Search This Blog

Friday, July 22, 2016

Pumpkin Pancake

#பரங்கிக்காய்அடை : #அடை என்றதும் அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஊறவைத்து அரைத்து செய்வதுதான் நமக்குத் தெரியும். அதற்கு நாம் முன் கூட்டியே திட்டமிட வேண்டும். அடை செய்வதற்கு பொதுவாக உபயோகிக்கும் காய்கறிகள் அல்லது கீரை கொண்டு அதே போல உடனடியாக செய்யக்கூடிய ஒரு அடை வகையை இங்கு காண்போம். பாரம்பரியமாக செய்யப்படும் அடை போல இல்லாவிடினும் மிகவும் சுவை மிகுந்தது இந்த பரங்கிக்காய் அடை.
இனி செய்வதெப்படி என காணலாம்.





தேவையான பொருட்கள் :

1/2 கப்                                       கடலை மாவு
1/2 கப்                                      கோதுமை மாவு
2 Tbsp                                        அரிசி மாவு
2 Tbsp                                       அமராந்தம் மாவு [ இருந்தால் ]
3/4 Tsp                                      உப்பு [ அட்ஜஸ்ட் ]
1 Tsp                                         சீரகம்

பொடியாக அரிந்து மாவுடன் சேர்க்க வேண்டியவை
12 - 15                                      கறுவேப்பிலை
1/4 கப்                                     கொத்தமல்லி
3/4 கப்                                     பரங்கிக்காய் பிஞ்சு
1/4 கப்                                     வெங்காயம்

அடை சுட்டெடுக்க தேவையான எண்ணெய்.

செய்முறை :
ஒரு அகன்ற பாத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மாவையும் எடுத்துக்கொள்ளவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்.
சீரகம் மற்றும் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து கலக்கி அரை மணி நேரம் வைக்கவும்.
அதற்குள் வெங்காயம், பிஞ்சு பரங்கிக்காய் மற்றும் கொத்தமல்லி தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
அரை மணி நேரம் கழித்து இவை அனைத்தையும் மாவுடன் சேர்த்து கலக்கவும்.
அடுப்பில் நடுத்தர தீயில் தோசை கல்லை சூடாக்கவும்.
மேல் கால் தேக்கரண்டி எண்ணெய் தடவி விடவும்.
கரண்டியில் மாவை எடுத்து கல்லின் நடுவே வைத்து தோசையை விட தடிமனாகவும்  வட்டமாகவும் இருக்கும் படி பரப்பிவிடவும்.
சில துளிகள் எண்ணையை அடையின் மீதும் ஓரங்களிலும் விடவும்.
ஒரு மூடி போட்டு வேக விடவும்.
சில நிமிடங்கள் கழித்து மூடியை எடுத்து விட்டு ஓரங்கள் சிவத்தபின்னர் திருப்பி போடவும்.
இரண்டு பக்கமும் நன்கு சிவக்க வெந்த பின் பரிமாறும் தட்டில் எடுத்து வைக்கவும்.
இதே போல ஒவ்வொரு அடையாக சுட்டெடுக்கவும்.

சூடாக இருக்கும் போதே அடையின் மீது நெய் தடவி தேங்காய் சட்னி [ அ ] தக்காளி சாஸ் தொட்டுக் கொண்டு சுவைக்கலாம்.

தொட்டுக்க ஏதும் இல்லாமலும் சுவைக்கலாம்.
வெல்லம் தொட்டுக்கொண்டு சுவைத்தால் அபாரமாக இருக்கும்.








மேலும் சில தோசை மற்றும் அடை வகைகள் 
முயற்சி செய்து பார்க்க

அடை
அடை
முடக்கத்தான் கீரை தோசை
முடக்கத்தான் தோசை
கொடி பசலை கீரை தோசை
பசலை கீரை தோசை
பெசரட்டு
பெசரட்டு
வாழைப்பூ பசலை அடை
வாழைபூபசலைஅடை



இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.




Wednesday, July 20, 2016

Sundaikkai-Masala-Curry

#சுண்டைக்காய்மசாலாகறி : #சுண்டைக்காய் மார்க்கெட்டில் அரிதாக கிடைக்கும் ஒரு காயாகும். நமது வீட்டின் கொல்லை அல்லது வேலி ஓரங்களில் தானாக முளைக்கும் செடியாகும். இது கத்தரிக்காய் வகையை சேர்ந்த தாவரமாகும். இளைசான காய் சுவை மிகுந்ததாக இருக்கும். சில சுண்டைக்காய் வகைகள் சிறிது கசப்புத் தன்மை கொண்டதாக இருக்கும்.
சுண்டைக்காயை வேக வைத்து அரைத்த தேங்காய் மசாலா சேர்த்து கறி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
இனி செய்வதெப்படி என்று பார்ப்போம்.

