Search This Blog

Showing posts with label பீட்ரூட். Show all posts
Showing posts with label பீட்ரூட். Show all posts

Monday, January 23, 2017

Beetroot-Vazhaithandu-Aval-Upma

#பீட்ரூட்வாழைத்தண்டுஅவல்உப்புமா : நெல்லை ஊறவைத்து சூடான வாணலியில் வறுத்தெடுத்து உடனே கல்லில் போட்டு உலக்கையால் தட்டி எடுத்து உமி நீக்கினால் #அவல் தயார். இப்போது அவல் தயாரிக்க மின்சாரத்தில் இயங்கும் உலக்கை இயந்திரம் வந்து விட்டது. அதனால் அவல் மெல்லியதாகவும் கெட்டியாகவும் கிடைக்கிறது. மெல்லியதாக இருக்கும் அவல் பால் ஊற்றி அல்லது வெள்ளம் தேங்காயுடன் கலந்து சாப்பிட அருமையாய் இருக்கும். கெட்டி அவல் உப்புமா செய்ய நன்றாக இருக்கும்.
முன்பே பல காய்கறிகளை சேர்த்து அவல் உப்புமா செய்முறையை பார்த்திருக்கிறோம். இப்போது பீட்ரூட் மற்றும் வாழைத்தண்டு சேர்த்து #உப்புமா செய்யும் விதத்தை காண்போம்.



தேவையானவை :
1 கப்கெட்டி அவல்
வெங்காயம், பொடியாக நறுக்கவும்
1/4 கப்பீட்ரூட்  துருவியது
1 Tbspபச்சை பட்டாணி வேக வைத்தது
1/4 கப்வாழைத்தண்டு மெல்லியதாக அரிந்தது
1 or 2பச்சை மிளகாய்
2 pinchமஞ்சத்தூள்
1/4 Tspசீரகத்தூள்
1/4 Tspமிளகாய்த்தூள் [ அட்ஜஸ்ட் ]
1/2 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
1/2 Tspஎலுமிச்சை சாறு [ அட்ஜஸ்ட் ]
தாளிக்க :
1/2 Tspகடுகு
1 Tspஉளுத்தம் பருப்பு
2 Tbspநிலக்கடலை
1/4 Tspபெருங்காயத்தூள்
2 Tspநல்லெண்ணெய்
அலங்கரிக்க :
1 Tbspகேரட் துருவியது
1 Tbspகொத்தமல்லி தழை

செய்முறை :
ஒரு அகன்ற பாத்திரத்தில் கெட்டி அவலை எடுத்துக்கொள்ளவும்.
தண்ணீர் விட்டு ஓரிரு முறை கழுவவும்.
அதில் 1/2 Tsp உப்பு தூவி 1/4 கப் தண்ணீர் விட்டு கலந்து வைக்கவும்.
அடுத்து அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடேற்றவும்.
எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு வெடிக்க விடவும்.
கடுகு வெடித்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் நிலக்கடலை சேர்த்து வறுக்கவும்.
வறுபட்டதும் பெருங்காயத்தூள் சேர்த்து கருவேப்பிலை கிள்ளி போட்டு கீறி வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து 1/2 நிமிடம் வதக்கவும்.
இப்போது நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கி வெளிர் நிறமாக மாறியதும் பீட்ரூட், வாழைத்தண்டு மற்றும் பட்டாணியை சேர்த்து வதக்கவும்.
தேவையான உப்பு மற்றும் 2 சிட்டிகை மஞ்சத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து விடவும்.
தட்டு போட்டு மூடி 2 நிமிடங்கள் வேக விடவும்.
இரண்டு நிமிடங்களுக்கு பிறகு உப்பு போட்டு பிசறி வைத்துள்ள அவலை சேர்த்து மிதமான தீயில் நன்கு கிளறி விடவும்.
உப்பு சரி பார்த்து தேவையெனில் உப்பு சேர்க்கவும்.
1/2 Tsp எலுமிச்சை சாறு [ விருப்பப்பட்டால் ] சேர்த்து நன்கு கலந்து விடவும்.
வாணலியை மூடி போட்டு மூடி வைக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டிலேயே மூன்று நிமிடங்கள் மூடி வைக்கவும்.
பின்னர் திறந்தாள் சூடான சுவையான பீட்ரூட் வாழைத்தண்டு அவல் உப்புமா தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.
விரும்பினால் தேங்காய் சட்னியுடன் சுவைக்கலாம்.
தக்காளி சாஸ் தொட்டுக்கொண்டும் சுவைக்கலாம்.
குறிப்பு : அவலின் தன்மைக்கு [ கெட்டித் தன்மை ] ஏற்ப உப்பு சேர்த்து பிசறி வைக்க தண்ணீரின் அளவை கூட்டி குறைத்துக்கொள்ளவும்.






