Search This Blog

Showing posts with label thuvaiyal. Show all posts
Showing posts with label thuvaiyal. Show all posts

Saturday, October 31, 2020

Liquid_Or_Powder_Mix_for_Rice

 சாதத்துடன் கலந்து சாப்பிட :

சாதத்துடன் கலந்து சாப்பிடக் கூடிய  கலவைகள் மற்றும் பொடிகள் ஆகியவற்றின் செய்முறைகளின் இணைப்புகளை இங்கு தொகுத்துள்ளேன்.  

மதிய உணவு உட்கொள்ளும் போது முதலில் பருப்பு சாதத்துடன் தொடங்குவதுதான் முறை. சாம்பார் அல்லது குழம்பு சாதம் சாப்பிடுவதற்கு முன்னர் பருப்பு சாதம் சுவைக்கப்படுவது வழக்கம். சூடான சாதத்தின் மேல்  வேகவைத்து உப்பு சேர்த்த துவரம் பருப்பு அல்லது பயத்தம் பருப்பை போட்டு, ஒரு தேக்கரண்டி நெய் விட்டு பிசைந்து, சாம்பார் அல்லது தயிர் பச்சடியுடன் சாப்பிட வேண்டும்.

அவ்வாறு பருப்பு இல்லையெனில் முதலில் சாதத்துடன் கீரை மசியல் அல்லது கழனி சாறு [ பால் சாறு ] அல்லது துவையல் அல்லது பொடி போட்டு சாப்பிட்ட பின்னரே சாம்பார்/குழம்பு மற்றும் ரசம் என்று சுவைப்பது வழக்கம்.

கீரை மசியல் என்ற கலவை முளைக்கீரை, அரைக்கீரை, பாலக்கீரை, சிகப்பு முளைக்கீரை ஆகிய ஏதேனும் ஒரு கீரையை வேகவைத்து பருப்பு சேர்த்து அல்லது சேர்க்காமலும் கடைந்து செய்யப்படுகிறது. பச்சை நிறம் மாறாமல் வேகவைத்த கீரையை பூண்டு  மற்றும் உப்பு சேர்த்து மத்து கொண்டு கடைந்தோ அல்லது மிக்ஸியில் அரைத்தோ செய்யலாம். இந்த கீரை மசியலை சூடான சாதத்தில் இட்டு ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாம்பார் அல்லது வத்தக்குழம்பு தொட்டுக்கொண்டு சுவைத்தால் அருமையாக இருக்கும்.

கழனி சாறு என்றும் பால் சாறு என்றும் அழைக்கப்படும் கலவை மணத்தக்காளி கீரை அல்லது முருங்கைக்கீரை அல்லது அகத்திக்கீரை போன்ற கீரைகள் கொண்டு செய்யப்படுகிறது. தற்போது குறிப்புட்டுள்ள ஏதேனும் ஒரு கீரையை வேகவைத்து எடுத்தபின்னர் அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து விட வேண்டும். பின்னர் தேங்காய் பால் எடுத்து கீரையுடன் சேர்த்து சீரகம் தாளித்து வெங்காயத்தை வதக்கி போட்டு செய்யப்படுகிறது. சூடான சாதத்தில் பால் சாறு கீரையுடன் சேர்த்து விட்டு நன்கு அழுத்திப் பிசைந்து சாம்பார் அல்லது காரக்கறியுடன் சுவைக்கலாம்.

விதவிதமான துவையல் வகைகள் பருப்பு, கீரை, மூலிகைகள் உபயோகித்து அரைத்து செய்யப்படுகிறது. அவ்வாறு அரைத்தெடுத்த துவையலை சூடான சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாம்பார் அல்லது குழம்புடன் சுவைத்தால் அருமையாக இருக்கும்.

இதைப்போலவே சாதத்துடன் பொடி சேர்த்து நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு பிசைந்து சாம்பார் அல்லது குழம்புடன் சுவைத்தால் அருமையாக இருக்கும்.

