியம் வகைகளுள் ஒன்று. கேழ்வரகை கேப்பை என்றும் கேவுரு என்றும் பேச்சு வழக்கில் கூறப்படுகிறது. இந்த சிறு தானியத்தை பொதுவாக #ராகி என்றும் #FingerMillet என்றும் ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.
கேழ்வரகில் அரிசி மற்றும் கோதுமையை காட்டிலும் அதிக அளவு கால்சியம் சத்து நிறைந்துள்ளது. புரதம், இரும்பு சத்து, நார்சத்து, பாஸ்பரஸ் மற்றும் விட்டமின்கள் அதிக அளவில் கொண்டுள்ளது.
இத்தகைய இன்றியமையாத சத்துக்கள் நிறைந்துள்ள கேழ்வரகை தினமும் நமது உணவில் ஏதாவது ஒரு விதத்தில் சேர்த்துக்கொள்வது மிக மிக அவசியம்.
இன்று இதனை கொண்டு ஒரு இனிப்பு பணியாரம் செய்யும் முறையை காண்போம்.

12 முதல் 15 குழி பணியாரம் தயாரிக்கலாம்.

கேழ்வரகு இனிப்பு குழி பணியாரம்


தேவையான பொருட்கள் :
3/4 கப்கேழ்வரகு மாவு [கேவுரு மாவு ]
1/2 கப்ரவா [ Sooji ]
1 Tbspபாப்பரை மாவு [ buckwheat flour ]*
2வாழைப்பழம் பழுத்தது
1/2 cupவெல்லம் [ அட்ஜஸ்ட் ]
2ஏலக்காய்
சிறு துண்டுஜாதிக்காய்
ஒரு சிட்டிகைஉப்பு
2 சிட்டிகைசமையல் சோடா

குழிபணியாரம் சுட்டெடுக்க தேவையான நல்லெண்ணெய் மற்றும் நெய்.

*பாப்பரை மாவுக்கு பதில் கோதுமை மாவை உபயோகப்படுத்தலாம்.

செய்முறை :
ஏலக்காய் மற்றும் ஜாதிக்காயை சிறிது சர்க்கரை சேர்த்து பொடித்து எடுத்து வைக்கவும்.
வெல்லத்தை தூளாக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
அரை கப் தண்ணீர் விட்டு அடுப்பில் மிதமான தீயில் சூடாக்கவும்.
ஒரு கரண்டி கொண்டு கலக்கி வெல்லத்தை கரைத்து விடவும்.
வடிகட்டி ஆற விடவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, ரவா, பாப்பரை மாவு, உப்பு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.
அதில் தயார் செய்து வைத்துள்ள வெல்ல கரைசலை ஊற்றி கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.
மாவு தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
அப்போதுதான் ரவா ஊறிய பிறகு இட்லி மாவு பதத்திற்கு வந்து விடும்.
வாழை பழத்தை மிக்ஸியில் கூழாக அரைத்து மாவில் சேர்க்கவும்.
நன்கு கலந்து விடவும்.
கரைத்த மாவை ஒரு அரை மணி நேரம் ஊற விடவும்.

அரை மணி நேரம் கழித்து அடுப்பில் குழி பணியாற கல்லை மிதமான தீயில் சூடாக்கவும்.

ஒவ்வொரு குழியிலும் நல்லெண்ணெய் 1/4 தேக்கரண்டியும் நெய் 1/4 தேக்கரண்டியும் விடவும்.
மாவில் ஏலக்காய்-ஜாதிக்காய் பொடி மற்றும் சமையல் சோடாவை சேர்த்து கலக்கவும்.
குழிபணியார கல் சூடானதும் ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றவும்.
ஊற்றிய மாவின் மேல் எண்ணெய் நெய் கலவையை ஓரிரண்டு சொட்டுகள் விடவும்.
ஓரங்கள் சிவக்க ஆரம்பித்ததும் ஒரு தேக்கரண்டியால் குழி பணியாரத்தை திருப்பி விடவும்.
இரு பக்கமும் நன்கு சிவக்க வெந்தவுடன் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
மறுபடியும் எண்ணெய்-நெய் கலவையை விட்டு மாவு நிரப்பி மீண்டும் ஒரு ஈடு குழி பணியாரம் சுட்டெடுக்கவும்.
Ragi Sweet Kuzhi Paniyaram
Ragi Sweet Kuzhi Paniyaram கேழ்வரகு இனிப்பு குழிபணியாரம்
கேழ்வரகு இனிப்பு குழிபணியாரம்
கேழ்வரகு இனிப்பு குழிபணியாரம்
சூடாக பரிமாறவும். தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை.
ஆறிய பிறகு சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.
மிக மிக சத்தான சுவையான கேழ்வரகு இனிப்பு குழி பணியாரத்தை செய்து பலனடையவும்!!







மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க 

கேழ்வரகு தோசை [ ராகி தோசை ]
கேழ்வரகு தோசை - ராகி தோசை
கேழ்வரகு அடை [ ராகி அடை ]
கேழ்வரகு அடை - ராகி அடை
கேழ்வரகு புட்டு [ ராகி புட்டு ]
கேழ்வரகு புட்டு - ராகி புட்டு 
தினை சக்கரை பொங்கல்
தினை சக்கரை பொங்கல்
அவல் கேசரி
அவல் கேசரி - அவல் இனிப்பு




Saturday, February 7, 2015

Kaezhvaragu-Koozh

#கேழ்வரகுகூழ் : #கேழ்வரகு கொண்டு தோசை மற்றும் பணியாரம் செய்யும் முறையை முன்பு பார்த்திருக்கிறோம். இங்கு மிக எளிமையானதும் சுவையானதும் ஆகிய கூழை எவ்வாறு காய்ச்சுவது என்று காண்போம்.

கேழ்வரகு கூழ்

தேவையான பொருட்கள் :
1 Tbsp குவித்துகேழ்வரகு மாவு
1 கப் தண்ணீர்
1/2 Tspஉப்பு
1/2 Tspகடுகு
6 - 8கறுவேப்பிலை
2 - 3சின்ன வெங்காயம்
2 pinchபெருங்காய தூள்
1 Tspஎண்ணெய்
சிறிது கொத்தமல்லி தழை மேலே தூவ
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு 1 கப்  தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.


பின்னர் மிதமான தீயில் சூடாக்கவும்.
ஒரு கரண்டியால் கை விடாமல் கலக்கிகொண்டே இருக்கவும்.
 சில நிமிடங்கள் கழித்து மாவு வெந்து பளபளப்பாக மாற ஆரம்பிக்கும்.
நிறமும் ஆழ்ந்த நிறத்திற்கு மாறும்.
கஞ்சி பதத்தை அடைந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
உப்பு சேர்த்து  கலக்கி ஆற விடவும்.


அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு சேர்த்து வெடிக்கவிட்ட பின்னர் பெருங்காய தூள் மற்றும் கறுவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
தாளித்ததை தயாரித்து வைத்துள்ள கூழில் கொட்டவும்.
நன்கு ஆற வைக்கவும்.
பரிமாறுவதற்கு முன் தயிர், சில கொத்தமல்லி தழைகள் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பருகவும்.
சுவையான கேழ்வரகு கூழ் தயார்!!!

கேழ்வரகு கூழ்


தினமும் முதல் நாள் இரேவே தயாரித்து வைத்து  மறுநாள் காலை காபி / டீ கு பதில் அருந்தி வந்தால் உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறலாம்.





மேலும் சில சமையல் குறிப்புகள்
கம்பு கூழ் கோதுமை ரவா கஞ்சி குதிரைவாலி வெந்தய கஞ்சி






Friday, December 12, 2014

Amaranth-Kevuru-Mittai



#அமராந்த்கேவுருமிட்டாய்  #அமர்நாத்கேழ்வரகுமிட்டாய் : இதுவரை #அமராந்த் [ #அமராந்தம் ] விதைகளை அல்லது மாவை உபயோகப் படுத்தி உணவு தயாரித்து வந்தோம். இப்போது #அமராந்த்பொரி கொண்டு தயாரிக்கப்பட்ட இனிப்பு மிட்டாய் பற்றி இங்கு காண்போம். இதனுடன் கேழ்வரகு [ கேவுரு ] அவலையும் உபயோகப்படுத்தி உள்ளேன்.
இனி செய்முறையை காண்போம்.