மேலும் சில சுவை மிகுந்த உணவுக் குறிப்புகள்

Aval kesari Aval upma Lemon Aval
Aval sakkarai pongal Puli sundal

பல வகையான சமையல் செய்முறைகள்


Tuesday, March 29, 2016

Beetroot-Vazhaipoo-Poriyal

#பீட்ரூட்வாழைப்பூபொரியல் : #வாழைப்பூ #துவர்ப்பு சுவையுடையது என நாம் அனைவரும் அறிவோம். அறுசுவைகளில் ஒரு சுவையான துவர்ப்பு சுவை நமது உணவில் இடம் பெறுவது மிகவும் அத்தியாவசியமாகும். வாழைப்பூ துவட்டல் செய்தால் அதன் சுவை காரணமாகவே பலரும் சாப்பிட விருப்பபட மாட்டார்கள். அதன் சுவையை மட்டுபடுத்த பருப்பு உசிலி செய்தால் சுவைக்க முயற்சி செய்வார்கள். ஆனால் பருப்பு உசிலி செய்ய சிறிது அதிக நேரம் தேவை.  அதனால் பிற காய்கறிகளுடன் வழைப்பூவை சேர்த்து பொரியல் செய்தால் சுவை மிக மிக அபாரமாக இருக்கும். எல்லோரும் விரும்பி உண்ணும் படியாகவும் இருக்கும்.
இதை கருத்தில் கொண்டு வாழைப்பூ, பீட்ரூட் மற்றும் குடை மிளகாய் சேர்த்து  பொரியல் செய்து பார்த்தேன். சுவை மிக மிக அருமையாக இருந்தது.

பீட்ரூட் வாழைப்பூ பொரியல்


தேவையான பொருட்கள் :
1/2 கப்வாழைப்பூ பொடியாக நறுக்கியது
3/4 கப்பீட்ரூட் துருவியது
3 Tspகுடை மிளகாய் பொடியாக நறுக்கியது
3 Tspதேங்காய் துருவல்
1/4 கப்வெங்காயம் நறுக்கியது
2 சிட்டிகைமஞ்சத்தூள்
6 or 7கறுவேப்பிலை [ optional ]
1 Tspசாம்பார் பொடி
1/2 Tspகடுகு
1/2 Tspஉளுத்தம் பருப்பு
1/2 Tspஉப்பு
1 Tspஎண்ணெய்

அலங்கரிக்க தேவையான கொத்தமல்லி தழை

செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
முதலில் கடுகு போட்டு வெடித்த பின்னர்  உளுத்தம் பருப்பை சேர்த்து சிவக்கும் வரை வறுக்கவும்.
அடுத்து கறுவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது வதங்கிய பிறகுகுடைமிளகாயை சேர்த்து சில மணித்துளிகள் வதக்கவும்.
அடுத்து  சாம்பார் பொடி சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
இப்போது துருவிய பீட்ரூட் மற்றும் வாழைப்பூவை சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
வாணலியை மூடி போட்டு மூடி பீட்ரூட் மற்றும் வாழைப்பூ வேகும் வரை அடுப்பின் மேல் சிறிய தீயில் வேக விடவும்.
வெந்ததும் மூடியை எடுத்து விட்டு தேங்காய் துருவலை சேர்த்து கிளறி விடவும்.
அடுப்பை அணைத்து விட்டு தயாரித்த பொரியலை பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.

மதிய உணவின் போது சாம்பார் அல்லது ரசம் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.




பீட்ரூட் வாழைப்பூ பொரியல் பீட்ரூட் வாழைப்பூ பொரியல்






சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்ப்பதற்காக

குதிரைவாலி வாழைப்பூ புலாவ்
குதிரைவாலி வாழைப்பூ புலாவ்
வாழைப்பூ குழம்பு
வாழைப்பூ
குழம்பு
வாழைப்பூ மிளகு குழம்பு
வாழைப்பூ மிளகு குழம்பு
வாழைப்பூ வடை மோர் குழம்பு
வாழைப்பூ வடை மோர் குழம்பு
வாழைப்பூ விரல்கள்
வாழைப்பூ
விரல்கள்





Sunday, September 27, 2015

Beetroot Poori

#பீட்ரூட்பூரி : #பூரி மாவுடன் #பீட்ரூட் கலந்து கவர்ச்சியான சிகப்பு நிற பூரி இரு தினங்களுக்கு முன் செய்தேன். அதனை இங்கு பகிர்ந்து கொள்ள விருப்பம்.
சுமார் 12 முதல் 15 பூரிகள் தயாரிக்கலாம்.