தொக்கு போல எண்ணெய்ச்சட்டியில் அடுப்பின் மீது வைத்து செய்யப்படும் புளிக்காச்சல் மற்றும் தக்காளி தொக்கு போன்றவற்றையும் சாப்பாட்டில் முதலில் சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சுவைத்து மகிழலாம்.

இணைப்புகளை சொடுக்கி தேவையான செயற்குறிப்பு பதிவுகளை அடையலாம்.



கீரை மசியல் வகைகள்
பாலக் கீரை மசியல்
பாலக் கீரை மசியல்
சிகப்பு கீரை மசியல்
சிகப்பு கீரை மசியல்
அரைக்கீரை மசியல்
அரைக்கீரை மசியல்
சிகப்பு கீரை மசியல் 1
சிகப்பு கீரை மசியல் 1


பால்சாறு - கழனி சாறு வகைகள்
மணத்தக்காளிகீரை பால்சாறு
மணத்தக்காளிகீரை பால்சாறு
முருங்கைகீரை பால் சாறு
முருங்கைகீரை பால் சாறு


தொக்கு வகைகள்
புளிக்காச்சல்
புளிக்காச்சல்
தக்காளி தொக்கு
தக்காளி தொக்கு



துவையல் வகைகள்
இஞ்சி துவையல்
இஞ்சி துவையல்
கொத்தமல்லிபுதினா துவையல்
கொத்தமல்லிபுதினா துவையல்
பருப்பு துவையல்
பருப்பு துவையல்
கரிசலாங்கண்ணி துவையல்
கரிசலாங்கண்ணி துவையல்
வேப்பம்பூ துவையல்
வேப்பம்பூ துவையல்
வல்லாரை பருப்பு துவையல்
வல்லாரை பருப்பு துவையல்
நெல்லிக்காய் பீர்க்கங்காய் துவையல்
நெல்லிக்காய் பீர்க்கங்காய் துவையல்
பிரண்டை துவையல்
பிரண்டை துவையல்
பீர்க்கங்காய் துவையல்
பீர்க்கங்காய் துவையல்
வல்லாரை துவையல்
வல்லாரை துவையல்
பொடுதலை துவையல்
பொடுதலை துவையல்
துரை துவையல்
துரை துவையல்


பொடி வகைகள்
மிளகுப்பொடி ஆளிவிதையுடன்
மிளகுப்பொடி ஆளிவிதையுடன்
கொத்தமல்லிமுருங்கைக்கீரைபொடி
கொத்தமல்லிமுருங்கைக்கீரைபொடி
ஆளிவிதை பொடி
ஆளிவிதை பொடி
மிளகுப்பொடி
மிளகுப்பொடி


பல்வேறு சமையல் செயற்குறிப்புகள்




Friday, May 13, 2016

Pirandai-Thuvaiyal

#பிரண்டைதுவையல் :  #பிரண்டை  யை பொதுவாக தோட்டத்து வேலிகளில் படர்ந்திருப்பதை காணலாம். இதை ஆங்கிலத்தில்  Adament creeper / Devils' back bone / Veldt Grape என அறியப்படுகிறது. பிரண்டை கணுக்களை கொண்டதாகவும், வேலிகளில் படருவதற்காக பற்றிக்கொள்ள ஏதுவாக நரம்புகளை உடையதாகவும் இருக்கிறது.
அப்பளம் செய்வதற்கு பிரண்டை பயன் படுத்தப்படுகிறது. இதை தவிர துவையல் அரைக்கவும் செய்யலாம். இளையதாக உள்ள நுனி பகுதி துவையல் அரைக்க ஏதுவாக இருக்கும். நன்கு கழுவிய பிறகு கணு பகுதியை உடைத்து நான்கு பகுதியிலும் நரம்பை நீக்க வேண்டும்.
இனி துவையல் செய்யும் முறையை காண்போம்.