அமராந்த் கேவுரு மிட்டாய் [ Amaranth Ragi Chikki ]

தேவையான பொருட்கள் :
1 cupஅமராந்த் பொரி [ Puffed Amaranth ]
1/4 cupகேழ்வரகு அவல் [ Ragi Flakes ]
3/4 cupவெல்லம்
1/4 Tspஏலக்காய் பொடி [ optional ]
சிறிதளவு அரிசி மாவு.
செய்முறை :
அமராந்த்பொரி மற்றும் கேழ்வரகு அவல் இரண்டையும் அளந்து எடுத்து வைக்கவும்.
ஒரு ஈரமில்லாத சுத்தமான தட்டில் அரிசிமாவை தூவி தனியே வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை பொடித்து போட்டு 1/2 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் மிதமான தீயில் சூடாக்கவும்.
கரண்டியால் கலக்கி வெள்ளத்தை கரைக்கவும்.
வெல்லம் கரைந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
வெல்ல கரைசலை மற்றொரு பாத்திரத்தினுள் வடிகட்டவும்.

வடிகட்டிய வெல்லத்தை அடுப்பில் மிதமான தீயில் சூடாக்கி பாகு காய்ச்சவும்.


கரண்டியால் அவ்வப்போது கலக்கி விடவும்.
பாகை சிறிய கிண்ணத்தில் உள்ள தண்ணீரில் விட்டால் கரையக்கூடாது.
உருட்டினால் பந்து போல வரவேண்டும்.
அது வரை அடுப்பில் பாகு காய்ச்ச வேண்டும்.
இந்த உருட்டிய வெல்ல பந்து பாத்திரத்தில் போட்டால் டன்னென்ற சத்தம் போட வேண்டும்.

right consistency

பாகு தயாரானதும் அடுப்பை மிகவும் சிறிய தீயில் வைத்து, எடுத்து வைத்துள்ள பொரி மற்றும் அவலை சேர்த்து கிளறவும்.
நன்கு கலந்த பின்னர் அடுப்பை அணைத்து விட்டு அரிசி மாவு பரப்பிய தட்டின் மேல் கொட்டி பரப்பவும்.

Amaranth Mittai [ Puffed Amaranth Chikki ]

கத்தியால் துண்டுகள் போடவும்.
சுவையான மிட்டாய் தயார்.

அமராந்த் கேவுரு மிட்டாய் [ Amaranth Ragi Chikki ]


Wednesday, August 13, 2014

Ragi Puttu

#கேழ்வரகுபுட்டு : முந்தைய பதிவில் புட்டு செய்முறையை பார்த்தோம். இந்த கேழ்வரகு புட்டு அரிசிக்கு பதில் #கேழ்வரகு மாவு உபயோகப் படுத்தி செய்யப்படும் ஒரு இனிப்பாகும்.

கேழ்வரகு என்பதை பேச்சு வழக்கில் கேவுரு என்றும் கேப்பை என்றும் சொல்லப் படுகிறது. ஆங்கிலத்தில் #Ragi என்றும் #FingerMillet என்றும் அழைக்கப்படுகிறது. கேழ்வரகு #சிறுதானியம் வகைகளில் ஒன்றாகும். கேழ்வரகு மாவிலிருந்து கூழ், அடை , களி மற்றும் தோசை போன்ற உணவு வகைகளை செய்யலாம். தற்போது கடைகளில் கேழ்வரகு அவல் , உடனே செய்யக் கூடிய இடியாப்பம் போன்றவையும் கிடைகின்றன.
சிறுதானிய வகைகளை பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை அழுத்தவும்.

