Search This Blog

Showing posts with label அவல் உப்புமா. Show all posts
Showing posts with label அவல் உப்புமா. Show all posts

Monday, January 23, 2017

Beetroot-Vazhaithandu-Aval-Upma

#பீட்ரூட்வாழைத்தண்டுஅவல்உப்புமா : நெல்லை ஊறவைத்து சூடான வாணலியில் வறுத்தெடுத்து உடனே கல்லில் போட்டு உலக்கையால் தட்டி எடுத்து உமி நீக்கினால் #அவல் தயார். இப்போது அவல் தயாரிக்க மின்சாரத்தில் இயங்கும் உலக்கை இயந்திரம் வந்து விட்டது. அதனால் அவல் மெல்லியதாகவும் கெட்டியாகவும் கிடைக்கிறது. மெல்லியதாக இருக்கும் அவல் பால் ஊற்றி அல்லது வெள்ளம் தேங்காயுடன் கலந்து சாப்பிட அருமையாய் இருக்கும். கெட்டி அவல் உப்புமா செய்ய நன்றாக இருக்கும்.
முன்பே பல காய்கறிகளை சேர்த்து அவல் உப்புமா செய்முறையை பார்த்திருக்கிறோம். இப்போது பீட்ரூட் மற்றும் வாழைத்தண்டு சேர்த்து #உப்புமா செய்யும் விதத்தை காண்போம்.



தேவையானவை :
1 கப்கெட்டி அவல்
வெங்காயம், பொடியாக நறுக்கவும்
1/4 கப்பீட்ரூட்  துருவியது
1 Tbspபச்சை பட்டாணி வேக வைத்தது
1/4 கப்வாழைத்தண்டு மெல்லியதாக அரிந்தது
1 or 2பச்சை மிளகாய்
2 pinchமஞ்சத்தூள்
1/4 Tspசீரகத்தூள்
1/4 Tspமிளகாய்த்தூள் [ அட்ஜஸ்ட் ]
1/2 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
1/2 Tspஎலுமிச்சை சாறு [ அட்ஜஸ்ட் ]
தாளிக்க :
1/2 Tspகடுகு
1 Tspஉளுத்தம் பருப்பு
2 Tbspநிலக்கடலை
1/4 Tspபெருங்காயத்தூள்
2 Tspநல்லெண்ணெய்
அலங்கரிக்க :
1 Tbspகேரட் துருவியது
1 Tbspகொத்தமல்லி தழை

செய்முறை :
ஒரு அகன்ற பாத்திரத்தில் கெட்டி அவலை எடுத்துக்கொள்ளவும்.
தண்ணீர் விட்டு ஓரிரு முறை கழுவவும்.
அதில் 1/2 Tsp உப்பு தூவி 1/4 கப் தண்ணீர் விட்டு கலந்து வைக்கவும்.
அடுத்து அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடேற்றவும்.
எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு வெடிக்க விடவும்.
கடுகு வெடித்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் நிலக்கடலை சேர்த்து வறுக்கவும்.
வறுபட்டதும் பெருங்காயத்தூள் சேர்த்து கருவேப்பிலை கிள்ளி போட்டு கீறி வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து 1/2 நிமிடம் வதக்கவும்.
இப்போது நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கி வெளிர் நிறமாக மாறியதும் பீட்ரூட், வாழைத்தண்டு மற்றும் பட்டாணியை சேர்த்து வதக்கவும்.
தேவையான உப்பு மற்றும் 2 சிட்டிகை மஞ்சத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து விடவும்.
தட்டு போட்டு மூடி 2 நிமிடங்கள் வேக விடவும்.
இரண்டு நிமிடங்களுக்கு பிறகு உப்பு போட்டு பிசறி வைத்துள்ள அவலை சேர்த்து மிதமான தீயில் நன்கு கிளறி விடவும்.
உப்பு சரி பார்த்து தேவையெனில் உப்பு சேர்க்கவும்.
1/2 Tsp எலுமிச்சை சாறு [ விருப்பப்பட்டால் ] சேர்த்து நன்கு கலந்து விடவும்.
வாணலியை மூடி போட்டு மூடி வைக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டிலேயே மூன்று நிமிடங்கள் மூடி வைக்கவும்.
பின்னர் திறந்தாள் சூடான சுவையான பீட்ரூட் வாழைத்தண்டு அவல் உப்புமா தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.
விரும்பினால் தேங்காய் சட்னியுடன் சுவைக்கலாம்.
தக்காளி சாஸ் தொட்டுக்கொண்டும் சுவைக்கலாம்.
குறிப்பு : அவலின் தன்மைக்கு [ கெட்டித் தன்மை ] ஏற்ப உப்பு சேர்த்து பிசறி வைக்க தண்ணீரின் அளவை கூட்டி குறைத்துக்கொள்ளவும்.