பீட்ரூட் பூரி

மாவு செய்ய தேவையானவை  :
1 1/2 கப்கோதுமை மாவு
1/2 கப்மைதா
1/2 Tspநெய்
1/2 Tspஎண்ணெய்
1/4 cupபீட்ரூட் துண்டுகள்
1/2 Tspஉப்பு

பூரி பொரிக்க தேவையான எண்ணெய்
பூரி மாவு திரட்ட சப்பாத்தி பிரஸ்

செய்முறை :
குக்கரில் பீட்ரூட் துண்டுகளை போட்டு கால் கப் தண்ணீர் விட்டு மூடி ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.
விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு குக்கரை தண்ணீர் குழாயின் கீழே வைத்து தண்ணீரை திறந்து விடவும்.
ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து வெந்த பீட்ரூட்டை வேக வைத்த தண்ணீருடன் வேறொரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
ஆறிய பின்னர் மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுத்து வைக்கவும்.

இப்போது பூரி மாவு எவ்வாறு பிசைய வேண்டும் என காணலாம்.
  • ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மாவை எடுத்துக்கொள்ளவும்.
  • அதில் நெய்யையும் உப்பையும் சேர்க்கவும்.
  • கைகளால்  பிசறி விடவும்.
  • அடுத்து அரைத்த பீட்ரூட் விழுதை சேர்த்து பிசையவும்.
  • மாவு ஒன்றுசேர்ந்தாற்போல வந்தவுடன் 1 Tsp எண்ணெய் சேர்க்கவும்.
  • மறுபடியும் நன்கு பிசையவும்.
  • அழுத்தி பிசைய பிசைய மாவு நன்கு மிருதுவாக வரும்.
  • சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
இப்போது பூரிகளை இட சப்பாத்தி அமுக்கும் கருவியை உபயோகிக்கலாம்.
இல்லையென்றால் வட்ட வட்டமாக பூரி கட்டை கொண்டு இடவும்.

இங்கு சப்பாத்தி ப்ரஸில் எப்படி இடுவது என பார்க்கலாம்.


ப்ரெசின் உள்ளே அடி தட்டிலும் மேல் தட்டிலும் எண்ணெய் தடவிக் கொள்ளவும்.

அடி தட்டின் மேல் உருட்டி வைத்துள்ள மாவை வைத்து மேல் தட்டால் மூடி கைப்பிடியால் அழுத்தம் கொடுத்து வட்ட வடிவ பூரியை உருவாக்கவும்.
இவ்வாறு தட்டிய பூரி மிகவும் மெல்லியதாகவும் இருக்ககூடாது.
தடிமனாகவும் இருக்கக் கூடாது.
ஒரே சீராக 1/2 mm தடிமன் உடையதாக இருக்கலாம்.
  • எண்ணெய் நன்கு புகை வரும் அளவுக்கு சூடாக இருக்க வேண்டும்.
  • திரட்டிய பூரி மாவை எண்ணெய்யில் மெதுவாக விடவும்.
  • போட்ட உடனேயே பந்து போல உப்பி மேலெழுந்து வரும்.
  • சாரணியால் அடுத்த பக்கத்திற்கு திருப்பி விடவும்.
  • இரண்டு பக்கமும் பொரிந்ததும் எண்ணையை வடித்து வேறு தட்டில் எடுத்து வைக்கவும்.
  • இதே போல ஒவ்வொன்றாக பொரித்தெடுக்கவும்.
  • எண்ணெயின் சூட்டை தேவைக்கேற்றவாறு அவ்வப்போது தீயை கூட்டி குறைத்து கொள்ளவும்.
  • உருளை கிழங்கு மசாலா செய்து இதனுடன் தொட்டு கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
உருளை கிழங்கு குருமா, காய்கறிகள் குருமா, தக்காளி சட்னி ஆகியவற்றுடனும் அருமையாக இருக்கும்.

பூரியை ஒரு குழியான தட்டில் வைத்து பாலை ஊற்றி ஊறவைத்து சர்க்கரையை மேலே தூவி சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும்.