Millets - சிறுதானிய வகைகள் 

குறிப்பாக கேழ்வரகில் சுண்ணாம்பு ( கால்சியம் - Calcium ) சத்து மற்ற தானியங்களை விட அதிக அளவில் உள்ளது.
இதில் நார்சத்தும் அதிக அளவில் உள்ளது.
இந்த சத்துக்களை பெற அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

இனி கேழ்வரகு மாவை உபயோகித்து புட்டு எவ்வாறு செய்யலாம் என காண்போம்.

கேழ்வரகு புட்டு


தேவையான பொருட்கள் :
2 கப்                                             கேழ்வரகு மாவு [ ragi flour ]
1 கப்                                             வெல்லம்
1 1/2 கப்                                       தேங்காய் துருவல்
2 Tsp                                             நெய்
3 Tsp                                             நல்லெண்ணெய்
1/2 Tsp                                          ஏலக்காய் பொடி
1/2 Tsp                                          உப்பு

செய்முறை :
ஒரு வாணலியை  மிதமான தீயில் சூடாக்கவும்.
கேழ்வரகு மாவை சற்றே சூடு வரும் வரை வறுக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் இந்த வறுத்த மாவை எடுத்துக்கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் 1/8 கப் தண்ணீரில் உப்பை கரைத்துக்கொள்ளவும்.
இந்த உப்பு தண்ணீரை மாவின் மேல் தெளித்து பிசறி விடவும்.
பிரட் துகள்கள் போல வரும் வரை தண்ணீர் தெளித்து பிசறி விடவும்.


இப்படி பிசறி வைத்துள்ள மாவை உருண்டையாக பிடிக்க முயற்சித்தால் பிடிக்க முடியாமல் உடைந்து போக வேண்டும்.

இதை ஒரு சுத்தமான துணியில் மூட்டை போல கட்டவும்.
இட்லி பானையில் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.


மாவு மூட்டையை இட்லி தட்டின் மேல் இட்லி பானையில் வைத்து ஆவியில் 10 முதல் 12 நிமிடங்கள் வேக விடவும்.


இதற்குள் மற்றொரு அடுப்பில் வெல்லத்தை நசுக்கி 1/4 கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
கரண்டியால் கலக்கி கரைய வைக்கவும்.
கரைந்த பின்னர் அடுப்பிலிருந்து நீக்கி வடி கட்டவும்.
வடிகட்டிய வெல்ல தண்ணீரை ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.
அதனுடன் தேங்காயை சேர்க்கவும்.
சாரணியால் கிளறிக்கொண்டே இருக்கவும்.
தண்ணீர் சுண்டி தேங்காயும் வெல்லமும் சேர்ந்தாற்போல வரும்.
கையில் தொட்டு பார்த்தல் பிசுபிசுவென இருக்கும்.

இப்போது அடுப்பை அணைத்து விடவும்.
கிளறிய தேங்காய் வெல்ல கலவையை ஒரு சுத்தமான கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

வெந்த மாவை தேங்காய் வெல்லம் சேர்த்து கிளறிய பாத்திரத்தில் கொட்டவும்.
2 Tbsp தேங்காய் வெல்ல கலவையை சேர்க்கவும்.
நெய் மற்றும் நல்லெண்ணெயையும்  சேர்க்கவும்.

கரண்டியால் நன்கு கிளறி விடவும்.


அவரவர் சுவைக்கு ஏற்ப தேவையானால் தேங்காய் வெல்ல கலவையை போதுமான அளவு சேர்த்து கிளறவும்.
கடைசியாக ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறவும்.

சூடு ஆறிய பின்னர் மூடியுடன் கூடிய டப்பாவில் எடுத்து வைக்கவும்.
நன்கு சூடு ஆறிய பின்னரே டப்பாவை மூட வேண்டும்.

கேழ்வரகு புட்டு

சுவையான புட்டு தயார்! சுவைத்து மகிழவும்!! 

 மற்ற சமையல் குறிப்புகள் :
கேழ்வரகு தோசை
கேழ்வரகு தோசை
புட்டு
புட்டு
கேழ்வரகு [ ராகி ] குழிபணியாரம்
கேழ்வரகு குழி பணியாரம்
தினை சக்கரை பொங்கல்
தினை சக்கரை பொங்கல்
அவல் கேசரி
அவல் கேசரி - அவல் இனிப்பு