Sundaikkai masala curry [ turkish berry curry ]

தேவையான பொருட்கள் :
1 கப் சுண்டைக்காய் [ pea eggplant ]
1 பெரியதுவெங்காயம், நீளவாக்கில் வெட்டவும்
1 நடுத்தர அளவு தக்காளி, பொடியாக நறுக்கவும்
2 Tspஎண்ணெய்
1/2 Tspகடுகு
1 Tspஉளுத்தம் பருப்பு
ஒரு சிட்டிகைமஞ்சத்தூள்
1/2 Tspஉப்பு [ adjust ]
மசாலாவிற்கு :
2 Tbspதேங்காய் துருவல்
1 Tspசீரகம்
1/2 Tspசோம்பு
1 Tspகொத்தமல்லி பொடி
2பூண்டு பற்கள்
1 or 2சிகப்பு மிளகாய் [ adjust ]
வெங்காயம், நறுக்கிவைக்கவும்
10கருவேப்பிலை
2 Tspகொத்தமல்லி நறுக்கியது
1/4 Tspஉப்பு
சிறிது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி அலங்கரிக்க

செய்முறை :
சுண்டைக்காயின் காம்பை நீக்கி சுத்தமான தண்ணீரில் கழுவவும்.
காயை இரண்டாக நறுக்கி தண்ணீரில் போடவும்.
மசாலா அரைப்பதற்காகக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் வெங்காயம் நீங்கலாக மிக்சி பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
தண்ணீர் விடாமல் முதலில் அரைக்கவும்.
பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
கடைசியாக வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
வெங்காயம் திப்பி திப்பியாக அரைத்தால் போதுமானது.
இவ்வாறு அரைத்த மசாலாவை தனியே எடுத்து வைக்கவும்.

அடுப்பின் மீது மிதமான தீயில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு வெடிக்க விடவும்.
அடுத்து உளுத்தம் பருப்பு போட்டு சிவக்கும் வரை வாதக்கவு.
இப்போது வெங்காயத்தை சேர்த்து சற்றே வெளிர் நிறமாக மாறும் வரை வதக்கவும்.
அடுத்து பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து சிறிது வதக்கிய பின் வெட்டி வைத்துள்ள சுண்டைக்காயை சேர்க்கவும்.
இரண்டு சிட்டிகை மஞ்சத்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கிளறி மூடி போட்டு வேக விடவும்.
சுண்டைக்காய் வேக ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் வரை எடுக்கும்.
காய் வெந்தவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறவும்.
உப்பு சரி பார்க்கவும்.
பச்சை வாசனை போகும் வரை அடுப்பில் வைத்திருக்கவேண்டும்.
தண்ணீர் சுண்டி மசாலா நன்கு காயுடன் சேர்ந்து வரும் வரை அடுப்பில் வைத்து இருக்க வேண்டும்.
அடி பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறி விட வேண்டும்.
அடுப்பை அணைத்து விட்டு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

மதிய உணவுக்கு ஏற்ற சுவையான மசாலா கறி தயார். சாம்பார்
ரசம் மற்றும் தயிர் சாதத்திற்கு பொருத்தமான கறியாகும்.


Sundaikkai masala curry [ turkish berry curry ]









மேலும் சில அருமையான சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
காலிப்ளவர் உருளை மசாலா கறி
காலிப்ளவர் உருளை மசாலா கறி
காலிப்ளவர் கொண்டைக்கடலை மசாலா கறி
காலிப்ளவர்கொண்டை .. மசாலா கறி
சேப்பங்கிழங்கு மசாலா கறி
சேப்பங்கிழங்கு மசாலா கறி
பலாமுசு மசாலா கறி
பலாமுசு
மசாலா கறி
கொள்ளு சுண்டல்
கொள்ளு
சுண்டல்

Wednesday, June 15, 2016

Idiyappam - Lemon-Idiyappam

#எலுமிச்சைஇடியாப்பம் : பொதுவாக #இடியாப்பம் தேங்காய் பால் ஊற்றியே சாப்பிடுவது வழக்கம். ஆனால் இடியாப்பம் செய்த பிறகு எண்ணெய் விட்டு கலந்து ஆற வைத்து, எலுமிச்சை அல்லது புளிகாச்சல் ஆகியவற்றுடன் கலந்தும் சுவைக்கலாம்.

