Search This Blog

Showing posts with label nellikkai. Show all posts
Showing posts with label nellikkai. Show all posts

Monday, July 13, 2015

Nellikkai-Peerkangkai-Chutney

#நெல்லிக்காய்பீர்க்கங்காய்துவையல் : சில தினங்களுக்கு முன் பீர்கங்காய் சட்னி செய்வது எப்படி என பார்த்தோம். சட்னியில் புளிப்பு சுவைக்காக புளி அல்லது எலுமிச்சை சாறை உபயோகப்படுத்துவது வழக்கம். நான் அவ்வாறன்றி இம்முறை புளிக்கு பதிலாக நெல்லிக்காயை உபயோகப்படுத்தினேன். சுவையாக இருந்தது. நெல்லிக்காய் வைட்டமின் C அதிக அளவில் கொண்ட கனியாகும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு அளிக்கிறது. இத்தகைய மருத்துவ குணமுள்ள நெல்லிக்காயை பயன் படுத்துவதால் நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நமக்கு கிடைக்கிறது.

Nellikkai Peerkangkai Chutney


தேவையான பொருட்கள் :
1/2 கப்பீர்கங்காய் தோல்
1/2 கப்பீர்கங்காய் துண்டுகள்
3 - 4 Tspதேங்காய் துருவல்
1 1/2 Tspஉளுத்தம் பருப்பு
1/4 Tspகொத்தமல்லி விதை
2 or 3சிகப்பு மிளகாய்
small pieceபெருங்காயம்
1 or 2 Tspஇஞ்சி மெல்லிய துண்டுகள்
2 or 3நெல்லிக்காய்
1/2 Tspஉப்பு
2 Tspஎண்ணெய்

செய்முறை :
நெல்லிக்காயை கழுவி சுத்தம் செய்த பின் 8 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
கொட்டையை நீக்கி துண்டுகளாக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானபின் மிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பை சிவக்க வறுக்கவும்.
சிவந்த பின் எடுத்து தனியே வைக்கவும்.
பெருங்காயத்தை வறுத்தெடுக்கவும்.
மீண்டும் அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு இஞ்சியை வாசனை வரும் வரை வதக்கி எடுக்கவும்.
இப்போது நெல்லிக்காய் துண்டுகளை 2 நிமிடங்கள் வதக்கி எடுத்து வைக்கவும்.
இப்போது மறுபடியும் எண்ணெய் விட்டு பீர்கங்காய் தோல் மற்றும் பீர்கங்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
மூடி போட்டு தோல் வேகும் வரை சிறிய தீயில் வைத்திருக்கவும்.
அவ்வப்போது மூடியை திறந்து கரண்டியால் பிரட்டி விட்ட பின் மூடி வேக விடவும்.
வறுத்த பொருட்கள் அனைத்தும் நன்கு ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு மற்ற பொருட்களையும் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
உப்பு சரி பார்த்த பின் ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

சாதத்துடன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
பொங்கல், உப்புமா போன்ற டிபன் வகைகளுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும்.






மேலும் சில சட்னி வகைகள் :

இஞ்சி துவையல்
இஞ்சி துவையல்
கரிசலாங்கண்ணி துவையல்
கரிசலாங்கண்ணி
கொத்தமல்லி சட்னி 1
கொத்தமல்லி
கொத்தமல்லி விதை சட்னி
கொத்தமல்லி விதை
கொத்தமல்லி புதினா துவையல்
கொத்தமல்லி புதினா




Monday, February 16, 2015

Thayir-Nellikkai - Amla-in-Curd

#தயிர்நெல்லிக்காய் : #நெல்லிக்காய் வைட்டமின் C அதிகமாக நிறைந்துள்ள ஒரு அருமையான கனியாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இரும்பு சத்தை உடலில் சேர்க்கவும் இந்த வைட்டமின் C மிகவும் அவசியம் ஆகும். நம் அன்றாட உணவில் நெல்லிக்கனியை சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு தேவையான வைட்டமின் C  கிடைக்கப் பெறலாம்.
இதுவரை நெல்லிக்காயை  உபயோகித்து பலவிதமான சட்னி செய்யும் முறைகளை அறிந்து கொண்டோம். இங்கு நெல்லிக்காயை தயிரில் கலந்து செய்யப்படும் தயிர் நெல்லிக்காய் செய்யும் முறையை காண்போம்.

