Search This Blog

Showing posts with label சோளம். Show all posts
Showing posts with label சோளம். Show all posts

Thursday, June 18, 2015

Cholam-Sorghum

#சோளம் : #சிறுதானியம் வகைகளில் மிகவும் அதிகமாக இந்தியாவில் பயிரிடப்படும் தானியம் ஆகும்.
இவை வறண்ட பகுதிகளில் மழையை ஆதாரமாக கொண்டு விளைவிக்கப்படுகிறது. சோளத்தை பெரும்பாலும் பூச்சிகளின் தாக்கம் இருப்பதில்லை. அதனால் இப்பயிருக்கு பூச்சிகொல்லிகளை அதிக அளவில் பயன் படுத்துவது இல்லை.
சோளத்தில் உடலுக்கு தேவையான புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், இரும்பு போன்ற தாது பொருட்கள், நார் சத்து, செறிவூட்டப் படாத கொழுப்பு மற்றும் அத்தியாவசியமான விட்டமின்கள் நிறைந்துள்ளன. சிறந்த ஆக்ஸிஜனேற்றியும் [ antioxidant ] ஆகும்.
மற்ற #சிறுதானியங்கள் போல இதுவும் பசை தன்மை அற்றது. அமிலத்தன்மையை உருவாக்குவது இல்லை.
ஆனால் மூல நோயாளிகளுக்கு சோளம் ஏற்றதல்ல.
மேலும் அறிந்துகொள்ள கீழ்காணும் இணைப்பை சொடுக்கவும்.
சோளம்
இங்கு சோளம் உபயோகித்து செய்யப்பட்ட உணவு வகைகளின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

  • கீழே உள்ள படங்களின் மேல் அம்புக்குறியை [ cursor ஐ ] வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்து கொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் சமையல் குறிப்பு பதிவை காணலாம்.
சிற்றுண்டி வகைகள்
சோள இட்லி
சோள இட்லி
சோள குழிபணியாரம்
சோள குழிபணியாரம்
சோளம் ஆப்பம்
சோளம் ஆப்பம்
சோளம் தோசை
சோளம் தோசை
சோள கஞ்சி
சோளம் கஞ்சி





Wednesday, June 17, 2015

Chola-Kanji

#சோளகஞ்சி : இந்தியாவில் மிக அதிகமாக விளைவிக்கப்படும் சிறு தானியங்களில் #சோளம் ஒன்றாகும். இது ஆங்கிலத்தில் #Sorghum என அழைக்கப்படுகிறது.
சோளத்தில் இரும்பு, கால்சியம், ஆகிய தாதுக்களும் தயமின், பி கரோட்டின் மற்றும் ரிபோப்ளவின் போன்ற விட்டமின்களும் நிறைந்துள்ளன.
மேலும் அறிய
சிறு தானியங்கள்
முழு சோள தானியம் மற்றும் சோள மாவு உபயோகப்படுத்தி செய்யப்படும் சமையல் செய்முறைகளை இதுவரை பார்த்திருக்கிறோம்.
இங்கு உடைத்த சோளம் [ சோள ரவா ] உபயோகப் படுத்தி கஞ்சி செய்வது எப்படி என பார்ப்போம்.

சோள கஞ்சி பால் கலந்தது

தேவையான பொருட்கள் :
1/4 கப்சோளம் உடைத்தது [ சோள ரவா ]
1/2 கப்பால்
1/2 கப்தயிர் கடைந்தது
1/2 Tsp உப்பு
1/8 Tspஓமம் 
1/8 Tspபெருங்கயத்தூள் 
1/4 Tspகடுகு 
5 - 6கருவேப்பிலை
1/2 Tspஎண்ணெய் 



