Search This Blog

Showing posts with label கொத்தமல்லி. Show all posts
Showing posts with label கொத்தமல்லி. Show all posts

Friday, February 3, 2017

Coriander-Tomato-Chutney

#கொத்தமல்லிதக்காளிசட்னி : பச்சை #கொத்தமல்லி  உபயோகப்படுத்தும் போது இலைகளை மட்டும் பயன்படுத்தி விட்டு தண்டை குப்பையில் எறிந்து விடுகிறோம். தண்டும் சாப்பிடக்கூடிய பொருள் ஆகும். அதனை ரசம் மற்றும் இதர மசாலா குழம்புகள் செய்யும் பொது வாசனைக்காக தூவ பயன் படுத்தலாம். மேலும் சட்னி அரைக்கும் போது வேர் பகுதி நீங்கலாக தண்டு பகுதியை நன்கு கழுவிய பின்னர் பயன் படுத்தலாம். இதனால் பச்சைக் கொத்தமல்லியின் முழு மருத்துவ பயன்களும் நமக்கு கிட்டும். இங்கு கொத்தமல்லி கொண்டு ஒரு கார சட்னி செய்யும் விதத்தை காணலாம்.

coriander tomato chutney

தேவையானவை :
1 கப்கொத்தமல்லி தழை
2 மதிய தர அளவுநாட்டு தக்காளி
6 - 7பச்சை மிளகாய் [ அட்ஜஸ்ட் ]
12 - 15சின்ன வெங்காயம் தோலுரித்தது
2பூண்டு பற்கள்
1 Tspஎலுமிச்சை சாறு [ அட்ஜஸ்ட் ]
3/4 Tspஉப்பு
1 Tspநல்லெண்ணெய்

செய்முறை :
பச்சை மிளகாய், வெங்காயம்  மற்றும் தக்காளியை வதக்க மைக்ரோ வேவ் பயன் படுத்தியுள்ளேன். மைக்ரோ வேவ் இல்லாதவர்கள் வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கலாம்.

மைக்ரோ வேவில் வைக்கக்கூடிய பீங்கான் பாத்திரத்தில் வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் பச்சைமிளகாயை எடுத்துக்கொள்ளவும்.
இரண்டு மூன்று துளிகள் எண்ணெய் விட்டு ஒரு தேக்கரண்டியால் கலக்கி விடவும்.
தேக்கரண்டியை எடுத்து விட்டு பீங்கான் பாத்திரத்தை மைக்ரோ வேவின் உள்ளே வைத்து மைக்ரோ வேவ் ஹையில் 1 நிமிடம் சூடாக்கவும்.
வெளியே எடுத்து தக்காளியை துண்டுகளாக்கி சேர்க்கவும்.
கால் தேக்கரண்டி எண்ணெய் விட்டு கலக்கி மறுபடியும் மைக்ரோ வேவ் ஹையில் 1 நிமிடம் அல்லது தக்காளி மிருதுவாகும் வரை வைத்து எடுக்கவும்.
பின்னர் வெளியில் எடுத்து வைத்து ஆற விடவும்.

ஆறிய பின்னர் மிக்சி பாத்திரத்தில் வதக்கிய மற்றும் கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் போட்டு அரைத்தெடுக்கவும்.
உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சரி பார்க்கவும்.

பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
காரசாரமான மயக்கும் கொத்தமல்லி வாசனையுடன் கூடிய சுவையான கொத்தமல்லி தக்காளி சட்னி தயார்.
இட்லி, தோசை, ஆப்பம் போன்ற சிற்றுண்டிகளுக்கு உகந்த சட்னி.
தயிர் சாதம் சாப்பிடும் போது தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.

coriander tomato chutney

குறிப்பு :
விரும்பினால் வாணலியில் எண்ணெய்யை சூடாக்கி கடுகு தாளித்து கொட்டி சுவையேற்றலாம்.








மற்ற சட்னி வகைகள் சில
மாங்காய் சட்னி 1
மாங்காய் சட்னி 1
வல்லாரை சட்னி 1
வல்லாரை சட்னி 1
வல்லாரை பருப்பு துவையல்
வல்லாரை பருப்பு...
துரை துவையல்
துரை துவையல்
வல்லாரை தேங்காய் சட்னி
வல்லாரை தேங்காய்..



