Search This Blog

Showing posts with label tomato chutney. Show all posts
Showing posts with label tomato chutney. Show all posts

Friday, February 3, 2017

Coriander-Tomato-Chutney

#கொத்தமல்லிதக்காளிசட்னி : பச்சை #கொத்தமல்லி  உபயோகப்படுத்தும் போது இலைகளை மட்டும் பயன்படுத்தி விட்டு தண்டை குப்பையில் எறிந்து விடுகிறோம். தண்டும் சாப்பிடக்கூடிய பொருள் ஆகும். அதனை ரசம் மற்றும் இதர மசாலா குழம்புகள் செய்யும் பொது வாசனைக்காக தூவ பயன் படுத்தலாம். மேலும் சட்னி அரைக்கும் போது வேர் பகுதி நீங்கலாக தண்டு பகுதியை நன்கு கழுவிய பின்னர் பயன் படுத்தலாம். இதனால் பச்சைக் கொத்தமல்லியின் முழு மருத்துவ பயன்களும் நமக்கு கிட்டும். இங்கு கொத்தமல்லி கொண்டு ஒரு கார சட்னி செய்யும் விதத்தை காணலாம்.

coriander tomato chutney

தேவையானவை :
1 கப்கொத்தமல்லி தழை
2 மதிய தர அளவுநாட்டு தக்காளி
6 - 7பச்சை மிளகாய் [ அட்ஜஸ்ட் ]
12 - 15சின்ன வெங்காயம் தோலுரித்தது
2பூண்டு பற்கள்
1 Tspஎலுமிச்சை சாறு [ அட்ஜஸ்ட் ]
3/4 Tspஉப்பு
1 Tspநல்லெண்ணெய்

செய்முறை :
பச்சை மிளகாய், வெங்காயம்  மற்றும் தக்காளியை வதக்க மைக்ரோ வேவ் பயன் படுத்தியுள்ளேன். மைக்ரோ வேவ் இல்லாதவர்கள் வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கலாம்.

மைக்ரோ வேவில் வைக்கக்கூடிய பீங்கான் பாத்திரத்தில் வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் பச்சைமிளகாயை எடுத்துக்கொள்ளவும்.
இரண்டு மூன்று துளிகள் எண்ணெய் விட்டு ஒரு தேக்கரண்டியால் கலக்கி விடவும்.
தேக்கரண்டியை எடுத்து விட்டு பீங்கான் பாத்திரத்தை மைக்ரோ வேவின் உள்ளே வைத்து மைக்ரோ வேவ் ஹையில் 1 நிமிடம் சூடாக்கவும்.
வெளியே எடுத்து தக்காளியை துண்டுகளாக்கி சேர்க்கவும்.
கால் தேக்கரண்டி எண்ணெய் விட்டு கலக்கி மறுபடியும் மைக்ரோ வேவ் ஹையில் 1 நிமிடம் அல்லது தக்காளி மிருதுவாகும் வரை வைத்து எடுக்கவும்.
பின்னர் வெளியில் எடுத்து வைத்து ஆற விடவும்.

ஆறிய பின்னர் மிக்சி பாத்திரத்தில் வதக்கிய மற்றும் கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் போட்டு அரைத்தெடுக்கவும்.
உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சரி பார்க்கவும்.

பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
காரசாரமான மயக்கும் கொத்தமல்லி வாசனையுடன் கூடிய சுவையான கொத்தமல்லி தக்காளி சட்னி தயார்.
இட்லி, தோசை, ஆப்பம் போன்ற சிற்றுண்டிகளுக்கு உகந்த சட்னி.
தயிர் சாதம் சாப்பிடும் போது தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.

coriander tomato chutney

குறிப்பு :
விரும்பினால் வாணலியில் எண்ணெய்யை சூடாக்கி கடுகு தாளித்து கொட்டி சுவையேற்றலாம்.








மற்ற சட்னி வகைகள் சில
மாங்காய் சட்னி 1
மாங்காய் சட்னி 1
வல்லாரை சட்னி 1
வல்லாரை சட்னி 1
வல்லாரை பருப்பு துவையல்
வல்லாரை பருப்பு...
துரை துவையல்
துரை துவையல்
வல்லாரை தேங்காய் சட்னி
வல்லாரை தேங்காய்..