செய்முறை :
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 1 1/4 கப் தண்ணீர் விட்டு உடைத்த சோளத்தை சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவும்.
கரண்டியால் விடாமல் கலக்கிக் கொண்டே இருக்கவும்.
சில நிமிடங்களில் கஞ்சி பதத்தை அடைந்து விடும்.
மேலும் சில நிமிடங்கள் சோளம்  நன்கு மலர்ந்து வேகும் வரை மிக சிறிய தீயில் கொதிக்க விட்டு  உப்பு சேர்த்து இறக்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைத்து பால் கலந்து மேலே ஓமம் தூவி சூடாக பருகலாம்.
அல்லது
தயாரித்த கஞ்சியை ஆற வைத்து தயிர் ஊற்றி கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, பெருங்காய தூள் மற்றும் கறுவேப்பிலை தாளித்து கொட்டியும் பருகலாம்.

விருப்பமான துவையல் அல்லது ஊறுகாய் தொட்டுக்கொண்டு சுவைக்கலாம்.
சோள கஞ்சி பால் கலந்தது சோள கஞ்சி மோர் கலந்தது



மற்ற கஞ்சி வகைகள் :
குதிரைவாலி வெந்தய கஞ்சி கோதுமைரவா கஞ்சி மக்காசோளரவா கஞ்சி கம்பு கூழ்


பலவகையான சமையல் செய்முறைகள்

சிறுதானிய சமையல் செய்முறைகள்


Wednesday, April 29, 2015

Chola-Appam

#சோளஆப்பம் : இப்போது நான் வசிக்கும் வட கர்நாடகாவில் #சோளம் அதிக அளவில் உபயோகப்படுத்துகிறார்கள். நானும் சோளம் உபயோகித்து சோள இட்லி, சோள தோசை, மற்றும் குழி பணியாரம் செய்து பார்த்தேன். மிக மிக ருசியாக இருந்தது. அதனால் அடுத்து ஆப்பம் செய்து பார்த்தேன். ஆப்பமும் நன்றாக செய்ய முடிந்தது.
இட்லி அரிசி, பச்சரிசி, சோளம் ஆகியவற்றை ஒன்றாக ஊற வைத்துகொள்ள வேண்டும். வெந்தயம் மற்றும் உளுத்தம் பருப்பு - துவரம் பருப்பு ஆகியவற்றை தனியாக ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு மாவரைக்கும் இயந்திரத்தில் தனித்தனியாக அரைத்தெடுத்து உப்பு சேர்த்து கலந்து புளிக்க வைக்க வேண்டும். புளித்த பின்னர் தோசை கல்லிலோ அல்லது ஆப்ப சட்டியிலோ ஆப்பம் சுட்டெடுக்க வேண்டும்.

*வெந்தயத்தை முதல் நாளே ஊறவைத்து முளை கட்டியும் சேர்க்கலாம்.

இங்கு இப்போது சோள ஆப்பம் செய்முறையை காண்போம்.

தோராயமாக 25 முதல் 30 ஆப்பம் தயார் செய்யலாம்.