தயிர் நெல்லிக்காய்

தேவையான பொருட்கள் :
3 or 4நெல்லிக்காய் [ gooseberry ]
1 கப்தயிர் 
a pinchமஞ்சத்தூள்
1/4 Tspமிளகாய் தூள் [ விரும்பினால் ]
1 or 2பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்.
1/4 Tspபெருங்காய தூள்
6 or 7கறுவேப்பிலை
தாளிக்க :
1/2 Tspகடுகு
1/4 Tspவெந்தயம்
2 Tspநல்லெண்ணெய் 

செய்முறை :
நெல்லிக்காயை இரண்டு மூன்று முறை நன்கு கழுவி வைக்கவும்.
இட்லி பானையிலோ அல்லது குக்கரிலோ ஆவியில் 8 முதல் 10 நிமிடங்கள் வேக விடவும்.
குக்கரில் ஆவியில் வேக வைக்கும் போது மூடியின் மீது வெயிட் பொருத்த வேண்டாம்.
ஆவியில் வேக வைத்த நெல்லிக்காயை வெளியில் எடுத்து கொட்டையை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
ஒரு சுத்தமான கண்ணாடி கிண்ணத்தில் தயிருடன் பெருங்கயத்தூள் சேர்த்து தேக்கரண்டியால் அடித்து கலக்கி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை மிதமான தணலில் வைத்து சூடாக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு வெடிக்க விட்ட பின்னர் வெந்தயம் சேர்த்து உடனேயே பச்சை மிளகாய் மற்றும் கறுவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வரை வதக்கவும்.
இதனை கிண்ணத்தில் உள்ள தயிருடன் சேர்க்கவும்.
அதே வாணலியில் மேலும் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு நெல்லிக்காய் துண்டுகள், மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சத்தூள் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வதக்கியதை தயிருடன் சேர்க்கவும்..
தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
ஒரு மணி நேரம் ஊற விடவும்.
பிறகு உண்ண ஆரம்பிக்கலாம்.
குளிர் சாதனப்பெட்டியில் இரண்டு மூன்று நாட்களுக்கு பத்திரப்படுத்தி உண்ணலாம்.

Thayir Nellikkai [ Gooseberry in curd ]

அப்படியே சும்மாவும் சாப்பிடலாம்.
பருப்பு சாதம் மற்றும் சாம்பார் சாதம் ஆகியவற்றுடன் தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.
பச்சை மிளகாய் மற்றும் மிளகாய் தூள் அளவை அவரவர் சுவைக்கு ஏற்ப கூட்டி குறைத்துக்கொள்ளவும்.
தயிர் புளிக்காத தயிராக இருந்தால் சுவை அருமையாக இருக்கும்.



சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய் புதினா துவையல்
நெல்லிக்காய் புதினா துவையல்
தேன் நெல்லிக்காய்
நெல்லிக்காய் தேனில் ஊறியது
நெல்லிக்காய் சட்னி
நெல்லிக்காய்
சட்னி


சிறுதானியங்கள் சமையல் செய்முறைகள்











Saturday, January 17, 2015

Kothamalli-Nellikkai-Thayir-Chutney

#கொத்தமல்லிநெல்லிக்காய்தயிர்சட்னி : குளிர் காலத்தில் பச்சை #கொத்தமல்லி அதிக அளவில் கிடைக்கும். #கொத்தமல்லிதழை  வாசனைக்காக சமையலில் சேர்க்கப் படுகிறது. கொத்தமல்லியில் விட்டமின்களும் தாதுக்களும் அதிக அளவில் நிறைந்துள்ளது. குறிப்பாக வைட்டமின் c மற்றும் இரும்பு சத்து அதிக அளவில் நிறைந்திருக்கிறது.
அதனால் கொத்தமல்லியை நமது அன்றாட சமையலில் அதிக அளவில் எடுத்துக் கொள்வது நலம்.
நெல்லிக்காய் வைட்டமின் c அதிக அளவு நிறைந்துள்ள கனியாகும்.
இவ்விரண்டையும் உபயோகித்து ஒரு சுவையான சட்னி செய்வதெப்படி என காண்போம்.