Pirandai thuvaiyal


தேவையான பொருட்கள் :
ஒரு கைப்பிடிபிரண்டை
2 - 3சிகப்பு மிளகாய்
1 Tspஉளுத்தம் பருப்பு
1 Tspகடலை பருப்பு 
3 Tspநிலக்கடலை 
1/2 Tspஆளி விதை
1 Tspஇஞ்சி துண்டுகள் [ விரும்பினால் ]
4 -5மிளகு
1/4 Tspகொத்தமல்லி விதை
2 Tsp எலுமிச்சை சாறு [ அட்ஜஸ்ட் ]
1 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
2 Tspநல்லெண்ணெய்

செய்முறை :
நரம்புகளை நீக்கி சுத்தம் செய்து தனியே எடுத்து வைக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பின் மீது வைத்து மிதமான தீயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சிகப்பு மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, நிலகடலை ஆகியவற்றை சிவக்கும் வரை வறுக்கவும்.
இலேசாக சிவக்க ஆரம்பிக்கும் போது கொத்தமல்லி விதை, மிளகு மற்றும் ஆளி விதிகளை சேர்த்து படபடவென ஆளி  விதை பொறியும் வரை வறுக்கவும்.
ஒரு கிண்ணத்தில் அல்லது மிக்ஸி பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

அடுத்து அதே வாணலியில் அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு இஞ்சி துண்டுகளை நன்கு சிவக்கும் வரை வதக்கி  எடுக்கவும்.

மேலும் சிறிது எண்ணெய் விட்டு பிரண்டை துண்டுகளை வதக்கவும்.
பிரண்டையை நன்கு வதக்குவது மிகவும் அவசியம்.
இல்லையெனில் தொண்டையில் அரிப்பெடுக்கும்.

இவையனைத்தையும் மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும்.
எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்ததை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

சூடான சாதத்தில் ஒரு தேக்கரண்டி துவையல் போட்டு நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிட மிக மிக அருமையாக இருக்கும்.
உப்புமா, பொங்கல் மற்றும் அரிசி சுண்டல் போன்ற சிற்றுண்டிகளுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும்.

Pirandai thuvaiyal




மேலும் சில சட்னி வகைகள் முயற்சி செய்து பார்க்க
  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
பொடுதலை துவையல் நெல்லிக்காய் புதினா துவையல் கொத்தமல்லி தேங்காய் சட்னி
இஞ்சி துவையல் கரிசலாங்கண்ணி துவையல் வடவத்துவையல்



மற்ற சட்னி வகைகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.

சட்னி வகைகள்

இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.



Monday, July 13, 2015

Nellikkai-Peerkangkai-Chutney

#நெல்லிக்காய்பீர்க்கங்காய்துவையல் : சில தினங்களுக்கு முன் பீர்கங்காய் சட்னி செய்வது எப்படி என பார்த்தோம். சட்னியில் புளிப்பு சுவைக்காக புளி அல்லது எலுமிச்சை சாறை உபயோகப்படுத்துவது வழக்கம். நான் அவ்வாறன்றி இம்முறை புளிக்கு பதிலாக நெல்லிக்காயை உபயோகப்படுத்தினேன். சுவையாக இருந்தது. நெல்லிக்காய் வைட்டமின் C அதிக அளவில் கொண்ட கனியாகும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு அளிக்கிறது. இத்தகைய மருத்துவ குணமுள்ள நெல்லிக்காயை பயன் படுத்துவதால் நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நமக்கு கிடைக்கிறது.

Nellikkai Peerkangkai Chutney


தேவையான பொருட்கள் :
1/2 கப்பீர்கங்காய் தோல்
1/2 கப்பீர்கங்காய் துண்டுகள்
3 - 4 Tspதேங்காய் துருவல்
1 1/2 Tspஉளுத்தம் பருப்பு
1/4 Tspகொத்தமல்லி விதை
2 or 3சிகப்பு மிளகாய்
small pieceபெருங்காயம்
1 or 2 Tspஇஞ்சி மெல்லிய துண்டுகள்
2 or 3நெல்லிக்காய்
1/2 Tspஉப்பு
2 Tspஎண்ணெய்