சோள ஆப்பம்

தேவையான பொருட்கள் :
1 கப்இட்லி அரிசி
1 கப்சோளம்
2 கப்பச்சரிசி
1/8 கப்உளுத்தம் பருப்பு
1/8 கப்துவரம் பருப்பு
1/8 கப்வெந்தயம்
4 Tspஉப்பு
செய்முறை :
வெந்தயத்தை ஒரு சிறு கிண்ணத்தில் எடுத்து கழுவி விட்டு 6 முதல் 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
வெந்தயம் ஊற வைத்து 3 அல்லது 4 மணி நேரம் கழித்து இட்லி அரிசி, பச்சரிசி மற்றும் சோளம் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
நன்கு கழுவிய பின்னர் தேவையான தண்ணீர் விட்டு 3 மணி நேரம்  ஊறவைக்கவும்.
அதே போல மற்றொரு பாத்திரத்தில் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளவும்.
நன்கு கழுவிய பின்னர் தேவையான தண்ணீர் விட்டு 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
குறிப்பிட்ட நேரம் ஊறிய பின்னர் கிரைண்டரை கழுவி முதலில் வெந்தயம் மற்றும் மற்ற இரண்டு பருப்பையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும். ஊறவைத்த தண்ணீரையும் அரைக்கும் போது சேர்க்கவும்.
அவ்வப்போது தண்ணீர் தெளித்து நன்கு பந்து போல உப்பி வரும் வரை அரைத்து எடுக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
அடுத்து அரிசி மற்றும் சோளத்தை நன்கு மைய அரைக்கவும். வழிப்பதற்கு முன் 4 Tsp உப்பு சேர்த்து விடவும்.
இந்த மாவை வழித்து முன்பு பருப்பு-வெந்தயம் மாவு எடுத்து வைத்துள்ள அதே பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
அரை கப் தண்ணீர் விட்டு மாவரைக்கும் இயந்திரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் மாவை கழுவி பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும்.
கையினால் நன்கு கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
அல்லது முதல் நாள் மாலை அல்லது இரவு அரைத்து மறு நாள் காலை ஆப்பம் ஊற்றலாம்.

ஆப்ப மாவு புளித்த பிறகு அடுப்பில் மிதமான சூட்டில் தோசை கல்லை சூடாக்கவும்.
ஒரு சுத்தமான துணியினால் எண்ணெய் தடவி சூடானதும் நடுவில் மாவை வைத்து பரப்பி விடவும்.
ஒரு மூடியினால் மூடி வேக விடவும்.
ஆப்பத்தை திருப்பிப் போட்டு வேக விட வேண்டாம்.
இலேசாக சிவந்து வெந்த ஆப்பத்தை தட்டில் எடுத்து வைக்கவும்.
அடுத்த ஆப்பம் சுட முன்பு போலவே எண்ணெய் தடவி ஆப்பம் சுட்டு எடுக்கவும்.
சூடாக இருக்கும் போதே தேங்காய் சட்னி அல்லது பூண்டு மிளகாய் சட்னி அல்லது வெல்லம் சேர்த்த தேங்காய் பால் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

சோள ஆப்பம் சோள ஆப்பம்
குறிப்பு :
*வெந்தயத்தை முளை கட்ட,
மாவு அரைப்பதற்கு முதல் நாள் மாலை அல்லது இரவே வெந்தயத்தை கழுவி ஒரு கிண்ணத்தில் ஊற வைக்கவும்.
அரைக்கும் நாள் காலையில் ஊறிய தண்ணீரை வேறொரு சிறிய கிண்ணத்தில் வடித்தெடுத்து விடவும். ஊற வைத்த  தண்ணீரை கீழே கொட்டி விட வேண்டாம். மாவு அரைக்கும் போது சேர்த்து விடலாம்.
இப்போது ஊறிய வெந்தயத்தை முளைக்கட்டுவத ற்காக ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும்.



முயற்சி செய்து பார்க்க
ஆப்ப மாவு
ஆப்ப மாவு
ஆப்பம் சுடும் முறை
ஆப்பம் சுடும் முறை
ஆப்பம் கேரளா ஸ்டைல்
ஆப்பம் கேரளா 1
ஆப்பம் கேரளா ஸ்டைல் 2
ஆப்பம்கேரளா 2

ஆப்பத்துடன் தொட்டுக்கொண்டு சுவைக்க

தொட்டுக்க



Friday, April 17, 2015

Chola Dosai

#சோளதோசை : #சோளம் புன்செய் பயிர்களில் ஒன்று மற்றும் #சிறுதானியம் வகையை சேர்ந்தது ஆகும். இந்தியாவில் மிக அதிகமாக விளைவிக்கப்படும் தானியம் ஆகும். இதனை கொண்டு சோள இட்லி, சோள குழிபணியாரம் ஆகியவை தயாரிக்கும் முறையை சென்ற பதிவுகளில் பார்த்தோம்.
அரிசி, சோளம் மற்றும் உளுந்து ஆகியவற்றை ஒன்றாக ஊற வைத்து மாவு அரைக்கும் இயந்திரத்தில் ஒன்றாக அரைத்து புளிக்க வைக்க வேண்டும்.
பின்னர் அவரவர் விருப்பப்படி மெத்து மெத்தென்றொ அல்லது முறுவலாகவோ தோசை சுட்டு சாப்பிடலாம்.
இனி செய்முறையை காண்போம்.