கொத்தமல்லி நெல்லிக்காய் தயிர் சட்னி


தேவையான பொருட்கள் :
1 cupகொத்தமல்லி தழை 
2 or 3நெல்லிக்காய் [ Gooseberry - amla ]
1/3 cupகெட்டி தயிர்
7 to 8பச்சை மிளகாய்
8 to 10சின்ன வெங்காயம்
சிறு துண்டுஇஞ்சி
3/4 Tspஉப்பு  [ adjust ]
1 to 2 Tspஎலுமிச்சை சாறு [ adjust ]

செய்முறை :

  • தயிரை கரண்டி அல்லது மத்து கொண்டு கடைந்து வைக்கவும்.
  • நெல்லிக்காய் மற்றும் கொத்தமல்லியை நன்கு கழுவி சுத்தப் படுத்தி வைக்கவும்.
  • சின்ன வெங்காயத்தின் தோலுரித்தது வைக்கவும்.
  • நெல்லிக்காயை இட்லி பானை அல்லது குக்கரில் [ வெயிட் பொருத்தாமல் ] ஆவியில் 8 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
  • வேக வைத்த நெல்லிக்காயின் கொட்டையை அகற்றவும்.
  • தயிர் மற்றும் எலுமிச்சை சாறு நீங்கலாக மிக்ஸியில் அனைத்தையும் அரைக்கவும்.
  • கடைசியாக தயிர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  • பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
  • தேவையான அளவு எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
  • உப்பு சரி பார்க்கவும்.
  • சிறிது கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.
கொத்தமல்லி நெல்லிக்காய் தயிர் சட்னி
இட்லி, தோசை, உப்புமா மற்றும் பொங்கலுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் ஏற்ற சட்னி ஆகும்.
செய்து சுவைத்து பாருங்கள்!!




மேலும் சில பச்சடி வகைகள் செய்து சுவைக்க

வாழைப்பூ வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைப்பூ தயிர் 
பச்சடி
பப்பாளி கேரட் சாலட்
பப்பாளி கேரட்
சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
மாங்காய் பச்சடி
மாங்காய்
பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி








Wednesday, December 31, 2014

Nellikkai-Thayir-Pachadi

#நெல்லிக்காய்தயிர்பச்சடி : #நெல்லிக்காய் இனிப்பு, புளிப்பு, கசப்பு மற்றும் துவர்ப்பு போன்ற சுவைகளை தன்னுள்ளே கொண்ட ஒரு சத்தான கனியாகும். ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லிக்கனி, நெல்லி இலை மற்றும் மரத்தின் பட்டை ஆகியவற்றை பழங்காலந்தொட்டே உபயோகப் படுத்தி வருகிறார்கள்.
இக்கனியை அப்படியே சுவைக்கலாம். ஊறுகாய், சட்னி, துவையல், ஜாம் போன்ற உணவு பண்டங்களை உருவாக்கியும் சுவைக்கலாம். இங்கு நெல்லிக்கயையும் தயிரையும் சேர்த்து ஒரு சுவையான பச்சடி செய்வது எப்படி என காணலாம். இந்த பச்சடி இட்லி தோசை போன்ற பலகாரங்களுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
இனி செய்முறையை காண்போம்.