Tuesday, December 20, 2016

Curry-Leaf-Tomato-Chutney

#கருவேப்பிலைதக்காளிசட்னி : #கருவேப்பிலை [ #கறிவேப்பிலை ] நமது தமிழகத்து சமையலில் மிக முக்கிய இடம் வகிக்கிறது. நாம் அருந்தும் டீ மற்றும் காபி தவிர மற்ற அனைத்து உணவிலும் இந்த அற்புத இலை இல்லாமல் செய்யப்படுவது இல்லை. நாம் இதை வாசனைக்காக மட்டுமல்ல, முக்கிய சத்துக்களுக்காகவும் பயன் படுத்துகிறோம். கருவேப்பிலையை கிள்ளி போட்டு சமையலில் பயன் படுத்தும் போது நம்மில் பலர் அதை ஒதுக்கி வைத்துவிட்டு உண்கிறோம். ஆக பல மருத்துவ குணங்கள் அடங்கிய கருவேப்பிலையை சட்னி செய்ய உபயோகப்படுத்தப்படும் போது நன்கு அரை பட்டுவிடுவதால் நாம் முழு பலனை அடையலாம்.
இங்கு கருவேப்பிலையை மிகுதியாக உபயோகப்படுத்தி தக்காளியுடன் சேர்த்து செய்யக்கூடிய ஒரு சட்னி செய்முறையை காணலாம்.


தேவையானவை :
1/4 கப்கருவேப்பிலை
தக்காளி 
10 - 12சின்ன வெங்காயம்
6 - 8பச்சை மிளகாய்
1 Tspஎலுமிச்சை சாறு [ அட்ஜஸ்ட் ]
1 1/2 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
1/2 Tspஎண்ணெய்
தாளிக்க :
1/2 Tspஎண்ணெய்
1/2 Tspகடுகு
1/2 Tspஉளுத்தம் பருப்பு
4 - 6கருவேப்பிலை
செய்முறை :
கருவேப்பிலையை தண்ணீரில் நன்கு கழுவி தனியே வைக்கவும்.
மைக்ரோவேவில் பயன்படுத்தக்கூடிய பீங்கான் பாத்திரத்தில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை எடுத்துக்கொள்ளவும்.
கால்  தேக்கரண்டி எண்ணெய் விட்டு கலந்து விடவும்.
மைக்ரோவேவின் உள்ளே வைத்து ஹையில் அரை நிமிடம் சூடு படுத்தவும்.
வெளியே எடுத்து அதே பீங்கான் பாத்திரத்தில் வெட்டி வைத்துள்ள தக்காளி சேர்த்து மேலும் கால் தேக்கரண்டி எண்ணெய் விட்டு கலந்து விடவும்.
மீண்டும் மைக்ரோவேவ் ஹையில் தக்காளி வேகும்வரை சூடாக்கவும்.
வெளியே எடுத்து வைத்து ஆற விடவும்.
ஆறிய பின்னர் வதங்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கழுவி வைத்துள்ள கருவேப்பிலை, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு அனைத்தையும் மிக்சி பாத்திரத்தில் போட்டு நன்கு அரைத்தெடுக்கவும்.
தேவையெனில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சரி பார்த்து பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகை வெடிக்க விட்ட பின் உளுத்தம் பருப்பை சேர்த்து சிவக்க வறுக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு கருவேப்பிலையை கிள்ளி போட்டு தாளித்து சட்னியின் மேல் கொட்டவும்.

சுவையான கருவேப்பிலை நறுமணம் கூடிய சட்னி தயார்.
ஆப்பம், &  தோசை

நீர் தோசை,  &  கஞ்சி தோசை போன்றவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
காரம் அதிகமாக இருப்பதால் சட்னியின் மேல் நல்லெண்ணெய் ஊற்றி தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் மிக மிக அருமையாகவும் ருசியாகவும் இருக்கும்.

  • அவரவர் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாயின் அளவை கூட்டி குறைத்துக்கொள்ளவும்.
  • மைக்ரோவேவ் இல்லையெனில் வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை தனித்தனியே வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
  • எலுமிச்சை சாற்றிற்கு பதிலாக புளியையும் உபயோகிக்கலாம்.
  • கருவேப்பிலையின் அளவையும் அவரவர் விரும்பம்போல் எடுத்துக்கொள்ளலாம்.


