Search This Blog

Saturday, October 31, 2020

Liquid_Or_Powder_Mix_for_Rice

 சாதத்துடன் கலந்து சாப்பிட :

சாதத்துடன் கலந்து சாப்பிடக் கூடிய  கலவைகள் மற்றும் பொடிகள் ஆகியவற்றின் செய்முறைகளின் இணைப்புகளை இங்கு தொகுத்துள்ளேன்.  

மதிய உணவு உட்கொள்ளும் போது முதலில் பருப்பு சாதத்துடன் தொடங்குவதுதான் முறை. சாம்பார் அல்லது குழம்பு சாதம் சாப்பிடுவதற்கு முன்னர் பருப்பு சாதம் சுவைக்கப்படுவது வழக்கம். சூடான சாதத்தின் மேல்  வேகவைத்து உப்பு சேர்த்த துவரம் பருப்பு அல்லது பயத்தம் பருப்பை போட்டு, ஒரு தேக்கரண்டி நெய் விட்டு பிசைந்து, சாம்பார் அல்லது தயிர் பச்சடியுடன் சாப்பிட வேண்டும்.

அவ்வாறு பருப்பு இல்லையெனில் முதலில் சாதத்துடன் கீரை மசியல் அல்லது கழனி சாறு [ பால் சாறு ] அல்லது துவையல் அல்லது பொடி போட்டு சாப்பிட்ட பின்னரே சாம்பார்/குழம்பு மற்றும் ரசம் என்று சுவைப்பது வழக்கம்.

கீரை மசியல் என்ற கலவை முளைக்கீரை, அரைக்கீரை, பாலக்கீரை, சிகப்பு முளைக்கீரை ஆகிய ஏதேனும் ஒரு கீரையை வேகவைத்து பருப்பு சேர்த்து அல்லது சேர்க்காமலும் கடைந்து செய்யப்படுகிறது. பச்சை நிறம் மாறாமல் வேகவைத்த கீரையை பூண்டு  மற்றும் உப்பு சேர்த்து மத்து கொண்டு கடைந்தோ அல்லது மிக்ஸியில் அரைத்தோ செய்யலாம். இந்த கீரை மசியலை சூடான சாதத்தில் இட்டு ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாம்பார் அல்லது வத்தக்குழம்பு தொட்டுக்கொண்டு சுவைத்தால் அருமையாக இருக்கும்.

கழனி சாறு என்றும் பால் சாறு என்றும் அழைக்கப்படும் கலவை மணத்தக்காளி கீரை அல்லது முருங்கைக்கீரை அல்லது அகத்திக்கீரை போன்ற கீரைகள் கொண்டு செய்யப்படுகிறது. தற்போது குறிப்புட்டுள்ள ஏதேனும் ஒரு கீரையை வேகவைத்து எடுத்தபின்னர் அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து விட வேண்டும். பின்னர் தேங்காய் பால் எடுத்து கீரையுடன் சேர்த்து சீரகம் தாளித்து வெங்காயத்தை வதக்கி போட்டு செய்யப்படுகிறது. சூடான சாதத்தில் பால் சாறு கீரையுடன் சேர்த்து விட்டு நன்கு அழுத்திப் பிசைந்து சாம்பார் அல்லது காரக்கறியுடன் சுவைக்கலாம்.

விதவிதமான துவையல் வகைகள் பருப்பு, கீரை, மூலிகைகள் உபயோகித்து அரைத்து செய்யப்படுகிறது. அவ்வாறு அரைத்தெடுத்த துவையலை சூடான சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாம்பார் அல்லது குழம்புடன் சுவைத்தால் அருமையாக இருக்கும்.

இதைப்போலவே சாதத்துடன் பொடி சேர்த்து நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு பிசைந்து சாம்பார் அல்லது குழம்புடன் சுவைத்தால் அருமையாக இருக்கும்.

தொக்கு போல எண்ணெய்ச்சட்டியில் அடுப்பின் மீது வைத்து செய்யப்படும் புளிக்காச்சல் மற்றும் தக்காளி தொக்கு போன்றவற்றையும் சாப்பாட்டில் முதலில் சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சுவைத்து மகிழலாம்.

இணைப்புகளை சொடுக்கி தேவையான செயற்குறிப்பு பதிவுகளை அடையலாம்.



கீரை மசியல் வகைகள்
பாலக் கீரை மசியல்
பாலக் கீரை மசியல்
சிகப்பு கீரை மசியல்
சிகப்பு கீரை மசியல்
அரைக்கீரை மசியல்
அரைக்கீரை மசியல்
சிகப்பு கீரை மசியல் 1
சிகப்பு கீரை மசியல் 1


பால்சாறு - கழனி சாறு வகைகள்
மணத்தக்காளிகீரை பால்சாறு
மணத்தக்காளிகீரை பால்சாறு
முருங்கைகீரை பால் சாறு
முருங்கைகீரை பால் சாறு


தொக்கு வகைகள்
புளிக்காச்சல்
புளிக்காச்சல்
தக்காளி தொக்கு
தக்காளி தொக்கு



துவையல் வகைகள்
இஞ்சி துவையல்
இஞ்சி துவையல்
கொத்தமல்லிபுதினா துவையல்
கொத்தமல்லிபுதினா துவையல்
பருப்பு துவையல்
பருப்பு துவையல்
கரிசலாங்கண்ணி துவையல்
கரிசலாங்கண்ணி துவையல்
வேப்பம்பூ துவையல்
வேப்பம்பூ துவையல்
வல்லாரை பருப்பு துவையல்
வல்லாரை பருப்பு துவையல்
நெல்லிக்காய் பீர்க்கங்காய் துவையல்
நெல்லிக்காய் பீர்க்கங்காய் துவையல்
பிரண்டை துவையல்
பிரண்டை துவையல்
பீர்க்கங்காய் துவையல்
பீர்க்கங்காய் துவையல்
வல்லாரை துவையல்
வல்லாரை துவையல்
பொடுதலை துவையல்
பொடுதலை துவையல்
துரை துவையல்
துரை துவையல்


பொடி வகைகள்
மிளகுப்பொடி ஆளிவிதையுடன்
மிளகுப்பொடி ஆளிவிதையுடன்
கொத்தமல்லிமுருங்கைக்கீரைபொடி
கொத்தமல்லிமுருங்கைக்கீரைபொடி
ஆளிவிதை பொடி
ஆளிவிதை பொடி
மிளகுப்பொடி
மிளகுப்பொடி


பல்வேறு சமையல் செயற்குறிப்புகள்




No comments:

Post a Comment