நெல்லிக்காய் தயிர்பச்சடி

தேவையான பொருட்கள் :
2 or 3நெல்லிக்காய் [ amla ]
2 or 3முந்திரி பருப்பு [ விருப்பப்பட்டால் ]
2 or 3பச்சை மிளகாய்  [ அட்ஜஸ்ட் ]
3 Tspதேங்காய் துருவல் 
1/2 Tspசீரகம் [ Jeera ]
1/2 cupதயிர்
3/4 Tspஉப்பு
தாளிக்க :
1/2 Tspகடுகு
1 Tspஉளுத்தம் பருப்பு 
1 Tspஎண்ணெய்

செய்முறை :
தயிரை தேக்கரண்டியால் நன்கு அடித்து கடைந்து வைக்கவும்.
நெல்லிக்காயின் கொட்டையை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
வாணலியை சூடாக்கி என்னை விட்டு கடுகு வெடிக்க விடவும்.
பிறகு உளுத்தம் பருப்பை போட்டு சிவக்க வறுக்கவும்.
பருப்பு சிவந்ததும் தாளித்ததை கடைந்து வைத்துள்ள தயிரின் மேல் கொட்டவும்.
அதே வாணலியில் நெல்லிக்காய் துண்டுகளை இலேசாக சிவக்கும் வரை வதக்கவும்.

தயிர் நீங்கலாக மற்ற அனைத்தையும் வதக்கிய நெல்லிக்காயுடன் மிக்ஸியில் கொகொரப்பாக அரைத்தெடுக்கவும்.


ஒரு கிண்ணத்தில் அரைத்ததை எடுத்து வைக்கவும்.
அத்துடன் தயிரை சேர்த்து கலக்கவும்.
உப்பு சரி பார்க்கவும்.

நெல்லிக்காய் தயிர்பச்சடி

கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.







மேலும் சில பச்சடி வகைகள் செய்து சுவைக்க

வாழைப்பூ வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைப்பூ தயிர் 
பச்சடி
பப்பாளி கேரட் சாலட்
பப்பாளி கேரட்
சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
மாங்காய் பச்சடி
மாங்காய்
பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைத்தண்டு தயிர் பச்சடி









Monday, December 29, 2014

Nellikkai-Mittai

#நெல்லிக்காய்மிட்டாய் : #நெல்லிக்காய் அதிக அளவில் கிடைக்கும் காலங்களில் நெல்லிக்காயை பதப் படுத்தி வைத்துகொண்டால் வருடம் முழுவதும் அதன் பயனை அடையலாம். நெல்லிக்காயில் வைட்டமின் C சத்து அதிக அளவில் இருப்பதனால் நோய் எதிர்க்கும் சக்தியை நமக்கு அளிக்கிறது. நெல்லிக்காயை ஏதேனும் ஒரு வகையில் நமது உணவில் பயன் படுத்தி அதன் பயனை முழுவதுமாக அடைய முயற்சி செய்ய வேண்டும்.
இன்று நெல்லிக்காயை கொண்டு ஒரு சுவையான மிட்டாய் தயார் செய்வது எப்படி என காணலாம்.

நெல்லிக்காய் மிட்டாய்

தேவையான பொருட்கள் :
1/2 Kgநெல்லிக்காய் [ Amla - Goose berry ]
1 1/2 Cupசர்க்கரை  [ adjust ]
1/2 Tspகருப்பு உப்பு  [ adjust ]
1/4 Tspஉப்பு  [ adjust ]
1 Tspமிளகு