Monday, April 11, 2016

Kothamalli-Pudhina-Sauce

#கொத்தமல்லிபுதினாசாஸ் : நான் ராய்ப்பூரில் வசித்து வந்த போது எனது தோட்டத்தில் புதினா வளர்த்து வந்தேன். அதனால் எல்லாவிதமான உணவு வகைகளிலும் புதினா சேர்ப்பது அல்லது அலங்கரிப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். ஆனால் இப்போது மார்கெட்டிலிருந்துதான் வாங்கி வருகிறேன். புதினா இலைகளை சுத்தம் செய்து குளிர் சாதனப்பெட்டியில் வைத்தாலும் அதன் தனித்தன்மையான சுவையும் மணமும் நாட்கள் செல்ல செல்ல குறைந்து விடுகிறது. அதனை ஓரளவு தடுக்க கொத்தமல்லியுடன் சேர்த்து பச்சையாக இருக்கும் போதே அரைத்து ஒரு சுத்தமான பாட்டிலில் அடைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து ரசம் முதல் அனைத்து உணவுடனும் சேர்க்க ஆரம்பித்து விட்டேன். இந்த சாஸ் மிகவும் உபயோகமாக இருக்கிறது. 
கொத்தமல்லி தழை மட்டுமின்றி அதன் தண்டையும் சேர்த்து அரைக்கலாம்.
இனி எவ்வாறு அரைத்து எடுத்து வைப்பது என காணலாம்.



தேவையான பொருட்கள்  :
1 கப்புதினா [ Mint ] இலைகள்
1 கப்கொத்தமல்லி தழை
10 - 12பச்சை மிளகாய் [ adjust ]
சிறு துண்டுஇஞ்சி [ optional ]
3/4 Tspஉப்பு [ adjust ]
1 - 1 1/2 Tspஎலுமிச்சை சாறு [ adjust ]
1/4 கப்வினிகர்

செய்முறை :
கொத்தமல்லி மற்றும் புதினா இரண்டையும் தனித்தனியாக நன்கு கழுவி தண்ணீரை வடிய விடவும்.
மிக்ஸியில் கொத்தமல்லி, உப்பு , பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை  போட்டு தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
பின்னர் புதினா, எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
நன்கு அரைத்த கொத்தமல்லி புதினா சாஸை ஒரு சுத்தமான பாட்டிலில் எடுத்து வைத்து குளிர் சாதனபெட்டியில் பத்திரப்படுத்தவும்.

காரமும் மனதை மயக்கும் மணமும் நிறைந்த இந்த சாஸ் இட்லி,  & தோசை, அரிசி சுண்டல், & உப்புமா, & பொங்கல் போன்ற அனைத்து காலை உணவு வகைகளுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

எலுமிச்சை ரசம் செய்யும் போது இறக்கிய பிறகு சிறிது இந்த சாஸை சேர்த்தால் ருசியும் மணமும் தூக்கலாக இருக்கும்.

பிரியாணி செய்யும் போது புதினாவுடன் இந்த சாஸையும் சேர்த்து செய்தால் இன்னும் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

பிரட் சான்விச் செய்யும் போது பிரட்டின் மீது தடவ பயன் படுத்தலாம்.

தயாரித்து சுவைத்துப் பாருங்கள்!! மிக மிக அருமையான சாஸ் இது!!!






மேலும் சில உணவு வகைகள் முயற்சி செய்து பார்த்து சுவைக்க
  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
வல்லாரை சட்னி பொடுதலை துவையல் கரிசலாங்கண்ணி துவையல்
இஞ்சி துவையல் பொங்கல் துவையல்




இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.

Saturday, January 17, 2015

Kothamalli-Nellikkai-Thayir-Chutney

#கொத்தமல்லிநெல்லிக்காய்தயிர்சட்னி : குளிர் காலத்தில் பச்சை #கொத்தமல்லி அதிக அளவில் கிடைக்கும். #கொத்தமல்லிதழை  வாசனைக்காக சமையலில் சேர்க்கப் படுகிறது. கொத்தமல்லியில் விட்டமின்களும் தாதுக்களும் அதிக அளவில் நிறைந்துள்ளது. குறிப்பாக வைட்டமின் c மற்றும் இரும்பு சத்து அதிக அளவில் நிறைந்திருக்கிறது.
அதனால் கொத்தமல்லியை நமது அன்றாட சமையலில் அதிக அளவில் எடுத்துக் கொள்வது நலம்.
நெல்லிக்காய் வைட்டமின் c அதிக அளவு நிறைந்துள்ள கனியாகும்.
இவ்விரண்டையும் உபயோகித்து ஒரு சுவையான சட்னி செய்வதெப்படி என காண்போம்.