சில சட்னி வகைகளின் சமையல் குறிப்புகள் :

  • கீழே உள்ள படங்களின் மேல் அம்புக்குறியை காட்டினால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்து கொள்ளலாம்
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் சமையல் குறிப்பின் பக்கத்திற்கு செல்லலாம்

பூண்டு மிளகாய் சட்னி பூண்டு தக்காளி சட்னி வெங்காயம் தக்காளி சட்னி
கொத்தமல்லி தேங்காய் சட்னிநெல்லிக்காய் புதினா துவையல்





இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.






Wednesday, August 20, 2014

Tomato Chutney

#தக்காளிசாம்பார் : இந்த சாம்பாரை எங்கள் இல்லத்தில் தக்காளி சட்னி என்றுதான் குறிப்பிடுவது வழக்கம். பொதுவாக பருப்பு சேர்த்து செய்யப்படுவதை சாம்பார் என்றும் பருப்பு சேர்க்காமல் செய்யப்படுவதை சட்னி என்றும் நாங்கள் குறிப்பிடுவது வழக்கம்.
வெகு நாட்களுக்கு முன்பே தக்காளி சாம்பார் 1 செய்முறையை பதிவேற்றியுள்ளேன். பின் எதற்கு மற்றுமொரு முறை என முணுமுணுப்பது கேட்கிறது!!
இந்த முறை சிறிது நீர்க்க செய்யப்படும் முறையாகும். மேலும் கடைகளில் கிடைக்கும் டப்பிகளில் அடைத்துவைத்துள்ள  தக்காளி பழக்கூழ் [ tomato puree tetrapack ]  கொண்டு செய்யப்படும் முறையும் ஆகும்.
இனி எப்படி என பார்ப்போம்.

தக்காளி சாம்பார்


தேவையான பொருட்கள் :
1 பெரிய அளவு                              தக்காளி, துண்டுகளாக்கவும்.
1/2 கப்                                                 தக்காளி பழக்கூழ் [ tomato puree ]
1 மத்திய அளவு                              வெங்காயம், நறுக்கி வைக்கவும்.
3                                                           பச்சை மிளகாய், இரண்டாக கீறி வைக்கவும்
1/4 அங்குல துண்டு                      இஞ்சி, நசுக்கிகொள்ளவும்.
12                                                         கருவேப்பிலை
1/4 கப்                                                 கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
1/4 கப்                                                 குடை மிளகாய் பொடியாக நறுக்கியது
1 Tbsp                                                   முளை கட்டிய பயறு [  இருந்தால் ]

தேவையான பொடிகள் :
2 சிட்டிகை                                       மஞ்சத்தூள்
1/4 Tsp                                                 சிகப்பு மிளகாய் தூள் [ விருப்பமானால் ]
1 Tsp குவித்து                                  சாம்பார் மிளகாய் தூள்
1/2 Tsp                                                 சோள மாவு
1 1/4 Tsp                                              உப்பு [அட்ஜஸ்ட்]

தாளிக்க :
1/2 Tsp                                                 கடுகு
2 Tsp                                                    கடலை பருப்பு
1/4 Tsp                                                 பெருங்காய தூள்
2 Tsp                                                    எண்ணெய்

செய்முறை :
அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
எண்ணெய் சூடேறியதும் கடுகை வெடிக்க விட்டு பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
பின்னர் பெருங்காய தூள் சேர்த்தவுடன் மஞ்சத்தூள், பெருங்காய தூள் மற்றும் சிகப்பு மிளகாய் தூளை சேர்க்கவும்.

உடனேயே கருவேப்பிலை, பாதி கொத்தமல்லி தழை, மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.

அதன் பின் வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வரை வதக்கவும்.

இப்போது குடை மிளகாய் துண்டுகளை 1 நிமிடம் வதக்கவும்.
அதன் பின் பயறை சேர்த்து  பிரட்டு பிரட்டி விடவும்.

கடைசியாக சாம்பார் மிளகாய் தூளை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி விடவும்.
இப்போது தக்காளி பழக்கூழை சேர்க்கவும்.
2 முதல் 2 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.

