Search This Blog

Monday, November 2, 2015

Kuthiraivaali-Neer-Dosai

#குதிரைவாலிநீர்தோசை : #குதிரைவாலிஅரிசி அல்லது சுருக்கமாக #குதிரைவாலி #சிறுதானியம் வகைகளுள் ஒன்றாகும். இதனை ஆங்கிலத்தில் Barnyard millet என அழைக்கப் படுகிறது.
எல்லா சிறு தானியங்களும் பசை தன்மை அற்றது. மேலும் உண்டதும் அமிலத்தன்மையை உருவாக்குவது இல்லை. நார் சத்து மிக அதிக அளவில் குதிரைவாலியில் நிறைந்துள்ளது. இதன் பயனை அடைய அரிசி மற்றும் கோதுமையை தவிர இத்தகைய சிறு தானியங்களையும் அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
இங்கு குதிரைவாலியை உபயோகப்படுத்தி ஒரு அருமையான தோசை செய்யும் முறையை காண்போம்.

குதிரைவாலிநீர்தோசை

தேவையான பொருட்கள் :
2 கப்குதிரைவாலி அரிசி [ Barnyard millet ]
1/2 கப்தேங்காய் துருவல்
2 Tspஉப்பு
1 Tspசர்க்கரை
தோசை சுட்டெடுப்பதற்கு தேவையான நல்லெண்ணெய்.

செய்முறை :
குதிரைவாலி அரிசியை இரண்டு முறை கழுவி விட்டு இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறிய பிறகு மாவரைக்கும் இயந்திரத்தில் அரிசி மற்றும் தேங்காயை நன்கு மைய அரைத்தெடுக்கவும்.
மாவை ஒரு பாத்திரத்தில் வழித்து எடுக்கவும்.
1/2 கப் தண்ணீர் விட்டு இயந்திரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் மாவையும் கழுவி மாவுடன் சேர்க்கவும்.
உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.
மாவு நன்கு நீர்க்க இருக்க வேண்டும்.
அப்போதுதான் மெல்லிய தோசையாக சுட முடியும்.

இந்த மாவை புளிக்க வைக்க தேவை இல்லை.
உடனேயே தோசை சுடலாம்.

அடுப்பில் தோசைகல்லை சூடாக்கவும்.
சூடானதும் எண்ணெய் தடவி தோசைகல்லின் வெளி ஓரத்தில் இருந்து நடு வரை மாவை வட்டமாக ஊற்றவும். 

தோசையின் மேலும் விளிம்புகளை சுற்றியும் எண்ணெய் சொட்டு சொட்டாக விடவும்.
சிறிது நேரத்தில் தோசையின் ஓரங்களும் நடுவேயும் சிவக்க ஆரம்பிக்கும்.
தோசை வெந்து விட்டது என கொள்ளலாம்.
மென்மையாக தோசை திருப்பியால் தோசையின் மேல் தெளிக்கப்பட்ட எண்ணெயை பரப்பி விடவும்.
இவ்வாறு செய்வதால் தோசை காய்ந்து போகாமல் இருக்கும்.

இந்த தோசை ஒரு பக்கம் வெந்தால் போதுமானது.
திருப்பிப் போட தேவையில்லை.

தோசையை எடுத்து பரிமாறும் தட்டில் எடுத்து வைக்கவும்.
இதேபோல தோசையை ஒவ்வொன்றாக சுட்டெடுக்கவும்.

சுவையான மென்மையான குதிரைவாலி நீர் தோசை தயார்.
காரமான பூண்டு சட்னி அல்லது தக்காளி சாம்பார் அல்லது தக்காளி சட்னி  யுடன்  சுவைக்கவும்.
barnyard millet neer dosai
barnyard millet neer dosai குதிரைவாலி நீர் தோசை



மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க :

ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை
முடக்கத்தான் தோசை
முடக்கத்தான் தோசை
கொடி பசலை தோசை
கொடி பசலை தோசை
குதிரைவாலி சர்க்கரை பொங்கல்
குதிரைவாலி சர்க்கரை
குதிரைவாலி பாயசம்
குதிரைவாலி பாயசம்

குதிரைவாலி சமையல் குறிப்புகளுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

குதிரைவாலி சமையல்



சிறுதானிய சமையல் குறிப்புகளுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

சிறுதானிய சமையல்


Tuesday, October 13, 2015

Kondakadalai-Sundal-Chickpea-Stirfry

#கொண்டக்கடலைசுண்டல் : நவராத்திரி என்றதும் உடனே ஞாபகத்துக்கு வருவது கொலுவும் சுண்டலும்தான். பருப்பு வகைகளை ஊறவைத்து வேக வைத்து செய்யப்படும் பொரியல் #சுண்டல் என அழைக்கப்படுகிறது.
சைவ உணவு உட்கொள்ளுபவர்களுக்கு பருப்பு வகைகளிலிருந்துதான் புரத சத்து கிடைக்கிறது.
இங்கு கொண்டக்கடலை கொண்டு சுவையான சுண்டல் எப்படி செய்வது என பார்ப்போம்.

