Search This Blog

Showing posts with label chutny. Show all posts
Showing posts with label chutny. Show all posts

Thursday, April 17, 2014

Thottukka

காலை சிற்றுண்டி, மாலை வேளையில் சாப்பிடும் பலகாரங்கள் மற்றும் சாதம் ஆகியவற்றுடன் தொட்டுக்க செய்யப்படும் #சட்னி, #சாம்பார், #துவையல் மற்றும் #குழம்பு வகைகளின் இணைப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது.


சட்னி/துவையல்  வகைகள் - CHUTNEY 
சட்னி/துவையல் வகைகள் [ Chutney ]

சாம்பார் வகைகள் - Sambar
  • கீழே உள்ள படங்களின் மேல் அம்புக்குறியை [ cursor ஐ ] வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்து கொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் சமையல் குறிப்பு பதிவை காணலாம்.
சாம்பார்/குழம்பு வகைகள்
கத்தரிக்காய் இட்லி சாம்பார்
கத்தரிக்காய் இட்லி சாம்பார்
வெங்காய சாம்பார்
வெங்காய சாம்பார்
வாழைப்பூ குழம்பு
வாழைப்பூ குழம்பு
தக்காளி சாம்பார்
தக்காளி சாம்பார்
தக்காளி சாம்பார் 1
தக்காளி சாம்பார் 1
உருளைகிழங்கு இட்லி சாம்பார்
உருளைகிழங்கு இட்லி சாம்பார்

மசாலா குழம்பு வகைகள்
  • கீழே உள்ள படங்களின் மேல் அம்புக்குறியை [ cursor ஐ ] வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்து கொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் சமையல் குறிப்பு பதிவை காணலாம்.

மசாலா குழம்பு வகைகள்
அவியல்
அவியல்
கடப்பா
கடப்பா
குடைமிளகாய் குருமா
குடைமிளகாய் குருமா
காலிப்ளவர் தக்காளி குருமா
காலிப்ளவர் தக்காளி குருமா
காலிப்ளவர் காளான் மிளகு கிரேவி
காலிப்ளவர் காளான் மிளகு கிரேவி
பஜ்ஜி மிளகாய் கிரேவி
பஜ்ஜி மிளகாய் கிரேவி
பன்னீர் செய்முறை
பன்னீர் செய்முறை
பன்னீர் மசாலா கிரேவி
பன்னீர் மசாலா கிரேவி
பூரி மசாலா
பூரி மசாலா
வெண்டைக்காய் தக்காளி கறி
வெண்டைக்காய் தக்காளி கறி




Friday, April 4, 2014

Poduthalai Thuvaiyal

#பொடுதலைதுவையல் : #பொடுதலை சாதாரணமாக எல்லா இடங்களிலும் புற்களின் நடுவே படர்ந்து காணப்படும். இதன் பூ கத்தரிப்பூ நிறத்தில் இருக்கும்.
இது ஒரு மூலிகையாகும். தமிழ் மருத்துவ முறையில் இந்த மூலிகை பயன் படுத்தப் படுகிறது. இது முக்கியமாக பொடுகுத்தொல்லைக்கு மருந்தாக பயன் படுத்தப் படுகிறது. இதனை பற்றி மேலும் அறிய சொடுக்கவும் : பொடுதலை மருத்துவ பயன்கள் .
பொடுதலையின் அறிவியல் பெயர் : Phyla nodiflora [ Lippia nodiflora ] 
இதனை ஆங்கிலத்தில் Frog Fruit அல்லது Purple Lippia என்று அழைக்கப்படுகிறது.

பொடுதலை [ Frog Fruit அல்லது Purple Lippia ]

நான் சென்ற மாதம் எனது வீட்டிற்கு சென்ற போது என் தாயார் இந்த இலையை வாங்கி வைத்திருந்தார். வயிற்று உபாதைக்கும் தோல் சம்பந்தமான நோய்களுக்கும் நல்லது என்று கூறினார்கள். அதனால் சில செடிகளை என் வீட்டில் நட்டு வைப்பதற்காக எடுத்து வந்தேன். நட்டும் வைத்தேன். அப்போதுதான் என்னுடைய வீட்டை சுற்றி ஏற்கனவே இந்த செடிகள் இருப்பதை கண்டேன். ஒரு இலையை பறித்து சுவைத்து பார்த்தேன். சிறிது கசப்பாக இருந்தது.