இங்கு காராமணி கறியுடன் பூரி பரிமாறப்பட்டுள்ளது.
பீட்ரூட் பூரி பீட்ரூட் பூரி

பூரியுடன் ஜாம் மற்றும் வெல்லம்  ஆகியவற்றுடன் சாப்பிட்டால் இன்னும் சுவையோ சுவை!!
பள்ளிக்கு டிபன் பாக்ஸில் பூரியின் மேல் ஜாம் தடவி சுருட்டி வைத்து அனுப்பினால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

ஆனால் ஹோட்டல்களிலும் வீடுகளிலும் பூரி கிழங்குதான் மிகவும் பிரபலம்!!!....
ஆனால் பீட்ரூட் பூரி சிற்றுண்டி சாலையில் கிடைப்பது கடினம். நிறம் மட்டுமல்லாமல் சுவை மற்றும் இன்றியமையாத சத்துக்களும் நிரம்பியுள்ளது இந்த பீட்ரூட் பூரியில் ...  அதனால் வீட்டில் செய்துதான் பாருங்களேன்.




மற்ற பூரி வகைகள்
பூரி பூரி கிழங்கு கொடி பசலை பூரி



Tuesday, December 24, 2013

Beetroot Thuvatal

பீட்ரூட் பொரியலை  சாதாரணமாக காரட் துருவியில் பீட்ரூட்டை துருவி பின் பொரியலில் உபயோகப் படுத்துவோம். ஆனால் இங்கு பீட்ரூட்டை முதலில் வேக வைத்து பின் துருவியொ அல்லது  சின்ன சின்ன துண்டுகளாக வெட்டியோ பொரியல் செய்ய உபயோகப்  படுத்தப் படுகிறது. இவ்வாறு செய்யும் போது சுவை சிறிது மாறுபடுகிறது. ஆனால் நன்றாக இருக்கும். இனி  எப்படி செய்வது என பார்க்கலாம்.

பீட்ரூட் பொரியல்

தேவையான பொருட்கள் :
1                                             பீட்ரூட் ( நடுத்தர அளவு )
1                                             பெரிய வெங்காயம் ( சிறியது )
1                                             பச்சை மிளகாய்
1/2 Tsp                                   சாம்பார் மிளகாய் தூள்
1/2 Tsp                                   கடுகு
1 Tsp                                      உளுத்தம் பருப்பு
1 Tsp                                      எண்ணெய்
2 Tsp                                      தேங்காய் துருவல்
கொத்தமல்லி தழை அலங்கரிக்க

செய்முறை :
 குக்கரை எடுத்து 1 கப் தண்ணீர் சேர்க்கவும்.
பீட்ரூட்டை நன்றாக மண் போக கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

பீட்ரூட் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து மூன்று விசில் வரும்வரை வேக வைக்கவும்.


வெந்த பீட்ரூட்டை வெளியில் எடுத்து தோலை நீக்கவும்.


சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.


வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விட்டு பின் உளுத்தம் பருப்பை சேர்க்கவும்.

பருப்பு சிவந்தவுடன் பச்சை மிளகாயை நீள  வாக்கில் அரிந்து சேர்க்கவும்.
இலேசாக வதக்கிய பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பள பளப்பாக வதங்கியவுடன் சாம்பார் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி அறிந்து வைத்துள்ள பீட்ரூட்டை சேர்க்கவும்.

ஏற்கனவே பீட்ரூட்டை வேக வைத்துவிட்டதால் அதிக நேரம் அடுப்பில் கிளறிக்கொண்டிருக்க வேண்டாம்.
தேங்காய் துருவலை சேர்த்து சில வினாடிகள் கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தழையினால் அலங்கரிக்கவும்.

சாம்பார் சாதம் மற்றும் ரசம் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.




மேலும் பீட்ரூட்டைக்  கொண்டு  தயாரிக்க :

காரட் பீட்ரூட் பொரியல் 
பீட்ரூட் பொரியல் 





Tuesday, November 26, 2013

Beetroot Stir Fry

பீட்ரூட் பொரியல் : பல பேருக்கு இதன் நிறத்தினாலும் இனிப்பு சுவையாலும் பீட்ரூட் பொரியல் பிடிப்பதில்லை. ஆனால் காரத்தை சிறிது அதிகப்படுத்தி செய்தால் சுவையாக இருக்கும். பீட்ரூட் மிக்க சத்து நிறைத்தது. மேலும் பொட்டாசியம் , மக்னீசியம் , பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் நிரம்பியது. பீட்டா கரோடின் அதிக அளவு கொண்டது. அதனால் உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்வது நன்று.