செய்முறை :
நெல்லிக்காயை கழுவி சுத்தம் செய்த பின் 8 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
கொட்டையை நீக்கி துண்டுகளாக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானபின் மிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பை சிவக்க வறுக்கவும்.
சிவந்த பின் எடுத்து தனியே வைக்கவும்.
பெருங்காயத்தை வறுத்தெடுக்கவும்.
மீண்டும் அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு இஞ்சியை வாசனை வரும் வரை வதக்கி எடுக்கவும்.
இப்போது நெல்லிக்காய் துண்டுகளை 2 நிமிடங்கள் வதக்கி எடுத்து வைக்கவும்.
இப்போது மறுபடியும் எண்ணெய் விட்டு பீர்கங்காய் தோல் மற்றும் பீர்கங்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
மூடி போட்டு தோல் வேகும் வரை சிறிய தீயில் வைத்திருக்கவும்.
அவ்வப்போது மூடியை திறந்து கரண்டியால் பிரட்டி விட்ட பின் மூடி வேக விடவும்.
வறுத்த பொருட்கள் அனைத்தும் நன்கு ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு மற்ற பொருட்களையும் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
உப்பு சரி பார்த்த பின் ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

சாதத்துடன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
பொங்கல், உப்புமா போன்ற டிபன் வகைகளுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும்.






மேலும் சில சட்னி வகைகள் :

இஞ்சி துவையல்
இஞ்சி துவையல்
கரிசலாங்கண்ணி துவையல்
கரிசலாங்கண்ணி
கொத்தமல்லி சட்னி 1
கொத்தமல்லி
கொத்தமல்லி விதை சட்னி
கொத்தமல்லி விதை
கொத்தமல்லி புதினா துவையல்
கொத்தமல்லி புதினா




Thursday, March 12, 2015

Vallarai-Paruppu-Thuvaiyal

#வல்லாரைபருப்புத்துவையல் : #வல்லாரைகீரை நீர்நிலைகளின் அருகே அதிகமாக வளர கூடிய ஒரு கொடியாகும். வல்லாரை நினைவாற்றலை மேம்படுதவல்லது. முந்தைய பதிவுகளில் இக்கீரையை கொண்டு துவையல் செய்யும் முறையை அறிந்து கொண்டோம். இங்கு இக்கீரையை சேர்த்து பருப்பு துவையல் செய்வது எப்படி என காண்போம்.

Vallarai Paruppu Thuvaiyal

தேவையான பொருட்கள் :
20 - 25வல்லாரை இலைகள்
3 Tbspதேங்காய் துருவல்
3 Tbspதுவரம் பருப்பு
2 or 3சிகப்பு மிளகாய்
5 - 6 பற்கள்பூண்டு
1 Tspநல்லெண்ணெய் [ Til/sesame oil ]
3/4 Tspஉப்பு [ adjust ]
செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
சூடானதும் மிளகாயை சிவக்க வறுத்து எடுக்கவும்.
அடுத்து துவரம் பருப்பை சேர்த்து கை விடாமல் திராவி சிவக்க வறுக்கவும்.
தனியே தட்டில் எடுத்து வைக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு கழுவி சுத்தம் செய்த கீரையை சேர்த்து 1/2 நிமிடம் வதக்கவும்.
வதக்கிய கீரையையும் தட்டில் எடுத்து வைத்து ஆற விடவும்.
ஆறிய பின்னர் மிக்ஸியில் மற்ற பொருட்களையும் சேர்த்து முதலில் தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

Vallarai Paruppu Thuvaiyal
சூடான சாதத்தில் துவையலை சேர்த்து ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு பிசைந்து புளிச்சாறு அல்லது வத்த குழம்பு தொட்டுக்கொண்டு சாப்பிட்டால்... ஆஹ்... ஆஹா அலாதியான சுவைதான்.





மேலும் முயற்சி செய்ய 

சோள இட்லி
சோள இட்லி
சோள குழிபணியாரம்
சோள குழிபணியாரம்
ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை
நீர்தோசை
நீர்தோசை
முடக்கத்தான் தோசை
முடக்கத்தான் தோசை
கம்பு முறுக்கு
கம்பு முறுக்கு