கொத்தமல்லி நெல்லிக்காய் தயிர் சட்னி


தேவையான பொருட்கள் :
1 cupகொத்தமல்லி தழை 
2 or 3நெல்லிக்காய் [ Gooseberry - amla ]
1/3 cupகெட்டி தயிர்
7 to 8பச்சை மிளகாய்
8 to 10சின்ன வெங்காயம்
சிறு துண்டுஇஞ்சி
3/4 Tspஉப்பு  [ adjust ]
1 to 2 Tspஎலுமிச்சை சாறு [ adjust ]

செய்முறை :

  • தயிரை கரண்டி அல்லது மத்து கொண்டு கடைந்து வைக்கவும்.
  • நெல்லிக்காய் மற்றும் கொத்தமல்லியை நன்கு கழுவி சுத்தப் படுத்தி வைக்கவும்.
  • சின்ன வெங்காயத்தின் தோலுரித்தது வைக்கவும்.
  • நெல்லிக்காயை இட்லி பானை அல்லது குக்கரில் [ வெயிட் பொருத்தாமல் ] ஆவியில் 8 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
  • வேக வைத்த நெல்லிக்காயின் கொட்டையை அகற்றவும்.
  • தயிர் மற்றும் எலுமிச்சை சாறு நீங்கலாக மிக்ஸியில் அனைத்தையும் அரைக்கவும்.
  • கடைசியாக தயிர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  • பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
  • தேவையான அளவு எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
  • உப்பு சரி பார்க்கவும்.
  • சிறிது கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.
கொத்தமல்லி நெல்லிக்காய் தயிர் சட்னி
இட்லி, தோசை, உப்புமா மற்றும் பொங்கலுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் ஏற்ற சட்னி ஆகும்.
செய்து சுவைத்து பாருங்கள்!!




மேலும் சில பச்சடி வகைகள் செய்து சுவைக்க

வாழைப்பூ வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைப்பூ தயிர் 
பச்சடி
பப்பாளி கேரட் சாலட்
பப்பாளி கேரட்
சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
மாங்காய் பச்சடி
மாங்காய்
பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி








Wednesday, December 17, 2014

Kothamalli-Koottu - Pulillacurry

#கொத்தமல்லிகூட்டு  #புளில்லாகறி : இந்த கூட்டு எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மிக மிக பிடித்தமான உணவு ஆகும். விடுமுறையின் போது எங்களுடைய பாட்டி வீட்டிற்கு சென்றால் இரவு உணவின் போது புளில்லாகறியும் சூடான சாதமும் அதற்கு தொட்டுக்கொள்ள வெங்காய வத்தலும் [ வற்றலும் ] வறுத்து கொடுப்பார்கள். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை யாரும் வேண்டாம் என்றே சொல்ல மாட்டார்கள். அருமையான மேலும் சத்தான உணவாகும்.
என் அம்மாவும் அடிக்கடி செய்வார்கள். என்னுடைய மகளுக்கும் மிகவும் பிடித்தமான உணவு ஆகும். கொத்தமல்லி பச்சையாக கிடைக்கும் போதெல்லாம் இந்த கூட்டு கட்டாயம் தினமும் எங்களுடைய சமையல் பட்டியலில் இடம் பெற்று விடும்.
புளி இல்லாமல் பயத்தம் பருப்பு மற்றும் தேங்காய் கொண்டு செய்யப்படுவதால் புளில்லாகறி அதாவது புளியில்லாத கறி என்று அழைக்கப்படுகிறது.
புளில்லாகறியை கொத்தமல்லி தழை மட்டுமே கொண்டும் செய்யலாம்.
அல்லது கத்தரிக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பலாகொட்டை, பீர்கங்காய் ஆகியவற்றுள் ஒன்று மட்டுமோ அல்லது இரண்டு மூன்று காய்கறிகளுடனும்  கொத்தமல்லி தழை சேர்த்து செய்யலாம். ஆனால் எடுத்துக்கொள்ளும் காய்கறியின் அளவு கொத்தமல்லி தழையின் அளவை காட்டிலும் குறைவாக இருப்பின் சுவை அருமையாக இருக்கும்.
இனி செய்முறையை காண்போம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவு கொண்டு மூன்று பேருக்குத் தேவையான புளில்லாகறி தயாரிக்கலாம்.