பீட்ரூட் பொரியல்

இதுவும் முன்பே தந்துள்ள காரட் பீட்ரூட் பொரியல் போலவே செய்ய வேண்டும். எந்த பொருளை பீட்ரூடினுடன் சேர்த்தாலும் சிகப்பு நிறமாக  மாறி விடுவதால் பச்சை மிளகாய் அல்லது சிகப்பு மிளகாய்க்கு பதிலாக சாம்பார் பொடியை சேர்ப்பது நல்லது.

தேவையான பொருட்கள் :
பீட்ரூட் துருவியது                                   : 1 கப்
வெங்காயம் அறிந்தது                             : 3 Tsp


சாம்பார் பொடி                                            : 1 Tsp
உப்பு                                                                 : 1/2 Tsp
கொத்தமல்லி தழை சிறிது.

தாளிக்க :
கடுகு                                                          : 1/2 Tsp
உளுத்தம் பருப்பு                                   : 1 Tsp
எண்ணெய்                                               : 1/2 Tsp

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.
எண்ணெய சூடானதும் கடுகு வெடிக்க விடவும்.
பின்னேர் உளுத்தம் பருப்பை சிவக்க வறுக்கவும்.
இப்போது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது நிறம் மாறியதுமே பீட்ரூட் துருவலை சேர்க்கவும்.
உப்பையும் சேர்த்து நன்கு கிளறி பீட்ரூட் வேகும் வரை மூடி வைக்கவும்.
வெந்தவுடன் ஒரு கிண்ணத்தில் எடுத்து கொத்தமல்லி தழையினால் அலங்கரிக்கவும்.

பீட்ரூட் பொரியல்

மதிய உணவில் ரசம் சாதம் மற்றும் சாம்பார் சாதத்திற்கு நன்றாக இருக்கும்.

Friday, November 22, 2013

Carrot Beetroot Poriyal

காரட் பீட்ரூட் பொரியல் : இரண்டுமே எளிதில் வேகக்கூடியதால் சேர்த்து பொரியல் செய்யலாம். கலந்து செய்யும்  பொரியல் பீட்ரூட்டின் கலரில்தான் இருக்கும். இரண்டுமே இனிப்பு சுவையுடயதாகையால் பொரியலும் சிறிது இனிப்பு தூக்கலாக இருக்கும். அதற்கு ஏற்ப காரத்தை விருப்பப்படி கூட்டி கொள்ளவும்.

காரட் பீட்ரூட் பொரியல்

தேவையான பொருட்கள் :


பீட்ரூட் துருவியது                   : 1/2 Cup


காரட் துருவியது                      : 1/2 Cup


பெரிய வெங்காயம்                  : 1 சிறியது
சாம்பார் பொடி                           : 3/4 Tsp ( அட்ஜஸ்ட் )
கொத்தமல்லி தழை                 : சிறிது
உப்பு                                              : 1/2 Tsp ( அட்ஜஸ்ட் )
தேங்காய் துருவல்                    : 2 Tsp

தாளிக்க :

கடுகு                                            : 1/4 Tsp
உளுத்தம் பருப்பு                        : 1 Tsp
எண்ணெய்                                   : 1/2 Tsp

செய்முறை :

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணையை விட்டு சூடு பண்ணவும்.
சரியான சூடு ஏறியதும் கடுகை வெடிக்க விடவும்.
பின் உளுத்தம் பருப்பை பொன்னிறமாகும் வரை காத்திருந்து வெங்காய துண்டுகளை சேர்க்கவும்.
வெங்காய மணம் வர ஆரம்பித்ததும் சாம்பார் பொடியை சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.
இப்போது  காரட் மற்றும் பீட்ரூட்டை சேர்க்கவும்.
உப்பு சேர்த்து நன்கு கலக்கும் படி கிளறவும்.
தட்டு போட்டு மூடி வேக வைக்கவும்.
இரண்டு அல்லது மூன்று நிமிடங்களிலேயே வெந்து விடும்.
நீண்ட நேரம் வேக வைக்க வேண்டாம்.
வெந்தவுடன் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி இறக்கவும்.


அதற்குரிய பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

காரட் பீட்ரூட் பொரியல்

இந்த பொரியல் ரசம் சாதத்துடனும் சாம்பார் சாதத்துடனும் சாப்பிட அருமையாக இருக்கும்.