சோள தோசை

தேவையான பொருட்கள் :
ஊற வைக்க :
1 கப்சோளம்
1 கப்இட்லி அரிசி
1/2 கப்உளுத்தம் பருப்பு
1/2 Tspவெந்தயம்
மாவுடன் சேர்க்க :
2 Tbspரவா
2 Tspஉப்பு
தோசை சுடுவதற்கு தேவையான எண்ணெய்
செய்முறை :
ஊறவைக்க கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
இரண்டு மூன்று முறை நன்றாக கழுவி விட்டு தேவையான தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

மூன்று மணி நேரம் கழித்து மாவு அரைக்கும் இயந்திரத்தை கழுவிய பிறகு ஊற வைத்த பொருட்களை போட்டு அரைக்கவும்.
அவ்வப்போது தண்ணீர் தெளித்து நன்கு மென்மையாக அரைத்து எடுத்து ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் வைக்கவும்.
உப்பு சேர்த்து நன்கு கைகளால் கலந்து வைக்கவும்.
6 முதல் 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
அல்லது முதல் நாள் மாலை மாவு அரைத்து வைத்து மறுநாள் காலை தோசை ஊற்றலாம்.
மாவு புளித்த பிறகு ரவா சேர்த்து கலக்கி வைக்கவும்.
இட்லி மாவை விட தளர இருக்க வேண்டும்.
தேவையானால் சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கி வைக்கவும்.
அரை மணி நேரம் ஊற விடவும்.
அரை மணி நேரம் கழித்து அடுப்பின் மேல் தோசை கல்லை வைத்து மிதமான தீயில் சூடேற்றவும்.
ஒரு சுத்தமான மெல்லிய துணியில் எண்ணெய் நனைத்து தடவவும்.
சரியான சூடானவுடன் மாவை தோசை கல்லின் நடுவில் வைத்து வட்டமாக பரப்பவும்.
தோசையின் மேல் சில துளிகள் எண்ணெய் தெளிக்கவும்.
தோசை ஓரம் சிவக்க ஆரம்பித்தவுடன் தோசை திருப்பியினால் திருப்பி போடவும்.
இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்து எடுத்து தட்டில் வைக்கவும்.
இதைபோல மீண்டும் மாவை பரப்பி தோசை சுட்டெடுக்கவும்.

சோள தோசை

சூடான சோள தோசையை தேங்காய் சட்னி அல்லது சாம்பார் தொட்டுக்கொண்டு சுவைக்கவும்.

சோள தோசை

ஹோட்டல் தோசை போல முறுகலாக வேண்டும் என்றால் தட்டையான கிண்ணம் கொண்டு மாவை தோசை கல்லின் மேல் மெல்லியதாக பரப்பி சிறிது தாராளமாக எண்ணெய் ஊற்றி பொன் முறுவலாக சுட்டு எடுக்கவும்.




மேலும் முயற்சி செய்ய 

சோள இட்லி
சோள இட்லி
சோள குழிபணியாரம்
சோள குழிபணியாரம்
ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை
நீர்தோசை
நீர்தோசை
முடக்கத்தான் தோசை
முடக்கத்தான் தோசை





Monday, April 6, 2015

Cholam-Kuzhi-Paniyaram

#சோளகுழிபணியாரம் : சென்ற பதிவில் #சோளம் உபயோகித்து #சோளஇட்லி
செய்வது எப்படி என்று பார்த்தோம். முதல் நாள் இட்லி செய்தது போக மீதம் இருந்த மாவில் பணியாரம் செய்து பார்த்தேன். மிக அருமையாக இருந்தது. அதனால் இன்று சோள பணியாரம் எவ்வாறு செய்வது என இங்கு பதிவிட விரும்புகிறேன்.
சுமார் 12 முதல் 15 பணியாரங்கள் செய்யலாம்.