கொத்தமல்லிகூட்டு [ புளில்லாகறி ]

தேவையான பொருட்கள் :
Coriander Leaves

கொத்தமல்லி தழை                    : 1/2 cup
வெங்காயம் சிறிய அளவு         : 1
பூண்டு                                                :  2 பற்கள்
பயத்தம் பருப்பு                              : 1/3 cup
மஞ்சத்தூள்                                     : ஒரு சிட்டிகை
சாம்பார் மிளகாய்த்தூள்        : 1/2 Tsp
உப்பு                                                    : 3/4 Tsp [ அட்ஜஸ்ட் ]

 அரைப்பதற்கு :
தேங்காய் துருவல்                       : 3 Tsp
சீரகம்                                                  : 1/4 Tsp
அரிசி மாவு                                       : 1/4 Tsp
மிளகு                                                  : 4 or 5 [ optional ]

தாளிப்பதற்கு :
வெங்காய வடவம்                        : 1/4 Tsp
எண்ணெய்                                        : 1/2 Tsp

செய்முறை :
வெங்காயம் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கவும்.

கொத்தமல்லியை நன்கு கழுவி அதையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து எடுத்து தனியே வைக்கவும்

பருப்பை கழுவி குக்கரில் எடுத்துகொள்ளவும்.
மஞ்சத்தூள் ஒரு சிட்டிகை மற்றும் தண்ணீர் 1 கப் சேர்த்து  வேக வைக்கவும்.
1 விசில் வந்த பிறகு தீயை குறைத்து 5 நிமிடங்கள் வேக விடவும்.
ஆவி அடங்கிய பிறகு குக்கரை திறக்கவும்.



மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும். அதில் மஞ்சத்தூள், சாம்பார் மிளகாய்த்தூள் நறுக்கிய வெங்காயம், பூண்டை சேர்க்கவும்.
வெங்காயம் முக்கால் பாகம் வெந்ததும் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி மற்றும் வேக வைத்த பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து மிதமான தீயில் 3 முதல் 5 நிமிடங்கள் அல்லது ஒன்று சேர்ந்தார் போல வரும் வரை கொதிக்க வைக்கவும்.


தயாரான கூட்டை பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி வெங்காய வடவம் தாளித்து சேர்க்கவும்.

கொத்தமல்லிகூட்டு [ புளில்லாகறி ]


சூடான சுவையான கொத்தமல்லி கூட்டு - புளில்லாகறி தயார்.
சூடான சாதத்தில் ஊற்றி பிசைந்து வெங்காய வற்றல் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.


செய்துதான் பாருங்களேன்!!

மற்ற கொத்தமல்லி கூட்டு வகைகள் :

காய்கறி கொத்தமல்லி கூட்டு [ காய்கறி புளில்லாகறி ]


Tuesday, July 29, 2014

Broken Wheat Coriander Pongal

#கோதுமைரவா #கொத்தமல்லி #பொங்கல் : கொத்தமல்லி ஒரு பெரிய கட்டு மார்கட்டிலிருந்து வாங்கி வந்து விட்டேன். சட்னி மற்றும் துவையல் அரைத்த பின்னரும் மீதி இருந்தது. என்ன செய்யலாம் என யோசித்த போது,....  காலை உணவிற்கு பொங்கலுடன் கொத்தமல்லியையும் சேர்த்து செய்யலாமே என முடிவு செய்தேன்.
இனி எப்படி என பார்க்கலாம்.



தேவையான பொருட்கள் :
3/4 கப்                                         கோதுமை ரவா
1/4 கப்                                         பயத்தம் பருப்பு
2                                                   பச்சை மிளகாய், கீறி வைக்கவும்
5 - 6 பற்கள்                              பூண்டு, பொடியாக நறுக்கவும்
1/2 அங்குல                              இஞ்சித்துண்டு, நசுக்கிகொள்ளவும்
1 Tsp                                            சீரகம்
1 Tsp                                            மிளகு
1 1/2 Tsp                                      உப்பு [ அட்ஜஸ்ட் ]

தாளிக்க :
1 Tsp                                             சீரகம்
1 Tsp                                             மிளகு
10 - 15                                          கறுவேப்பிலை
2 Tsp                                             முந்திரி பருப்பு துண்டுகள்
1 Tsp                                              நெய்
1 Tsp                                              நல்லெண்ணெய்

அலங்கரிக்க கொத்தமல்லி தழை சிறிது.