தீயை அதிக படுத்தி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்தவுடன் தீயை நன்கு குறைத்து விடவும்.
5 - 7 நிமிடங்கள் அடுப்பில் கொதித்து கொண்டே இருக்கட்டும்.

கடைசியாக சோள 1மாவை 1/8 கப் தண்ணீரில் கலந்து கொதிக்கும் சட்னியில் ஊற்றவும்.
கிண்டி விடவும். உப்பு சரி பார்க்கவும்.
சூப் போன்ற பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு கறுவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தூவவும்.

தக்காளி சாம்பார்

அருமையான தக்காளி சாம்பார் தயார். வாசனை மூக்கை துளைக்குமே!
இன்னும் ஏன் காத்து கொண்டிருக்கிறீர்கள்!
இட்லியை தட்டிலோ அல்லது கிண்ணத்திலோ வைத்து அதன் மேல் இரண்டு கரண்டி தக்காளி சாம்பார் விடவும். 1 Tsp நல்லெண்ணெய் விட்டு சுவைக்கவும்.
என்ன!! இட்லி தீர்ந்து போய் விட்டதா??!!?? 

நான் இன்னும் இரண்டு இட்லியை தக்காளி சட்னியுடன் சாப்பிடலாம் என்றிருந்தேனே!! ம்ம்.. ம்...க்கும்..!!




மற்றொரு முறை :
தக்காளி சாம்பார் 1


Thursday, February 20, 2014

Tomato Kothamalli Chutney

#தக்காளிகொத்தமல்லிசட்னி : சில மாதங்களுக்கு முன்பு வரை வெங்காயத்தின் விலையும் தக்காளியின் விலையும் அதிகமாக இருந்ததால் இந்த #சட்னி செய்வதை மறந்தே போய் விட்டேன். இப்போது விலை சகஜ நிலைக்கு வந்து விட்டதால் இன்று நீண்ட நாட்களுக்குப் பிறகு இட்லிக்கு தொட்டுக் கொள்ள இந்த சட்னியை செய்தேன். இனி எவ்வாறு என்று பார்க்கலாம்.

தக்காளி கொத்தமல்லி சட்னி

தேவையான பொருட்கள் :
3  சிறிய அளவு                                            நாட்டு தக்காளி
12                                                                    சின்ன வெங்காயம்
3 பற்கள்                                                        பூண்டு
1/2 கப்                                                            கொத்தமல்லி
1 Tsp                                                               கடுகு
1 1/2 Tsp                                                          கருப்பு உளுத்தம் பருப்பு
1 சிறிய  துண்டு                                          பெருங்காயம்
3/4 Tsp                                                            உப்பு
1 Tsp                                                              எண்ணெய்

செய்முறை :
மைக்ரோவேவ் பீங்கான் பாத்திரத்தில் வெங்காயம் மற்றும் பூண்டை எடுத்துகொள்ளவும்.
ஒன்றிரண்டு துளிகள் எண்ணெய் விட்டு குலுக்கவும்.


மைக்ரோவேவ் ஹையில் 1 1/2 நிமிடம் சூடாக்கி வெளியில் எடுக்கவும்.
அதிலேயே தக்காளி துண்டுகளை சேர்த்து மேலு இரு துளி எண்ணெய் விட்டு 3/4 நிமிடம் சூடாக்கவும்.
தக்காளி வெந்தால் போதுமானது.


இதனை ஆற விடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகை வெடிக்க விட்டு சிகப்பு மிளகாயை வறுத்தெடுக்கவும்.
தனியே எடுத்து வைக்கவும்.
இப்போது உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்தெடுக்கவும்.
கடைசியாக பெருங்காயத்தையும் வறுத்து எடுக்கவும்.


முதலில் வறுத்த பொருட்களை உப்புடன் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
அதில் ஆறவைத்துள்ள வெங்காயம் தக்காளியை போட்டு நன்கு அரைக்கவும்.

தக்காளி கொத்தமல்லி சட்னி

கடைசியாக கொத்தமல்லி சேர்த்து அரைத்து உப்பு சரி பார்த்து


 பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

தக்காளி கொத்தமல்லி சட்னி

இட்லி, பணியாரம், தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சட்னி ஆகும்.

குறிப்பு :
மைக்ரோவேவ் இல்லையெனில் வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும்.