எலுமிச்சை இடியாப்பம்


தேவையானவை  :
2 ( அ ) 3 ஈடு இடியாப்பம்
4 Tspநல்லெண்ணெய்
1 பெரிய அளவுஎலுமிச்சை பழம் [ அட்ஜஸ்ட் ]
தாளிக்க :
1/2 Tspகடுகு
1/8 Tspவெந்தயம் [ விரும்பினால் ]
1 Tspஉளுத்தம் பருப்பு
2 Tspகடலை பருப்பு
4 Tspநிலக்கடலை
2 ( அ ) 3பச்சை மிளகாய், பொடியாக நறுக்கவும் [ அட்ஜஸ்ட் ]
10 - 15கறுவேப்பிலை
3 Tspகொத்தமல்லி தழை நறுக்கியது [ விரும்பினால் ]
2 Tspகாரட் பொடியாக நறுக்கியது [ விரும்பினால் ]
பொடிகள்  :
1/4 Tspமஞ்சத்தூள்
1/2 Tspசீரகத்தூள்
1/4 Tspமிளகாய் தூள் [ அட்ஜஸ்ட் ]
1/4 Tspபெருங்காய பொடி
2 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]

செய்முறை :
முதலில் இரண்டு மூன்று ஈடு இடியாப்பம் ஆவியில் வேகவைத்து எடுத்து ஒரு அகன்ற பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு கலந்து தனியே வைக்கவும்.

எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி கொட்டைகளை நீக்கி ஒரு கிண்ணத்தில் தண்ணீரில் மூழ்கி இருக்குமாறு வைக்கவும்.
இவ்வாறு செய்வதனால் தோலின் கசப்புத் தன்மை குறையும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
கடுகு போட்டு வெடித்த பிறகு வெந்தயம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் நிலக்கடலை சேர்த்து வறுக்கவும்.
பருப்பு அனைத்தும் நன்கு சிவந்த பிறகு பெருங்காய பொடி, கறுவேப்பிலை, பொடியாக நறுக்கிய காரட்  மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
கொத்தமல்லி தழை சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.

அடுத்து கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொடிகளையும் மற்றும் உப்பையும் சேர்த்து பத்து வினாடிகள் மட்டுமே வதக்க வேண்டும்.
பொடியை சேர்த்து பிரட்டும் போது கருகி விடாமல் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
அடுப்பை அணைத்து விடவும்.
எலுமிச்சை சாரை பிழிந்து நன்கு கலக்கவும்.
இவ்வாறு தயாரித்த எலுமிச்சை கலவையை இடியாப்பத்தின் மேல் கொட்டவும்.
கைகளால் அழுத்தாமல் நன்கு பிசறி விடவும். கைகளில் பிசுபிசுவென ஒட்டினால் மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து பிசையவும்.
உப்பு, காரம் மற்றும் எலுமிச்சை சாறு தேவை பட்டால் சேர்த்து கலந்து வைக்கவும்.
சுவையான எலுமிச்சை இடியாப்பம் தயார்.

எலுமிச்சை இடியாப்பம்
மதிய உணவிற்கு எடுத்து செல்வதாக இருந்தால் நன்கு ஆற வைத்து பின்னர் டப்பாவில் எடுத்து வைக்கவும்.
மதிய உணவிற்காக செய்யும் போது சிறிது உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் காரம் சிறிது தூக்கலாக இருக்குமாறு தயாரிக்க வேண்டும்.
அப்போதுதான் சாப்பிடும் போது சுவை சரியாக இருக்கும்.

எலுமிச்சை இடியாப்பம்







மற்ற டிபன் வகைகள் முயற்சி செய்ய

சோள இட்லி
சோள இட்லி
தோசை
தோசை
கோதுமை ரவா இட்லி
கோதுமைரவா இட்லி
காஞ்சீபுரம் இட்லி
காஞ்சீபுரம் இட்லி
கம்பு இட்லி
கம்பு இட்லி

தொட்டுக்கொண்டு சாப்பிட

தொட்டுக்க



இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.