செய்முறை :
குக்கரில் கோதுமை ரவாவையும் பருப்பையும் எடுத்துக்கொள்ளவும்.
இரு முறை நீர் விட்டு கழுவிக்கொள்ளவும்.
நீரை வடித்து விட்டு 4 கப் தண்ணீர் சேர்க்கவும்.
பின்னர் கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களை சேர்த்து நன்கு கலக்கி விடவும்.


குக்கரை மூடி வெயிட் வைக்கவும்.
அடுப்பில் அதிக தீயில் 3 விசில் வரும் வரை வேக விடவும்.
பின்னர் தீயை குறைத்து 5 நிமிடங்கள் வேக விடவும்.
ஆவி அடங்கிய பின்னர் திறக்கவும்.


ஆவி அடங்குவதற்குள் மற்றொரு அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி சூடாக்கவும்.
சீரகத்தை வெடிக்க விட்ட பின்னர் மிளகு சேர்த்து பொரிந்தவுடன் கறுவேப்பிலை சேர்க்கவும். கறுவேப்பிலை பட படவென பொரிந்து அடங்கிய பின்னர் பொங்கலின் மேல் கொட்டவும்.
அதே வாணலியில் முந்திரியையும் சிவக்க வறுத்து சேர்க்கவும்.
நன்கு கரண்டியால் கிளறி விடவும்.
உப்பு சரி பார்க்கவும்.தேவையானால் சிறிது சேர்த்து கிளறவும்.

சூடாக இருக்கும் போதே பரிமாறும் தட்டில் இட்டு கொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னி அல்லது பொங்கல் துவையலுடன் சுவைக்கவும்.






Sunday, June 8, 2014

Coriander Chutney with Red Chilly

#கொத்தமல்லி சட்னி : நாம் கொத்தமல்லியை பெரும்பாலும் வாசனைக்காகவே சமையலில் பயன் படுத்துகிறோம். சில உணவுகளே கொத்தமல்லியை பிரத்தியேகமாக உபயோகித்து செய்யப்படுகிறது. ஆனால் கொத்தமல்லியில் அபரிமிதமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
வைட்டமின் A, B [B1, B2, B3, B5, B6 and folate ], C, E and K ஆகியவை நிறைந்துள்ளன.
இவை தவிர முக்கியமான தாதுக்களும் நிறைந்துள்ளன. இத்தகைய அரிய சத்துக்கள் நிறைந்துள்ள கொத்தமல்லியை தினமும் நமது சமையலில் பயன் படுத்துவது அத்தியாவசியமாகும்.
இங்கு ஒரு சட்னி செய்முறையை காண்போம்.

கொத்தமல்லி சட்னி


தேவையான பொருட்கள் :


1 கப்                                     கொத்தமல்லி நறுக்கியது
4                                            சிகப்பு மிளகாய்
20 - 25                                    புதினா இலைகள்
சிறிய நெல்லி அளவு       புளி, நீரில் ஊறவைக்கவும்
1/4 Tsp                                  பெருங்காய தூள்
3/4 Tsp                                  உப்பு
1/2 Tsp                                  எண்ணெய்

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் சிகப்பு மிளகாயை வறுத்தெடுத்து மிக்ஸி பாத்திரத்தில் வைக்கவும்.
அடுப்பை நிறுத்தி விட்டு அதே சூட்டில் புதினாவை 2 நிமிடங்கள் வதக்கி எடுக்கவும்.
மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும்.
கொத்தமல்லியில் உள்ள நீரே போதுமானது.
தேவையானால் சிறிது நீர் சேர்த்து அரைக்கலாம்.

பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சுவையான மணமான கொத்தமல்லி சட்னி தயார்.

கொத்தமல்லி சட்னி

பொங்கல், உப்புமா, தோசை மற்றும் இட்லியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
சாதத்திலும் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாம்பார் மற்றும் பொரியலுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.





கொத்தமல்லியில் மற்ற சட்னி வகைகள்
கொத்தமல்லி விதை சட்னி கொத்தமல்லி புதினா துவையல் கொத்தமல்லி தேங்காய் சட்னி