மேலும் சில சுவை மிகுந்த உணவுக் குறிப்புகள்

Aval kesari Aval upma Lemon Aval
Aval sakkarai pongal Puli sundal

பல வகையான சமையல் செய்முறைகள்


Wednesday, December 4, 2013

Aval Upma

அவல் உப்புமா : நான் தற்போது வசித்து வரும் சத்தீஸ்கர் மாநிலம் முன்பு மத்திய பிரதேசத்தின் ஒரு பகுதி ஆகும். மத்திய பிரதேசத்தில் காலை டிபன் வகைகளில் அவல் ஒன்றாகும். அதை போஹா என்று அழைக்கிறார்கள். நீராவியில் அவலை உப்புடன் வேகவைத்து அதன் மேல் வெங்காயம், வெந்த உருளை கிழங்கு மற்றும் ஓமப்பொடி தூவி கொடுக்கிறார்கள். இங்கு அவல் நன்றாக கிடைப்பதால் அடிக்கடி அவல் உப்புமாவை காய்கறிகளுடன் செய்வது வழக்கம். எப்படி என பார்ப்போம்.


தேவையான பொருட்கள் :
1 கப்                                            கெட்டி அவல்
1 Tbsp                                            ராகி அவல் ( இருந்தால் )
1/2 Tsp                                           உப்பு

காய்கறிகள் :


1 Tbsp                                          காரட் துருவியது
1 Tbsp                                           பீட்ரூட் துருவியது
1 Tbsp                                           காலி ப்ளோவேர் துண்டுகள்
1 Tbsp                                           பீன்ஸ் பொடியாக நறுக்கியது
2 Tbsp                                           கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
8                                                    கருவேப்பிலை
6                                                    பசலை கீரை
1                                                    வெங்காயம்
4                                                    பட்டன் காளான்
2                                                    பச்சை மிளகாய்
( இங்கே இரண்டு வகையான காரட் எடுத்துள்ளேன். )

தாளிக்க :
1/2 Tsp                                          கடுகு
1 Tsp                                             உளுத்தம் பருப்பு
2 Tsp                                             நிலகடலை
2 Tsp                                             எண்ணெய்

தேவையான பொடிகள் :
2 சிட்டிகை                              மஞ்சத்தூள்
2 சிட்டிகை                              பெருங்காயத்தூள்
1/2 Tsp                                         சீரகத்தூள்
1/2 Tsp  ( அட்ஜஸ்ட் )            மிளகாய்த்தூள்

செய்முறை :
அவலை இரண்டு முறை நன்றாக கழுவி உப்பு சேர்த்து பிசறி இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக விடவும்.


வாணலியை மற்றொரு  அடுப்பில் வைத்து 2 Tsp எண்ணெய்  விட்டு, சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
உளுத்தம் பருப்பையும் கடலையையும் வறுக்கவும்.
சிவந்ததும் பெருங்காயத்தூள், மஞ்சத்தூள், மிளகாய் தூள் மற்றும் சீராக தூள் சேர்த்தவுடன் கொத்தமல்லியை போட்டு வதக்கவும்.
நீள  வாக்கில் அறிந்து பச்சை மிளகாயை சேர்க்கவும்.
சிறிது வதங்கியதும் வெங்காயத்தை வதக்கவும்.
அடுத்து பீன்ஸ் போட்டு சிறிது நேரம் வதிக்கிய பின் மற்ற எல்லா காய்கறிகளை போட்டு வதக்கவும்.


காளானை வெட்டி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
உப்பு சேர்க்கவும். அவலில் ஏற்கனவே உப்பு சேர்த்திருப்பதால் கவனம் தேவை.
எல்லா காய்கறிகளும் பொடியாக நறுக்கியுள்ளதால் வதக்கும் போதே வெந்து விடும். இல்லையென்றால் சிறிது நேரம் மூடி வைத்து வேக விடவும்.
ஆவியில் வைத்த  அவல்  8 முதல் 10 நிமிடங்களுக்குள் வெந்திருக்கும்.
அதை வாணலியில் சேர்த்து கலக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு ஒரு மூடியால் வாணலியை மூடவும்.
அப்படியே 5 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
சுவையான அவல் உப்புமா தயார்.

பிறகு எடுத்து பரிமாறவும்.


தொட்டு கொள்ள எதுவும் தேவையில்லை.

சிறிது புளிப்பு சுவை தேவை என்றால் அடுப்பை அணைத்ததும் 1 Tsp எலுமிச்சை சாரை ஊற்றி கிளறி விடவும்.





மற்ற சமையல் குறிப்புகள் :

குதிரைவாலி சுண்டல்
குதிரைவாலி
சுண்டல்
வரகரிசி உப்புமா
வரகரிசி
உப்புமா
குதிரைவாலி இட்லி
குதிரைவாலி
இட்லி
குதிரைவாலி பொங்கல்
குதிரைவாலி பொங்கல்
குதிரைவாலி கொழுக்கட்டை
குதிரைவாலி கொழுக்கட்டை
பாப்பரை அரிசி உப்புமா
பாப்பரை
அரிசிஉப்புமா