சோள குழிபணியாரம்

தேவையான பொருட்கள் :
2 cupசோள இட்லி மாவு
1/4 cupரவா ( அ ) கோதுமை ரவா
1/2 Tspஉப்பு [ adjust ]
1 Tbspவெங்காயம் பொடியாக நறுக்கியது
1 Tbspகாரட் பொடியாக நறுக்கியது
1 Tbspகுடை மிளகாய் பொடியாக நறுக்கியது
1/4 cupகொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
1/4 cupவெந்தய கீரை பொடியாக நறுக்கியது
8 - 10கறுவேப்பிலை, பொடியாக நறுக்கவும்.
1 or 2பச்சை மிளகாய், பொடியாக நறுக்கவும்.
தாளிக்க :
1/2 Tspகடுகு
2 Tspகடலை பருப்பு
1/4 Tspபெருங்காய பொடி
2 Tspஎண்ணெய்

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் சோள இட்லி மாவு, ரவா ( அ ) கோதுமை ரவா மற்றும் உப்பு எடுத்துகொள்ளவும்.
1/4 கப் தண்ணீர் விட்டு கலக்கி அரை மணி நேரம் ஊற விடவும்.
அரை மணி நேரம் கழித்து அடுப்பில் குழிபணியார கல்லை சிறிய தீயில் சூடாக்கவும்.
மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் கடுகு வெடிக்க விட்ட பின்னர் கடலை பருப்பு சேர்க்கவும்.
கடலை பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
அடுத்து பெருங்காய பொடி, கருவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வெங்காயத்தையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அடுத்ததாக காரட் மற்றும் குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு வதக்கிய பொருட்களை மாவில் கொட்டவும்.
கொத்தமல்லி தழை மற்றும் வெந்தய கீரை ஆகியவற்றையும் மாவுடன் சேர்த்து கலக்கவும்.
மாவு இட்லி பதத்தில் இருக்க வேண்டும்.
தேவையெனில் சிறிது தண்ணீர் விட்டு கலக்கி வைக்கவும்.

குழி பணியார கல்லின் ஒவ்வொரு குழியிலும் 1/4 Tsp எண்ணெய் விடவும்.
கல் சரியான சூடு அடைந்ததும் கரண்டியால் மாவை எடுத்து குழிகளில் நிரப்பவும்.
பின்னர் ஒவ்வொரு குழியில் நிரப்பப்பட்ட மாவின் மேல் சில துளி எண்ணெயை ஊற்றவும்.
பணியாரத்தின் ஓரங்கள் சிவக்க ஆரம்பித்ததும் ஒரு தேக்கரண்டியால் திருப்பி விடவும்.
இரண்டு பக்கமும் சிவக்க வேக வைத்து எடுக்கவும்.
மீண்டும் குழிகளில் எண்ணெய் விட்டு அடுத்த ஈடு மாவு ஊற்றி குழி பணியாரம் சுட்டு எடுக்கவும்.


சூடான சுவை மிகுந்த குழி பணியாரத்தை
பரிமாறும் தட்டில் எடுத்து வைத்து தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி யுடன் பரிமாறவும்.

சோள குழிபணியாரம்





முயற்சி செய்து பார்க்க மேலும் சில சமையல் குறிப்புகள்
சோள இட்லி
சோள இட்லி
சோளதோச
சோளதோசை
ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை
நீர்தோசை
நீர்தோசை
முடக்கத்தான் தோசை
முடக்கத்தான் தோசை