கொண்டக்கடலை சுண்டல்


தேவையான பொருட்கள் :
1/2 கப்கொண்டக்கடலை  [ chickpea ]
1/2 Tspகடுகு
1 Tspஉளுத்தம் பருப்பு
2 or 3சிகப்பு மிளகாய், உடைத்து வைக்கவும்
2 சிட்டிகைபெருங்காயத்தூள்
1/4 Tspமிளகாய் தூள் [ தேவையானால் ]
1/2 Tsp உப்பு [ சரி பார்க்கவும் ]
10 - 12கறுவேப்பிலை
1 or 2 Tbspதேங்காய் துருவல் 
1 Tspஎண்ணெய்
1 Tsp காரட் துருவல் அலங்கரிக்க

செய்முறை :
கொண்டக்கடலையை நன்கு சுத்தமாக கழுவிய பின்னர் 6 முதல் 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
நன்கு ஊறிய கொண்டக்கடலையை குக்கரில் எடுத்துக்கொள்ளவும்.
முக்கால் கப் தண்ணீர் விட்டு 1/2 Tsp உப்பு சேர்த்து மூடி வெயிட் பொருத்தி ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.
கொண்டக்கடலை நன்கு ஊறியிருப்பதனால் ஒரு விசிலிலேயே நன்கு வெந்து விடும்.
ஆவி அடங்கிய பிறகு ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாகவும்.
தணலை அதிகமாகவே வைத்துக்கொள்ளவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
அடுத்து சிகப்பு மிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து சிவக்க வறுக்கவும்.
பருப்பு சிவந்த பின் கறுவேப்பிலை சேர்க்கவும்.
சில மணி துளிகளுக்குப் பிறகு பெருங்காய தூள் மற்றும் மிளகாய் தூளை சேர்த்தவுடன் வேகவைத்த கொண்டக்கடலையை சேர்த்து கிளறவும்.
உப்பு சரி பார்த்து தேவையெனில் சிறிது சேர்க்கவும்.
கடைசியாக தேங்காய் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
துருவிய காரட் கொண்டு அலங்கரிக்கவும்.
புரதம் நிறைந்த அருமையான மாலை உணவாகும்.
சாம்பார் மற்றும் ரசம் ஊற்றி பிசைந்த சாதத்துடனும் சுவைக்க அருமையாக இருக்கும்.

கொண்டக்கடலை சுண்டல்





மேலும் சில சமையல் குறிப்புகள் 
முயற்சி செய்து பார்க்க

கொள்ளு சுண்டல்
கொள்ளு சுண்டல்
பயறு சுண்டல்
பயறு சுண்டல்

Tuesday, October 6, 2015

Appam-Kerala-Style-2

#ஆப்பம்கேரளாஸ்டைல் 2 : சென்ற பதிவில் கேரளாவில் ஆப்பம் எவ்வாறு செய்யப்படுகிறது என்பதனை பார்த்தோம். இதே கேரளா ஸ்டைல் ஆப்பம் 1 -ஐ  மற்றொரு முறையிலும் செய்யலாம். இந்த செய்முறை கிட்டத்தட்ட கர்நாடகத்தில் செய்யப்படும் நீர்தோசை போன்றது. ஆனாலும் இந்த முறையில் செய்ய ப்படும் ஆப்பத்தின் சுவை தனித்துவமானது.
இப்போது செய்முறை மற்றும் தேவையான பொருட்களை பார்ப்போம்.