பொடுதலை [ Frog Fruit அல்லது Purple Lippia ]
பொடுதலை [ Frog Fruit அல்லது Purple Lippia ]








பொடுதலை [ Frog Fruit அல்லது Purple Lippia ]


அம்மாவிடம் இதனை எவ்வாறு சமையலில் பயன் படுத்தலாம் என கேட்டேன். துவையல் அரைத்து சாதத்துடன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும் என்றார்கள். அவர்கள் கூறியபடி செய்து சுவைத்தேன்.
இப்போது துவையல் செய்முறையை பார்ப்போம்.

பொடுதலை துவையல்

தேவையான பொருட்கள் :
1/4 கப்                                        பொடுதலை இலைகள், கழுவி .வைக்கவும்.
1 Tsp                                           உளுத்தம் பருப்பு
1/2 Tsp                                        கொத்தமல்லி விதை
10                                                மிளகு
3                                                  மிளகாய் வற்றல்
சிறு துண்டு                            பெருங்காயம்
சிறு நெல்லி அளவு            புளி, சுடு நீரில் ஊற வைக்கவும்.
3/4 Tsp                                        உப்பு
1 Tsp                                           வெல்லம்
4  பற்கள்                                 பூண்டு
1 Tsp                                           நல்லெண்ணெய்

செய்முறை :
அடுப்பில் வாணலியை ஏற்றி 1/2 Tsp  எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
முதலில் மிளகாயை வறுத்தெடுக்கவும்.
பின்னர் உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து மிளகாயோடு வைக்கவும்.
இப்போது மிளகையும் மல்லியையும் இலேசாக வறுத்துக்கொள்ளவும்.
எடுத்து மற்றவையோடு வைக்கவும்.


மேலும் 1/2 Tsp  எண்ணெய் விட்டு பொடுதலை இலைகளை நன்கு வதக்கவும்.
வறுத்த பொருட்களை ஆற விடவும்.


மிக்சி அரைக்கும் பாத்திரத்தில் வறுத்த பொருட்களுடன் கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களை சேர்த்து முதலில் தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
பிறகு திறந்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைத்தெடுக்கவும்.
உப்பு சரி பார்க்கவும்.
சுவையான காரம், புளிப்பு, கசப்பு மற்றும் இனிப்பு சுவையுடன் கூடிய துவையல் தயார்.                                           

பொடுதலை துவையல்

ஒரு தட்டில் சூடான சாதம் எடுத்துக் கொண்டு அதன் மேல் 1 Tsp நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் தனி சுவையுடன் இருக்கும்.
பொங்கல், உப்புமா போன்ற பலகாரங்களுடன் தொட்டுக் கொண்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும்.





மேலும் சில சட்னி வகைகள் முயற்சி செய்து பார்க்க
  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
பிரண்டை துவையல் நெல்லிக்காய் புதினா துவையல் கொத்தமல்லி தேங்காய் சட்னி
இஞ்சி துவையல் கரிசலாங்கண்ணி துவையல்



மற்ற சட்னி வகைகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.

சட்னி வகைகள்

இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.



Tuesday, March 25, 2014

Karisalaankanni Thuvaiyal

#கரிசலாங்கண்ணிதுவையல் : என்னுடைய வீட்டை சுற்றியுள்ள நில பரப்பில் அழகான சிறு சிறு வெள்ளை நிற பூக்கள் கொண்ட செடிகள் மெத்தை போல அடர்ந்து பரவி இருந்தது. இது ஏதோ  கீரையாக இருக்கலாம் என சந்தேகித்தேன். மக்கள் டிவி யில் அருண் சின்னையா என்பவர் மூலிகை கீரை கொண்டு சமைப்பதை பார்த்திருக்கிறேன். அதனால் வலை தளத்தில் தேடினேன். ஒரு பட காட்சியில் அவர் இதே போல இலைகளை கொண்டு சூப் தயாரிக்கும் பட காட்சியை பார்த்தேன். அவருடைய படகாட்சியின் மூலம் இந்த செடி #கரிசலாங்கண்ணி என அறிந்து கொண்டேன்.

கரிசலாங்கண்ணி

இதனை சமஸ்க்ரிதத்தில் ப்ரிங்கராஜ் [ Bhringaraj ] என அழைக்கப்படுகிறது.