செய்முறை :
நெல்லிக்காயை தண்ணீரில் இரண்டு மூன்று முறை நன்கு கழுவவும்.
சுத்தமான துணியினால் துடைத்து வைக்கவும்.
ஒரு சுத்தமான பிளாஸ்டிக் பையில் போட்டு கயறு கொண்டு பையை இறுக்க கட்டவும்.
குளிர்சாதன பெட்டியில் ப்ரீசரில் வைத்து இரண்டு நாட்களுக்கு பத்திர படுத்தவும்.
இரண்டாம் நாள் மாலையில் அல்லது மூன்றாவது நாள் காலை குளிர் சாதன பெட்டியிலிருந்து வெளியே எடுத்து சிறிது நேரம் ஆற விடவும்.
பின்னர் நடுவே உள்ள கொட்டையை நீக்கி விட்டு கத்தியால் ஒரே அளவுள்ள துண்டுகளாக்கவும்.
ப்ரீசரில் பத்திரபடுத்தியதால் நெல்லிக்காய் மிருதுவாக ஆகிஇருக்கும்.
மேலும் கொட்டையை நீக்கும் போதும் வெட்டும் போதும் நெல்லிக்காயிலிருந்து தண்ணீர் சொட்டும்.
அதனால் கீழே ஒரு பெரிய தட்டு வைத்துக்கொண்டு செய்யவும்.  

மிக்ஸி பாத்திரத்தில் கருப்பு உப்பு, மிளகு மற்றும் சர்க்கரையை போட்டு பொடிக்கவும்.
பொடித்த சர்க்கரை கலவையை வெட்டி வைத்துள்ள நெல்லிக்காயின் மேல் கொட்டவும்.
ஒரு நீண்ட தேக்கரண்டியால் கலக்கி விடவும்.

நெல்லிக்காயில் உள்ள தண்ணீரை இழுத்துக் கொண்டு சர்க்கரை கரைய ஆரம்பிக்கும்.
நெல்லிக்காய் சர்க்கரை தண்ணீரில் ஊற விட்டது போல ஆகி விடும்.
மூன்றாம் நாள் காலை வெய்யிலில் காய வைக்கவும்.
இளகிய தண்ணீர் மிக நீர்க்கவும் அதிகமாகவும் இருந்தால் பாதியை ஒரு கிண்ணத்தில் வடித்து எடுத்து விடவும்.
வடித்தெடுத்த சர்க்கரை தண்ணீரை இனிப்பு பானம் செய்ய உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.
இளகிய தண்ணீர் சிறிதளவாயின் அப்படியே வெய்யிலில் காய விடவும்.
அவ்வப்போது தேக்கரண்டியால் கிளறி விடவும்.
வெய்யிலின் சூட்டில் நாம் அடுப்பில் வைத்து சர்க்கரை பாகு காய்ச்சுவது போல முதலில் பிசுபிசுப்பாக இருக்கும்.
பின்னர் காய காய கம்பி பதம் வரும்
பிறகு சர்க்கரை தண்ணீர் கெட்டி பட்டு நெல்லிக்காயின் மேல் ஒரு படலமாக படிந்து விடும்.
நன்கு காயும் வரை தினமும் வெய்யிலில் வைத்து காய வைக்கவும்.
நன்கு காய்ந்ததும் சுத்தமான ஈரம் இல்லாத பாட்டிலில் எடுத்து வைத்து பத்திர படுத்தவும்.
சுவையான கருப்பு உப்பின் மணமும் மிளகின் காரமும் கொண்ட நெல்லிக்காய் மிட்டாய் தயார்.
தினமும் சுவைக்கவும்.

Nellikkai Mittai [ Amla Candy ]
நெல்லிக்காய் மிட்டாய் செய்வதற்காக நெல்லிக்காயை வெட்டுவதிலிருந்து சர்க்கரையில் ஊறும் போது பாதி காய்ந்து கொண்டிருக்கும் போது போன்ற வெவ்வேறு நிலைகளிலும் சுவைக்கவும். ஒவ்வொரு நிலையிலும் சுவை அருமையாக இருக்கும்.

நெல்லிக்காய் மிட்டாய்




சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

நெல்லிக்காய் தயிரில் ஊறியது
நெல்லிக்காய் தயிரில் ஊறியது
நெல்லிக்காய் புதினா துவையல்
நெல்லிக்காய் புதினா துவையல்
நெல்லிக்காய் தேனில் ஊறியது
நெல்லிக்காய் தேனில் ஊறியது
நெல்லிக்காய் ஜாம்
நெல்லிக்காய் 
ஜாம்
நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய் ஊறுகாய்