ஆப்பம் [ ஆப்பம் கேரளா ஸ்டைல் 2 ]


தேவையான பொருட்கள் :
1 1/2 கப்பச்சரிசி
1/2 கப்தேங்காய் துருவல்
1 Tspஉப்பு
1 Tspசர்க்கரை
1 சிட்டிகைசமையல் சோடா

ஆப்பம் சுட்டெடுக்க சிறிது எண்ணெய்

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை போட்டு நன்கு கழுவி தண்ணீர் விட்டு 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறிய பின்னர் மாவரைக்கும் இயந்திரத்தில் ஊறவைத்த அரிசி மற்றும் தேங்காய் துருவல்  ஆகியவற்றை தண்ணீர் விட்டு நன்கு மைய அரைத்து  எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

3/4 கப் முதல் 1 கப் வரை தண்ணீர் விட்டு மாவரைக்கும் இயந்திரத்தில் ஒட்டிக்கொண்டுள்ள மாவை கழுவி மற்றொரு அகலமான பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
அடுப்பை பற்ற வைத்து இந்த மாவு கழுவிய தண்ணீர் உள்ள பாத்திரத்தை சிறிய தீயில் சூடாக்கவும்.
தொடர்ந்து கை விடாமல் கலக்கிக் கொண்டே இருக்கவும்.
மாவு கலந்த தண்ணீர் சற்று நேரத்தில் கஞ்சி பதத்தை அடைந்து பளபளப்பாக மாறும்.
இப்போது அடுப்பை அணைத்து விட்டு ஆற விடவும்.
தயாரித்த கஞ்சியின் மேல் ஆடை படியாமல் இருக்க அவ்வப்போது கரண்டியால் கலக்கி விடவும்.

ஆறிய கஞ்சியை அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்க்கவும்.

உப்பு மற்றும் சர்க்கரையையும் சேர்த்து கலந்து 6 முதல் 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
அல்லது முதல் நாள் மாலை மாவு அரைத்து இரவு முழுவதும் புளிக்க விட்டு மறுநாள் காலை ஆப்பம் தயாரிக்கலாம்.

ஆப்ப சட்டியை அடுப்பில் மிதமான தீயில் சூடாக்கவும்.
ஒரு தேக்கரண்டி தண்ணீரில் சமையல் சோடாவை கலக்கி ஆப்ப மாவில் ஊற்றி நன்கு கலக்கவும்.
ஆப்ப சட்டி சூடானதும் ஒரு சுத்தமான துணியை எண்ணெயில் நனைத்து ஆப்ப சட்டியில் தடவும்.
ஆப்ப சட்டி சூடானதும் நடுவில் மாவை ஊற்றி ஆப சட்டியில் கைப்பிடியை துணியினால் பிடித்து கொண்டு சுழற்றி மாவை பரப்பவும்.
ஆப்ப மாவு ஆப்ப சட்டியின் சூட்டில் நன்கு ஒட்டிக்கொள்ளும்.
அடுப்பின் மீது வைத்து ஓரிரு துளிகள் எண்ணெயை ஆப்பத்தின் ஓரத்தில் சொட்டு சொட்டாக விடவும்.
 அடுத்து மூடியினால் மூடவும்.
ஓரிரு நிமிடங்களில் மூடியை திறந்து பார்த்தால் ஆப்பம் வெந்து ஓரங்கள் இலேசாக சிவக்க ஆரம்பித்து இருக்கும்.
கத்தியின் நுனி கொண்டோ அல்லது தோசை திருப்பியினாலோ ஆப்ப சட்டியிலிருந்து எடுத்து தட்டில் வைக்கவும்.
இதே போல எண்ணெய் தடவி ஒவ்வொன்றாக சுட்டெடுக்கவும்.



making porridge

Appam maavu [ Appam batter ]


Appam Chatty [ Appam making kadai ]

Appam Appam
பூண்டு மிளகாய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
தக்காளி சட்னி மற்றும் பூண்டு தக்காளி  சட்னியுடனும் நன்றாக இருக்கும்.

ஆப்பம் [ ஆப்பம் கேரளா ஸ்டைல் 2 ]


குறிப்பு :
மாவு நீர்க்க இருக்க வேண்டும். அப்போதுதான் ஆப்பம் மெல்லியதாக வரும்.
தேவையானால் தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.




மற்ற ஆப்ப வகைகளின் சமையல் குறிப்புகள் :
ஆப்ப மாவு
ஆப்ப மாவு
ஆப்பம் சுடும் முறை
ஆப்பம் சுடும் முறை
சோள ஆப்பம்
சோள ஆப்பம்
ஆப்பம் கேரளா ஸ்டைல் 1
ஆப்பம் கேரளா .. 2

ஆப்பத்துடன் தொட்டுக்கொண்டு சுவைக்க

தொட்டுக்க