கரிசலாங்கண்ணி நீலம், வெள்ளை மற்றும் மஞ்சள் என மூன்று வகைகள் உள்ளன.
இவற்றில் வெள்ளை ரகம் சாதாரணமாக எல்லா இடங்களிலும் களை செடியாக வளர்ந்திருப்பதை காணலாம்.
நீல வகை மலை பகுதிகளில் நிறைந்திருக்கும்.
நீளம் மற்றும் வெள்ளை கரிசலாங்கன்னியின் அறிவியல் பெயர் : Eclipta Prostrata [ ஓல்ட் நேம் : Eclipta  alba ]
மஞ்ச கரிசலாங்கண்ணி வீடுகளில் பிரத்யேகமாக மருந்துக்காக வளர்க்கப்படுகிறது.
இதன் அறிவியல் பெயர் : Wedelia chinensis [ or  Wedelia calendulacea ]
தலை முடி மற்றும் சரும நோய்களுக்கும் மற்ற நோய்களுக்கும் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகமாக பயன் படுத்தப் படுகிறது.
இனி செய்முறையை காண்போம்.

கரிசலாங்கண்ணி துவையல்

தேவையான பொருட்கள் :

கரிசலாங்கண்ணி

3/4 அ 1 கப்                                     கரிசலாங்கண்ணி கீரை
1                                                        சிகப்பு மிளகாய்
1 Tsp                                                 உளுத்தம் பருப்பு
8                                                        மிளகு
4 பற்கள்                                         பூண்டு
1/4 Tsp                                              கொத்தமல்லி விதை
1 Tsp                                                 நல்லெண்ணெய்
1/2 Tsp                                              உப்பு
சின்ன கோலி  குண்டு அளவு புளி
செய்முறை :
கீரையை கழுவி தண்ணீரை வடித்து சிறிது ஆற விடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து 1/2 tsp எண்ணெய் விட்டு சிகப்பு மிளகாய், உளுத்தம் பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்தெடுக்கவும்.
அதிலேயே மிளகு மற்றும் மல்லியை வறுத்துக்கொள்ளவும்.
தனியே எடுத்து வைக்கவும்.


அதே வாணலியில் மேலும் 1/2 tsp எண்ணெய் விட்டு கீரையை வதக்கிக் கொள்ளவும்.


ஆறியபின் மிக்சியில் மற்ற பொருட்களுடன் சேர்த்து மைய அரைத்தெடுக்கவும்.


பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

சாதத்தில் 1 tsp துவையல் சேர்த்து நல்லெண்ணெயுடன் கலந்து சாம்பார் மற்றும் பிடித்தமான பொரியல் அல்லது முருங்கைக்காய் சாம்பார் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் மிக ருசியாக இருக்கும்.





மேலும் சில சட்னி வகைகள் முயற்சி செய்து பார்க்க
  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
பொடுதலை துவையல் நெல்லிக்காய் புதினா துவையல் கொத்தமல்லி தேங்காய் சட்னி
இஞ்சி துவையல் பிரண்டை துவையல்



மற்ற சட்னி வகைகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.

சட்னி வகைகள்

இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.





Friday, February 21, 2014

Peerkangkai kothamalli chutney

#பீர்கங்காய்கொத்தமல்லிசட்னி :
#பீர்கங்காய் தண்ணீர் சத்துள்ள சிறிது இனிப்பு சுவையுடன் கூடிய காய் ஆகும்.
இதனை கொண்டு சாம்பார், புளியுடன் சட்னி, துவையல், கூட்டு போன்ற பதார்த்தங்கள் செய்தால் சுவையாக இருக்கும்.
நான் வசிக்கும் ராய்ப்பூரில் பச்சை கொத்தமல்லி விதைகள் கிடைகின்றன. அவற்றை இந்த #சட்னி செய்ய உபயோகப் படுத்தி உள்ளேன்.
அதற்குப் பதிலாக கொத்தமல்லி தழையை அதிகமாக உபயோகப் படுத்தலாம்.
இனி செய்முறையை பார்ப்போம்.

பீர்கங்காய் கொத்தமல்லி சட்னி

தேவையான பொருட்கள் :

பீர்கங்காய்

1                                             பீர்கங்காய்
1 Tbsp                                     பச்சை கொத்தமல்லி விதைகள்
1/4 கப்                                     கொத்தமல்லி தழை அரிந்தது
2 அ 3                                      சிவப்பு மிளகாய்
1 1/2 Tsp                                  உளுத்தம் பருப்பு
சிறிய துண்டு                       இஞ்சி
கோலி  குண்டு அளவு        புளி
2 Tsp                                        எண்ணெய்

செய்முறை :
பீர்கங்காயை கழுவி ஒரே தடிமனான துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.


வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
சூடானதும் மிளகாயை சிவக்க வறுக்கவும்.
பிறகு உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து தனியே வைக்கவும்.
இஞ்சி மற்றும் மல்லி விதிகளை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
எடுத்து தனியே வைக்கவும்.
அடுத்து சிறிது எண்ணெய் விட்டு பீர்கங்காய் துண்டுகளை வதக்கவும்.
பீர்கங்காய் மிருதுவாக வெந்தவுடன் தனியே எடுத்து வைக்கவும்.
வறுத்த மற்றும் வதக்கிய பொருட்களுடன் மற்ற பொருட்களையும் மிக்சியில் அரைத்து எடுக்கவும்.


சுவையான மல்லியின் மணத்துடன் கூடிய சட்னி தயார்.
ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து சாம்பாரை தொட்டுக் கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
இட்லிக்கு மற்றும் தோசைக்கும் அருமையாக இருக்கும்.

பீர்கங்காய் கொத்தமல்லி சட்னி






முயற்சி செய்து பார்க்க மேலும் சில சமையல் குறிப்புகள்

கொத்தமல்லி தேங்காய் சட்னி தக்காளி கொத்தமல்லி சட்னி கொத்தமல்லி நெல்லிக்காய் தயிர் சட்னி

Thursday, February 20, 2014

Tomato Kothamalli Chutney

#தக்காளிகொத்தமல்லிசட்னி : சில மாதங்களுக்கு முன்பு வரை வெங்காயத்தின் விலையும் தக்காளியின் விலையும் அதிகமாக இருந்ததால் இந்த #சட்னி செய்வதை மறந்தே போய் விட்டேன். இப்போது விலை சகஜ நிலைக்கு வந்து விட்டதால் இன்று நீண்ட நாட்களுக்குப் பிறகு இட்லிக்கு தொட்டுக் கொள்ள இந்த சட்னியை செய்தேன். இனி எவ்வாறு என்று பார்க்கலாம்.

தக்காளி கொத்தமல்லி சட்னி

தேவையான பொருட்கள் :
3  சிறிய அளவு                                            நாட்டு தக்காளி
12                                                                    சின்ன வெங்காயம்
3 பற்கள்                                                        பூண்டு
1/2 கப்                                                            கொத்தமல்லி
1 Tsp                                                               கடுகு
1 1/2 Tsp                                                          கருப்பு உளுத்தம் பருப்பு
1 சிறிய  துண்டு                                          பெருங்காயம்
3/4 Tsp                                                            உப்பு
1 Tsp                                                              எண்ணெய்

செய்முறை :
மைக்ரோவேவ் பீங்கான் பாத்திரத்தில் வெங்காயம் மற்றும் பூண்டை எடுத்துகொள்ளவும்.
ஒன்றிரண்டு துளிகள் எண்ணெய் விட்டு குலுக்கவும்.


மைக்ரோவேவ் ஹையில் 1 1/2 நிமிடம் சூடாக்கி வெளியில் எடுக்கவும்.
அதிலேயே தக்காளி துண்டுகளை சேர்த்து மேலு இரு துளி எண்ணெய் விட்டு 3/4 நிமிடம் சூடாக்கவும்.
தக்காளி வெந்தால் போதுமானது.


இதனை ஆற விடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகை வெடிக்க விட்டு சிகப்பு மிளகாயை வறுத்தெடுக்கவும்.
தனியே எடுத்து வைக்கவும்.
இப்போது உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்தெடுக்கவும்.
கடைசியாக பெருங்காயத்தையும் வறுத்து எடுக்கவும்.


முதலில் வறுத்த பொருட்களை உப்புடன் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
அதில் ஆறவைத்துள்ள வெங்காயம் தக்காளியை போட்டு நன்கு அரைக்கவும்.

தக்காளி கொத்தமல்லி சட்னி

கடைசியாக கொத்தமல்லி சேர்த்து அரைத்து உப்பு சரி பார்த்து


 பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

தக்காளி கொத்தமல்லி சட்னி

இட்லி, பணியாரம், தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சட்னி ஆகும்.

குறிப்பு :
மைக்ரோவேவ் இல்லையெனில் வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும்.